Friday, November 25, 2005

தனி மனித ஒழுக்கம்


ஒயுக்கம் வியுப்பம் தரலாம் ஒயுக்கம்
உயிரினும் *ம்பப் படும்


கொரளு போட்டு கொரலு வுடுறதுதான் இப்போ லேட்டஷ்ட் பேஷன்...

காட்சி - 1
மேலவுள்ளதைச் சொன்னது யாருலே?
அய்யா பல்லவனுங்க
(பலத்த அறை....ரப்.....காதில் ஞ்ஙௌய்ய்ய்)
கேனை... நம்ம மருத்துவ ஐயாடா
பஸ்ல போட்டிருந்தாய்ங்களா அதான் கொழம்பிட்டேன்
ஒயுக்கம்னா என்னா?
தெரிஞ்சா உங்கூட ஒட்டிட்டிருப்பேனா?
டேய் தண்ணியடிப்பியா?
ஹிஹி ஆமாங்க
தம்மு?
இல்லீங்க பீடி மட்டும்
பான்பராக்?
சீய்த்தூதூ... மாணிக்சந்த் மட்டுமே
கீப்பு வைப்பு?
கட்டுபடி ஆவாதூங்களே
சரி சரி அங்கன அப்பிடி இப்பிடி..
அடப்போங்க... பீடை கழிக்க வழி வேற என்னாங்க?
மாட்டிக்கினியா...சிக்கிக்கினியா
யென்னாபா சொல்றே?
நீ ஒயுக்கமில்லாதவன்...ஓடிப்போயிடு

காட்சி - 2

என்னாங்க அநியாயம் அக்குறும்பா இருக்கு?
எதச் சொல்ற?
பிரச்சினைன்னா பேசித்தீக்கோணும் அதவிட்டுப் போட்டு இப்பிடி மரத்த வெட்டி நடுரோட்டுலயா போடுவாணுங்க
ஏய் நாக்க அடக்கு. மரத்த வெட்டுனா நஷ்டம் அவனுக்கும்தான் புள்ளே
அட விடியா மூஞ்சி. ரோட்டோர மரத்த வெட்டுனா நட்டம் யாருக்குன்னு தெரியாத சிங்கமணியா நீ?
சரி வுடு புள்ள. தலையவா வெட்டினாங்க?
அப்ப தலைய வெட்டுனா நான் சரின்னா சொன்னேன்?
தலை வெட்டிக்கச்சின்னு அத்த தெளிவா சொல்லு புள்ள
தலையோ, மரமோ வெட்டினா தப்புதேன்
மரம் வெட்டினா இன்னோன்னு வைக்கலாம். பசுமை தாயகம் காணலாம். ஆனா தலைய வெட்டினா?
ஆஹா... இன்னாமா லாஜிக்கு பேசுற. மாமான்னா மாமாதான்.

காட்சி - 3

தல: சட்டசபை, பாராளுமன்றம், மேலவை, கீழவை, கார்ப்பொரேஷன், நகராட்சி ஏன் குடியாட்சியிலும் கூட எனது குடும்பத்தவர் வந்தால் "செப்பலால்" அடியுங்கள்

(பிகில் பறக்கின்றது)

பி.கு. பிற ஒயுக்கங்களைப் பற்றி விரிவாக படக்காட்சியுடன் தொடர உத்தேசம். மலினப்படுத்தும் முயற்சி என்று சிங்கமணிகள் முரசு கொட்டினாலும்...

ஸான் மியாகி


கராத்தே என்பது பரதநாட்டியம் போன்ற ஒரு கலை. புராதனமானது. விந்தையானது. ஒழுக்கத்தை கற்பிப்பது. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இக்கலையையும் குசும்பாய் திரையில் காட்டிப் புகழ் பெற்றவர் Noriyuki "Pat" Morita.

