Thursday, September 29, 2005

புத்தக திருவிளையாடல்

காட்சி - 1
காலம்: 21'ம் நூற்றாண்டில் பிரிக்கப்படாத பெருமதுரை மாகாணத்திற்கு மிஸ்டர். பாராமுகப் பாண்டியன் மன்னராக (அஃதாவது முதல்வராக) ஆண்டு வந்த காலம்

இடம்: அவை
மாந்தர்: மன்னர், அவையோர், கேனையோர்

(பின்புலத்தில் திடீரெனப் பாட்டு)

பொய்யின் நாயகனே
போலியின் புதல்வனே
அல்பத்தின் சிகரமே
சொல்மறந்த துரோகியே
போட்டுக் கொடுக்கும் பொக்கிஷமே
கீழ்ப்புத்தி கிட்டப்பா
எல்லோருக்கும் எட்டப்பா
நீ காலி காலி ....

(அப்போது சத்திரியராஜ் போன்று முக்காடிட்ட உருவத்தை காவலாளிகள் எக்கி வருகின்றார்கள்)

மன்னர்: யாரிவன்?
மந்திரி: அரசே பாடலைக் கேட்கவில்லை. இவனொரு அண்டை சோழநாட்டின் ஒற்றன். பாருங்கள் கையில் சின்னத்தை பச்சை குத்தி, முகத்திற்கு முக்காடிட்டுக்கின்றான் மூடன்.
மன்: சரி இவனை எதற்காக பிடித்து வந்தீர்கள்?
மந்: அரசே இவன் மரத்தடியில் ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்தான். பிடித்து விட்டோம்.
மன்: மரத்தடியில் அரட்டைக் கச்சேரிதானே வைப்பார்கள். உளவி(றி)னால் தீங்கொன்றுமில்லையே.
மந்: உண்மைதான். ஆனால் அவ்வப்போது உருப்படியாகவும் பேசித் தொலைப்பார்கள்.
மன்: யோவ் பொறுமையை சோதிக்காதே. என்னாச்சுன்னு சட்டு புட்டுன்னு சொல்லு.
மந்: அண்டை நாட்டில் கொடுங்கோல் ஆட்சி நடப்பதைப் பற்றி நம்நாட்டு மக்கள் மரத்தடியில் புட்டு புட்டு வைத்தார்கள். என்ன செய்வது மக்களின் பேச்சில் உண்மை இருப்பினும் நேரிடையாக சொன்னால் தன் குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற பயபேதி ஒற்றனுக்கு.
மன்: அதனால்?
மந்: மக்களுடன் நைச்சியமாய் பேசினான். இங்கேயும் கொடுங்கோல் ஆட்சிதான் நடக்கின்றது. உங்களுக்குத்தான் தெரியவில்லை. அண்டை நாட்டில் பாருங்கள். எல்லாவற்றையும் அவர்களே உற்பத்தி செய்து கொள்கின்றார்கள். அனைத்து துறைகளிலும் தன்னிறைவு பெற்று தக்கப்பிழைத்துவிட்டார்கள். பேசாமல் நாமெல்லாம் கலகம் செய்து மன்னரைத் துரத்திவிட்டு அண்டை நாட்டோடு இணைந்தால் அனைவரும் சுகமாயிருக்கலாம் என்று தூபம் போட்டான். ஜீப்பில் அள்ளிக் கொண்டு வந்து விட்டோம் அரசே!
மன்: பேஷ்! பேஷ்! டேய் ஒற்றா முழுக்க நனைந்தபின் முக்காடு எதற்கு? அரிதாரம் கலையடா அறிவிலியே. என்ன விஷயம்?
ஒற்றன் (வழக்கம் போல சுற்றி சுற்றி சொறிகின்றான்): அரசே ஒரே ஒரு ஸ்மைலி போட்டுட்டு வழமை போல் ஓடிவிடுகின்றேனே ஹிஹிஹி
மன் (கடுப்பாகின்றார்): மரத்தடியில் எம்மக்கள் பேசியது உண்மையா இல்லையா?
ஒற்: கொடுங்கோலாட்சின்னு எப்படிங்க சொல்லமுடியும்? மக்களே வேறுவழியின்றி வாள்முனையில் ஏற்றுக்கொண்ட ஆட்சியல்லவோ?
மன்: சரி சரி எனக்கு பயன்படற மாதிரி ஒரே ஒரு துப்பு கொடு. உன்னை உயிரோடு விட்டு விடுகின்றேன்.
ஒற்: அரசே... தர்க்கத்தில் வல்லவரும், வர்க்க ஸாஸ்திர நிபுணருமான ஸ்ரீனிவாசுலு ரநங்கநல்லூர் தத்துவாச்சாரியார் மதுரையை நோக்கி வந்து கொண்டிருக்கின்றார். தர்க்கத்தைப் பா(ட்)டாய்படுத்தி உங்கள் நாட்டைப் போட்டிக்கழைக்க வருகின்றார். போதுமா? அரசே வுட்டுடுங்க. போட்(§)டா புடிக்கணும். வரட்டா?
மன் (மனத்துக்கண் உரக்க): என்ன ஸ்ரீனிவாசுலு ரநங்கநல்லூர் தத்துவாச்சாரியாரா (செல்லமாய் ஸ்ரீ)? ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் அதுவும் குறிப்பாக வடகலையை கரைத்துக் குடித்து தர்க்கத்தில் மாட்டையே சுக்காவாக்கி வாயு விடும் வித்தகரா? அதுவும் மதுரையை நோக்கியா? சோமசுந்தரராமக் கடவுளே என்ன செய்வேன்? என்னே இது மதுரைக்கு வந்த சோதனை? யோவ் யாரங்கே கூப்பிடும் கோவிலில் பாடும் பரம ஆனந்தாரை. அவர்தான் எதிர் தர்கம் பண்ண சரியான ஆள்.

(ஸ்ரீ அவைக்குவர, தர்கத்திற்கு அழைப்பு விடுக்க, மன்னரின் ஆள் தோற்றால் மதுரையை எழுதி வைக்கவும், ஸ்ரீ தோற்றால் தர்க்கமே செய்யப்போவதில்லை என்றும், பரம ஆனந்தார் சோமசுந்தரக் கடவுளிடம் முறையிட ப்ளா ப்ளா ப்ளா ப்ளா.....)

