Monday, October 31, 2005

பண்டிகை வாழ்த்து

அது ஒரு குக்கிராமம். கப்பி சாலை இப்போது நிறைய ஓட்டைகளுடன் தார்ச்சாலையாய் மட்டுமே மாறியிருக்கின்றது. மற்றபடி பேருந்து நிலையம் கூட அப்படியே காட்சியளிக்கின்றது.

கைத்தறியை மட்டுமே நம்பியிருந்த ஏழைக்குடும்பம் அது. அக்கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு காரணப்பெயர் உண்டு. கடைக்கார வூடு, பண்ணை வூடு, மச்சி வூடு, மரமூடு, கேணி வூடு இப்படிப் பல. ஊருக்கே கடைக்கோடியில் அக்குடும்பம் வசித்ததால் அவர்கள் வீட்டின் பெயர் கடைசி வூடு.

வீட்டின் தலைவர் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரித்தாரே தவிர வருமானத்தை அல்ல. பெண்களே அதிகமாகப் பிறந்தது வேறு கவலை. கடைசியாய் ஒரு ஆண் மகவைப் பார்த்து விட்டு அதற்கு விவரம் தெரிவதற்கு முன்னாலேயே கண்ணை மூடி விட்டார்.

குசேலரும் இல்லை. புரவலர் கண்ணனும் இல்லை. இருப்பினும் வீட்டுப் பெண்கள் தைரியசாலிகள். கைத்தறி, களை பறித்தல், விறகு வெட்டுதல் என்று உழைப்பிற்கு ஒரு குறையும் வைக்கவில்லை. ஒரு வேளை உணவிற்காவாவது உத்திரவாதம் தந்தது அவ்வீட்டுப் பெண்கள்தான். வீட்டுத் தலைவிக்கு ஒரு வைராக்கியம். எப்படியும் ஒரே மகனை கைத்தறியில் உட்கார விடக்கூடாது. படிக்க வைக்க வேண்டுமென்பது அந்த படிக்காத ஏழைத் தாயின் கனவு. பிள்ளையும் படிப்பில் குறை வைக்கவில்லை.

அன்று தீபாவளிக்கு முந்திய இரவு. எதிர்த்த வீடோ அப்போது பெரிய நிலக்கிழாருக்கு சொந்தமானது. மிகப்பெரிய குடும்பம். செல்வச் செழிப்பிற்கு குறைவில்லை. ஏற்றத் தாழ்வுகளைப் பற்றி அந்த ஏழைப்பிள்ளைக்கு புரியாத பருவம். மத்தாப்பும், வெடிகளும் அதம் பறந்து தன்வீட்டு லாந்தர் வெளிச்சத்தை தூக்கிச் சாப்பிட, வீட்டுத் திண்ணையில் ஏக்கமுடன் அப்பிள்ளை வேடிக்கைப் பார்க்கும். தாயும் தன்னால் இயன்ற அளவு சந்தையிலிருந்து துணிமணிகள் வாங்கி வந்தாலும் எதிர் வீட்டோடு போட்டியா போட முடியும்? முதல் நாள் ஆட்டம் முடிந்தது எதிர் வீட்டுக் குழந்தைகள் தூங்கியதும் ரகஸியமாய் வெடிக்குப்பைகளை பொறுக்கியெடுத்து தன் வீட்டின் முன்னால் போட்டு களிப்படியும் அப்பிள்ளை. இப்படி பல தீபாவளி(லி)கள் கடந்தது.

காலச் சக்கரம் சுழன்றது. பிள்ளை வளர்ந்து பெரியவனாகி, மத்தியத்தரத்தை அடைந்து பிள்ளைகளும் பெறுகின்றான். திராவிடப் பாரம்பரியத்தை தன்னுள்ளே வாங்கிக் கொண்டு, தீபாவளி கொண்டாட மாட்டேன் என்பதில் அவருக்கு தீராத அடம்தான். பொங்கலென்றால் பிள்ளைகளுக்கு இரு புத்துடைகள் வாங்கித் தந்தாலும் தீபாவளிக்கு வாங்க மாட்டேன் என்பது அவரது கொள்(ல்)கை.

"டேய் வேணாம்டா. பச்சப்பிள்ளைங்க ஏங்கிப்போயிடும்டா", என்பதே அந்த முன்னாள் ஏழைத் தாயின் அந்நாள் ஓலமாய் அமைந்தது. எறும்பூர கல்லும் தேயும். சரி பட்சணங்கள் செய்து கொள்ளலாம், வெடியும் உண்டு என்று தனது கொள்கைகளை பிற்காலத்தில் சற்றே தளர்த்தினாலும் புத்தாடை மற்றும் பல வருடங்கள் தளரவேயில்லை. பொருளாதாரம் உயர உயர பட்சணங்கள், வெடிகளின் செலவீனங்கள் தாராளமயமாக்கப்பட்டன. தமிழர் திருநாள் பொங்கலென்றால் ஒரே கோலாகலம்தான்.

காலச்சக்கரம் மேலும் சுழல்கின்றது. பிள்ளைகள் வளர்ந்து பெரிதாக திருவிழாக் காலங்களில் மட்டுமே அனைவரும் சந்தித்துக் கொள்ளும் நிலை. முதன்முறையாக தன் பேரப்பிள்ளைக்காக தீபாவளிக்கு புத்தாடை வாங்குன்றார் அவர். அதுவும் ஸ்டோன்வாஷ். தனது பிள்ளை கல்லூரியில் படிக்கும்போது தலைகீழாக நின்ற போது கூட அந்த கழிசடையை வாங்கித்தரமாட்டேன் என்றவர் அவர்.

இதோ இன்று தீபாவளி. புத்தாடை எடுக்கவோ, வெடி வெடிக்கவோ தங்கு தடையில்லை. கொள்கைத் தடைகளும் இல்லை. கணி முன்னே அமர்ந்து, நிரலி வெடி வெடித்து, இந்தியா ஸ்டோர்ஸில் வாங்கிய பழைய ஸ்வீட் சாப்பிட்டு, துலக்கி வைக்கப்பட்ட பளிங்குக் கல் கோயிலுக்குச் சென்று பிரசாதம் சாப்பிட்டு வந்தால் தீபாவளி போயே போச்.

பாட்டி என் அப்பாவிடம் சொன்னது மட்டும் பசுமையாய் மனதில். "டேய் வேணாம்டா. பச்சப்பிள்ளைங்க ஏங்கிப்போயிடும்டா"

அனைவருக்கும் பண்டிகை வாழ்த்துக்கள்!!!

Wednesday, October 26, 2005

வில்மாவும் வேதனைகளும்

புயலடித்து ஓய்ந்தார் போலுள்ளது என்பதற்கான அர்த்தமே இப்போதுதான் விளங்கியது. கேட்டகரி ஒன்றிலிருந்து ஐந்தாக எகிறி பின்னர் இரண்டாகி தென் புளோரிடாவை குத்திய போது மூன்றானது. ப்ரோவோர்டு மற்றும் மயாமி (மியாமி) டேட் கவுண்டியையும் கதற அடித்தது வில்மா. சண்டமாருதத்தை பற்றி பின்னர் விரிவாகப் பார்க்கலாம். சூறாவளியின் தீவிரத்தை ஒன்று முதல் ஐந்து வரை வகைப்படுத்துவார்கள். வரையறை ஒன்று என்றால் குறைத்து மதிப்பிட வேண்டாம். என்ன சூறாவளிக் காற்றின் வேகம் கொஞ்சம் குறைவு. ஆனால் ராகுல் திராவிட் போல நின்று விளையாடும். அப்புறமென்ன வெள்ளக்காடுதான். பள்ளப்பகுதியானால் கோவிந்தா கோவிந்தா!!! வரையறை ஐந்து என்றால் பழைய உலகக்கோப்பை நாயகனான ஜெயசூர்யா போல. விளாசிக் கடாசி விட்டுப் போய்விடும். நியூ ஆர்லியன்ஸ் போல் கடலைவிடத் தாழ்வான பகுதியில்லை என்பதாலும், வில்மா என்ன பெரிய கில்மாவென அசால்ட்டாக இருந்த பல மடையர்களில் அடியேன் பிரதானமானவன். வில்மா எங்களை கைமா செய்து விட்டது. இதோ ஒரு லேட்டஷ்ட்:

1. 16,00,000 மக்கள் மேற்கூறிய இரண்டு கவுண்டிகளில் மின்சாரமின்றி தவிக்கின்றனர். எங்களின் மின்சார வழங்கியான FPL (Florid Power & Lights வெறும் 7,500 ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் (ஹிஹி Contractors) படை கொண்டு சித்து வேலைகள் செய்கின்றார்கள். எங்கள் வீட்டை ஒளிரச் செய்ததற்கு டாங்ஸ் மாமே! ஆனா மத்தவா நெலமை :-(
2. நிறைய இடங்களில் குடிநீர் மற்றும் ஐஸ் வழங்குகின்றார்கள். நேற்றைய நிலையிலிருந்து நிறைய முன்னேற்றம்.
3. பப்ளிக்ஸ், விண்டிக்ஸி போன்ற பல்பொருள் அங்காடிகளில் மலைப்பாம்பு வரிசை இப்போது கிடையாது.
4. ஓரிரு கொள்ளைகள் தவிர சட்ட ஒழுங்கு பிரச்சினை இதுவரை இல்லை.
5. அலுவலகங்கள் மூடியுள்ளன. வீட்டிலிருந்துதான் மின்சாரமிருக்கும் வரை வலைப்பதிய வேண்டும்(!)
6. பெரிய பன்னாட்டு முனையமான போர்ட் லாடர்டேல் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது. மியாமி நிலையத்தில் போக்குவரத்து தொடர்கின்றது.
7. எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது.
8. வெள்ள நிலை இல்லாததால் நினைத்த இடத்திற்கு வண்டியில் செல்ல முடிகின்றது.
9. வாடகைக்கார்கள் கிடைக்கவில்லை என்று தகவல்.
10. நுகர்பொருட்களுக்கு செயற்கை விலையேற்றம் செய்யப்பட்டதாய் இதுவரை புகாரில்லை. (நேற்று சைனீஸ் உணவகம்தான் பலருக்கு சோறிட்டது)
11. மின்சாரம் தொடர்ந்து கிட்டுமென்று நம்பிக்கையில்லை. நிலைமை சீர்பட(கெட) குறைந்தது 4 வாரங்களாகலாம்.
12. புழங்குவதற்கு நீர் தவணைமுறையில் தரப்படுகின்றது. நாடோடி நாதாரியான நானென்ன ஜெனரேட்டர், கிரில், பெட்ரோல் தொட்டி, தண்ணீர் டாங்க்கா வைத்துக் கொள்ள முடியும்? இன்னிக்கு செத்தா நாளைக்குப் பால் மாதிரி, பில்லிங் கட்டுன்னா மூட்டையைக் கட்டுன்னு வாழற அநேக கோடி அற்ப ஜீவன்களில் அடியேனும் ஒருவனல்லவா :-) கடந்த இரண்டு இரவுகளாக எதிர்த்த வூட்டு ஸ்பானிஷ் மக்கள் அடித்த லூட்டிஸ் இருக்கின்றதே? அட தேவுடா மூணு வேளை சூடு கூடப்பண்ணாம சைனீஸ் சாப்பிட்டு, மூன்று தடவை அடக்கி நான்காம் முறை மட்டுமெனில் பாத்ரூம் சென்று டங்குவார் கிழிந்து போன நிலையில் ஜே லோ பாட்டிற்கு லோ லோ வென்று குத்துப் போட்ட மக்களை (ம்கூம்... ஒண்ணும் பண்ண முடியல... நாக்கத் தொங்கப்போட்டு பார்க்கத்தான் முடிந்தது. அட "கிரில்லை" சொல்றேங்க. கோழிகள் சூப்பராய் வெக வைத்துக் கொண்டிருந்தன)
13. அதிவிரைவு சாலைகளில் தெருவிளக்குக் கம்பங்களில் 90 சதவீதம் மூளியாகி நிற்கின்றன (ப்ரோவோர்டு நிலை பரிதாபம்). நிறைய இடங்களில் டிராபிக் சிக்னல்கள் காலி.
14. அவன் காலி. இவன் காலி இல்லை. ஆனால் பல மரங்கள் காலி. நல்லவேளையாக முறிந்த கிளைகள் ஏவுகணையாகி வீட்டைத் தாக்கவில்லை.
15. பலரும் வீட்டினைப் பாதுகாக்க ஷட்டர்கள் போடவில்லை (நானும்தான்!). மெத்தையை திண்ணைக் கதவிற்கு முட்டுக் கொடுத்து ஹாலில் படுத்து இரவைக் கழித்தவர் பலர்.
16. கிழக்கிலிருந்தே அடிவாங்கிப் பழகிப்போன புளோரிடா வாசிகளுக்கு மேற்கிலிருந்து ஆப்படித்தது வில்மா. பல அறிவுக் கண்கள் திறந்திருக்கும் (நமக்குத்தான் அந்தப் பிரச்சினை இல்லையே :-)
17. இப்போ பவர் புட்டுக்கிட்டு விளக்குகள்(!) அணைந்து போனாலும் இரு நாட்களுக்குத் தாக்குப் பிடிக்கலாம். கட்டிசோறு கட்டிப்புட்டோம்ல. அப்புறம் என்ன செய்றதுன்னுதான் இல்லாத மூளையை கசக்கிக்கிட்டு பதிவு போட்டுக்கிட்டு இருக்கேன்.
18. ஹிஹி படம் போடலியேன்னு கோவிச்சுக்கிற ப்ரோக்களுக்கா மயாமி மாமி (வெறும் ரைமிங்காக... குண்டாந்தடி தூக்கிகிட்டு ஓடியாறாதீகப்பு)

