Saturday, November 13, 2004

மட விவகாரம்

தனி மனித துதியோ, மிதியோ நமக்கு ஆவாதுங்கோ...(நடுநிலையா எழுதப் போறேங்கறதை சூசகமா சொல்லியாச்சுங்கண்ணா)

இணையத்துல எல்லோரும் பூந்து கலக்கிட்டபின்னே நமக்கென்னா வேலைங்கறேளா? அதுவும் சரிதான். ஏதோ நம்மாலான பத்து காசு இதோ:

1. கருணாநிதி கைதையும், சாமிகளோட கைதையும் ஒப்பிடலாமா? முதல் கைது 'கில்லி' பட ஸ்பீடு. ரெண்டாவது 'ஆட்டோகிராப்' மாதிரி ஸ்லோ மோஷன். கைலி, முண்டா பனியனோட, கால்ல செருப்பில்லாம, கோழிக் குஞ்சை தள்ளிக்கினு போறமாதிரி முத கைது. ஆனா தனி செஸ்னா விமானத்துல ஆந்ராவிலிருந்து வந்து, போலீஸ் வேன்ல கூட ஏறாம டயோட்டா குவாலிஸ், டாடா சுமோன்னு சொகுஸா வேலூர் வரை வந்தது ரெண்டாவது கைது. வேலூர் சிறை சூப்பிரடெண்ட் சொல்லிட்டார். சாமிகளின் பூசை, புனஸ்காரம் தொடரும். சிறையின் சீருடை கிடையாது. தண்டம் வைத்திருக்கலாம். போன்ற சில சலுகைகள். அரசு வழக்கறிஞரோ சாமிகள் குற்றஞ் சாட்டப்பட்ட கிரிமினல். அதனால் பிரத்தியேக சலுகைகள் கிடையாதுங்றார். என்னாப்பா நடக்குது? ஆண்டவனுக்கே வெளிச்சம்.

2. சங்கரராமனுக்கு (அவாளா இருந்தாலும்) கருணாநிதி காட்டிய கரிசனம் (?) புல்லரிக்க வைத்தது. வாழ்நாளில் பாதி திமுக கட்சி வளர்ச்சிக்கு அர்ப்பணித்த சிவகங்கை சிங்கமான தா.கிருஷ்ணன் கொலை செய்யப்பட்டதற்கு ஆறுதல் கூட சொல்லவில்லை தன்மானத் தலைவர். இப்போ சங்கரராமனுக்காக உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கின்றார். காலக் கொடுமையே...சரி விடுங்க...அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...

3. கொலைக்கான பணத்தை சீலோடு யாராவது கொடுப்பார்களா? கொலை செய்தவரோடு செல் போனில் பேசுவார்களா? இவ்வழக்கு ஜோடனை செய்யப்பட்டதாக இருக்கலாமென்று சந்தேகத்தை SK அண்ணா எழுப்பியிருக்கின்றார்கள் . அதே வாதம் அழகிரிக்கும் பொருந்துமென்னும் கருத்தும் நிலவுகின்றதே? அதாவது ஒரு கட்டத்தில் 'இந்தாளு (தா.கி.) செத்தாத்தான்யா நிம்மதி', என்று ஓப்பனாக கோபப்பட்டார் அழகிரி. அப்போது அவருக்கு தெரியாதா தாகி கொல்லப்பட்டால் தனக்குத்தான் போலீஸ் முதல் ஆப்படிக்குமென்று. அதென்ன சாமிகளையும், அழகிரியையும் ஒரே தட்டில் வைக்கிறேனென்று கோபப்படாதீர்கள். சாமிகளுக்கு 'இம்மாதிரி' கேஸ் புதிது. திட்டத்தில் தப்பு நடக்க சான்ஸ் உண்டு. ஆனால் அழகிரி 'கில்லாடியாயிற்றே'. அவருமா இப்படி தப்பு பண்ண முடியும்?