திரை

காட்சி - 2

(பக்தனின் நிலையை உணர்ந்து சிவனார் பழைய பேப்பர் போடுபவராக வருகின்றார்)

சிவன்: பேப்பர் பேப்பர் ஹிண்டு தினமலர் துக்ளக் கல்கி கல்கண்டு பேப்பர் பழைய பேப்பர்
பொதுஜனம்: ஏம்ப்பா எப்பவும் ஹிண்டு தினமணி ராணி கல்கண்டு குமுதம் பேப்பர் பழைய பேப்பர்'னு தானே கூவுவாங்க
சி: ஹிஹி இது வேற லிஸ்ட்டும்மா உங்களுக்குப் புரியாது
பொ: என்னவோ போப்பா. வேகாத வெயில்லே இப்பிடி பேப்பர் போட்டுப் பொழைக்கறியே
சி: என்னம்மா பண்றது. புள்ளகுட்டி இருக்குதே
பொ: அட புள்ளகுட்டி வேறயா?
சி: குட்டி இல்லேம்மா. ஆனை மாதிரி ஒரு புள்ள குளத்தங்கரை மரத்தடியிலே குந்திக்கினு கீது. அழகான ஒரு புள்ள பக்கத்து நாட்டுல பேப்பர் போடுது.
பொ: அட அங்கேயும் பேப்பரா?
சி: ஆமாம்மா ஆனா இப்ப அங்க பிஸினஸ் கொஞ்சம் டல்லடிக்குது
பொ: அதுனால என்னப்பா? இங்கேயிருந்து உதவலாமுல்ல...?
சி: அட தகப்பனாயிருந்து இது கூட செய்யாம எப்படிம்மா? எவ்வளவு செஞ்சாலும் அவனுக்கு திருப்தியே இல்லம்மா. தக்கிப்பிழைப்பேனே தவிர நக்கிப்பிழைக்கமாட்டேன்'ன்னு சொல்றான்.
பொ: நல்லதுதானேப்பா. தன்மானமுள்ளவன் போலருக்கு.
சி: அட தன்னோட காலுல சுயமா என் புள்ள வந்தா எனக்கும் பெருமைதாம்மா. ஆனா நான் ஏதோ ஒண்ணுமே செய்யலேன்னு சொன்னா கூட பரவாயில்ல. கெடுதலு பண்றேன்னு கூசாம பொய் சொல்றதுதான் வருத்தமாயிருக்கு. வுடும்மா. பெத்த மனம் பித்துதானே.
பொ: அடடே ரொம்ப நொந்து போயிருக்கே போலிருக்கு. சரி சரி இந்தா பழைய பேப்பர். எவ்வளவு தேறும்?
சி: எல்லாஞ்சேத்து 47 ரூவாம்மா
பொ: அடப்பாவி இவ்வளவு கொறைச்சலா சொல்றியே?
சி: என்னம்மா பண்றது லாபத்தை ரெண்டு பங்கா போடணுமே!
பொ: அப்பிடின்னா... அடப்பாவி உனக்கு ரெண்டு சம்ஸாரமா?
சி: ஹிஹி ஆமாம்மா ஆனா ஒண்ணு இந்நாட்டிலே இன்னொண்ணு பக்கத்து நாட்டுல
பொ: அப்பிடிப் போடு. பெரிய கில்லாடியா நீரு
சி: அப்பிடில்லாம் ஒண்ணுமில்லையம்மா. உள்ளூர்க்காரியாவது தலையில உக்காந்து ஆட்டுவிக்கிறா. அண்டை ஊர்க்காரியோ உடம்புல பாதி வேணும்னு உசுரை வாங்குறா. உடம்பை கட்டைம்பாங்க. அதுக்காக வெட்டிக்கொடுக்க முடியுமா? முன்னாடி போனா கடிக்குது. பின்னாடி போனா ஒதைக்குதுன்னு வாழ்க்கை ஓடுதும்மா.
பொ: ஏம்ப்பா ரெண்டு சம்சாரத்தையும் சேத்து வைச்சுட்டா கஷ்டம் குறையுமில்லே?
சி: ஏம்மா கொஞ்சம் பழைய பேப்பரை போட்டுட்டு என் வாழ்க்கைக்கே ஆப்படிக்கிறீங்களே. இது நியாயமா?

(சிவன் தலை தெறிக்க ஓடுகின்றார்)

திரை

காட்சி - 3

(கோவில் திண்ணை. ஸ்ரீ & பஜனைக் குழுவினர்)

ஸ்ரீ: (தாம்பூலம் தரித்து ரிலாக்ஸாக) ஏதாவது உள்ளூர் நியூஸ் உண்டா?
பஜனை: ஐயா அண்டை நாட்டுல கொடுங்கோலாட்சின்னு மரத்தடியில பேசிக்கிறாங்கய்யா
ஸ்ரீ: அது வாஸ்தவம்தானேய்யா. இந்த விஷயத்துல என் தர்க்க ஸாஸ்திரம் எப்பவும் நியாயமே பேசும்.
பஜனை: நீங்க ஒரு வார்த்தை சொன்னாலும் திருவார்த்தை சொன்னீங்க ஐயா!

(திடீரென்று ஒரு பாடல் தெருவோரத்தில் கேட்கின்றது)

அய்ங்க அய்ங்க அஆஆஆஆஆ
தமிழே நீயென்ற அகம்பாவமே
நீ
அறுத்தவுடன் எந்நாபியில் சீழ்த்தொல்லையே..
.

(பாடல் சில மணித்துளிகள் தொடர்கின்றது)

ஸ்ரீ: (தெருமுனைக்கு பஜனைக்குழுவுடன் ஓடிவருகின்றார். சிவனார் கால் கால் போட்டு தரையில் படுத்திருக்கின்றார்) அப்பா சற்று முன் ஒரு ஜீவ கானம் கேட்டதே. யார் பாடியது?
சி: அட ஜீவமாவது ஜோதியாவது. நாந்தாங்க சும்மா கத்தினேன்
ஸ்ரீ: என்ன கத்தினாயா? இதுபோன்ற ஒரு தர்க்கப்பாட்டை நான் வாழ்நாளிலேயே கேட்டதில்லை. ஏம்ப்பா உனது குரு யார்?
சி: குருவுல்லாம் இல்லீங்கோ. பரம ஆனந்தார் கோவிலில் பாடுவாருங்கோ. அதுல ஒண்ணை அவுத்து வுட்டேன்.
ஸ்ரீ: என்னது பரம ஆனந்தாரா? நாளைய போட்டியில் என்னை பரம சோகானந்தாராக ஆக்காமைக்கு உமக்கு நன்றி. நான் வருகின்றேன்.