வாஷிங் பௌடர் வில்மா

நிர்மா விளம்பரத்திற்கு ஆடிய சிறுமி கண்முன் வந்து போகின்றாள். வில்மா தென் பிளோரிடாவை துடைத்துப் போட்டு விட்டுப் போய்விட்டது.
மின்சாரமில்லை. ஐஸ் இல்லை (தண்ணி எப்பிடி அடிப்பதாம்?). குடிநீர் இல்லை. அத்தியாவசிய பொருட்களுக்குப் பஞ்சம். இரவு 7 முதல் காலை 7 வரை ஊரடங்கு சட்டம். தொண்டு நிறுவனங்கள் தொலை தூரத்தில் இருப்பதாய் தகவல். எமர்ஜன்ஸி நம்பரான 911 இப்போது அதிதீவிர எமர்ஜன்ஸிக்கு மாத்திரமே. தொலை பேசி இணைப்புகள் அவ்வப்போது வேலை செய்கின்றன. செல்போன் சேவையும் அவ்வாறே. டிராபிக் லைட்டுகள் மறைந்து போயின. ஹைவேக்கள் பறந்த குப்பைகளால் நிறைக்கப்பட்டுள்ளன. அரசு இயந்திரங்கள் ஸ்தம்பித்துப் போயின. பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுப்பு. அருகே கொள்ளை நடந்ததாய் பேட்டரி ரேடியோவில் பீதித் தகவல். கழுவிக் கொள்வதாய் பீத்திக் கொள்பவர்கள் பேப்பரில் துடைத்து காய்ந்து போய்க் கிடக்கின்றார்கள். கீழே இப்படி என்றால் மேலே கேட்கவே வேண்டாம். ஆண்களனைவரும் முள்தாடி வேந்தர்தாம். முடிந்தவர் ஊர்களை விட்டு ஓடிப்போயினர். முடியாதவர் ஒடுங்கிப் போய் உட்கார்ந்துள்ளனர்.

ஒரு வாரத்திலிருந்து நான்கு வாரங்கள் ஆகலாமாம் மற்றவர்க்கு மின்சாரம் கிடைக்க...நமக்கு உடம்புல மச்சம்லா.

செய்ப் அலி கான் ஏ தில்லகி படத்தில் பாடுவார் பெண்களைப் பார்த்தவுடன் அவரது இதயம் பைத்தியம் பிடித்து பாடுமாம் "ஓலே ஓலே ஓலே ஓலே". காத்ரீனா, ரீட்டா, வில்மா... புளோரிடாவிற்கு பைத்தியம் பி(பீ)டித்து விட்டது எனலாம். அடுத்து கிரேக்க பெயர்கள் புயலுக்கு வைக்க ஆரம்பித்து விட்டனர். ஆல்பா புறப்பட்டு விட்டது. நல்ல கிரேக்க பெண்கடவுள்களின் பெயர்களை விரைவில் எதிர்பார்க்கலாம்.

பி.கு:

1. பெண்களுக்கு எதிரான பதிவல்ல இது.
2. இது முதல் தகவல் அறிக்கை மட்டுமே.
2. "கரீக்டான ஐபீ மற்றும் அற்றஸ் வேண்டுமெண்டால் மசக்கைசூசட்ஸ் செல்ல வேண்டாம். மோப்ப ஷக்தியில் ஏதோ பெரிய கோளாறாம் !!!" ஏற்கெனவே சொன்னேன். பாவம்...-/ராம்வோச்சருக்கு ப்ரோவைப் பற்றி தெரியவில்லை போலும் :-).

Friday, October 21, 2005

அங்கதம் For Dummies

அங்கதம் எழுதுவது எப்படி என்ற பச்சையாய் விளக்கும் கையேடு இது. இவையனைத்தையும் ஒழுங்காகப் பின்பற்றிய பின்னால் உங்கள் வாழ்வில் பச்சை விளக்கு ஓளிரும்.

1. முதலில் கருத்தாவையும், அவரது கருத்தையும் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். பாடுபொருள் அனைவராலும் ஏறுக்கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். வேண்டுமெனில் இது குறித்து ஒரு கருத்துக் கணிப்பு நடத்தலாம். எ.கா. ஆயாவிற்கு பாயா வாங்கித் தரலாமா என்ற தலைப்பு மிகவும் பொருத்தமானது. இத்தலைப்பிற்கு கூட மனிதாபிமான சங்(க)பரிவார்களிடமிருந்து கடும் எதிர்ப்பு எழ வாய்ப்புண்டு. எனவே சனநாயகத்திற்கு விரோதமான தலைப்பைத் தேர்ந்தெடுத்ததற்கு பகிரங்க மன்னிப்புக் கேட்டுவிட்டு அடுத்த தலைப்பைப் பற்றி யோசிக்க வேண்டும்.

2. பலராலும் அங்கீகரிக்கப்பட்ட தலைப்புடன், கருத்தாவிடம் அங்கதம் செய்யலாமவென்று ஒரு விண்ணப்பம் போட வேண்டும். அங்கதம் செய்யப்படுபவரின் அங்கீகார சகிப்பின் எல்லையை முதலில் வரையறுத்துக் கொள்ள இது உதவும் (இது பத்துமா பத்தாதாம்மா பத்துமாம்மா?). கருத்தாவின் அநுமதி இல்லாவிட்டால் பின்னாளில் பிரச்சினைக்கு ஆளாக நேரிடலாம். மேற்கண்ட தலைப்பை ஆயாவிற்கு பாயா வாங்கித் தரலாமா என்று கோயா(ன்) என்பவர் எழுதியிருந்ததாய் கொள்வோம். கோயாவை தொடர்பு ஊடகங்கள் மூலம் சென்றடைந்து உங்களது அங்கதத்தின் நோக்கம், பயன், பின்விளைவுகள் பற்றி ஒரு சினாப்ஸிஸ் அனுப்ப வேண்டும். பின்னர் பேக்ஸ் மூலமாகவாவது அவரது ஒப்புதல் ஒப்பமிட்ட ஆவணத்தைப் பெறவேண்டும். ஓப்புதல் கிட்டாவிடில் பாயிண்ட் ஒன்றுக்கு (!) செல்லவும்.

3. மேற்கண்ட இரண்டு ஸ்டெப்களின் மூலம் வரைவு ஆவண விதிகளை வகைப்படுத்தி, ஒரு பொதுக் குறை(ரை)ப்பு முறைமை CMP (Common Minimum Program) ஆவணம் தயாரிக்க வேண்டும். நாளை உங்களது பதிவு பட்டையையோ சாராயத்தையோ கிளப்புமானால் பதிப்பிக்கும் மணமோ/குழுமமோ தனது தணிக்கை விதிகளுடன் ஒப்பு நோக்க இந்த ஆவணம் உதவும். இந்த ஸ்டெப்பை ஆங்கிலத்தில் CYA (Cover Your As*) என்பார்கள். இவ்வாவணத் தயாரிப்பிற்கு பொதுநோக்கர்களின் உதவிகளைப் பெறலாம். கவனிக்க: இப்பொதுநோக்கர்கள்தான் பின்னாளில் கருத்தாவின் பாதுகாவலர்கள் அவதாரம் பூண்டு அங்கதத்தானை பின்னிப் பெடலெடுப்பார்கள். பொதுவாக இவர்கள் பிரச்சினையைக் கிளப்பும் போது குழப்பமானவர்களாகவே இருப்பார்கள். பல இடங்களில் சென்று குழப்பி, குழம்பி பின்னர் யாரேனும் ஒரு பொதுநோக்கர் இவர்களோடு ஒத்து எழுதினால் ஓடிச்சென்று பலமாக ஒத்து ஊதுவார்கள். பொதுநோக்கரில் இன்னொரு வகையுண்டு. இவர்களிடம் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். தனது ஒரே கருத்திற்கு "+" என்று ஒரு இடத்திலும் "-" என்று இன்னொரு இடத்திலும் குத்துவார்கள். இப்போது புரிகின்றதா பொதுநோக்கர்களின் அங்கதத்தில் பங்கென்ன என்பது?

4. என்ன கடுமையான வரைமுறைகளாகவே இருக்கின்றன என்று கலங்க வேண்டாம். இதுதான் மிகவும் ஈஸியான ஸ்டெப். CMP விதிகளுக்கு உட்பட்டு உங்களது அங்கதத்தை எழுதுவது(!).

5. அங்கதப்பதிவு எழுதி முடித்தவுடன் கருத்தாவிடம் எடுத்துச் செல்லவும். அவரின் முழு ஒப்புதல் (கையெழுத்துடன்) பெறவேண்டும். ஒப்புதல் பெறாவிடில் மேல்ல்லே செல்லவும். கவனிக்க: கருத்தா உங்களின் ஆக்கத்தை விரிக்கவோ/சுருக்கவோ அதிகாரம் உண்டு.

6. ஒப்புதல் பெற்றபின் மணத்தின் தணிக்கைகுழுவின் (இது ஒன்மேன் ஆர்மியாகக் கூட இருக்கலாம்) பார்வைக்கு, கருத்தாவின் ஒப்புதல் கடிதத்தோடு பதிப்பிற்கான விண்ணப்பத்துடன் செல்ல வேண்டும். இந்த தணிக்கை குழு/அதிகாரி உங்களது அங்கதத்தை பரிசீலித்து அது நேர்மறையான விமர்சனங்களைக் கொண்டிருக்கின்றதா அல்லது தன(ம)து சுய நம்பிக்கையின் அடிப்படையில் பதிப்பிக்கக் கூடியதா என்று ஆராய்ந்து, அறிந்து, உணர்ந்து, முகர்ந்து, ரசித்து, சுவைத்து ஒரு முடிவுக்கு வருவார். பின்னர் தனது சொந்த த(வ)ர்க்க ஞானத்தையும், தார்மீக நியாத்தின் அளவுகோல்களால் அளப்பீடு செய்து உங்களின் பதிவை வெளியிடும் தனது சுதந்திரத்தைப் பயன்படுத்தி வெளியிடுவார். வெளியிட்டபின் பரீட்சையில் பாஸா பெயிலா எனக் கண்டறியும் மாணாக்கனைப் போல விரைந்தோடி பதிவின் முன்னே என்ன விளக்கெறிகின்றதென்று பார்க்க வேண்டும். பச்சை என்றால் "ஆத்தா(டி) நான் பாஸாயிட்டேன். தணிக்கை அதிகாரிக்கு நன்றி" என்ற பின்னூட்டம் கட்டாயம் கொடுக்க வேண்டும். இல்லாவிடில் மேல்ல்லே முருங்க மரம் சென்று விக்ரமாதித்தனாய் இன்னொரு அங்கத வேதாளம் பிடிக்க வேண்டும். மீண்டும் கவனிக்க: உங்களின் ஆக்கத்தை விரிக்கவோ/சுருக்கவோ அதிகாரம் தணிக்கை அல்லது தன்னிச்சை அதிகாரிக்கு உண்டு.

7. அப்பா(டி) நான் பாஸாயிட்டேன்; எனது அங்கதம் பதிவாகிவிட்டது என்பதோடு உங்களது கடமை முடிந்து விடாது. இந்தப் பொதுநோக்கர்களின் கருத்துப் பின்னூட்டங்களை கவனமாகப் படித்து தேவைப்படின் விளக்கம் கொடுக்கத்தயாராக இருக்க வேண்டும். எ.கா. ஆயாவிற்கு பாயா தேவையா என்ற தலைப்பில் திரு.கோயா(ன்) எழுதிய பதிவிற்கு அங்கதப்பதிவு போட்ட பேயா(ன்)வாகிய நான் எனது பதிவினை "சுயபரிசீலனை" செய்ததற்கான ஆய் அறிக்கை இதோ என்று எடுத்துப் போட்டு திருப்திப் படுத்த வேண்டும். தேவைப்பட்டால் பிற ஒப்புதல் ஆவணங்களையும் ஸ்கேன் செய்து பொதுவில் வைக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களது பதிவென்ன, பட்டியலிலிருந்தே காணாமல் போகும் அபாயம் உண்டு.

8. பொதுநோக்கர்களின் பின்னூட்டங்கள், மற்ற வலது/இடது/மைய (Right/Left & Center) நோக்கர்களின் கருத்துத் தொகுப்போடு தணிக்கை அதிகாரி மற்றும் கருத்தாவுக்கு பின்-ஆய்-அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இது உங்கள் மீதான நம்பகத்தன்மை வளர உதவும். TIPS: முடிந்தால் இந்த ஆய்-அறிக்கையின் ஒப்புதலைப் பெற முயற்சிக்கவும். இத்தகைய ஒப்புதலையும் பொதுவில் வைத்தால் மக்கா நீ பெரிய அங்கதனப்பா...