பிறருக்கு சிரிப்பூட்டும் கலையில் வல்லவராய்த் திகழ்பவர்களின் வாழ்க்கை எப்போதும் அவ்வளவு ரோஸியாக இருந்திருக்க முடியாது என்பதற்கு சார்லி சாப்ளினைக் கூறலாம். நமது மியாகி ஸானும் அதற்கு விதி விலக்கல்ல. இளம் வயதில் எலும்புருக்கி நோயால் அவதிப்பட்டு, இரண்டாம் உலகப்போரினில் "நம்பிக்கையற்றோர் பட்டியலில்" அமெரிக்காவால் வைக்கப்பட்டு என்று இவரது சோக சரித்திரம் நீளும்.

"ஒரு நாள் நானொரு முடம்; மறுநாளே கிட்டத்தட்ட தேசத்துரோகி", என்று கிண்டலாய் தன் இளம்பிராயத்து வாழ்வைக் குறிப்பிடுவார். The Karate Kid என்னும் படத்திற்காக துணை-நடிகர் ஆஸ்கர் விருதிற்காக பரிந்துரை செய்யப்பட்டவர். மேலும் விபரங்களுக்கு:

Mr. Morita I miss you!!!

Wednesday, November 23, 2005

ஸாரி Giving வாழ்த்துக்கள்

ஏழையின் ஸாரி
ஐயா என்னை மன்னிச்சுடுங்க
எலே என்ன தப்பு பண்ணிணவே?
தெரியாம நான் தப்பு ஏதாவது பண்ணியிருப்பேன்யா. அதுனால மன்னிச்சுடுங்க
நேத்திக்கு ஏத்துன டாஸ்மேக்கு சரக்கு எறங்கலியாக்கும்? வேற சோலி ஏதாச்சும் பாருலே
இல்லேய்யா நீங்க மன்னிச்சுட்டேன்ன்னு ஒரு வார்த்தை சொன்னாத்தான்...
என்ன எழவுலே சரி மன்னிச்சுட்டேன் ஒழி

புரொபஷனல் ஸாரி
டேய் என்னடா கண்ணை மூடி நடுநெத்தியிலே ஆள்காட்டி விரல வெச்சிட்டு...
ஸாரிடா. என்னை மன்னிச்சிடு
ரெண்டும் ஒண்ணுதானே. நீயென்ன நடிகர் சுந்தர்ராஜனா? எதுக்கு ஸாரி மன்னிப்பெல்லாம்?
எல்லாத்துக்குந்தான்
எந்த எல்லாத்துக்கு?
எல்லாருக்கும் சேத்துத்தான்
எங்கிட்ட சொல்லிட்டே. அப்ப மத்தவங்களுக்கு
அதுதான் டெலிபதி மெஸேஜில சொல்றேன்

அரசியல் ஸாரி
மக்களே என்னை மன்னிச்சிடுங்க
புச்சா ஏதாச்சும் நல்லது பண்ணீட்டியளா?
இல்ல மக்கா
அப்ப திருந்திட்டீயளோ?
யோவ் அதுவும் இல்லையா
பின்ன என்ன *யித்துக்கு ஸாரி?
அத இப்ப சொல்ல முடியாது ஸாரி

டீக்கடை ஸாரி
என்ன கெரகமடா இன்னிக்கு ஸாரி சொல்ற தினமாம்
அப்பிடீன்னா?
ஏம்ப்பா பொது அறிவே ஒனக்கு கெடையாதா?
இருந்தா உங்கிட்ட போயி கேப்பேனா?
என்ன நிக்கலா? அறிஞ்சும் அறியாமலும், தெரிஞ்சும் தெரியாமலும் பண்ணின தப்புக்கெல்லாம்...
ஸாரி
அடடே கற்பூர புத்திடா ஒனக்கு
ஆனா உனக்கெப்படி வாசனை தெரிஞ்சது? ஹிஹி ஸாரி

வீட்டு ஸாரி
என்னங்க ஸாரிங்க
அடிப்பாவி தீபாவளிக்குத்தான் ரெண்டா வாங்கினியே
அதில்லைங்க இது வேற ஸாரி
சந்திரமுகியா இல்ல வேற மாடலா?
அதில்லன்னு சொல்றேன்ல
ஏண்டி உசுரை வாங்குற. புரியிற மாதிரி சொல்லித் தொலை
அதான் ஸாரி சொல்லிட்டேன்ல. அப்புறம் ஏன் கத்துறீங்க?
ஸாரி சொன்னியா. நான் ஸாரி கேட்டதால்ல நினைச்சேன். ஸாரி.