(ஸ்ரீ தற்போது தர்க்கம் து(ம)றந்து துக்கம் தொலைக்க சோமபானத்துடன் பெரிய எரிமலைத் தீவிற்கு சென்றுவிட்டதை, சிவனார் பரம ஆனந்தார்க்கு அப்டேட் கொடுக்க -- சுபம்)

திரை

பினா.குனா. தானே தமிழென்று தலைவீங்கி, எதிர்கருத்தை எதிரிக்கருத்தாய் பாவித்து, மார்க்கண்டேயப் பதிவுகளென்ற கற்பனைக் குட்டையில் ஊறித்திளைத்து, உரோமம் தொலைத்துரித்தபாஸிஸகோழிக்கூட்டத்திற்கு இப்பதிவு தர்ப்பணம்.

Tuesday, September 27, 2005

குஷ்பூ - அர்(ன)த்தங்கள்

தமிழ் வளர்க்கும் காலத்தே மொழியின் வளமையையும், அதன் தொன்று தொட்ட பின்புலத்தையும், கலாச்சார உணர்வுகளையும், கலகக் காரணிகளையும் சற்றே சீர் தூக்கிப் பார்க்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகிப் போய்விட்டது.

குறிப்பு: தனித்தமிழ் என்பது முயற்சியா அல்லது அயற்சியா என்பதைப் பற்றி வாதம் செய்ய இப்போது நேரமில்லை. பின்னர் விரிவாகப் பதியலாமென்று இருக்கின்றேன். இருப்பினும் தனித்தமிழாய் என் பதிவு வாசிக்கப்பட்டால் அதற்கு நான் பொறுப்பில்லை.

குஷ்பூ என்னும் சொல்லுக்கு தமிழில் பொருள் என்ன? மணம், நாற்றம், வாசம், வாசனை என்று பல பொருட்கள் கொள்ளலாம்.

முதல் சொல்லான மணத்தைப் பற்றி பார்க்கலாம். அம்மணத்தின் பொருள் என்ன? மணம் என்றால் திருமணமென்றும் பொருள்படும். இரண்டிற்கும் தொடர்பென்ன? மகரம் மௌனமாக அமணம் என்றும் ஒரு சொல் பிரயோகத்தில் உள்ளது. அகரம் என்றுமே எதிர்மறைப் பொருளில்தான் (எ.கா. விசுவாசம் X அவிசுவாசம்) வருமென்று எங்கேயோ படித்ததாய் நினைவு. அப்படியென்றால் மணம் என்னும் சொல்லுக்கு அமணம் எதிர்மறையா? நாசிக்கு உவப்பானது நறுமணம். இன்னும் வளமை, செழுமை, மரியாதைக்குண்டான, உயரிய என்றும் பொருட்களும் கொள்ளலாம்.

அடுத்தது நாற்றம். நாற்றம் என்பது பொதுவாகவே எதிர்மறை பொருளிலேயே பயன்படுத்தப்பட்டோ, உணரப்பட்டோ வந்திருக்கின்றது. ஆனால் துர்நாற்றமே சரியான எதிர்மறை பயன்பாடு. வலைநாற்றமென்றால் என்னவென்று கூறுங்களேன். பரிசாக கும்பிநாற்ற நூல் பரிசு.

அடுத்தது வாசம். வாசமென்றால் மணமென்ற பொருள் தந்தாலும் வேறு பல அர்த்தங்களும் ஒன்று. உறைவிடம். வசிப்பிடம் (எ.கா. வாசத்தலம்). ராணிவாசம் என்றால் அந்தப்புரம் என்று பொருள். வாசம் தரும் பொருட்கள் வாசனாதி திரவியங்கள். ஏன் ஆடை, வஸ்திரம், துண்டு என்ற பொருட்களும் உண்டு. இறகு, இறக்கை, நீர், நெய், உணவு, மந்திரம், வேகம், கைமரம், பேச்சு, வார்த்தை, வாக்கியம் ஏன் சரஸ்வதியையே குறிக்கின்றது. இத்தனை வாசங்களை கண்டபின் ஆவாசமாயிருக்கின்றதா? அஞ்ஞாதவாசம் போனவர்கள் பதில் சொல்லுங்கள்.

கடைசியாக வாசனை: பிறர் சேர்க்கையால் உண்டாகும் சில/பல பழக்க வழக்கங்கள் என்றும் பொருள் கொள்ளலாம் (எ.கா. சேர்க்கைவாசனை). முற்பிறவிப்பயனால் இப்பிறவியில் நடந்து கொள்ளும் முறை எனலாம். இவ்வாசனையை கட்டுவோருமுண்டு. வாசனை தட்டுவோருமுண்டு. வாசனைப் பொடி தூவுவோருமுண்டு.

முடிவாக குஷ்பூ என்ற பதத்திற்கு அவரவர் நாசிமண்டலத்தின் உணரரும்புகளுக்குத் தக்கவாறு, உணரும் தன்மைக்கேற்றவாறு பொன்மலரும் நாற்றமுடைத்து என்று நேர்/எதிர்/நேரெதிர் மறைகளாகவோ அல்லது எங்கோமணம் மணக்கின்றது என்று விஷயவாசனையின்றி பொதுப்படையாகவோ (அ·தாவது ஜல்லியடிப்பது) அ(ன)ர்த்தம் கொள்ளலாம்.

பி.கு. இப்பதிவு முழுக்க முழுக்க குஷ்பூ என்னும் பதத்திற்கு (இந்தியா, உருதுவா, சமஸ்கிருதமா என்று ஆராய்ச்சி நடக்கின்றது) தமிழில் விளக்கங் காணும் ஒரு அறிவிலியின் முயற்சியே. தனிநபரைக் குறித்த பதிவென்று தப்பர்த்தம் கொண்டு பின்னூட்டத்தில் பிளந்து கட்ட வேண்டுவோர்களுக்கு இப்போது பதிலளிப்பதாய் எண்ணமில்லை. பதிவிற்கு உதவிய செம்மொழி வளர்க்கும் மதறாஸ் பல்கலைக்கழக அகராதிக்கு மனமார்ந்த நன்றி !!!