9. இதில் சம்பந்தமே இல்லாமல் பாஸிஸம், ரேஸிஸம், பாயாசம், ஆயாசம் போன்ற பல இலக்கிய விமர்சனங்களையும் எதிர்நோக்க வேண்டும். ஒவ்வொரு இஸத்திற்கும் ஒரு மாற்று மருந்து உள்ளது. அதைப்பயன்படுத்தி ஒவ்வாமையை குணப்படுத்த முயற்சிப்பது அங்கதனாகிய உங்கள் தலையாய கடமை. இல்லாவிடில் ஆட்சி மாறினால் காட்சி மாறும் என்பதை உணராத அரசு அதிகாரிகளைப் போல காத்திருப்போர் பட்டியலில் காய வேண்டியதுதான். இது மிக மிக எச்சரிக்கையுடன் கையாள வேண்டிய ஸ்டெப்.

10. இத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி ஏதாவது ஏடாகூடமாக நடக்க வாய்-ப்புண்டு. எ.கா. ஆயாவிற்கு ஏன் வெறும் பாயா மட்டும் கொடுக்க வேண்டும்? கூடவே சல்னா கொடுக்க ஏன் அங்கதப்பதிவர் முயலவில்லை. இது ignorance is bliss என்ற high handedness'ஐ குறிக்கின்றது என்பதற்கு நீங்கள்....

ஹலோ...ஹலோ... ஏன்ப்பா இப்பிடி தலை தெறிக்க ஓடுற? நான் இந்தா முடிக்கப்போறேன். என்ன நீயும் முடியெடுக்கப் போறியா? என்ன முடிவெடுக்கப் போறியா? என்னாப்பா சொல்ற? அங்கதமா ஆளை வுடுன்னா? ஏம்ப்பா நான் சிம்பிளாத் தானே சொன்னேன்.

பி.கு. நல்லதுக்கு காலமில்லைப்பா.

Thursday, October 20, 2005

கோயின்சிடென்ஸ் குசும்பு

படம் பாருங்க. இது சமீபத்தில் வெளியான திரு. அனுராக் அவர்களின் பதில் வெளியான பின்னூட்டங்கள்:

படம் 1: அனுராக் பின்னூட்டம்: //...நோய் முற்றிப் போன பிறகு அறுவை சிகிட்சை தவிர வேறு வழியில்லை.//



படம் 2: அநேகமாக ஸ்பாம் பின்னூட்டம்: //...I have a natural cancer supplements site. It covers everything about natural cancer supplements as well as colon cancer prevention, warning signs, and the treatment for colon cancer. You'll find it very informative.//


இதுதான் இசைவு எனப்படும் கோயின்சிடென்ஸோ?

அட்றா சக்கை அட்றா சக்கை

இது ஒரு போட்டி. இப்பொன்மொழிகளை உதிர்த்த வலைபதிவர்களை கண்டுபிடித்தால் பச்சை விளக்கு ஒன்று பரிசாக அனுப்படும். தபால் செலவு இலவசம்.

1. மக்களாட்சி, கருத்துச் சுதந்திரம், பேச்சுரிமை, எழுத்துரிமை எல்லாம் தான் வரையும் கோடுகளுக்குள்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பதுவும் ஒரு சர்வாதிகாரப் போக்கே.

2. பத்துவரி எழுதினால் ஒரு வரியாவது பயனுள்ளதாக இல்லாமல் வெறும் அரட்டை அடிக்கவும் சிலர் வலைப்பதிவுகளை பயன்படுத்தி வருவதால் தான் ** என் தனிப்பட்ட நம்பிக்கையில் திரட்டத் தேவையில்லாதவை என்று தணிக்கை செய்யும் முடிவுக்கு வந்திருப்பார் என நினைக்கிறேன்.

3. I dont think we have a right to condemn anything that has sole proprietership. If we dislike, we can leave...

4. தொழில்நுட்பக் காரணங்களுக்காக சில முடிவுகளை எடுப்பது **யின் உரிமை. ஆனால் கொள்கை முடிவுகளை பயனர்களை கலந்தாலோசித்தே எடுப்பது ஜனநாயகம். முன்பு செய்ததைப் போல ("ஆபாசப் பதிவுகள்" சம்பந்தமாக)வாக்கெடுப்பு நடத்தி புதிய கொள்கைகளை வகுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் தன்னுடைய நம்பிக்கையின் அடிப்படையில் செய்தது சரியில்லை. வாக்கெடுப்பில் அவருடைய நம்பிக்கை வெற்றி பெற்றாலும் பெறலாம். ஆனால் அதைச் செய்யாத வரையில் தற்போதைய
நடவடிக்கைகள் சர்வாதிகாரத் தன்மை கொண்டவையே.

5. இப்போது புதுத்திரட்டிகளின் தேவை வந்துவிட்டால் அத்திரட்டிக்கான தொழிநுட்ப விசயங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. எல்லோருக்கும் அந்த அனுபவம் இருக்கப்போவதுமில்லை. எனவே **யோ அல்லது தமிழ்மணத்திரட்டியின் வளர்ச்சிக்குக் காரணமானவர்களோ அந்தத் திரட்டிச்செயலிக்கான அடிப்படைத் தொழிநுட்பத்தை வெளியிட முடிந்தால் அது பலனளிக்கும். இதைவைத்து அவரவர்கள் தாமே அவற்றை மேன்மைப்படுத்த முடியும். இந்தத் தொழிநுட்பம் வெளியிடுதலென்பது நிச்சயமாக நிர்வாகிகளின் சொந்த முடிவே.

6. நீ மறைந்தாலும்
உன் சகாப்தம்
மறைவதில்லை


7. பழங்காலத்துப் பழமொழி இதுதான்: தானங் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடிச்சுப் பார்க்கறது. அவ்வளவு ஆர்வமோ குறைந்தபட்ச தயவுதாட்சண்யமோ இல்லாதவர்கள் தமிழ்மணத்தில் தங்கள் வலைப்பதிவுகளைச் சேர்க்காமல் இருந்தாலே பெரிய உதவியாக இருக்கும். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பது ஓரளவு சொதப்பலாகப் பட்டாலும், அதைத் தாண்டிக்கூட இன்னும் யாரும் வரத் தயாராயில்லை என்பது, ஏன் தமிழ்மணத்துக்குத் தொடுப்புக் கொடுக்கவேண்டும் என்ற கேள்வியிலேயே தெரிகிறது! இரண்டு நிமிடங்கள் எடுக்கும் ஒரு வேலையை, பிரதியுபகாரமாகச் செய்யக்கூடியதாகக் கருதக்கூடிய ஒரு சிறு அங்கீகரிப்பை நோக்கிக் கேள்விகளெழுப்புவதைவிட, பேசாமல் இதில் இணைக்கப்படாமல், தங்கள் URLஐ தமிழ்மண இணைப்புப் பெட்டியில் தட்டாமலிருப்பதே நலம். காசுக்கேற்ற தோசை என்றாலும்
குற்றம், காசில்லாமல் தோசை என்றாலும் குற்றம் - எங்கே போய் முட்டிக்கொள்வது.

8. நான் நினைப்பதையே நீ நினைக்க வேண்டும் என எதிர்பார்ப்பது அடக்குமுறையாகும். இன்னொறு வகையில் சொன்னால் கருத்துத் தீவிரவாதம்.

9. சமீபத்தில் தமிழ்மணம் திரட்டியில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சில வலைப்பதிவுகள் தமிழ்மணத்திலிருந்து பல்வேறு காரணங்களுக்காக நீக்கம் செய்யப்படுகின்றன என்றுத் தெரிய வருகிறது. தமிழ்மண நிர்வாகிகளின் இம்முடிவுடன் நான் உடன்படாவிட்டாலும், இதனை அவர்களது் சொந்த முடிவாகக் கருதி மதிக்கிறேன். எனினும், தமிழிணையத்தில் கருத்துச் சுதந்திரம், பன்மைத்தன்மை ஆகியவற்றின் வருங்காலம் குறித்த கவலைகளையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

10. நேற்றைக்குவரை போன ஒரு மாதமாகப் பண்ணிய உருப்படியான காரியமென்னவென்றால், பதிவுகளின் பக்கம் அடிக்கடி வராமலிருந்தது. குஷ்பு விவகாரம், சுந்தரராமசாமி மரணம் இதிலெதிலுமே நானும் ஒரு தனிப்பதிவு போட்டேனென்று எண்ணிக்கைக்குப் போடாதிருந்தது சொந்த நிம்மதிக்கும் நேரச்சேமிப்புக்கும் உதவியது. தமிழ்மணத்திலே பதிவுகளை நெறிப்படுத்துவது குறித்து சர்ச்சையை நேற்றைக்கு வாசிக்க நேர்ந்ததால் தனியே சொந்த நலனை முன்னிட்டு மூன்று பந்திகளில் சின்னக்குறிப்பு எழுதவேண்டிய அவசியம்.

11.

Diskகிளைமர்: எல்லாப்புகழும் பொன்மொழிகளை உதிர்த்தவர்க்கே. மறுபதிப்பு செய்யும் உரிமம் வாங்கவில்லை. காப்புரிமை வயலேஷன்னா சொல்லிடுங்க தூக்கிடறேன். ஆனா கரீக்டா கண்டுபிச்சவங்களுக்கு பச்சை விளக்கு பரிசு கட்டாயம் உண்டு. மேலேயுள்ள 11 பொன்மொழிகளில் ஒன்று கொஞ்சம்(மும்) மற்றதுடன் சம்பந்தப்படாதது. மேலும் 11'ல் ஒண்ணுமே தெரியலியேன்னு கேப்பீங்களே கேள்வியின் நாயகர்களே. அதாம்பா net'l பெரிய ஆளுங்கெல்லாம் உதிர்த்த பொன்மொழிங்கோ !!!

Wednesday, October 19, 2005

உள்ளே வெளியே

கெடு(ம்) நேரம் முடிந்து விட்டது. காசி மற்றும் ஏனைய தமிழ்மண நிர்வாகிகளிடம் நான் விண்ணப்பித்துக் கேட்டது இரு விதயங்கள்.

1. எனது பதிவு நீக்கப்பட்டுவிட்டதா?
2. அப்படியானால் காரணிகள் என்ன?

பதிலாக பதிவினை இட்டுள்ளார். பச்சை விள(ல)க்கு முறையை அமுல்படுத்தியுள்ளார். நீக்குதல்/தணிக்கை முறைக்கு 4 காரணிகளும் கூறப்பட்டிருந்தன. அப்பதிவினையே அவர் எனக்களித்த பொதுவில் வைக்கப்பட்ட பதிலாக எடுத்துக்கொள்வோம். முதல் கேள்விக்கு பதில் பச்சை விலக்கு (!) பிரகாசிக்காத போதே புரிந்து விட்டது. இரண்டாவது கேள்விக்கு அவர் அளித்த நான்காவது காரணமாகத்தான் (என் தனிப்பட்ட நம்பிக்கையில் திரட்டத்தேவையில்லாதவை) இருக்க வேண்டும். ஒரு வேடிக்கை பாருங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம் பதிவில் திரு பத்மாவின் பின்னூட்டம்



அதற்கு காசியின் பதில்:


"...ஆனாலும் ஒரு மின்னஞ்சல் முகவரி என்று பொதுவில் வைத்தபின், எவரை எங்கு நியமித்தால், என்ன அறிவுரைத்தால், வரும் மின்னஞ்சல்களைக் கையாள முடியுமோ, அதைச் செய்யவேண்டிய கடமை அவருக்கோ அல்லது அவரின் அலுவலகத்தை நிர்வகிப்பவருக்கோ வந்துவிடுகிறது. அதன்பேரில் வரும் விமர்சனத்துக்கும் அவர் ஆளாகிறார். அதில் எந்த விலக்கும் அளிக்கும் சாத்தியம் இல்லை. "

நல்ல கருத்து. மின்னஞ்சல் முகவரியை பொதுவில் வைத்தற்காக இந்தியக் குடியரசின் தலைவரின் பதிலை (அல்லது அவரது உதவியாளர்களின் பதிலை) காசி எதிர்நோக்குகின்றார். ஆனால் தனது சுயமுயற்சியில் வளர்த்த (கண்டிப்பாக பாராட்டுக்குரிய செயல்) தமிழ்மணம் என்னும் திரட்டியை பொதுவில் வைத்த பின்னர் விமர்சனங்களையோ (கவனிக்க பொதுவில் வைத்த பின்னர் ஒரு 100 கோடி மக்களின் தலைவரே விமர்சனத்துக்கு ஆளாகலாம்), கேள்விகளையோ காசியால் கையாள முடியவில்லை. ஆமாம் இதற்கு சகவலைபதிவர்கள் என்ன கூற விழைகின்றார்கள்? ஒரு வேளை இதுதான் ஹிப்போகிரஸி என்பதோ?

தமிழ்மணம் என்பது ஒரு வெறும் செய்தியோடை திரட்டி மட்டுமே. அது ஒரு வலைவாசல் என்று பல இடங்களில் தமிழ்மணம் என்பது ஒரு வெறும் செய்தியோடை திரட்டி மட்டுமே. அது ஒரு வலைவாசல் என்று பல இடங்களில் காசி கூறியிருக்கின்றார். http://kasi.thamizmanam.com/?item=205 மேலும் இது ஒரு இலவச சேவை என்பதை காசியும், தமிழ்மண நிர்வாகிகளும் கவனத்துடன் சொல்லி வந்திருக்கின்றார்கள். பொதுவில் வைத்தற்கு பாராட்டுப் பட்டயம் கண்டிப்பாக உண்டு. ஆனால் அதற்காக படியளக்கும் தவச தானியம் மற்றும் கசையடிகள் என்ற வெற்று சொல்லாடல்கள் எதற்கு? பிரீயா கொடுத்த பினாயிலைக் கூட குடிக்கிற கூட்டத்துலதான நீயும் (அதாவது நான்) இருக்க? உனக்கெதுக்கு விமர்சனம், கேள்வி கேட்கும் உரிமை என்ற நோக்கத்திற்கு என்ன பெயரிட்டு அழைப்பது? பாசிசமா? போட்டத வாங்கிட்டு போவியா சும்மா தானம் கொடுத்த மாட்டை பல்லைப் புடிச்சு பதம் பாக்குற என்ற கூற்று நியாயமானதுதான். பொதுவில் வராதவரை. கொடுக்கும் கரம் உயர்ந்தே இருக்கும். ஒத்துக் கொள்கின்றேன். அது உங்கள் வீட்டுப் புழக்கடை சமாச்சாரமாகவே இருக்கும்வரை.