4. பத்ரியோட பதிவு ஆச்சரியமாயிருந்தது . தலைவரு முடிவே பண்ணிட்டார். வீரப்பனே தேவலாமென்று. எனக்கென்னமோ 'எல்லாமே' இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருப்பதாத்தான் படுது. 'சூப்பர் ஆதாரம்'னு இருக்குன்னு சொல்லி ராத்திரியோட ராத்திரியா சம்மி கூட்டிட்டுப் போயி கருணாநிதியை 'அம்மா' என்னா பண்ணாங்க? பாவம் ஆதாரம் தேடி பாலங்களை உதைச்சு உதைச்சு முகமது அலி காலு வலி கண்டதுதான் மிச்சம். கேஸையே இப்போ டிராப் பண்ணிட்டா. வளர்ப்பு மகன், எம்ஜிஆரின் முன்னாள் டிரைவர், செரினா, சின்னம்மாவின் பெரியப்பா(?) அல்லாரு மேலும் 'அம்மா' கஞ்சா கேஸ¤ போட்டாக...இப்போ என்னாச்சு? யாருக்கும் தெரியுமோ?முன்னாள் கவர்னர் சென்னா ரெட்டி மீது 'முறை கேடாக' நடக்க முயற்சி செய்ததாய் புகார், எல்லாம் செய்து கொடுத்த முன்னாள் சென்னை கமிஷனர் முத்துக்கருப்பன் மீது 'சொத்துக் குவித்த' புகார், முன்னாள் டிஜிபி ரவீந்திரநாத் மீது 'செக்ஸ்' புகார் என்று 'அம்மா'வின் புகார்/கைது/சஸ்பெண்ட்/வாபஸ் படலங்களை நாம் பல வருடங்களாய் கண்டு களிக்கின்றோம். அதுபோல் இவ்வழக்கும் 'புஸ்'வாணம் ஆக சாத்தியக்கூறுகளுண்டு. மெட்ராஸிலுள்ள நிலம் கைமாறததால்தான் சரவணபவன் ராஜகோபால் அண்ணாச்சி உள்ளே போனாரென்ற வதந்தியுண்டு. இப்போ ஜீனியர் விகடனும், தினகரனும் 'மெடிகல் காலேஜ்' விஷயம்தான் தான் மடத்துக்கும், அரசுக்குமிடையே கசப்பை ஏற்படுத்த காரணமாயிருக்கலாமென்கிறது. உண்மை அப்படியென்றால்...'அடப் பாவிங்களா... இப்படியெல்லாமா பழி வாங்றது?'

5. எத்தனையோ பதிவுகளைப் படிச்சாலும், 'இல்லைய்யா. சாமிகள் அப்படி செய்திருக்க வாய்ப்பேயில்லை'ன்னு ஒரு பதிவும் சொல்லலே. இதுதான் இணைய நியாயமோ? வீரப்பனைக் கூட சுட்டதற்கு எதிரா கார-சார விவாதங்களைப் பதிஞ்சாளே!!! ஒருவேளை 'முத்திரை' குத்திடுவாளோன்னு பயமா இருக்கலாமோ? அப்புறம் எதுக்குவே எல்லாரும் கூசாம 'தங்கு தடையற்ற இணைய சுதந்திரம்' பத்தி மார் தட்டுறீங்க? தமிழ்மணத்துல ரெஜிஸ்டர் ஆன 259 மனங்களும் ஒரே மாதிரி சிந்தனை செய்யுதா? நம்ப முடியலியே பாசு !!! அப்படியே இருந்தா இந்தா குசும்பன் கூவுறான் "வாள்க இணைய ஒத்துமை".

6. பாவம் நம்ம அருண். அவரோட கனவுகளுக்கு ஒரு வரைமுறையே இல்லாம ஆட்டோ மீட்டர் போல தறி கெட்டு எகிறிக்கொண்டிருக்கின்றது. அவரோட பதிவைப் படிச்சேன். //சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது ஆன்மீகவாதிகளுக்குப் பொருந்துவது போல், அரசியல்வாதிகளுக்கும் பொருந்துமல்லவா?! அப்படிப் பொருந்த வேண்டும் என்பது தான் எனது பிரார்த்தனைகளும்!//. தாகி மற்றும் அண்ணா நகர் ரமேஷ் கொலைகளும், சங்கரராமன் கொலையும் ஒன்றா? ஒரே மாதிரி விசாரிக்கப்படணுமா? ஆன்மீகவாதிகளும்/அரசியல்வாதிகளும் சட்டத்தின் முன் சமமா? ஆஹா குசும்பில் நம்மை மிஞ்சி விடுவார் போலிருக்கின்றதே!!! ;-)

7. கடேசியா ஆச்சிமகனோட சங்கல்பம் //எஞ்சியிருக்கும் வாய்ப்பிலும் நிச்சயமாக ஜெயேந்திரர் பற்றியெல்லாம் எழுதி உங்கள் நேரத்தை வீணடித்து விடமாட்டேன்//. . ஏங்க அப்படி?

Tuesday, November 09, 2004

வாங்க தமிழ் வளர்ப்போம்

தமிளு தமிளுன்னு மக்கள் கூவிக்கினு இர்க்காங்கோ. சினிமா டைடிலு, ஷாப்புக்கடை போர்டு'ன்னு தமிளகமே திமிலோகப்படுது. டாக்டர் ஐய்யாவும், சமீபத்து உடன்பிறவா சகோதரன் திருமாவும் கூத்துக்கட்டி அடிக்றாங்கோ.