திரைப்பாடல்களுக்கு நோபல்

திரைப்பாடல்களுக்கு நோபல் பரிசு கொடுக்கவேண்டுமென்று பலகாலமாய் பேரரசுக் கவிஞர்(கள்) போராடி வருவதை உலகம் அறிந்ததே. நோபல்லும் பாடல்களையும், அது எத்துறைக்காக சிபாரிசு செய்யப்படுகின்றதென்பதையும் தீர்மானித்து தமது குழுவின் பரிசீலனைக்குத் தெரிவிக்க வேண்டுமென்று கட்டளையிட்டது. இது போதாதா? ஒரு பெரிய மாநாடு தமிழ்ச்சங்கம் கண்ட மதுரையில் கூட்டப்பட்டது. ஜிஞ்ஜினக்கா ஜிஞ்ஜினக்கா ஜினுக்குத்தானென்று வலைப்பூவாளர்கள் தமது சிபாரிசுக் கவிதைகளை எடுத்துக் கொண்டு மாநாட்டில் குவிந்து விட்டனர். கூடவே தமிழார்வலர்கள், கு(இ)டிதாங்கிகள், துணை வேந்தர்கள், எழுத்தாளர்கள் என்று குழுமி விட்டார்கள். சரித்திரத்தில் முதல் முதலாக இப்பரிசு அறிவிக்கப்படுவதால் பல துறைகளில், பல காலகட்டத்தில் எழுதப்பட்ட பாடல்களை பரி'சீலனை செய்யப்போவதாக மாநாட்டு அறிக்கை தெரிவித்தது. இதோ மாநாட்டில் நடைபெற்றதை தொகுக்கின்றார் நமது சிறப்பு நிருபர்...

நோபல் கட்டு-உரை:

இணையத்தில் சிறியவரும், அனுபவத்தில் மூத்தவருமான பார்ட் சிம்சன் 'சின்ன ராசாவே சித்தெரும்பு என்னைக் கடிக்குது' என்ற பாட்டை தன் தேர்வாகக் கூறினார். பெரிய, வளர்ந்த பனைமர ராசாவை நோக்கி நாயகி பாடிய சின்ன ராசாவே என்ற பாடல் கற்பனை வளம் என்ற துறையில் பரிசு பெற வேண்டுமென்று கூறினார்.

ஒரே ஒரு ராத்திரிக்கு வெச்சேன் கச்சேரி என்று பாடியபடி கலங்கடித்தார் அஆப்பு. ஒரே ஒருவரை மனதில் வைத்து எழுதப்பட்ட பாடல் கு(த)த்துவம் துறையில் இது சிறந்ததாக அறிவித்தார்.

கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்திருக்கு. எதுக்கு? என்ற பாடல் சிறந்த 'கேள்வி-பதில்' துறையில் பரிசு கொடுக்கலாமென்று ரவிச்சிதா தெரிவித்தார்.

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு .யிரே .யிரே என்ற பாடலே சிறப்புப் பார்வை துறையில் சிறந்ததென்று முகமிலி கூறினார்.

நிலாக்காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பாணமென்று முக்கி முனகிக் கொண்டே வந்த பீரு பபித்தா ஹம்மிங் துறையில் டைமிங் காட்டியதற்காகவும், சித்தாடை கட்டிக்கிட்டு (இதோட ஒரிஜினல் வெர்ஷனே மறந்து போச்சப்பா) சிறந்த பின்-உல்டா-நவீனத்துவம் துறையில் பரிசு தரவும் சிபாரிசு செய்தார்.

இலந்தப்பழம் இலந்தப் பழம் ம்ம்ம்ம்ம் செக்கச் சிவந்த பழம் என்றபடி எல்லாம் பே(ஏ)சுறவர் வந்தார். ஆன்லைன் முயூசிக்கில் அதிகம் இறக்குமதி செய்யப்பட்ட பாடல் இதுவென்று புள்ளி விவரத்தையும் அள்ளிவிட்டு குழந்தை, குமரன், குமரி, அம்மம்மா, அப்பப்பா கூட ர(ந)சித்த இப்பாடலுக்கு ஆல் டைம் அச்சீவ்மெண்ட் கேட்டகோரியில் பரிசு தரச் சொன்னார்.

அண்ணா பல்கலை துணை வேந்தரோ 'செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே' பெண் விடுதலை துறையில் சிறந்ததாக அறிவித்தார்.

இதற்கு மேலும் கட்டுரையை நீட்டாமல் பாடல், சிபாரிசு செய்த நபர், துறை என்று தருகின்றேன்.

நிலா அது வானத்துமேலே பலானது ஓடத்து மேலே -- அகர ஓவியர் -- மிமிக்கிரி துறை
ஹலோ டாக்டர் ஹார்ட்டு மிஸ்ஸாச்சே -- க்ளூலி -- தூயதமிழ் துறை
ஐ லவ்யூடா யாரும் தம்மடிக்கப் போகாதீங்கடா -- க்ளூலி -- மருத்துவத் துறை
பொன்மேனி உருகுதே என்னாசை பெருகுதே -- பெரியபொண்ணு -- டிகிரி'படிப்பு துறை
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எந்தன் கதையை (ஒரிஜினல் வெர்ஷன் இல்லை :-) -- மலாய்மன்னன் -- மஜா துறை
மல மல மலே மலே மல மலே -- லாடுகும்தாஜ்தாஸ் -- மருதம் துறை
மே மாதம் தொண்ணுத்தெட்டில் மேஜரானேனே -- கருத்து கண்ந்சாமி -- இலக்கியம்
வாடி என் கப்பக் கிழங்கே -- மேலாண்மை மேனாக்ஸ் --வணிக சந்தை
கட வீதி கலகலக்கும் என் அக்கா மக -- மேலாண்மை மேனாக்ஸ் -- பொருளாதாரம்

அம்பது ரூபாதான் அம்பது ரூபாதான் ஐயா என் தேவையெல்லாம் நாளைக்கொரு அம்பது ரூபாதான் -- குவாட்டர்A கோவிந்சாமி -- குடி'யவதாரம்

சங்கே முழங்கு சங்கே முழங்கு -- இணையப்பெரியோர் -- தமிழிசை

மசாலா அரைக்கிற மைனா உன் மத்தாளம் என்ன விலை -- திரைசுவை கோபு -- சமையல்
அட சிங்கம் போல நடந்து வரான் எங்க பேராண்டி -- ஜெயகுமார் -- ஆளுமை
குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன் வெடி குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன் -- பீட்ஸாபசந்த் -- ஆண்மை

சிபாரிசுகளின் எண்ணிக்கை 744'ஐ இன்று தாண்டுவதால் இத்தோடு நிறுத்திக் கொள்கின்றேன். விடுபட்ட/ மறுக்கப்பட்ட / மறக்கப்பட்ட பாடல்களை நேயர்கள் தெரியப்படுத்த வேண்டுகின்றேன்.