உங்களது தமிழ்மண முயற்சிகளுக்கு தேவைப்பட்டால் நிதியுதவி செய்ய பலரும் கேட்டிருந்தது அனைவரும் அறிந்த விதயம். சுனாமி, பூகம்பம், ஏழை மாணவிக்கு படிப்புதவித் தொகை என்று தங்களால் இயன்ற வரையில் தமிழ் வலைபதிவர்கள் தாராளமாக உதவி செய்து வந்து கொண்டிருக்கும் காலத்தில், உங்கள் பொதுப்பட்ட முயற்சிக்கு யாரும் உதவமாட்டேன் என்று கூற மாட்டார்கள். நிதி மட்டுமல்ல தொழில்நுட்டத்தில் கூட உதவ வல்லுநர்கள் தயாராக இருப்பதாக அடிக்கடி கூறினார்கள். உதவி வேண்டாமென்று பிடிவாதமாக இருந்து விட்டு இன்று எதற்கு தவச தானிய ஓலம்? பிச்சைக்காரர்களாவே விட்டு வைத்தால் நாளை கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற நிலக்கிழாரிய தத்துவமா? உங்களின் தனிப்பட்ட/ குடும்பத்தோடு செலவிடும் நேரத்தை இழுத்துப் பிடித்தற்காக மன்னியுங்கள். அது என் நோக்கமன்று. உதவிகளை உதறிவிட்டு இன்று உங்களின் பதிவு முழுக்க முழுக்க ஹிப்போகிரிஸியை கொடி பிடித்து நிறுவுகின்றது.


பச்சை விலக்கு முறையைப் பார்ப்போம். சொந்த கைகாசில் தளம் நடத்துபவரிடம் யாரும் சென்று நீ அதைச் செய். இதைச் செய்யாதே என்று கூறுமளவிற்கு மதி கெட்டவன் நானில்லை. இங்கே நாம் கண்கூடாக பார்ப்பது தமிழ்மண சேவை (இலவசம்) என்பது இன்று காசி என்பவரின் சொந்த தளமாகிவிட்டது. இதில் எனக்குப் பிடித்ததைத் தான் நான் செய்வேன் என்று கூறினால் அதற்கு மறு பேச்சுக் கிடையாது. அது அவரது சுதந்திரம். என்ன விளக்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளும் உரிமை அவருக்கு பரிபூரணமாக ஒன்று. அதை நேரடியாகத் தெரிவித்து விட்டு செய்யலாமே? ஒருபக்கம் இலவச சேவையென்று படம் காட்டுவதும் மறுபுறம் மட்டுறுத்துவேன் என்று பயமுறுத்துவதுமான பாசாங்க நாடகம் ஏன்?


குசும்பனின் இந்தப் பதிவால் அல்லது அந்தப்பதிவால் தூக்கிவிட்டார்கள் என்று ஏகப்பட்ட ஊகங்கள். அதற்கு நான் பதில் சொல்ல முடியாது. நீங்கள் தான் சொல்ல வேண்டும். இதில் கட்டாயம் ஏதுமில்லை. பொதுவில் கேட்கப்பட்டதால், பல தமிழ் வலைபதிவர்களின் பிரதிநிதி என்று நீங்கள் கருதும் காரணத்தால், தார்மீக நியாயத்தில் நம்பிக்கை உடையவராக (உங்களது தனிப்பட்ட நம்பிக்கை எப்படிப்பட்டது என்று எனக்குத் தெரியாது) இருந்தால் சக வலைப்பதிவர்களின் கேள்விகளுக்கு நீங்கள் விடையோ விளக்கமோ தரலாம். மறுபடியும் தானியம், கசையடி, படம் பார்க்கவேண்டும் என்று ஜல்லியடிப்பதோ மட்டையடிப்பதோ உங்கள் விருப்பம். என்ன செய்வது காசி? பொதுவில் வந்தால் நேயர் விருப்ப(மு)ம் கேட்டுத்தானே ஆக வேண்டும் (உங்களின் குடியரசுத்தலைவருக்கு மடல் போல).


மதத்துவேஷம், ஆபாசம், இனவெறி, தீவிரவாதம், இந்திய/ஈழ/புலி ஆதரவு/எதிர்ப்பு, மொழிவெறி, தனிப்பட்ட காழ்ப்புணர்வு, வன்முறை, போலிப்பிரச்சாரம் (பிறர் கண்ணோட்டத்தில்) தாங்கி வரும் பதிவுகள் எல்லா மொழிகளிலும் உண்டு. முழுமையான கருத்துச் சுதந்திரம் வேண்டுமென்பதே பெரும்பாலான வலைப்பதிவர்களின் ஆவல். இன்றைய வாசகர்கள்/பதிவர்கள் விபரமானவர்கள். தமக்குப் பிடித்ததை அவர்கள் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் என்னும் நம்பிக்கை எனக்கு உண்டு.


For any new system to grow we need Falilitators not Moderators என்று யார் கூறினார்கள் என்று மறந்து விட்டது. இந்தியாவில் IT அறிமுகமான காலகட்டத்தில் தடுப்புச் சட்டங்களைத்தான் முதலில் போட்டார்களாம். அப்போது யாரோ ஒரு வல்லுநர் கூறினாரென்று ஞாபகம். இன்று என்னைப் பொறுத்தவரையில் தற்சமய சூழலுக்கு இக்கண்ணோட்டம் ஒத்துப் போகலாம் மென்பது என் தனிப்பட்ட கருத்து.


அமெரிக்காவில் வசித்த நீங்கள் அங்கதம் என்ற காரணத்தால் எனது பதிவை நீக்கினீர்களா என்று தெரியாது. ஜார்ஜ் கார்லின் போல பெரிய ஆளாக நான் நினைக்கவில்லை. இருப்பினும் என்னால் பகிடி செய்யப்பட்டவர்கள் பின்னூட்டங்களிலும், தனியஞ்சல்களிலும் குசும்பை ரசித்ததாகவே கூறினார்கள். பழைய பின்னூட்டங்கள் மறைந்து விட்டன. இருப்பினும் குசும்பனின் நோக்கமே மென்மையான அங்கதம்தான். இதனால் யாரேனும் புண்பட்டிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்டுக் கொள்கின்றேன். இது மீண்டும் தமிழ்மணத்தில் சேர்த்துக் கொள்ள விடுக்கப்படும் விண்ணப்பம் அல்ல. தமிழ்மண பதிவர் பட்டியலிருந்து(ம்) 'இணையகுசும்பன்' தொடுப்பையும் தயவு செய்து அகற்றி விடுமாறு கேட்டுக் கொள்கின்றேன். எனது பதிவிவின் செய்தியோடையை நேற்று வரை இலவசமாக திரட்டியமைக்கும், பிற தமிழ்மண சேவைகளுக்கும் காசி மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றி. இணையகுசும்பன் உள்ளே இல்லாவிட்டாலும் வெளியே இருப்பான்.


பின்னூட்டங்களிலும், வலைப்பதிவுகளிலும், தனியஞ்சலிலும், தொலைபேசியிலும் ஊக்கம் தந்த, தரும் சகவலைப்பதிவு நண்பர்களுக்கும் (எனது கருத்துகளில் முழு உடன்பாடு இல்லை என்று தெரிவித்த நண்பர்களையும் சேர்த்துத்தான்) எனது வணக்கமும் நன்றிகளும் உரித்தாகுக.

பி.கு. எனது 'நடவடிக்கைகளை' பொதுவில் வைக்கும் உத்தேசமில்லை. வாசகர்க்கு ஜாலியான ஜூகல் பந்தி மட்டுமே :-)

காசி/தமிழ்மண நிர்வாகிகளுக்கு

எனது இணைய குசும்பன் பதிவு தமிழ்மணத் திரட்டியில் கடந்த 7 நாட்களில் எழுதப்பட்டவற்றில் சிறந்த 25 - வாசகர் பரிந்துரை- பகுதி, மறுமொழியப்பட்ட முந்தைய நாள் ஆக்கங்கள் பகுதி மற்றும் இன்று புதிதாய் எழுதப்பட்டவை 20 நிமிடத்துக்கு ஒருமுறை திரட்டப்படுகிறது பகுதிகளிலிருந்து திடீரென்று காணாமல் போய்விட்டது. முகமூடி என்பவர் மன்றத்தில் காணவில்லை : குசும்பன் என்று எழுப்பிய கேள்விக்கு தற்சமயம் வரை காசி & கோ'விடமிருந்து பொறுப்பான பதிலில்லை. எனது பதிவில் பின்னூட்டமாக திருமிகு. துளசிகோபால் "உங்களைத் தூக்கிட்டாங்களாமே உண்மையா?" என்று வினவினார். அப்போதுதான் காசியின் "ஒரு அறிவிப்பு" பதிவினைப் பார்த்தேன். அதன் பின்னூட்டங்களையும் படித்தேன். யாருடய பதிவாவது கவனக்குறைவாக நீக்கப்பட்டிருப்பதாக எண்ணினால் அதை இங்கேயே அல்லது மன்றத்திலோ தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று காசி அறிவிப்பு செய்துள்ளார். தமிழ்மண மன்றத்திலே குசும்பனைக் காணோமென்று முகமூடி என்ற பதிவில் எழுதுபவர் ஏற்கெனவே பதிந்து விட்டார். எனவே எனது கருத்துகளை எனது வலைப்பூவிலேயே பதிகின்றேன் (தமிழ்மணத்தால் திரட்டப்படாவிடினும்). இப்பதிவே பின்னூட்டமாய் தொடுப்புடன் காசியின் ஓர் அறிவிப்பு பதிவிலும் வைக்கப்படும்.

முகமூடியின் கேள்வி பதிந்து 14 மணி நேரமாகிவிட்டது. இன்னும் 10 மணி நேரம் காசி & குழுவினர்க்கு அவகாசம் தருகின்றேன். எனது பதிவு நீக்கப்பட்டுவிட்டதா என்பதையும், அதற்கான காரணிகளையும் தெரியப்படுத்துமாறு வேண்டிக்கொள்கின்றேன். இன்றிரவு 19 Oct 05 10:30 EST (8:00 PM IST) வரை எனக்கு பதில் கிட்டாவிடில் (மின்னஞ்சல் முகவரி: podankho@yahoo.com) எனது அடுத்த நடவடிக்கை இருக்குமென்பதையும் அறியத்தருகின்றேன்.

நன்றி,
இணையகுசும்பன்.

Tuesday, October 18, 2005

தூற்றுச்சங்கதி



The Damn Thing

நிர்மூலமாகிய நிலப்பரப்பிருந்து
சட்டென் றெழுந்து வருகிறது
இழந்தகாலிரண்டை இழுத்தபடி
ஆற்றா வலியுடன் அலறும்
பிசுபிசு பெருவெக்கை
ஆள் தின் அதிர்ச்சி
பிளந்த நிலக்கண்
பொட்டு நீர் கூடப் போதும்
உள்நாக்கண்ணம் உயிர்பெறும்

உற்றுப் பார்த்தோமானால்
மிடுக்கு தோரணையிலொரு நரகாசுரத்தோற்றம்
மிடுக்கோடு செப்பி
மேலேவொரு தொப்பி
மேலோ ரிலச்சினை
பேர்ப்பலகை
பளபளக்கச் சீருடை
சொட்டாத விழியன்பு
பாலீஷான பாதுகை

கத்தைத்தாள்
மேடைஒலிபெருக்கி
கை(ப்)பற்றிக்
காதை மட்டும்
கிழித்து சுழற்றி
குரலொலி கடக்கும்.

ஊளைச்சத்தத்தில்
கூட்டப்பிணங்களுக்குள்
பின்னிப் பிணையும்
இன்னோர்
அங்கதனாய்
ஆதாமாய்
இழியனாய்
ஈயானாய்
உக்கிரனாய்
ஊழ்பிறவியாய்
எரிதனாய்
ஏற்பில்லாதவனாய்
மொத்தப்படித்தாரின்
மெத்த ஊழியனாய்

செரித்துக் கரைகழுவும்
கால் கசகசப்பு
பற்றாமலே
போகும்
ஓலை


பி.கு. வழமையான பதிவல்ல இது. இந்தியாவின் உதவியை வேண்டாமெண்டு உதறித் தள்ளிய பாக் அதிபருக்கான கண்டன கவிதை.