செம்மோழி சகோதரர்களே! சமீபத்துல வந்த விகடன் படிச்சேளா? சும்மா சூப்பரா தமிழ் வளர்க்கறா...டைடில்ஸ் மட்டும் படிங்கோ...சும்மா சுகுற்ரா தமிளு வளருது...

கார்ட்டூன்
க்ளிக்ஸ்
இந்தியாவின் இளமை ராக்கெட்
ஸ்பாட்லைட்
ஐ லவ் யு விகடன்
லவ் பண்ணுடா மவனே
லவ்வோகிராபி
ஐ லவ் ராம்போ
லவ்வர் பாய்
ஜோக்ஸ்
பிட்ஸ் (யோவ் பிட்டுப் படம் இல்லையா)
காமெடி கிளப்
புது டிரஸ் புது டிப்ஸ்
குட்டி விஐபி
பலகாரம் உங்கள் சாய்ஸ்
கிச்சன் ஷோ
ஹாய் மதன்
உடலே ரிலாக்ஸ் ப்ளீஸ்
விகடன் புக் கிளப்

இதுல என்னமோ குமுதம் பத்திரிக்கை ஒரு சோமாறி...குங்குமம் ஒரு முடிச்சுமாறி (நன்றி சு.ரா.) அப்படின்னு குய்யோ முறையோ'ன்னு கத்தல். பாய்ஸ் படத்துக்கு 'சீய்'னு விமர்சனம் போட்டா சரியாயிடுமா? ஜூனியர் விகடன் போட்டோவெல்லாம் சும்மா கும்முன்னு தூக்கல? சிட்டுக்குருவி லேகிய வைத்தியர் விளம்பரம் வரல?

தமிளு பத்திரிக்கை, குடும்ப பத்திரிக்கை அப்படின்னு டகால் பாஜி வேலெ வேணாம்லே... சர்க்குலேஷன் தான் முக்கியம். எல்லோரும் அதைத்தான் பண்றாங்கோ..

அருமையான பத்திரிக்கையா விகடன்... வாசன் ஸாரோட வாசனை மங்கிப்போச்சி...

அட காலி பெருங்காய டப்பாதான். ஆனா வாசனையும் (டபுள் மீனிங்) தொலை(ச்)ஞ்சிப்போச்சே...

கஸ்டமா கீதுபா...

:-(

Tuesday, November 02, 2004

போதை எதிர்ப்பு

ஒரு காட்டிலே முயலொன்று சந்தோஷமாக துள்ளித் திரிந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு ஒட்டகச் சிவிங்கி கஞ்சா அடிப்பதற்காக, ஜாயிண்டை சுற்றிக்கொண்டிந்தது. பதறிப்போன முயலானது,"ஒட்டகச் சிவிங்கியே! போதைப் பொருள் தீங்கு விளைவிக்கும். வா என்னுடன். சந்தோஷமாக காட்டைச் சுற்றி ஓடிவருவோம்", என்றது. சிவிங்கியும் மனது மாறி கஞ்சாவை எறிந்து விட்டு முயலுடன் ஓட ஆரம்பித்தது.

அவையிரண்டும் ஒரு யானையைச் சந்தித்தன. அப்போது யானை சுகமாக கோகெயினை உறிஞ்சும் முயற்சியிலிருந்தது. முயலோ வழக்கம் போல யானையிடம், "போதைப் பொருள் வேண்டாம். வா எங்களுடன். சந்தோஷமாக காட்டைச் சுற்றி ஓடிவருவோம்", என்றது. யானையும் சம்மதித்தது. மூன்று மிருகங்களும் ஓட ஆரம்பித்தன.

அப்போது ஒரு சிங்கம் போதை ஊசியை போட்டுக் கொள்ள தயாரானது. உடனே முயல் தனது பல்லவியை ஆரம்பித்தது. நிமிர்ந்து பார்த்த சிங்கம் ஊசியை கீழே வைத்து விட்டு முயலை சாத்து சாத்தென்று சாத்த ஆரம்பித்தது.

பதறிப் போன சிவிங்கியும், யானையும்," சிங்க ராஜாவே! முயலை ஏன் அடிக்கின்றீர்கள்? நமக்கு நல்லதற்குதானே சொல்லுகின்றது" என்று கோரஸ் போட்டன. சிங்கம் சொன்னது," என்னாது? இந்த முயலா? நமது நன்மைக்கா? எப்போ 'எக்ஸ்டஸி' போட்டாலும் முயல் இப்படித்தான். ஒரு அடிமுட்டாள் போல என்னை காட்டையே சுற்றி சுற்றி ஓட வைக்கும் படவா ராஸ்கல் இது" என்றது.

பி.கு. எக்ஸ்டஸி அமெரிக்காவில் மிகப் பிரபல்யமான போதைப் பொருள்.