Wednesday, September 21, 2005

துப்பறியும் குசும்பு 007

10. True Lies: நியூயார்க்கில் பிரபல பெண் அதிபர் பேத்திவிட்டுப் போனாரென்று அனைவரும் அறிந்ததே. இருப்பினும் கேட்க மறந்த கேள்விகள் என்று கனவையும், காட்சியையும் எழுத்தாய் வடித்து பலே பதிவு போட்ட பையாவை நீங்கள் ஏன் அவற்றை கேட்கவில்லையென்று யாரும் வினவவில்லை. சரி வுடுங்க...வெற்றிவேல் வீரவேல் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரான்னு பாட்டு போட்டு கும்தலக்கா டான்ஸு ஆடுவோம்.

9. Open Ticket: தொலைக்காட்சி நடிகர் ஒருவர் (?!@) பிரபல வார இதழில் ஓப்பனா டிக்கெட் தரார். கேத்ரீனா பற்றி இவர் விட்ட டாலர் தேசத்து கதையை குன்னக்குடி ஓவியர் பிய்த்துப் போட்டது தனிக்கதை. இணையத்தில் குழுமமாக பின்னிப் பெடலெடுக்கும் பட்டாளம் அமேதியாயிருப்பதுதான் அதிசயமாக இருக்கின்றது. அயோக்கிய ராஸ்கோலுன்னு கொரலு வுடும் கும்பலில் மற்றவாளை வுடுங்கோ... அட நீங்களுமா டமாசு கர்னாடிக்டமாசு டமாசு

8. Sania Sonia?: சானியா சோனியா ஸ்தீரிகளில் யாரைப் பத்தியும் எழுதலாம்ங்க. ஆனா அதுக்கு முன்னாடி ஒரு மீள்பதிவு போடணும். அதில் சானியா சோனியாவுக்கு பிடித்த/பிடிக்காத எல்லாவற்றையும் பட்டியல் போட்டுத் திட்டவேண்டும். அட ஸ்தீரினிவாஸா ஸ்தீரினிவாஸா ஏம்ப்பா இதுக்கு ஒரு வரை முறையே கெடையாதான்னா.... இல்லைபா. போட்டுத் தாக்குதான் ஒரே வழி. ஊருக்கு எளைச்சவன் ஆண்டிதான் இருக்கானேன்னேன்.... ஆண்டவன் சொத்து ஆளுக்கொரு குத்து. குத்துங்க ராசா குத்துங்க...

7. Super Star: 7. Super Star: 7. Super Star: இந்த வார ஷ்டாரு சும்மா ஜொலிக்குது. ஜொலி ஜொலிக்குது ஆஞ்சலினா ஜோலி மாரி ஜொலிக்குது. ஜொலி ஜொலிக்குது. ஒன்றை வருடம் ஆகிப்போச்சா? ஏதோ நேத்தைக்கு கதைச்சதாய் நெனப்பு. பழைய நெனப்புத்தான் பேராண்டி பழைய நெனப்புதான்'ன்னு கெக்கேபிக்கே'ன்னு யாரோ பாடுறாங்கப்பூ! கலக்குங்க ஷ்டாரே கலக்குங்க!!! நம்மள வெளையாட்டுச் செய்தி படிக்க வைச்ச ஆளுக்கு ஒரு சலாம் குலாமு இல்லேன்னா எப்பிடி? :-)

6. Lost & Out: கண்ணாலம் தான் கட்டிக்கினு ஓடிப்போலாமா'ன்னு ஆசாமிங்க பாடிக்கினே போனது உம்மையாயிடுசுங்கோவ். ராசா ராசா என் மம்முத கேவி ராசா முன்னாடிப்போனா பின்னாடியே குருத மேல அழகரும் போயிட்டார். பாட்டிலுக்கு என்னாச்சுன்னே தெரியல. அடுத்த வர்ஷம் கம்பைலேஷன்னு இப்பவே பயர்பாக்ஸ¤ல லவ்விக்கினு கரும்பு ஜூஸார்... ஏம்ப்பா ஏதாவது செய்ங்கப்பா... ஏதாச்சும் எழுதுங்கப்பா... உபிச மாதிரி அமேதியா இருந்தா நம்ம எப்பிடி குசும்புறது?

5. LIFO (Last In First Out): வாழைப்பழம் வழவழத்து கொழகொழத்து நழுவிக் கீழே விழுந்தது. சரியாகச் செப்பினால் முகமூடியின் கசுமாலப்பொடி பரிசு. இந்த வாழைபழம் கூடத் தேவலாம்ப்பா... சுரா பாரா காத்ரீனா பெப்ஸி உமா ரிவால்வர் ரீட்டா'ன்னு ஒரே வழ வழா கொழ கொழா... இன்னாதாம்பா சொல்ல வரேள்? நச்சுன்னு தெளிவா ஒரு பதிவைப் போடுங்கப்பா கப்பா ப்பா பாபா....

4. Spell Check: ரொம்ப நாளாவே அடக்கி வைச்சுருந்த கொழப்பமான கேள்வியப்பா... அவுஸ்திரேலியாவா? ஒஸ்ரேலியாவா? ஆஸ்திரேலியாவா? சரியான பதிலுக்கு நியூஸிலாந்திலிருந்து கூழோ, கஞ்சியோ ஊத்தப்படும் சேச்சே கொடுக்கப்படும். சின்னவர் போட்டியில் கலந்து கொல்ல அனுமதியில்லை.

3. Haloween: ஆரம்பிச்சுட்டாங்கப்பா... 25 பேய்படம் பாத்துட்டு பயங்காட்டப்போகின்றார் நமது இணைய டைரக்டர். வாய்ப்புத் தந்த நெட்பிலிக்ஸ¤க்கு ஒரு ஓ. ஹாலோ'வீல்' படங்கள (சுட்டும்,சுடாத) மக்கள் நெட்ல போடலாமே? எப்படியோ சொந்த போட்டோவைப் போட்டு பயங்காட்டினாலும் சர்தான்...என்னாபா மொம்மூடி சரியா? :-)

2. NetWatcher: பொன்னார்மேனியனே புலித்தோலை அரையில் கட்டி ஆடுகின்றார் ஆட்டமெல்லாம் தாண்டவக்கோனே !!! ஒண்ணு மட்டும் நிச்சயம். நெட்டும் அகலப்பாட்டையும் வந்தாலும் வந்தது. யாரும் என்னவேணாலும் பெனாத்திட்டு போகமுடியாம போச்சு. டங்குவாரு அந்துபோகுது. கல்க்குங்கோ நைனா கல்க்குங்கோ... :-)