சின்ன மாப்ளே'யின் சித்தாந்தங்கள்

அண்மையில் வலைப்பதிவர்கள் பலர் வரிந்து கட்டிக் கொண்டு அந்நியன் மற்றும் காதல் படங்களை விமர்சனம் செய்திருந்தார்கள். சக வலைப்பதிவர் இன்னும் ஒரு படி மேலே சென்று மண்ணின் மைந்தனான இராம.நாராயணனை ஏன் யாரும் விமர்சனம் செய்ய முன் வருவதில்லை என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியிருந்தார். இதைத்தான் திரை வர்ணம் என்பது. நான் அனைத்து திரைப்படங்களையும் ஒரே தராசில்தான் வைத்துப் பார்க்கின்றேன். சமீபத்தில் பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னர் 'சின்ன மாப்ளே' என்னும் திரைக் காவியத்தை கண்டு பூரித்த எண்ணம் நினைவிற்கு வந்தது. சின்னத்தம்பி, சின்னக்கவுண்டர், சின்னவர் என்ற வரிசையில் வந்தாலும் சிறந்த திரைக்கதையாலும், கூரிய வசனத்தாலும், இனிய பாடல்களாலும், உயரிய படப்பிடிப்பாலும் சின்ன மாப்ளே பலரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது என்றால் அது மிகையாகாது.

படத்தலைப்பில் உள்ள மாப்ளே என்னும் பதம் Mall Play என்னும் ஆங்கில சொற்களின் தாக்கத்தால் விளைந்தது. 'மால்' என்றால் சந்தை. இதுவே கல்லூரித் தமிழில் 'பெண்' என்றும் அர்த்தம் கொள்ளலாம். 'பிளே' என்றால் வழமை போல 'விளையாடு' அல்லது 'ஆடு' என்னும் பொருள் கொள்ளலாம். அதாவது பெண்ணைப் பெற்றவர் தனது மருமகனிடம் "இதோ என்னுடைய மால் (பெண்). இனி அவள் சொல்படி பிளே (ஆடு)", என்பதைக் குறிக்கும் விதமாகவே மால்+பிளே=மாப்ளே ஆக கிளர்ந்தது. சின்ன என்னும் சொல்லை ஒருங்கு நோக்கினால் அது சிறிய என்னும் அர்த்தம் கொடுக்கும். எனவே இப்படம் சிறிய மருமகனைப் பற்றியது என்று தெள்ளத் தெளிவாக முன்கூட்டியே உணர்த்தி விடுகின்றார் இயக்குநர் இமயம் திரு. சந்தான பாரதி.

முதல் காட்சியிலேயே ஏற்றிக் கட்டிய அழுக்கான லுங்கியையும், சிவப்பு முண்டாசையும், வெளிறிய சட்டையும், தெருவோர வாழ்க்கையும் என்று கதாநாயகனின் பின்புலத்தை வெளிப்படுத்துகின்றார். தாழ்குடி அல்லது தாழ்த்தப்பட்ட குடியென்பதை இதை விட அழகாக யாரும் திரைப்படங்களிலே காட்டியிருக்க முடியாது. வில்லனோ நிலக்கிழாரிய குமுகாயத்தில் ஒரு ஓவர். இவரது பின்புலத்தையும் வெள்ளையும், சொள்ளையும், நெற்றியில் பட்டையும், கழுத்தில் கொட்டையுமாய் உயர்குடிக்கான அத்துனை அடையாளங்களையும் கொண்டிருக்குமாறு இப்பாத்திரத்தைப் படைத்திருக்கின்றார்.

அந்நியன் படத்தில் அம்பி என்னும் உயர்குடி பாத்திரப் படைப்பு சோம்பேறி என்று வருணிக்கப்படும் தாழ்குடி பாத்திரத்திற்கு மரண தண்டனை தருகின்றது. இன்னும் ஒருபடி மேலே போய் 'காதல்' படத்தில் ஈனசாதி நாயே என்று கதாநாயகனை எட்டி உதைத்து, தாழ்குடி என்ற ஒரே காரணத்திற்காக 'முதலிரவு' கூட வைக்காமல் போகின்றது. ஆனால் சின்ன மாப்ளேயில் தாழ்குடி நாயகன் உயர்குடி வில்லனை எவ்வாறு எதிர்கொண்டு வெற்றி பெறுகின்றார் என்ற கருவை, புரட்சிக் கருத்தை, சமுதாய சிந்தனையை சந்தான பாரதி விதைக்கின்றார்.

காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி போன்ற இலக்கிய சிந்தனை வளர்க்கும் இனிய பாடல்களுடன் வெள்ளித் திரையில் சொலித்ததுதான் சின்ன மாப்ளே. இத்தகைய உயர்ந்த இயக்குநரை பின்னாளில் பினாமியாய் மாற்றியவர் ஒரு உயர்குடி நாயகன் என்பதையும் உலகமறியும். இந்நிகழ்வால் இழப்பென்பது சராசரி ரசிகனுக்குத்தான். இத்திரைபடத்தினைப் பற்றிய எனது ஆராய்ச்சி நூல் விரைவில் பித்தளைப்பச்சான் தலைமையில் வெளியாகவுள்ளதென்பதையும் இத்தருணத்தில் அறியத் தருகின்றேன். மேலதிக விபரங்களை அப்புத்தகத்தில் தொகுத்துள்ளேன்.

பி.கு. சின்ன மாப்ளே: ச(கா)ப்தமா? ஆசிரியர்: குசும்பு கும்கி. வடகிழக்கு பதிப்பகம். (இணையத்தில் சாமதேனு தளத்தில் வாங்கலாம். எந்த இந்தியன் தளம் பக்கம் போக வேண்டாம் :-)

நன்றி பொறுக்குதிலையே

அம்மாவிற்கு பின்னால் அரோகரா போடும் கும்பல் வெறும் அரசியலில் மட்டும் இல்லை. எங்கே பார்த்தாலும் காணக் கிடைக்கும். எடுத்துக்காட்டாக:

பதிவு: இலந்தையின் இன்றைய நிலை என்ற புத்தகம் முனியாண்டி விலாஸில் கிடைக்கின்றது. அதன் முதற்பாகத்தின் ஆங்கிலப் பதிப்பை இதோ இங்கு வெளியிடுகின்றேன்.
கொமண்ட்: தகவலுக்கு நன்றி தமக்கையாரே. கட்டாயம் வாங்க வேண்டும்.

பதிவு: இன்றைக்கு நவம்பர் 1 தீபாவளி. மாரியாத்தா கோயிலில் கஞ்சி காய்ச்சி ஊத்தினோம்.
கொமண்ட்: தகவலுக்கு நன்றி தமக்கையாரே. கஞ்சி டேஸ்டாக வந்ததா? படமிருந்தால் போடுங்கள்.

பதிவு: போன வெகேஷனுக்கு எங்கு போனோமெண்டு நினைக்கிறியள். எல்லாம் மரக்கறி புடுங்கத்தான்.
கொமண்ட்: தகவலுக்கு நன்றி தமக்கையாரே. கவிச்சிக்கறியோட சாப்பிட்டேளா?

இதெல்லாம் சரி. அவங்க பதியறாங்க. இவங்க பாராட்டுறாங்க. ஆனா இதைப் பாருங்க:

பதிவு: ஸோ அண்ட் ஸோ இன்று மறைந்து விட்டார். அன்னாருக்கு அநேக நமஸ்காரங்கள்.
கொமண்ட்: தகவலுக்கு நன்றி தமக்கையாரே. ப்ளா ப்ளா ப்ளா

அடப்பாவிங்களா இதுக்கும் நன்றியா? நிர்மலா பெரியசாமி டிராஜிக் நியூஸ் வாசிக்கிற மாதிரில்ல இருக்கு... நன்றியை இடம் பாத்து காமிங்ணா(கா). புண்ணியமாப் போகும்.

ஆக்கமும், ஆக்கியவனும்

"எழுத்தை பாத்தா என்னைப் பாக்காதே. என்னைப் பாத்தா எழுத்தைப் பாக்காதே", அப்பிடின்னு நம்ம சா(பா)ரு நிவேதிதா சார் பொன்மொழி வுட்டாரு. (அப்புறம் அவரே நான் எழுதுவது என் வாழ்க்கை ரகஸியம்னு பீலா வுட்டு அப்பீட் ஆனது வேற விஷயம்)

சரி... ஒருத்தரோட எழுத்தை எப்படிப்பா எடை போடறது? இப்ப என்னையே எடுத்துக்குங்க. ஏதோ ஆரம்ப காலத்துல நம்ம செட்டுங்க வந்து படிச்சுட்டு அப்பப்ப கமெண்ட்டு குத்திட்டுப் போயிடுவாங்க. இப்போ எல்லை கொஞ்சம் விரிவடைஞ்சிருக்கு(ன்னு நெனைக்கிறேன் :-). இருந்தாலும் 'இணைய குசும்பன்' என்னாத்த எழுதி கீசியிருப்பான்'ன்னு பலர் பல பதிவுகளைப் பாக்காமலேயே போயிருப்பாங்க (இதிலிருந்தே தெரியவில்லை. ஜெயமோகன் சும்மாவா சொன்னார். இணையத்தில் தீவிர வாசகர்கள் குறைவென்று! ;-))

என்னோட புல்லறிவுக்கு (அதாவது 'full'அறிவிற்கு) எட்டியவரை ஆளைப் பாத்துதான் எழுத்தைப் படிக்கிறாங்க. எழுதுற எல்லார் மேலேயும் அவர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஒரு 'முத்திரை' (எ.கா. சோழ முத்திரை) அல்லது 'இலச்சினை' இலவசமாய் குத்தப்படுகின்றது. இவனா இவன் இப்படித்தான் எழுதுவான் என்ற அபிப்பிராயமே அவனெ(ளெ)ழுதிய ஆக்கத்திற்கு விமர்சனமாய் கிடைக்கின்றது. அதாவது ஆக்கமென்பது இரண்டாம் பட்சமாய், ஆக்கியவனே(ளே) மூலமாக ஆகிப்போகின்றான்(ள்).

பலதுறைகளில் வீச்சிருக்கவேண்டுமென்பவரே, சுஜாதா புறநானூறுக்கு புக் போட்டால் விழுந்து கடிக்கின்றனர். ஏம்பா வெறும் 'கணேஷ்-வசந்த்' கிரைமோடும், ஸ்ரீரங்கத்து தேவதை தரிசனத்தோடும், அப்பப்போ சிலிகன், செல்லுலாய்டு ஜின்ஜினக்காவோடு நிப்பாட்டக் கூடாதுன்னு போர்க்கொடி பிடிக்கிறாங்க. ஏனுங்க இலக்கிய வட்டத்தை பட்டா போட்டு குறிப்பிட்ட கூட்டத்திற்கு வித்துபோட்டாங்களா?

கதை, வசனத்தோட கட்டிலில் படுத்துக் கெடக்காமா எம்பது வயசுல கொடைக்கானல் போயி தொல்காப்பியம் உரை ஏன் கருணாநிதி எழுதோணும்?

இவர்களெல்லாம் இலக்கியவாதிகள் கெடையாது. இலக்கிய வியாதிகள்'ன்னு கடும் கண்டனம் தெரிவிக்கப்படும் காரணம் யாது?

இதே புறநானூறு மற்றும் தொல்காப்பிய விளக்கத்தை நானே எழுதியிருந்தா (மவனே அடங்கமாட்டே!) என்னவாயிருக்கும்? மேலே நான் சொன்ன கதையாடலுக்கு (நன்றி: கோல்டுபெல்) கொஞ்சம் அடியுரமாய் இது தெரிகின்றது.

முனைவர் தொ.பொ. தவிர யாரும் ஆக்கப்பூர்வமாய் சுஜாதாவின் புறநானூறு ஆக்கத்தை அணுகியவரில்லை எனலாம். 'கருணாநிதி' பெயராலேயே எதிரிகள் அதிகமாதலால் விட்டு விடலாம்.

இணையம் குறிப்பா வலைப்பூக்களிலும் இதே ட்ரெண்ட் தென்படுகின்றது (நம்ம 'full'அறிவிற்கு). முதல்ல ஆளைப் பாத்துட்டுதான் படிக்கவே செய்றோம் (அட்லீஸ்ட் நான் அப்படித்தான் ஆரம்பித்தேன்). ஒரு பத்து பதிவுகள் படிச்சப்புறம் ஆளைப் பத்தி ஒரு படம் போட்டு வைச்சுக்கறோம். அதுக்கப்புறம் மவனே நீ 'குனிஞ்சு குத்தடி ஜைனக்கா' போட்டாலும் 'படம்' மட்டும் மாறவே மாறாது. 'அவனா நீ'ன்னு ஒரு மாதிரி ஆளைப்பாத்து அரண்டு அலறும் வடிவேல் கதைதான் இங்கேயும்.

சரி.. யெளவு சொல்ல வந்ததை சொல்லித்தொலை'ன்னு டமாஸ் கத்துறாரு. வரேன். வரேன்.