பி.கு. என்ன நீங்களும் ஸாரி கேட்டாச்சா? இல்லாவிடில் இன்றே கேளுங்கள். இப்பதிவின் பின்னூட்டத்தில் ஸாரி கேட்டு உங்கள் ஸாரிப் பற்றை நிரூபியுங்கள். மேலும் ஆன்லைனில் ஸாரி கேட்க முகவரி: http://tamilkushboo.com. மின்னஞ்சலிலும் தள நிர்வாகிகளுக்கு அனுப்பலாம். பிரசுரத்திற்கேற்ற ஸாரிகளே பிரசுரிக்கப்படும். ஸாரி

Monday, November 21, 2005

ராஜபார்ட் சித்தன்

1. சுபயோக தினமில்லாத தூஷிக்கப்படும் நேரத்தில் ஆந்தையும், கூகையும் அலறும் ஓமன்களோடு ஏறக்குறைய ஷாக் படம் போல் பேதியுடன் ஓப்பனிங் ஷாட் வைத்தது புதுமை. எகிப்திய மம்மி போல் துணி சுற்றிய உருவம் சுற்றி சுற்றி வருகின்றது. எத்தனை வயதானாலும் கேரளா மூலிகை வைத்தியத்தையும், மேக்கப் பெட்டியையும் நம்பியே காலத்தை ஓட்டும் மூத்த கதாநாயகர்கள் மத்தியில் இப்படி ஒரு ஹீரோவை ஜீரோவாக அறிமுகப்படுத்துவது நவீன குயுக்தி.
2. அவார்டு படம் போல அவசரகதியில் ஆரம்ப காட்சிகள் நாயகன் ஆட்டைக்குப் புதிது என்று சொல்லாமல் சொதப்புகின்றன. ஒரு படத்தில் சூப்புற ஸ்டார்தான் நான்; சூப்பர் ஸ்டாரில்லை என்று கூறும் போது குழந்தைத்தனம் தான் கும்மாளம் போட்டு வெளிவருகின்றது.
3. வாலிப வயதிலும் நாயகன் ஜாலியாக கோலி விளையாடுவது, கிசு-கிசு தாம்பாளம் செய்வது, கல்லாங் கல்லாங் குஸ்திபாய் போடுவது என்று முன்பாதி எப்படியோ ஒப்பேற்றி நகர்கின்றது. விளையாட்டு அவ்வப்போது வினையாகும் போது ஜகா, ஜூட் என்று அனைத்தும் வாங்கும்போது இயக்குநர் ஹீரோவாகவும், நாயகன் வில்லனாகவும் ஆள்மாறி ஆட்டங் காட்டுகின்றார்கள்.
4. ஆள்மாறாட்ட படங்காட்டுதல் அரதப்பழசு ஸ்வாமி என்றபடி ஊர்ப்பெருசு குறுக்கிட கதை சூடு பிடிக்கின்றது. இயக்குநரும், நாயகனும் ஒருவனே என்பதை "அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும்", என்ற பாடல் அசத்தலாய் சொல்கின்றது. விளையாட்டுத்தனமான நாயகனுக்கு எதிரிகள் இல்லைதான். ஆனால் இயக்குநருக்கு அப்படியா? இவ்வளவு நாளா மாய்மாலமா பண்றே என்று கும்பல் காத்திருப்பதை காட்டும்போது ஒரு மர்ம முடிச்சு விழுகின்றது.