1. Koment: போன பதிவுல பின்ன ஊட்டத்தில உபிச வாடை அடித்ததாக தெரிய வருகின்றது. உம்மையாவா? மெய்யாலுமா? சத்யமாவா?

Friday, September 16, 2005

துடுப்புகளின் சப்பாத்துகள்

-- சுத்த சன்யாசி

கரங்கள் காய்த்துக் கிடந்தன
வலித்து வலித்து
அட்ச தீர்க்க ரேகைகளாயின்றி குழப்பக் கோடுகள்
கைரேகைகள் குறியீடா?
மேலே கல்வி கீழே கலவி
நடுவே ஆயுள் அல்லது செல்வம்
சை(டு)கிக் கூறினார்

ஒரு பார்வை.
இழுத்து நிறுத்திய இழுத்து நிறுத்திய
நாணோ, உண்டி வில்லோ
வளைந்து பின் திமிறும், விடுக்கையில்
விட்ட கையின் வலிமையே வாசமென

சப்பாத்து கடிக்கின்றது
சபலமும் கடிக்கின்றது பலகாலம் முன்பே தொலைந்துபோன
காமக்கயிறும் கடி'வாளமும்
தலைகீழாய்ப் பிறப்பென்பதால் பிம்பம் எஞ்சும்
ஆடிகளின் பிரதிபலிப்பில் இடவலமாய்

மோனத்திலாழ்வது உள்ளமல்ல
மூத்திரசந்தின் கோலிகில்லி ஆட்டத்தில்
பறந்து மறையும் கிட்டியில் புள்ளென்றது
வலித்துக் காய்ந்த கரமும் தாழ்ந்த சிரமும்
சீறிப் பாய்ந்ததில்
சிதறுகாயாகும் கனவு

எகத்தாளமாய் வலிக்கும் உரமேறிய கைகள்
நீரில் நேர்க்கோடு கிழிக்கின்றது
அலட்சியமாய் முன்னேறும் படகு
தன் சுக்கானைப் பார்த்துத் தானுமொரு
கோட்டை கோடாய்ச் சமைத்து
கரத்தின் கைவன்மையின் நெளிவு சுளிவுகளுடன்
சில குமிழிகள்
நீரோட்டத்தின் நெடிய பயணத்தில் எழுந்தவொரு திடீர் ஆழிப்பேரலை
எழுந்தும் அலையில் அலைபாயாமல்
நாசூக்காய் நகர்ந்து விரையும் படகு
பேரலையைக் கண்டு பெருங்கூச்சலிடும் பேதமை
குழப்பக் கோட்டை கட்டுகின்றது
குமிழிகள் உடைகின்றது

உடைந்து மறைந்தாலும் நிலை தானென்கிறது
நிலையில்லாத நிலைமறந்த நிலைகெட்ட நிலைமை
ஸ்திரமற்ற தன்மையில் வெடித்து மறையும் குமிழி.
எதிர்துருவங்களை இணைக்க
பாதை தேடி படகினைச் செலுத்தி
கட்டுடைக்கும் பயணத்தில் கற்பனை கசிந்துருகி
துடுப்புகளுக்கும் பாதணிகள் கொடுக்கின்றோம்

கீறிப் பிளந்த நீரினில்
விளைந்த குமிழிகள் கடல்கண்ணிகள்.


பி.கு. பிரியாத பதிவு போட்டி ஒண்ணு முகமூடி அறிவிச்சதால இது நம்மளோட பங்களிப்பு
வாத்துப் படம் இல்லாமலா?
போட்டோ உபயம்: feathersite.com

இலக்கியம் For Dummies

இலக்கியம் என்றால் பலருக்கு ஒவ்வாமையாக இருக்கின்றது. இதோ எதற்கெல்லாமோ கையேடு போட்டுக்களித்தவர்கள் அதிமுக்கியமான இத்தலைப்பை மட்டும் விட்டுச் சென்றனர். இதோ இலக்கியம் For Dummies:

1. இலக்கியம் எத்தனை வகைப்படும்?

இலக்கியம் சிற்றிலக்கியம், பேரிலக்கியம் என்று இரு வகைப்படும். சிற்றிலக்கியம் என்றால் புரியாமல் புரியும்படியும், பேரிலக்கியம் என்றால் புரிந்தும் புரியாமலும் இருக்கும். சுருங்கச் சொல்லின் சிற்றிலக்கியம் சிற்றிதழ்களிலும், பேரிலக்கியம் வெகுசன விரும்பும் ஊடகங்களிலும் தென்படும்.

2. இலக்கியம் படைப்பது எப்படி?

அதி முக்கியமான கேள்வி. முதலில் தனக்குப் பிடித்த அல்லது பிடிக்காத தலைப்பைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். பிடிக்காத இலக்கியவாதிதான் உங்கள் தேர்வு என்றால் உங்களுக்கு இலக்கியம் வசப்பட்டு விட்டதென்று அர்த்தம். பின்னர் ஏன் பிடிக்கவில்லை என்று குத்துமதிப்பாக 20 உப-தலைப்புகளைப் பட்டியலிடுங்கள். அந்த 20 உப-தலைப்புகளில் உங்களுக்கு தோதானபடி மற்ற யார் யாரெல்லாம் அதே இலக்கியவாதியைத் திட்டியிருக்கின்றார்கள் என்பதை சப்பைக் கட்டாக இட்டு நிரப்ப வேண்டும்.

3. இலக்கியத்தில் புள்ளி விவரங்களின் பங்கு என்ன?