சுனாமிக்கு நன்னின்னு ஒருத்தர் சொன்னா குத்தம். பாஞ்சு புடுங்கலாம். இது சொயநலமான்னா இன்னொருத்தர் கேட்டா கரீக்டு. பச்சாதாபம் காட்டோணும். மேட்டரு என்னான்னு பாக்காம மீட்டரு என்னான்னு கேக்குற உலகமய்யா. அது சரி... இத்த கேட்டதால நம்ம ஆறுமூலம் துறவிமூலம் தேடாதீங்காணும். ஆனானப்பட்ட அரநங்கல்லூராரே பால் தரும் பசுவென்ற வித்தியாசம் பாராது சுக்கா சாப்பிடுவதாய் வாசகர்க்கு வாயு தந்து சுயஅடையாளம் காட்ட மறு(ற)க்கும்போது அடியேன் எம்மாத்திரம்? அவர் சமீபத்தில் போட்டுத் தாக்கிய Kவி கருணாதாஸ் ஸ்பெஷல் தரிசனத்தில் ஏடுகொண்டலவாடாவை தரிசித்து, வாசிப்பவர்க்கு நாமம் போடும்போது நான் எம்மாத்திரம்? பருப்புக்கூட்டமென மாமாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாமி என்றால் ரகஸிய மெயில் அனுப்பும் இணைய தா(த்)தாக்களை என்னவென்று சொல்வது?

நான் புரட்சியாளன் என்று வெற்று கூச்சலிடுவது புரட்சியில்லை. புரட்சி என்பதற்கு டெசிபல் அளவுகோளில்லை. மௌனமாய் கேட்டுப்பாருங்கள்.

(பினா.குனா. தீவிரமா ஆராய நம்மால முடியாதுன்னு ஜெயமோஹன் சார் சொன்னதை கவனத்தில் கொள்(ல்)க! குசும்பா உன்னைப் பத்தி தெரியாதான்னு வெறும் சவுண்ட் விட்டால் அப்புறம் இலக்கியத்துக்குத்தான் ஆபத்து! ஏன்னா என்னோட குசும்பு தொடரும்...:-0)

Monday, October 17, 2005

பரிசுத்த பதிவு - மட்டையடித்தல்



இது மரத்தடி கலகமல்ல. மட்டையடித்தல் என்ற பதம் செம்மொழியாக்கத்தின் விளைவேயன்றி வேறு பொருள் கிடையாது. மட்டை என்பது ஆங்கிலத்தில் Bat என்பார்கள். Batsman என்றால் மட்டையாளர். தமிழரின் பழங்கால ஆட்டமான கில்லிதண்டாவே கிரிக்கெட் என்று நீட்சியடைந்ததாய்க் கொள்ளலாம். இப்போது சொல்லுங்கள் மட்டையடித்தல் என்பது கேவலமா? தமிழ்க் கடவுளான முருகனுக்கே அடுக்காது. கிருட்டிணனே சாட்சி !!!

இப்பதிவின் நோக்கம் முழுக்க முழுக்க மட்டையடித்தலே! கிரிக்கெட் எனப்படும் பந்து விளையாட்டில் தற்போது இந்தியத் துணைக்கண்டத்தில் நேரும் அரசியல் காய் நகர்த்துதல்களை பதிவு செய்தலே முழு நோக்கம்.

சவுரவ் கங்கூலி முன்னாள் இந்திய கிரிக்கெட்டில் முன்னாள் அணித்தலைவர் ஆகிவிட்டார். தமிழக அமைச்சரின் ஆயுளைப் போல் ராகுல் திராவிட் இந்நாள் அணித்தலைவர். பதவிக்காலம் இரு தொடர்களுக்கென்று அறிவிக்கப்பட்டாலும் அது கராத்தே தியாகராச சொர்க்கம்தான் (திரிசங்கு சொர்க்கம் என்றும் கூறலாம்).

இந்திய அணியில் இளைஞர்களை அடையாளம் கண்டு ஊக்குவிக்கப்படுவதில்லை என்பது மட்டையடித்தலில்லை. ஆனால் கல்கத்தா இளவரசன், பொடாவில் போட முடியாத தாதா கங்கூலி சாதித்ததாய் கதைப்பவர் உண்டு. எதிர்வினையாய் சின்னவர்களை (!) ஊக்குவிப்பதால் பெரிய இடைஞ்சல் தனக்கு பிற்காலத்தில் நேராதென்ற குறுகிய மனப்பான்மைதான் காரணமென்று உதைப்போருமுண்டு.

ஆக தற்போது நடந்ததுதான் என்ன? உங்களுக்குத் தெரியாத குழலிகுத்து (உள்குத்து எனவும் கூறலாம்) அரசியலையா தெரியப்படுத்த முடியும்.

நீதி: ரைட்டுக்கு லெப்ட் ரைட் போட்ட கங்கூலிக்கு செப்பல் செப்பல் கொடுத்து வெளியேற்றி விட்டார். அ·தாவது முற்பகல் ரைட்டின் பிற்பகல் செப்பல்.

டார்வினும் விருதுப்பட்டி சனியன்களும்

கொரங்கிலிருந்து மனுசப்பய வந்தானான்னு தெளிவா தெர்லப்பா. சயின்டிஸ்ட்டும், மதமிஸ்ட்டும் மோதிக்கொண்டிருக்க நம்ம மட்டும் சபலிஸ்ட்டா இந்த டாபிக்க கையாளப் போறோம். (அட ஒரு நாளைக்கு 25 விஷயமாவது எழுதாட்டியும் பர்வாயில்லப்பா... 5-6'வது போட வேண்டாமா?)

ஷேன்னன். வயது 35. ஜேக்சன்வில். புளோரிடா: ஆறு இன்ச் ராக்கெட் (தப்பா நெனைக்காதீங்கப்பு. இது சிவகாசி மேட்டரு) ஒண்ணை கேர்ள் பிரண்டு வூட்டுல, போர்டு மஸ்டாங் காரிலிருந்து ஏவி வெள்ளாட்டா பயங்காட்ட நெனைச்சார். கொரங்கு புத்திப்பா. விருதுப்பட்டி சனியன் ராக்கெட் வடிவில். ராக்கெட்டுக்கே ரவுசு தாங்க முடியல. U டர்ன் அடிச்சு காருக்குள்ளே கால்களுக்கிடையே டமார் ஆனது. வெளிச்சமும், சத்தமும் ஷேன்னனை செயலிழக்கச் செய்தன. ஆஸ்பத்திரியில் 2 டிகிரி எரிப்புண்ணுடன் ஷே(சே)ன்னன். காயம் முழுதும் இடுப்பிலிருந்து கால் கணு வரை. இனிமே ஙௌப்ரானே ராக்கெட் வுடமாட்டேன்னு புலம்பியதா தகவல்.

டெர்ரி கேத். 23 ஜனவரி 78. 32'வது பிறந்த நாள். சிக்காகோ கிதார் மேதைக்கு துப்பாக்கி மோகம் (அட தேவுடா). சும்மா பிலிம் காட்றதுக்கு பார்ட்டியில தன்னோட கன் கலெக்ஷன்லேர்ந்து ஒண்ணு ஒண்ணா உருவி நெத்திப் பொட்டுல வெச்சி சுட ஆரம்பிச்சாரு. குண்டுக் குடுவை (magazine'க்கு தமிழ்ங்ணா) நீக்கிவிட்டுதான் இந்த பிலிம். 9 மிமீ (யோவ் இது மீமீ இல்ல மில்லி மீட்டர்) செமி ஆட்டோமேட்டிக் பிஸ்டலை எடுத்தார் டெர்ரி. பார்ட்டியை நடத்தியவர் தடுக்கத் தடுக்க நெத்தியில் வைத்தார். கிளிக். டுமீல். ஆள் அந்த இடத்திலேயே காலி. அட டெர்ரி மாம்ஸே ஆட்டோமேட்டிக் பிஸ்டலில் குண்டுக் குடுவையை நீக்கினாலும் ஒரு குண்டு லோட் ஆயிருக்கும். என்னா பண்றது? பேசாம கிட்டாரிலியே காலம் கழித்திருக்கலாம்.

குஷி பட விஜய் மேரி, பங்கி ஜம்ப் பண்ணி கயிறு நீளம் ஜாஸ்தியாகப் போக தரை சமாதியானவர், அடுத்தவனை கொல்லப் போக கோலிவுட் காமடியைப் போல் தங்களுக்குள்ளே குத்திக் கொண்டோர், கிறிஸ்துமஸ் மரத்தை சரியாகக் கட்டாமல் காரோட்டி மூன்று முறை பிழைத்தாலும் அடுத்த முறை ஹைவேயில் அடிபட்டு செத்த அறுபத்தாறு வயது அவுஸ்திரேலியா பாட்டி என்று டார்வின் கொள்கையை உறுதிபடுத்தும் மக்களுக்கு விருது வழங்கி கௌரவப்படுத்துகின்றார்கள் (சிபாரிசின்றி).

நம்மூரு தினத்தந்தியில கூட ஒரு மெக்கானிக் அவசர அவசரமா குளிச்சிட்டு துவட்ட நேரமில்லாம ஹைபிரஷர் ஏர் டியூபால் துவட்டும் போது ஆசன துவாரம் வழியாக சென்ற உயரழுத்த காற்று உள்ளுறுப்புகளை துவம்சம் செய்ய... அடப்போங்கப்பா நாங்க மட்டும் சளைச்சவங்களாங்காட்டியும்.

நீதி: தெரியாம நடந்தா அது ஆக்ஸிடெண்ட். தெரிஞ்சே நடந்தா அது இன்ஸிடெண்ட்.

Dub'பா டப்பா வீரப்பா

ஆரூர்தாஸ் குடும்பம் சுந்தரத் தெலுகு படங்களை தமிழில் டப் செய்ய வசனம் எழுதுவார்கள். டப் படங்களில் நல்ல டப்பு பார்க்கமுடியுமெந்தாலும், அதிக லாபமில்லாவிடினும் கையைக் கடிக்கும் நட்டம் வராது போன்ற காரணிகளால் மீசைக்காரன், இதுதாண்டா போலீஸ், அவந்தாண்டா முதலமைச்சர், IAS, IPS போன்ற பல திரைப்படங்களை தமிழில் கேட்க முடிந்தது. தமிழ் - தெலுங்காவது பர்வாயில்லை.

ஹாலிவுட் படங்களை இந்தியில் டப் செய்து கொல்கின்றார்கள். யோசித்துப் பாருங்கள் வாயசைவு எவ்வாறு இருக்குமென்று? டாம் குரூஸ் பாத்ரூமில் ஓடி ஒளிந்த வில்லனைப் பார்த்து "அச்சா ஹ¤வா சாலா பாத்ரூமே குஸ்கயா", என்று வீரமாக பேசுவார். டங்ஸ்டன் செக்ஸ்-இன் என்றொரு அருமையான படத்திற்கு இந்தித் தலைப்பென்ன தெரியுமா? ஏக் பந்தர் ஹோட்டல்கி அந்தர் (ஒரு குரங்கு ஹோட்டலுக்கு உள்ளே).

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தது சக தொழிலாளி. ஜினிமா பத்தி பேச்சு வந்தப்போ நம்ம கிட்ட நம்ம நாட்டோட படங்கள் சில வேணுமின்னு வெள்ளை ஆசாமி கேட்டவுடன் இந்த subtitle/Closed Caption ஞாபகத்துக்கு வந்துச்சு. ஹ¥ம்...தமிழ் டிவிடி'க்களில் ஆங்கில கேப்ஷன் போடுகின்றார்கள். கேப்ஷன் போட்ட கேப்மாரி மட்டும் கையில கெடைச்சான்னா நெடுஞ்சாண்கிடையா காலில் விழுந்து நான்கு முறை நமஸ்கரிப்பேன்.

உங்களுக்கு பொழுது போகணுமே! இதோ சாம்பிளுக்கு சில ஆங்கில கேப்ஷன்கள் தருகின்றேன். இவையனைத்தும் தமிழ் பாடல்களின் மொழிபெயர்ப்பு. பாடல்கள், நடுவிலிருந்து வருகின்றது. என்னவென்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்....

பாடல் 1
Oh! Flower Creeper! I have lost my sleep 'coz of you
My blood is becoming hot

பாடல் 2
You must studiously learn it by staying awake all night
What's the fee for it?
You must only say it

பாடல் 3
I am just a beginner
You are my salted meat
When I see you, hunger strikes


பாடல் 4
Oh! Southernman....Oh! Dear
You are the king of Angels
Ten fingers are not enough for him to grab the youth

பாடல் 5

Are your lips a jack fruit
Is your silken body my abode
Is my body like a moon?
Are you the one who pinched my heart?


பி.கு. அதென்ன டப்பா டப்பா வீரப்பான்னு டைட்டிலுன்னு யோசிக்றவாக்கு: சின்ன வயசுல குக்கிராமத்துல கேட்ட நாட்டுக்கட்டையோட (என்னோட அப்பம்மா/அப்பாச்சி) பாட்டப்பா அது. நீங்க கேட்டதில்லை? டப்பா டப்பா வீரப்பா எப்படா கல்யாணம்? மாசி பொறக்கட்டும் மல்லிகைப்பூ பூக்கட்டும் ... அப்பிடின்னு...

ஜுகல் பந்தி

ஒரே ஸ்டீரியோ டைப்பா இருக்குதுப்பா கொஞ்சம் ரூட்ட மாத்து அப்பிடின்னு அமெரிக்காவுல வசிக்கிற ஐந்து வருட பழக்கமான ஸ்நேகிதி யாரும் சொல்லல. நாந்தேன் முடிவு செஞ்சேன். ஒரு வாரத்துக்கு கொஞ்சம் அப்பிடி, இப்பிடி பதிவெல்லாம் போடலாமுண்னு தோணிச்சு. சமபந்தி போஜனம் தான் நம்ம கான்செப்டே! இப்போ ஜுகல் பந்தி போடப் போறேன்.