5. மர்ம முடிச்சு அவிழ்ந்ததா? நாயகன் குழுமமாக கும்மப்பட்டாரா? மம்மி உடையில் அலையும் மர்ம உருவம் "குயிலைப் புடிச்சு கூண்டிலடிச்சு அடை காக்கச் சொல்லுகின்ற உலகம், மயிலைப் புடிச்சி பிரியாணி வெச்சி ஆடச் சொல்லுகின்ற உலகம்" என்ற கிளைமாக்ஸ் காட்சி விவரிக்கும். இதோ படம் பாத்து வெளிவந்த மகாஜனங்களின் விமர்ஜனங்களை பார்ப்போமா?
ஜனம்1: படம் ப்ளாப்புங்க. எத்தினி நாளிக்குதான் சரக்கில்லாம ஓட்டுவாய்ங்க? ஆட்டம் அப்பீட்டுங்க.
ஜனம்2: இன்னாருக்கு இன்னா செய்தாரை என்னா செய்யலாம்னு பல்லவன் பஸ்லே சொல்லியிருக்காங்க. இந்தப்படம் பீஸ் புடுங்கின பல்பு சார்.
ஜனமி3: படமா இது? ச்சீத்த்துஊஊ...(காமிராக்காரர் அவசரமாக முகத்தைத் துடைத்துக் கொள்கின்றார்)
ஜனம்4: யோவ் ஈசலு மாதிரி ஒரு நாளு இந்தப் படம் ஓடினா பெர்சு. வோணுமின்னா நம்ம பக்கத்து தியேட்டரிண்டை வா. எவர்கிரீன் படம் காட்டுறன்.
ஜனம்5: எப்பிடி இருந்த ஆளு நீ? இப்பிடி ராசா வின்னர் கைப்பிள்ளையாய் குத்து வாங்கிட்டீயேப்பா...
ஜனம்6: லெப்டு குத்து ரைட்டு குத்து ஈஸ்ட்டு குத்து பேக்டீரியா குத்து பாட்டு சூப்பர் ஸார்
ஜனம்7: பாதி ஸ்டோரி புரியில மாமு. இதுக்காக இன்னொரு தபா பாக்கலாம்
ஜனம்8: ஒண்ணுமே புரியல. குழப்பமா இருக்கு. நீங்களாவது கதை சொல்லுங்களேன். (கிசுகிசுகிசு) ஆஹா இப்ப புரிஞ்சு போச்சு. ஆனா நான் என்ன பண்ணனும்? யாராவது சொல்லுங்களேன்...
ஜனம்9: டேய் படமா இது? அக்கம்பக்களிண்டை பாத்தாவது படம் எடுங்கடா. பேசாம வெங்காய ஜித்தன்ன்னு பேர வெச்சிருக்கலாம்.
ஜனம்10: கர்புர்கர்புர்கர்புர்கர்புர்