புள்ளி விவரம் இல்லையென்றால் அது தரமான இலக்கியமே இல்லை. அக்பர் பீர்பாலிடம் தனது சாம்ராஜ்யத்தில் எத்தனை காகங்கள் இருக்கின்றதென்று வினவ பதிலாய் ஒரு எண்ணிக்கையைச் சொன்னார் பீர்பால். இதில்தான் இலக்கியமே அடங்கியிருக்கின்றது. காகங்களை கணக்கெடுத்து பீர்பாலின் எண்ணிக்கை தவறென்று அக்பர் சொன்னாலும், காகங்கள் பறந்து போயின; இன்றேல் புதிய காகங்கள் பறந்து வந்தன என்று சால்ஜாப்பு ஜல்லியடிக்கத் தெரிந்து இருத்தலே சிறந்த இலக்கியவாதியின் பண்பு. குறிப்பாக காலவோட்டம் (Chronology of Events) இலக்கியத்தில் முக்கிய பங்காற்றுகின்றது. எடுத்துக்காட்டாக "பாசு சபையைச் சேர்ந்த பாஸ்டன் பாம்பிரிட்ஜ், போஸ்ரனில் 1970'களில் காலாபாணி என்ற அமைப்பை நிறுவி வெகுஜன ஊடகத்தை தமது நூல்களில் விமர்சித்தார்... 1980'களில் புதுப் பாய்ச்சல் 1990'ல் பிளா பிளா பிளா (உபயம்: பாரா) 2000'ல் etc. etc. etc. (உபயம்: அகர தூரிகை)." ஆங்கில நூல்களில் கடைசியில் பொதுவாக காலவோட்டதைப் பற்றி சிறுகுறிப்புக் காணப்படும். ஆனால் தமிழ் இலக்கியத்தில் இதுதான் முக்கிய இழை.

4. இலக்கியத்தில் தமிழ்ப் பதங்களின் பயன்பாடு யாவை?

அப்பிடிக் கேளுங்க. சொல்லுதேன். பாவிப்பய. பட்டுக் கிடப்பென். மூதி. என்ற பதிவைக் காணோம்ங்க. இது போன்ற வழக்குச் சொற்கள்/சொற்றொடர்கள் யாவும் பேரிலியக்கியத்தில் காணப்படும். தப்பித் தவறி கூட இவை சிற்றிலக்கியத்தில் தோன்றலாகாது. கட்டுடைத்தல், நிறுவனமயமாக்கல், சர்சித்தல், தர்கம், இட வல சாரியம், ஒற்றைப் பரிமாணம், தாழ்வு மனப்பிறழ்வு, பிளவாளுமை, நுகர்வு, நகை முரண் போன்ற சொல்/சொற்றொடர்களை தாராளமாய் அள்ளித் தெளிக்க வேண்டும். உ.ம். FEMA'வின் மைக் பிரௌன் கேட்ரீனாவின் தாக்கத்தை முழுமையாக உணரவில்லை. இதனால் ஏகப்பட்ட உயிர்கள் மற்றும் உடைமைகள் அழிந்தன. இது பேரிலக்கிய வகை. வலதுசாரி வன்முறையில் ஊறித் திளைத்து, பணம் படைத்தவரையே பாதுகாக்கும் ஒற்றைப் பரிமாணம் கொண்ட பிரௌன் போன்றோரின் உயர்வு மனப்பிறழ்வு காரணமாய் கேட்ரீனாவின் தாக்கம் பல்மடங்கு பெருகி சாதரண நுகர்வோருக்கு கடும் சிரமம் கொடுத்தது. இது சிற்றிலக்கியம்.

5. மேற்கோள்கள்?

மேற்கோள்கள் இல்லாமல் இலக்கியமேயில்லை. தமிழிலே ஆயிரமாயிரம் படைப்புகள் இருப்பினும் பாரதியின் 'சென்றிடுவீர் எட்டுத்திக்கும்' என்ற ஆணையை சிரமேற்கொண்டு (இதுவே மேற்கோள்தான்) ஹெமிங்வே, உருகுவே, பராகுவே என்று 'left right & center' அள்ளித் தூவ வேண்டும். மேலும் வாயில் நுழைய மறுக்கும் பெயர்கள் தேவையெனில் கூகிள் தேடுபொறியின் உதவியை நாடலாம்.

பி.கு. இன்னும் உமது சந்தேகங்களை எமக்குத் தெரியப்படுத்தவும். கேள்வி-பதில்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு விக்கும்பீடியாவில் விரைவில் வெளியாகும்.

Thursday, September 15, 2005

துப்பறியும் குசும்பு 007

ஆஹா வலைப்புள்ளிய வளக்கோணும்னு சவுண்ட் வுட்ட பார்ட்டி கலாஸுன்னு பாலூத்தி பரவசப்பட்டவாக்கும், நம்ம புள்ளாண்டான் காணாமப் பூட்டானேன்னு அக்கறையா தேடுனவாக்கும் கோல்டன் பெல் வார்த்தையில சொல்லணும்னா "நன்றிகள்". "-"ல மீண்டும் குத்தி பரவசப்பட வலைப்பூ நண்பர்களுக்கு மீண்டுமொரு அரிய வாய்ப்பு. என்னாபா மொம்மூடி கையரிக்கோணுமே :-)

10. ஸ்வீட்டான பிரச்சினை: இம்மாதத்தின் சிறப்பு கவனம் பெற்ற வார்த்தை. இதனால் உண்டான வாயுப் பிரச்சினை தனிக்கதை. வாயு ஸ்வீட்டால் விளைந்ததா இல்லை செரிமானம் ஆகாத பீப் சுக்காவால் விளைந்ததா என்று இலக்கிய 'தர்க்கம்'/'தர்கம்' நடக்க இருப்பதாக ஜப்பானிய ரெஸ்டாரெண்ட்டில் சிலர் பேசிக் கொண்டது காதிற்கு மற்றும் கவனத்திற்கு வந்தது.

9. பமக பிளவு?: கலகல வென்று ஆரம்பிக்கப்பட்ட பமக'விலிருந்து மூன்றெழுத்து பெண் பெயர் எழுத்தாளர் வெட்டிக்கொண்டு (அட இங்கனயுமா) போனதாகத் தெரிகின்றது. இதனால் பமக கலகலத்துப் போனதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு மருத்துவம் என்னவென்று மருத்துவர் ஐயாவிடம் ரகஸிய இமெயில் தமிழில் அதுவும் யுனிகோடில் சென்றுள்ளதாகவும் தகவல் கசிகின்றன. அந்த மூன்றெழுத்து ஆகாமி யாரென்று க்ளூலி வேண்டுவோர் நேக்கு மெயில் அனுப்புங்கோ!

8. அவனா நீ?: முகமூடி போட்டாலும் போட்டேன். தெனாலி கமல் போல எல்லார்க்கும், எல்லாவற்றிலும், பயம். அவனா நீ? உன் ஷ்டைல் தெரியுறதே? அம்பி நேக்கு நன்னாத் தெரியும். மன்னவனே... தென்னவனே'ன்னு பாடிக்கினு (யோவ் யாருய்யா பாட்டுக்கு லிங்க் கேக்குறது? அதுக்குத்தான் ஆன்லைன் மியூசிக்க மொத்த குத்தகைக்கு எடுத்துக்கினு மசக்கைசூசட்ஸ்ல ஒரு ஆ"சாமி" இருக்காருல்ல. அவரிண்டை போய் அளவளாவுங்கோ) பாடிக்கினு நாம்பாட்டுக்குப் போனா மக்கள் "சின்னவனே" ன்னு சொல்றாங்கோ. அட போங்கப்பா... டிஸ்கிளைமர் போட்டுப் போட்டு அலுத்துப் போச்சு. நான் அவனில்லை. அவன் நானில்லை. ஆளை வுடு அப்பீட்...