ஏப்பா ஒன் புத்தி இப்பிடிப் போச்சிங்றதும், அட இப்பவாவது புத்தி வேலை செஞ்சுதேன்னு சொல்றதும், என்னிக்கு உனக்கு புத்தி இருந்துச்சுன்னு கும்முறதும் உங்களோட சொதந்தி'ரம்.

ஆஷ் கரோ
என்ஞாய் மாடி
அடிப்பொ*
தூள் மாமே
எங்க்கம்மா அது

இதோ நம்ம புடிச்ச பிடிச்ச படங்களோட அட்டெண்டன்ஸ் போட்டுக்கிறன்:

கண்ணைப் பறிக்கும் சிங்கை தங்கம் (முஸ்தபா முஸ்தபா)

உலக அதிசயத்தில் ஓட்டை (கிராண்ட் கேன்யன்)

நியூயார்க் வெள்ளைத் தேவதை (கப்பல் கண்ணுக்குத் தெரியாதே!!!)

நான் பின்னூட்டங்களை படிப்பதில்லை



எழுதுவதே புரியாத போது
வலைப்பூவில் இருக்கும் இரு பதிவுப்பூ(ச்)சிகளுக்கு
ஏனிந்த விளக்கவுரை வேலையென
கேட்டபோது மனசிலொரு கடுகடு

எழுதும் போது
பதிவுப்பூசிகள் சொல் கெ(!)டுக்குமா?
எனக்கேட்டு அனுப்பிய
பதிவுப்பூசி மின்னட்டை
எரிதங்களுடன் எங்கேயோ பத்திரமாய்

பிறந்தநாள் பதிவென்று
நீ நறுக்கிப் போட்ட பதிவு
நாம் பின்னூட்டப் பேழையில்
பிளந்துகட்ட
பேழை முழுக்க ஆய் போன
அனானிகள்

சிலநாட்களே வாழ்ந்துமடியும்
ஹேலோஸ்கான் பின்னூட்டங்களுக்குள்
கைகலப்பு சண்டை நடந்ததென
விட்டுச்சென்ற கசந்த
அந்த கடைசி பதிவு

மன்னிக்கவும்,
நான் இப்பொழுது
பின்னூட்டங்களையெல்லாம் ப(பி)டிப்பதில்லை

Sunday, October 16, 2005

குசும்புதலைவருக்கு அனுப்பிய மடல்

இந்த ஆண்டு சித்திரைத் திங்களில் தமிழ் வலைப்பதிவுகளின் சூழ்நிலை பற்றியும், பண்பாளர், பகட்டில்லாதவர், ஏழைப்பங்காளன், தொடுப்புகளைப் பேணுவதில் ஆர்வம் காட்டுபவர், தமிழில் ஏதோ எழுதுபவர் என்ற வகையில், அவரையும் வலைப்பதிக்க அழைத்து ஒரு மடல் எழுதினேன். இன்றுவரை மடல் கிடைத்ததற்கான அக்நாலட்ஜ்மெண்ட்டோ, அவரின் பதிலோ கிடைக்கவில்லை. மடலில் கொஞ்சம் ஹோதாவும், கொஞ்சம் என் வலைபதிவைப் பற்றிய உதாரும், ஒருவரி விளம்பரவாசமும் தெரியலாம். இருப்பினும் தனது அழகான அந்தரங்க காரியதரிசியை (ஙௌக்கா மக்கா தமிழு) விட்டுப் பதில் எழுதச்சொல்லக்கூட முடியாமல் போகும் அளவுக்கு இது ஒதுக்கத்தக்கதா என்று தெரியவில்லை. என்னமோ போப்பா! ரிமைண்டர் போட்டாலும் அவர் கண்டுக்கின மாதிரி தெர்ல. அவரு பிஸியா இல்லை அந்தரங்க காரியதரிசியை பிஸியா இல்லை இருவரும் சேந்து பிஸியா (!) தெரியவில்லை. போனாப் போவுதுன்னு பொதுவுல போடுறேன். தயவு செஞ்சு நீங்களாவது படிச்சிட்டு பின்னூட்டமாவது போடுங்க !!! நான் அனுப்பிய முகவரி: podankho@gmail.com

எழுதிய மடலை இங்கே கொடுக்கிறேன் ( (நம்ம தலீவருக்கு இங்லிபீஸ¤ தெரியாத காரணத்தால் தமிழில் மட்டுமே மடல்)

----------------------------------------------------------------------------------------------

அன்புள்ள மேதகு குசும்புத்தலைவர் திரு. சின்னமூடி சிங்காரம் அவர்களுக்கு,

இந்திய ஹோகனேக்கல் நீர்விழ்ச்சி பகுதியில் தமிழ்நாடா இல்லை கர்நாடகமா என்று அனைவரும் அடித்துக் கொல்லும் பகுதியில் சேர்ந்த என் பெயர் கர்னாடிக் டமாசு. ஷெல்லமாய் டமாஸ். பணிநிமித்தமாக அமெரிக்காவில் தற்போழுது வசிக்கிறேன். 784க்கும் மேற்பட்ட தமிழ் வலைப்பதிவாளர்கள் (bloggers) சமுதாயத்தின் ஒரு கடைப்'பிரதிநிதியாக இந்த மடலை எழுதுகிறேன்.

'வலைப்பதிவுகள்'ன்னா இன்னா மாமேன்னு நீங்க Kக்குறது நேக்கு கேக்குது. ஒண்ணுமில்லை ஸாரே! ஆபீஸ¤ல போரடிச்சா வேலைங்ற போர்வையில உங்களோட கருத்தை நெட்லே போடலாம். அதுவும் தமிழ்ல. இதுல என்னா லாபம்ன்னு கேப்பீயளே? ஒண்ணு நமக்கு ஒரு வாசகர் வட்டம் உண்டாகும். ஆப்புறம் நம்மை மேரியே வேலை வெட்டி இல்லாத கஸ¤மாலங்கோ கண்ணுல விளக்கெண்ணை ஊத்தி, லென்ஸ் போட்டு பேனைப் பெருமாளாக்கி ஷங்கரு போல டகால்பாஜி வேலை காட்டும். ஆப்புறம் என்னா மாமே நீ பெர்ய ஆளாயிடுவ! (இப்பவும் நீ பெர்ய மன்ஷன் தான். ஆனா என் மெயிலுக்கென்ன பதில்?). கருத்துப் பரிமாற்றம் பரிணாம வளர்ச்சி அடைந்து இன்று இணையத்தில் புரட்சி நடாத்தி வருகின்றது. வா ராசா வந்து பாரு.

அப்புறம் இந்த கூகிள்'ன்னு ஒரு தேடுபொறி இருக்கு. பொறின்னா உடனே பயப்படவேண்டாம். அதோட ஆட்ஸ் அதாம்ப்பா விளம்பரம் போட்டா மாசத்துக்கு ஒரு பென்னியாவது உத்திரவாதம். பேங்க் பேலன்ஸ் சும்மா சுகுற்றா ஏறும் மாமே.

இன்னிக்கு 12 லட்சம் வலைப்பதிவுகள் ஆங்கிலத்தில் பீட்டர் வுடுறாங்கங்ணா. நம்ம இந்திய பாஷைகளில் கணிமை(Computing) இன்னும் வளர்ச்சி அடையாத நிலையில் ஹிந்தி உள்பட மற்ற இந்திய மொழிகளில் சும்மா வெரலை வுட்டு (உங்களால முடியாதுன்னாலும்) எண்ணக்கூடியவையாகவே வலைப்பதிவுகள் எழுதப்படுகின்றன. தமிழில் வியக்கத்தக்க வகையில் இன்றுவரை சுமார் 784 வலைப்பதிவுகள் தோன்றி சமூகவியல், அறிவியல், இலக்கியம், அரசியல், வணிகம், விளையாட்டு, கணினியியல், மனையியல், பொழுதுபோக்கு என்ற பலவகைக் கருத்துக்களங்களில் கலாய்த்து தினமும் 25 புது விஷயங்களாவது எழுதப்படுகின்றன. உங்க வேலை என்னா கேட்டகிரின்னு எமது நிர்வாகி முடி(!)வெடுப்பார்.

சரி... எங்கன போயி இன்னாத்த கண்டுக்கிடறதுன்னு கொயப்பம் வரத்தான் செய்யும். அதுக்கும் ஒரு வழி பண்ணிட்டோம்ணா. அதுதான் வழிவாசல் சேச்சே வலைவாசல் (web portal). செய்தியோடைன்னு ஒண்ணு இருக்கு நைனா. அதுல கூட பாலிடிக்ஸ்தாங்ணா. RSS இருக்குது. நம்ம விஜேய்காந்த் கூட தேமுதிக ஓடை கொடுக்கப் போவதா வதந்திங்ணா. இந்த ஓடையெல்லாம் புட்ச்சி இருபது மணித்துளிக்கொருமுறை புச்சா ஆராரு என்னா கீசியிருக்கான்னு நம்ம வலைவாசல் வழி காமிக்குதுங்ணா. அந்த தலத்தின் முகவரி: http://www.thamizkushboo.com/

இன்னிக்கு பெரும் சிந்தனையாளர்கள், அரசியல், சமூக, அறிவியலார்கள் தங்கள் சிந்தனைகளை நேரடியாக போட்டுத்தாக்க வலைப்பதிவுகளை திறன்மிக்க கருவியாகப் பயன்படுத்திவருகிறார்கள். சேம்பிளுக்கு நெட்ல தேடுங்ணா. நேக்கு டைம் இல்லே.

ஆங்கிலத்தோடு போட்டி போடமுடியாத இந்திய மொழிகளில் (ஆமாம் இங்லிபீஸ¤ம் இந்திய மொழிகளில் ஒன்றில்லையா?) கணிமை இன்னும் சும்மா ஆரம்ப நிலையிலேயே இருக்கிறது. பயன்பாடு வளரவளரவே பாலிடிக்ஸ் வளரும். இப்பண்பாட்டினை ஒரு கட்சியோ, அரசோ/சில குசும்பர்களோ மட்டும் முன்னெடுத்துச் செல்ல முடியாது. அது ஒரு பரவலான பன்முகப்பட்ட கலாச்சார சார்பற்ற நிகழ்வாக இருக்கவேண்டும். இந்தக் குறையை நிவர்த்திக்க வலைப்பதிவுகள் ஒரு மிகமிக இன்றியமையாத சாதனம் என்றால் அது நகையில்லை.

சகலகலாவல்லரும், வெடி வித்தகரும், போட்டுத் தாக்கும் வலைஞரும், துண்டு போடாத கலைஞருமான தங்களுக்கு இந்த முயற்சிகளை எடுத்துக்காட்டவே இந்த மடல். கட்டாயம் நீங்களும் ஒரு நாள் ஒரு வலைப்பதிவைத் துவக்கி உங்களை வெடிவெள்ளியாகப் பார்க்கும் பலகோடி இளைஞர்களுடன் நேரடியான கருத்துப் பரிமாற்றம் செய்வீர்கள் என்று அசையாத நம்பிக்கை எனக்கு உண்டு. அத்தகைய தருணத்தில் தமிழிலும் ஒரு வலைப்பதிவைத் துவக்கி தமிழில் எங்களுடன் படங்காட்டாது தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டால் எங்கள் மகிழ்ச்சிக்கு அளவேது! பின்னூட்டங்களுக்கும், ஓட்டுக்கும் நான் கியாரண்டி. மீரு தொரகா ரண்டி பாபு என்று சுந்தரத் தெலுங்கினில் வரவழைத்து டாங்ஸ் மாமேன்னு சென்னைத் தமிழில் விடை பெறுகின்றேன்.

இந்த முயற்சிகளில் ஈடுபடும் வலைப்பதிவாளர்களுக்கு தாங்கள் ஏதேனும் பிளாஷாய் செய்தி கொடுத்தால் மிகவும் மகிழ்வோம்.

மிக்க அன்புடன்,
-கர்னாடிக் டமாஸ¤.
http://www.thamizkushboo.com/

Present address:

xxx (removed)
Web(!)ster, NY 14580
USA

Permanent address:
xxx (removed)
ஹோகனெக்கல் 6XXXXX.

பி.கு. கரீக்டான ஐபீ மற்றும் அற்றஸ் வேண்டுமெண்டால் மசக்கைசூசட்ஸ் செல்ல வேண்டாம். மோப்ப ஷக்தியில் ஏதோ பெரிய கோளாறாம் !!!