டெக்னிகல் பிராப்ளத்தால் கேட்க முடியவில்லை நேயர்களே!!! மொத்தத்தில்
ராஜபார்ட் சித்தன். பிளாட்பார பித்தன். கூஜாவின்றி!!!

Petty பூர்ஷ்வா


1. திறக்காத பெட்டியை திறந்துதான் வெச்சியே ராசாவே ராசா என் ராசா என்று நாயகி பாட, முறுக்காத நரம்பெல்லாம் முறுக்கித்தான் விட்டியே ரோஸாவே ரோஸா என் ரோஸா என்று நாயகன் எசைபாட்டுப் பாட, படம் தொடங்குவது கலக்கல்.
2. பூர்ஷ்வாவின் படங்கள் என்றாலே சத்தியராஜ் போல ஒரு லொள்ளு எதிர்பார்ப்பு இருக்கும். அவரும் அதற்கு குறை வைக்காமல் இருப்பது மனதிற்கு பெருத்த ஆறுதல். மேலும் முருங்கைக்காய் புகழ் பாக்கியராஜ் போல பல பஞ்ச் வார்த்தைகளில் கலக்கும் பூர்ஷ்வா ஷ்டைல் இங்கேயும் தொடர்கின்றது.
3. ஸ்வீட் என்ற வார்த்தையை இவர் வாரியதைப் பார்க்கும் பொழுது, இண்டெர்வலில் யாரும் கடலை மிட்டாய் கூட சாப்பிடுவார்களா என்பதே கேள்விக்குறியாக இருக்கின்றது. சிறிதே தெலுங்கு வாடை அடித்தாலும் நாட்டுக்கட்டையில் "எங்கம்மா" என்று இவர் எதிராளிகளைப் பார்த்து சவுண்ட் விடும் காட்சிகளில், பின்னணியில் விரியும் இசை உள்ளத்தைக் கொள்ளை கொல்கின்றது.
4. இருப்பினும் சென்ஸாரில் வெட்டப்பட்ட வார்த்தைகளை மௌனமாக்காமல் ஆங்கில டெலிவிஷன் காமெடி சீரியல்களைப் போல "பீப்" என்று ஒலி கொடுப்பதுதான் கொடுமை. படமெங்கும் "பீப்" ஒலியே நிறைந்திருப்பதால் இசையமைப்பாளருக்கு பீப் பட்டனை அமுக்குவதை விட பெரிய வேலையெதுவும் இல்லை. நாயகனே எனக்குப் பிடித்தது "பீப்" என்று குரல் கொடுப்பது இரட்டை அர்த்தத்திலா இல்லை தனது வார்த்தையைத் தானே சென்சார் செய்து கொள்கின்றாரா என்ற சந்தேகம் எழுவதையும் தவிர்க்க முடிவதில்லை.
5. மல்டி-டாஸ்க்கிங்'ல் கிங்கான பூர்ஷ்வா அடிக்கடி "இன்னைக்கு என் எதிர்ப்பை பதிவு செய்து, இன்னொரு நாள் விரிவாக சொல்கின்றேன்", என்று நழுவுவது சூப்பர் காமெடி. ஒரு தேர்ந்த அரசியல்வாதியின் நாசூக்கு இவரிடமிருந்தாலும் தேவையின்றி பேசும் வசனங்களால் சராசரியாகிப் போகின்றார்.
6. அதிரடி அறிக்கையின் அவதாரமான நம் நாயகன் இப்படத்திலும் பல அரைகுறைகூவல்கள் விடுகின்றார். இருப்பினும் "பீப்" சப்தத்தில் அவை அனைத்தும் அமுங்கிப் போவதுதான் அந்தோ பரிதாபம். கிளைமாக்ஸில் கவசகுண்டலத்தை யாசிக்க வந்த கண்ணனைப் பார்த்து கர்ணன் கூறும் முகமாக, பலரிடம், அவர்களே உதவி கேட்காவிடினும், "இப்போது உங்களுக்கு என்னால் சப்போர்ட் மட்டுமே தர முடியும்", என்று மார(ட)ல் கண்ணீர் சிந்துவது வலிந்து திணிக்கப்பட்ட செயற்கைத்தனம்.
7. இவர் கச்சை கட்டி களமிறங்கிய பின், சப்போர்ட் செய்த பலரும் கலர் மாறும் போது கம்மென்று இருக்கும் காரணம் யாது? இது இயக்குநருக்கே தெரிந்த ரகஸியம். ஆனால் படத்தில் இவர் புலியோடு போடும் கிளாடியேட்டர் சண்டை ப்ரம்ம்மாதம்.
8. பொறி பறக்கும் வசனங்களை அள்ளித் தெளித்தும், எதிரே இருப்பவரை எப்பவும் கேனையாகவே சித்தரிப்பதும், பேசினால் கத்தரிப்பதும் போன்ற ட்ரேட்மார்க் காட்சிகளில்லாவிட்டால் பூர்ஷ்வா வெறும் 'புஸ்வா' என்பது ஓப்பன் சீக்ரெட்.
9. (இங்கே உங்களுக்குப் பிடித்ததை போட்டுக்கொள்ளலாம்) பீபீபீப்ப்ப்ப்ப்ப்ப்
10. Petty பூர்ஷ்வா - பெட்டிப்பாம்பு - பல்லிருந்தும்