7. பயாஸ்கோப்பு படம்: இப்பெல்லாம் பதிவு போட்டு கொயப்பினது போதாதுன்னுட்டு படம் போட்டு கொல்றாங்கோ ;-) கண்ணுல தெரியுது கருவிழி, மண்ணுல தெரியுது மரம் (வெட்ட வந்துடப் போறாங்கப்பா) அப்பிடின்னு கவியரசு ஷ்டைல்ல டைட்டில்ஸ் வேற...ஙௌக்கா மக்கா... பின்ன ஊட்டத்தைப் பாக்கோணுமே... குழுமமா சேந்து கொயப்பறாங்க... வாடி வா எனக்கும் போட்டா புடிக்கத்தெரியும்னு வாத்தைப் புடிச்சிப் பாவம் எக்ஸ்ரே மிஷின்ல போட்டுட்டாய்ங்க... (ஆமா வாத்தின் வயிற்றில் ஒரு மீனின் எலும்பு தெரிஞ்சுதே).

6. போட்டா போட்டி: கவித, கதப் போட்டி ஸீஸன் முடிஞ்சது. அடுத்து என்னாபா? இதோ இணைய மக்களின் மனதில் ஓடும் போட்டி ஐடியாக்கள்: படப்போட்டி (உபயம்: கோல்டு பெல் ஸார்) பின்னூட்டப் போட்டி (ஹையா டோண்டு ஸாரை விட்டா வேறு யாரிதை நடத்த முடியும்?). தர்க்கப் போட்டி (ஆனால் ஒர்த்தர் மட்டுமே இப்போட்டியை நடத்துவார் மற்றும் கெலிப்பார். ஆருன்னு கண்டுபியுங்கோ. பூர்ஷ்வாவின் புத்தகம் பரிசு). என்(ம்)மதம் சம்மதம் போட்டி (அட யாருப்பா இம்மாதிரி நேசமில்லாம ஆரோக்கியமில்லாம போட்டி வெக்கிறது?) என்னாமோ போங்க... அடுத்த போட்டியை சீக்கிரம் வையுங்கோ (வைதல் = திட்டுதல்).

5. அ.அ. (அரட்டை அரங்கம்): மரத்துக்கு கீழே குந்திக்கினு சீட்டுக்கச்சேரி நடத்தறாங்கோன்னு பீடி பெருமாளு தெரிவிக்கின்றார். கச்சேரில அல்லாரும் பூந்து கலாசுவதாக லேட்டஷ்ட் நியூஸ். நாட்டாமை தீர்ப்பை மாத்துன்னு கொடி பிடிக்க ஒருவர் மட்டும் சுகுற்றா கரும்பு ஜீஸ் சப்ளை பண்ணி கூலாக்குவதாகவும் கொசு(று) செய்தி. எல்லோரும் நன்னா இருந்தா ஷரிதான் !

4. சே சேன சேனல் ஜெயம்டா: 240 பாகையில் தென்மேற்கு திசையில் சனிபகவான் காட்சி தருவதால் ஒளிஒலிவாங்கித் தட்டு வைக்க முடியாமல் அவதியுறும் அன்பர்களுக்காக இணையத்தில் ஒரு பதிவுச் சேனலில் செய்திகள் வாசிக்கப்படுகின்றது. வேலை வெட்டி இல்லாதவர்கள் (அஃதாவது அலுவலகத்தில் வேலை செய்பவர்கள்) இச்சேனலைப் பார்க்கலாம்...சே படிக்கலாம். கோலங்கள் அபிக்கு இன்று பிடித்தது தோஷமா? ஜலதோஷமா? போன்ற சரித்திர முக்கியமான நிகழ்வுகள் பற்றி தெரிய படிக்க... (மாயவரத்தானிடம் விளம்பரம் எழுத டிரெயினிங் போகணுமப்பா)

3. பெண் விடுதலை: சானியாப் பொண்ணு என்னா டிரஸ் போடணும்னு அடிச்சிக்கிறாங்கோ. ஏம்ப்பா இதுல மதத்தைக் கொண்டு வாரீங்க? நம்ம அண்ணா யுனிவர்ஸிட்டியில 'பெண் விடுதலை'ன்னு ஒரு புதிய கோர்ஸ் ஆரம்பிக்கப் போவதாக புதிய தகவல் வந்துள்ளது. இதில் டிரஸ், செல்போன் இதர கொள்கைகளைப் பற்றி விரிவாக பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது. மேலதிக விபரங்களுக்கு காத்திருக்கவும். பெண் விடுதலை வேண்டுமென்ற பாரதியின் கனவு கடைசியில் நனவாகப் போகின்றது.

2. பேச்சு சுதந்திரம்: நாட்டுல நாக்கைக் கட்டுப்படுத்தி வைக்கிறாங்கன்னு தங்கமான பச்சா குற்றம் சாட்டியுள்ளதாகத் தெரிகின்றது. ஆருன்னா அவருக்கு இணையச்சுட்டிகள் கொடுங்கோண்னா... பேச்சென்ன வெறும் பேச்சு... இங்கன ஏச்சு சுதந்திரம் கூட உண்டுன்னு பாஸுக்கு புரிய வச்சிடலாம்னு ஒரு வாத்து கூறுகின்றது.

1. அழ அழகா: ஏண்டா இதிலேயும் குசும்பா? அப்பிடின்னு செல்லமா நீங்க திட்டுறது தெரியும். இர்ந்தாலும் அழ அழகான பதிவுகளும், சமுதாய பிரச்சினை மற்றும் தீர்வுகளின் பதிவுகளும் நம்பிக்கை கொடுக்கின்றன. ஏன் உன்னால இப்பிடியெல்லாம் உருப்பிடியா எழுத முடியாதா?ன்னு நிக்கலா கேக்றவாளுக்கு... ஐயா/ஐயி (பெண்பால் ஸாரே) உயரப் பறந்தாலும் நான் ஊர்க்குருவிதாம்ப்பா...