Wednesday, October 12, 2005

இணையத்தில் உடைந்த இலக்கிய (கூ)முட்டை

(ரெண்டும் கெட்டானின் கதை. கில்மா. Blue Publications. போர்டில் தார் அடிக்காமல் இருக்க தமிழில் தென்மேற்கு ஓலச்சுவடு பதிப்பகம். முதல் பதிப்பிற்கு காசு திரட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது. சிங்கிள் சாயாவிற்கு சிங்கியடிப்பதாக இண்டர்நெட்டில் ஓலமிட்டு/காசு கேட்டு பைஸ்டார் ஓட்டலில் பிரெஞ்சு போத்தல் ஒயின் குடிக்கும் கைமா நிலையில் ஆசிரியர். புத்தகத்தின் மொத்த பக்கங்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. விலை சுமார் ரூ. 250.99 அமெரிக்காவில் $99.99/- உள்ளூர் வரிகள் தனி)

சமீபத்தில் நாலைந்து நாட்களாக கடுமையாக முயன்று தமிழில் நான் படித்து முடித்த Draft நாவல் கில்மாவின் ரெண்டாம் கெட்டானின் கதை. சில கேள்விகள் எனக்குள்ளும் தவிர்க்க முடியாமல் எழுந்தன. ஆனால் "இந்தப் பொஸ்தகம் குறித்து எழக்கூடிய கேள்விகளுக்குப் பதில் எதையும் சொல்லக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறேன்" (பக் 9/பத்தி 8/வரி 5) என்று 'மௌனம் கொலைதல்' என்று தலைப்பிடப்பட்ட தனது முன்னுரையில் கூறுகிறார் கில்மா. போகட்டும். அவர் பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. எனது பொன்னான வாசகர்களுடன் கேள்விகளையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று அவர் தடை விதிக்கவில்லையே! எனவே அவற்றை இங்கே உங்களோடு உரிமையுடன் பகிர்ந்துகொள்கிறேன். இப்பதிவுக்குண்டான கேள்விகளை நீங்கள் என்னிடம் கேட்கக்கூடாதென்றும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

தொடக்க மற்றும் நடுநிலை ஆண்கள் மற்றும் அவரைச் சுற்றிய பெண்களால் நிரப்பப்பட்ட ஒரு ரெண்டும் கெட்டான் உலகத்தை கடை விரிக்கிறது நாவல். அவ்வப்போது கடைநிலை ஆண்களும் பெண்களும் வந்து போகிறார்கள். இவர்களை விட்டால் வேறு கதாபாத்திரங்களே இல்லையா என்ற கேள்விக்கு பதிலும் உண்டு. கதை நடப்பது ஒரு கிராமம் (என்பதாகத்தான் தெரிகிறது). எனவே எல்லைக்கல், அடிபட்ட நாய், நேர்ந்துவிடப்பட்ட காளை மற்றும் கிடா போன்ற உப-பாத்திரங்களும் உலா வருகின்றன. இந்நாவலில் நான் தேடியவரை ஆறு குடும்பங்கள், அக்குடும்பங்களின் அங்கத்தினர்களாக சில கணவர்கள், அவர்களின் மனைவிகள், சகோதர சகோதரிகள், குழந்தைகள் என கிட்டத்தட்ட 142 மெகா சீரியலாக பாத்திரங்களையும், உம்மாச்சி, கருப்பட்டி, சீயக்கா, மாசிலாக்கா, மசக்கை மருத்துவச்சி போன்ற நாயக அந்தஸ்து இல்லாத சில பாத்திரங்களையும் சுற்றி நடக்கிறது இந்த நாவலின் கதை.

நாவலென்றால் கதை என்று குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஒன்று இருக்கவேண்டுமல்லவா? அது கிஞ்சித்தும் இல்லை. ஒருவேளை இது பின்நவீனத்துவ எழுத்தின் தன்மையாக இருக்கலாம். முன்நவீனத்தில் கதை விடுவது எளிது. வயதுக்கு வராத அல்லது வயதுக்கு வந்து கொஞ்ச காலமே ஆன சின்னப் பெண்களை (தொடக்க மற்றும் நடுநிலை வயது கொண்ட மகளிரை) அடாவடித்தனமாக, மனைவிகளை ம(மி)திக்காத குடும்பத் தலைவர்களாக இருக்கும் ஆண்கள், அதாவது தகப்பன்மார்கள், மகளின் ஜீன்ஸ்/செல்போனுக்குத் தடை விதிப்பது, தேவையில்லாத இடத்தில் அ·தாவது உடல் உறுப்புகளில் அணிகலன்/ஆபரணம் அணிய (?) மறுப்பது, இதையொட்டி நிகழும் நிகழ்வுகள், பதிவுகள், நடப்புகள், ப்ளா ப்ளா வென்று பதிவு செய்கிறது இந்த நாவல்.

ஒரு உதாரணம் : அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்த பின்னரே ஜூலிக்கு ஜீன்ஸ் அணியும் ஆசையே வந்தது. (பக். 96'ல் வரலாம்).

இந்த கதையினூடே இரண்டு விதமான பதிவுகளைப் பார்க்க முடிகிறது. அவற்றை கில்மா ஸ்பெஷல் என்று சொல்லலாம்: 1. போலித்தனமான ரெண்டாம் கெட்டானின் முதல் குரல். பின்நவீனத்துவம் தந்த துணிச்சல் என்ற போர்வையில் வெளிப்படுத்தப்படும் போலிகளும் இதில் அடக்கம். எடுத்துக்காட்டாக கால் கழுவி வந்தான் என்று குழூஉக்குறியாகவோ இடக்கரடக்கலாகவோ இன்றி *ண்டி கழுவினான் (பக். 111) என்று எழுதும்போது பின்'நவீனத்துவத்தின் முற்போக்கை ஆசிரியர் வெளிப்படுத்தியதாய் மாஞ்சில் மாடன் புல்லரிக்கின்றார் (பக். ஆ) 2. போலித்தனமான ரெண்டாம் கெட்டானின் இரண்டாம் குரல். முன்நவீனத்துவம் தந்த துணிச்சல் என்ற ஜமுக்காளத்தில் அவர் வெளிப்படுத்தியிருக்கும் விதம் எனலாம். எடுத்துக்காட்டாக பக் 222'ல் ஒரு வசனம் வருகின்றது. "என்னடி உன் மாமா எப்பவும் விறைப்பாவே இருக்குதே. என்ன மிலிட்டரியிலே சேரப் போவுதா?" என்பதில் முன்'நவீனத்துவம் பிற்போக்காக கையாளப்படுகின்றது. 'ரெண்டும் கெட்டானின் கதை' என்பதால் இந்த இரண்டையும் ரெண்டுக்கு ஒன்றாக (Two in One) என்று வைத்துக்கொள்ளலாம்.

முதலில் பெண்களின் பாத்திரப்படைப்புக்கு வருவோம். ஜூலியா (கிராமத்துல ஜூலியாவா? ஏம்ப்பா ஆடு மேய்க்கும் பாரதிராஜா பையன் ஜீன்ஸ் போடலாமா?) என்ற சின்னப்பெண்ணின் செயற்கை ரசனையில் தொடங்கி நெயில் பாலீஷ் போடுவதாக முடிகின்றது. அவரை விட வயதில் மூத்தவளாக போலியா, ஜூலியாவின் உயிர்த்தோழி. இந்த இருவரும் ஸ்கிப்பிங் ஆடுகின்றார்கள். நொண்டி அடிக்கின்றார்கள். குலை குலையா மந்திரிக்கா பாடுகின்றார்கள். அப்பாவிற்கு தெரியாமல் இரண்டாம் ஆட்டம் பார்க்கின்றார்கள். சமீபத்தில் வெளியான அ..ஆ என்ற படத்தை ஆதிவேலன் என்ற தியேட்டரில் மணல் குமித்து பார்த்து பரவசம் அடைகின்றார்கள். 'அந்த 'அஆ' படத்துக்கா போயிட்டு வர்றே நாயே' என்று அவளை அவள் அம்மா கண்டிக்கவும் செய்கிறாள்.

ஆதிவேலன் என்ற டப்பா தியேட்டரில் அஆ புதுப்படமாம்.இது வலிந்து செய்யப்பட்ட ஒரு பதிவாகும்.

இதன் மூலம் கில்மா சொல்ல விரும்புவது என்ன? ஆண்கள் அஆ படம் முதல் ஆட்டத்தில் பார்க்கலாம் என்றால் பெண்கள் இரண்டாம் ஆட்டம் பார்க்கலாம் என்றா? பலான படங்களே பார்ப்பது எந்த வகையிலும் மன ஆரோக்கியத்தை பாதிக்காது, மாறாக வலுப்படுத்தவே செய்யும், எனவே அதை அனுமதிக்க வேண்டும் என்று லேகிய வைத்தியரிஸத்தை நியாயப்படுத்துகின்றாரா? எப்படி இருப்பினும் இது நடப்பு கற்பனைகளில் காணமுடியாத ஒரு நிஜ நிகழ்வு.

ஆனால் அஆ படம் என்று தெரியாமல்தான் ஜூலியா சென்றதாக ஒரு சின்ன சப்பைக் கட்டும் உள்ளது. ஆனால் எந்த இடத்திலும் அப்படிச் சென்றது தவறு என்பதான குறிப்பு கிடையாது. சரி, தெரியாமல் இரண்டாம் ஆட்டம் போனதாகவே வைத்துக்கொள்வோம். ஆனால் சின்னப் பெண்கள், காலம் புத்தி கெட்ட காலத்தில் இரண்டாம் ஆட்டம் படத்துக்குப் போவது நடக்காத ஒன்று. ஆனால் இந்த ஜூலியாவுக்கு திருட்டுத்தனமாக சினிமா பார்ப்பது ஒன்றும் புதிதல்ல. ஏற்கெனவே நியூ படம் பார்த்ததாகவும் கில்மா குறிப்பிடுகின்றார். பார்க்க அநெக்ஸ் A (பக். 981).

இதுமட்டுமா? ஜூலியாவிற்கு திருமணமானபோது சொந்தக்காரப் பெண்களில் சில விபரமானதுகள் ரகஸியமாக இண்டியா டுடே சர்வேயைக் காட்டுகின்றார்கள். மனப்பிறள்வை வெளிப்படுத்தும் இது போன்ற புத்தகங்களை ஜூலியாவிடம் கொடுத்து அனுப்புகிறார்கள். அதில் ஒன்றை 'சுட்டு' ஜீலியா போலியாவிடம் காண்பிக்கிறாள்(பக். 386). புது மணப்பெண் ஜூலியாவிற்கு இண்டியா டுடே தேவையா?

சரி, அந்தக் கிராமத்து பெண்கள் பொதுவாக எப்படிப்பட்டவர்கள்?
ஜூலியாவின் கணவன் நியோ (ஏம்ப்பா மேட்ரிக்ஸ் படத்தை டப் பண்ணீங்க?). ஆனால் அவளுக்கு அஜீத்தோடு தொடுப்பு. அஜீத் அம்மாவுக்கு ரெண்டு புருஷன். முறித்துக் கொண்ட முத்தம்மாவிற்கு யார் மூலமாகவோ குழந்தை. பெரியவூட்டம்மா ஒரு கிராமத்து மருத்துவச்சி மூலம் கருக்கலைப்புக்கு ஏற்பாடு செய்கிறாள். என்ன தலை சுற்றுகின்றதா?

நியோ பாண்டி ஆடுகின்றான். ஜூலியா சொப்பு வைத்து விளையாடுகின்றாள் (பக். 269). சபாஷ். கணவன் நியோ பாண்டியானால் ஜூலியா சொப்பு வைக்கின்றாள். தக்க பதிலடி. அடடா, மொடர்ன் பொண்ணு இவளன்றோ! ஓ இதுதான் நியோ'நார்ஸிஸமோ?

இன்னும் இதுபோல் பொருந்தாத முரண்நகைகள் ஏராளம்.
கதை முச்சூடும் பல பெண்கள் விளையாட்டுப் பிள்ளைகளாகவே இருப்பதை சரிக்கட்டும் ஒரு முயற்சியாகவே இதை நாம் பார்க்க முடிகிறது.

பெண்களைப் பற்றிய புக் இது. சப்பை மேட்டருக்கு மல்லுக் கட்டுகிறது ஸ்ரீனிவாசுலு அரங்கநல்லூராரின் முன்னுரை. அவர் சொல்கிறார். "திருமண அறிவு, குடும்ப கட்டமைப்பு ஆகியவை எந்த அளவு இறுக்கமானவையாக உள்ளனவோ அந்த அளவு வாயுப் பிரச்சினையை அதிகரிக்கச் செய்கின்றன" (பக் 5). குடும்பம் கட்டுக்கோப்பாக இல்லாவிட்டால் வாயுப் பிரச்சினை வருமென்ற இந்த 'தர்க்க முடிவை' ஒத்துக்கொள்வீர்களா?

இன்னும் எழுத இலக்கணப் பிழைகள் மலிந்த தமிழில் கரிபாவின் கடிதம், ஸேக்ஸ்BEER, அயோக்கிய ஆண்கள், வேஷ்டி/சட்டை/கோட்டு/சூட்டு, பச்சை வசனங்கள், மர்ம உறுப்பு கவிதைகள், மதம் ப்ளா ப்ளா எல்லாமுள்ளது. அடுத்த எபிசோடில் ம(க)ற்றவை...

பி.கு 1: எத்தனையோ பக்கங்களுக்கு இருக்கும் இந்நாவலில் எனது சொந்த அனுபவத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஓரெழுத்து கூட இல்லை எனலாம். இலக்கியத்தின் சுவை வேண்டுமானால் படிக்கலாம். சல்லியடித்தல், மட்டையடித்தல், கும்மியடித்தல், சம்முதல் விரவியிருக்கின்றன என்றால் மிகையில்லை. மற்றபடி எனது நோக்கம் இப்படி ஆழமான இலக்கியம் மட்டுமே. எவரெஸ்டின் உச்சியில் கில்மாவை வைக்க ஸ்ரீக்கென்ன காலத்தின் கட்டாயமோ? பிரியில...

பி.கு. 2: (மூச்சு வாங்கியபடி) பின்ன முக்கி'யமான பதிவில்லையா இது?

முக்கிய பதிவு

ம்ம்க்க்...

பிகு: மிக முக்கியமான பதிவில் வேலை செய்துகொண்டிருப்பதால் கொஞ்சம் பிஸி. வாசகப் பெருமக்களே பொறுமை காக்கவும்.