Sunday, November 20, 2005

பெரியவன்

1. உலக சரித்திரத்தில் முதன் முறையாக எவரும் சூல் கொள்ளலாமென்ற Sci-Fi கருத்தோடு களம் புகுகின்றார் இயக்குநர்.
2. அநீதியினைக் கண்டு பொங்கியெழும் வழக்கமான ஹீரோ ரோலென்றாலும், அதை முற்றிலும் வித்தியாசமாய் செய்திருக்கின்றார் பெரியவன். முழுக்க முழுக்க திராவிடக் கருத்துகளை உள்வாங்கியதாய் நடிக்கும் நாயகன், அரிதாக ஓவராக்டிங் செய்த செவாலியரை நினைவுபடுத்துகின்றார்.
3. தனியாக பத்துபேரையடிக்கும் சராசரி நாயகனைப் போலன்றி, டூப்பின்றி பாதுகாப்பாக குழுமமாக கும்மும் ப்ராக்டிகல் செயல்பாட்டை நமக்கு அறிமுகம் செய்ததற்கு சலாம்.
4. இருப்பினும் என் வழி தனி வழியென்று அவ்வப்போது ஸ்டேட்மெண்ட் விடுவது காமெடிக்காக இணைக்கப்பட்ட பஞ்ச் டயலாக்கானாலும், பஞ்சராகிய ட்யூப் போல் தேவையில்லாத இடைச் செருகல்.
5. எதைச் செய்தாலும் சொந்தமாக சொதப்புவேன் என்று கர்ஜித்து விட்டு, பிற பெயர்களில் போஸ்டர் ஒட்டுவதுதான் ஏனென்று புரியவில்லை. படத்தின் உப-பாத்திரமாக உலா வரும் சிங்கை ப்ரோவான மலரவன் கூற்று ஒருவேளை உண்மையாயிருக்குமோ? பெரியவன் தேவையில்லாததை மலரவ ப்ரோக்களிடமிருந்து கற்றுக் கொண்டு விட்டாரோ? இதுபோன்ற சகவாச சங்கடங்களின் கூறுகளை ஆணித்தரமாக அலசுகின்றார் பெரியவன்.
6. வெளியே தெரியவா போகின்றதென்று வேறிடத்தில், மாற்று பெயரில் போஸ்டர் ஒட்டும்போது அறியாமல் கைரேகை விட்டு விடுகின்றார் பெரியவன். வேறிடமோ நியாயஸ்தன் பட ஹீரோவுக்கு சொந்தமான காரணத்தால் சார்லி சாப்ளின் போல கனத்த மௌனம். இப்படத்தில் வரும் சும்பன் என்னும் காமெடியன் இதை சரியாக மோப்பம் பிடிக்கின்றான். இருப்பினும் பாப்பராஸி என்ற ஹாலிவுட் பட உளவு அதிகாரி போல் விட்டுப் பிடிக்கின்றான்.
7. ... பீ... என்று சும்பன் சுள்ளானாய்க் கத்தியபடி, அங்கதமாய்க் கீ...பேடில் தட்ட, பெரியவனின் ஆபீஸ் சூட் நம்பரே பப்பரப்பேன் என்று பல்லிளிப்பதாய் கம்ப்யூட்டர் ஸ்கீரினில் இயக்குநர் காட்டுவது நச். காலைப் பிடித்தது என்ன? வெந்நீர் ஊற்றியது என்ன? வேடமணிந்தது என்ன? காலைப் பிடித்தது என்ன என்ன?... என்ற எண்ண எண்ண பேக்கிரௌண்ட் பாடல் பலே ஜோர்.
8. இனியாவது பெரியவன் கும்பல் மனப்பான்மையை கைவிட்டு, சுயமாய் சுயம்புவாய் வெளிப்படுவாரா? இல்லை கைத்தொழிலை மறந்து "கக்கு"வான் இருமலென்று கதறி, அங்கீகார அரிப்பிலேயே சுகம் காணப் போகின்றாரா என்பதே படம் முடித்து வெளிவரும் ரசிகர்களின் கேள்வி.
9. பெரியவன் படத்திலும், டெக்னீஷியன்களே அவரை விட சொதப்பிவிடுபவர்கள் என்பதை அவர் உணரவேண்டும். இல்லாவிடில் தான் நம்பும் கரமே பு(உ)தைகுழி தோண்டுவதை படத்தில் காமெடியாக ரசிக்கப்பட்டாலும் அதுவே பெரியவனுக்கு டிராஜடி. தேவையின்றி வாழையிலை பிடித்து இட்லிவடை சாப்பிடும் பெரியவனின் மனோநிலை மேலும் குழப்புகின்றது.
10. பெரியவன். சிறுபிள்ளை. இந்திரஜித் பெயரிலும்.

பூனைப் பெண்

1. நாணயத்திற்கு இரு பக்கம் போல தனது நாணயத்திலும் இரு பக்கமுண்டு என்ற கறுப்பு உண்மையை இயக்குநர் இப்படத்தின் மூலம் விளக்குகின்றார்.
2. சமூக நீதிக்காக உண்மையிலேயே பாடுபடுவர் படத்தின் நாயகி. உறுதியுள்ளம் படைத்தவராக அவரைக் காணும் போது இன்றைய இள உள்ளங்கள் இவரிடம் கற்றுத் தெளிய நிறையவுண்டு என்பது வெள்ளிடை மலை.
3. அடித்தட்டிலிருந்து போராடி பல துறைகளிலும் பேசும்படி சாதித்து சமூகத்தில் நல்ல நிலைக்கு உயர்கின்றாள் நாயகி. உயர வேண்டுமென்றால் போராட வேண்டும் என்ற கொள்கையை வித்திட்டதற்காக இயக்குநருக்கு ஒரு ராயல் சல்யூட்.
4. தான் நினைத்ததை தவறென்று பிறர் கருதினாலும், தயங்காமல் எடுத்துக் கூறும் நாயகியின் ஸ்பெஷாலிட்டிக்கு ஒரு ஷொட்டு.
5. இருப்பினும் இதே கொள்கையை அவர் செலக்டிவ்வாக பயன்படுத்துகின்றாரோ என்று ஒரு சிறு ஐயம் ஏற்பட வைப்பதுதான் படத்தின் லாஜிக்கையே உதைக்கின்றது. உதாரணமாக உள்வீட்டுப் பிரச்சினை ஒன்று வரும் போது உறைக்கும்படி உரைக்காமல், தனக்கே உடன்பாடு உண்டா என்று தெரியாமல், "உன் வீடு என் வீடு யுனிவீடு தனிவீடு" என்று
பொத்தாம்பொதுவாக ஜல்லியடிக்கின்றார். இது கதாபாத்திரத்தின் போக்கையே சிறிதேனும் மாற்றி விடுகின்றதெனலாம்.
6. உலகினுக்கே உரை நிகழ்த்தும் அம்மணி உள்வீட்டு நிலவரம் பற்றி முற்றிலும் அறிந்து வைத்திருக்கின்றாரா? சொந்த ஆசாரங்களை வாழ்க்கையில் கைவிடாமல், பொதுவில் புது பிம்பம் கட்டுமானம் செய்வது எதனால்? ஆமாம் அனைவரும் அதைத்தானேயப்பா செய்கின்றோம் என்ற மெசேஜை அழுத்தம் திருத்தமாக நாயகி நமக்கு உணர்த்துவது ஒரு நல்ல பாடம் .
7. தீவிரவாதி ஒருவனைக் கண்டவுடன் நாயகி மனம் கலங்குவதுதற்கு ஒரு சொட்டு கண்ணீர்.
8. தென்னை மரத்தில் தேள் கொட்ட, பனை மரத்தில் நெறி கட்ட, நாம் கண்ணீர் வடித்தோமே தோழி என்ற பாட்டிற்கு தேசமே அழப்போவது உறுதி.
9. கோளாக மாறி உலகையே வலம் வர வேண்டிய இந்த வெள்ளி, நூலறுந்த பட்டம் போல் இலக்கு மறந்து அவ்வப்போது அடித்துச் செல்லப்படுவதுதான் காலத்தின் கட்டாயமா? இல்லை அரிதாரத்தின் அவல நிலையா?
10. பூனைப்பெண். யானை. மதில் மேல்!!!

செஞ்சோற்றுக்கடன்

1. முழுக்க முழுக்க செந்தமிழ்ச் சித்திரம்தான் செஞ்சோற்றுக்கடன்.
2.
வாழிய செந்தமிழ்
வாழிய நற்றமிழர்
வாழிய பாரத தனித்தமிழ்நாடு

என்ற தேய்ந்த கோஷம் தனித்தொலிக்க, பாரதியும் ஒரு பார்ப்பன திராவிடன்தான் என்பதை எடுத்தியம்பும் வகையில் படம் ஆரம்பிக்கின்றது.
3. காமெடிக்கு இரட்டையர் என்பது கோலிவுட் கலாச்சாரம். இப்படத்தில் கவுண்டமணி-செந்தில் இல்லாத குறையை மணி-வடிவேல் நிவர்த்தி செய்கின்றனர்.
4. 1992 கதையாடல் கேட்கும்போது பழைய புராணம் என்று கிண்டலடித்து விட்டு, அரதப் பழசான மனுப் பஞ்சாங்கத்தை கையில் தூக்கி வைத்து குத்தாட்டம் போடுவது இயல்பான காமடி.
5. தன் வீட்டில் நடக்கும் அநியாயங்களைக் கண்டும் காணாமல் போகும் இவர்கள், சமூக அவலங்களைக் கண்டதும் இரட்டைகுழல் துப்பாக்கியாய் வெடிப்பதுதான் ஏனென்று படம் முழுவதும் விளங்கேல்லை.
6. "கத்திரிக்காய் பிஞ்சு கத்திரிக்காய்" என்ற பாடலில் இருவரும் கவிச்சிக்கறியோடு கூட்டாஞ்சோறு சாப்பிடும் காட்சி உள்ளத்தைத் தொடுகின்றது.
7. ஜெய என்னும் prefix கேட்டவுடன் ஹிஸ்டீரியா பீடித்தது போல "ஏய்" பட சரத்குமார் ரேஞ்சுக்கு ஏன் கிறீச்சிடுகின்றார்கள்? சத்யமேவ ஜெயதே என்பதில் கூட ஜெய'வை எடுக்க வேண்டுமென்று ஏன் விருப்பப்படுகின்றார்கள் போன்ற கேள்விகளுக்கு படத்தில் விடைகளில்லை.
8. வீரபாண்டிய கட்டபொம்மன் போல் விலா வாரியாக வீரவசனங்களை மணி நீட்டி முழக்கும் போது வெலா வெடிக்கும் அளவிற்கு ஆடியன்ஸ் சிரிக்கப்போவது கியாரண்டி.
9. குறைந்த பட்ஜெட், நிறைந்த காமெடி என்ற இந்த இணைய இரட்டையர் படம் நீண்ட நாட்கள் இண்டஸ்ட்ரீயில் பேசப்படும்.
10. செஞ்சோற்றுக்கடன். கழிந்துவிட்டது. வாயுத்தொல்லையால்!!!

Saturday, November 19, 2005

Dr. ஈரப்பாய்


1. காலத்தால் அழியாத லலிதா ஜூவல்லர்ஸின் தங்க ஆபரணங்களைப் போல், அழியாப் புகழ் பெற்ற ஜேம்ஸ் பாண்ட் நடித்த படம் Dr. ஈரப்பாய். "எங்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா", என்ற தீம் மியூசிக்குடன் படம் ஆரம்பிக்கின்றது.

2. நிலைக்குத் தக்கவாறு நிலைபாட்டை மாற்றிக் கொள்ளும் கலையில் வல்லவரான ஜேம்ஸ், இப்படத்திலும் உளவு வேலை பார்ப்பவராக உலா வருகின்றார். ஒற்றனுக்கு தகுந்தவாறு பல மாறுவேடங்களிலும் அவர் வருவதைப் பார்க்கும் போது மகாநடிகனின் வாடை பலமாக அடிக்கின்றது.

3. பல இடங்களில் தனது நாயக அந்தஸ்துக்கு மிகவும் பொருத்தமானபடி டர் பட ஷாரூக்கான் போல பலரையும் கிலி கொள்ளச் செய்கின்றார். ஒரு தேர்ந்த சர்க்கஸ் மாஸ்டரைப் போல் அவர் படத்தில் புலிகளைக் கையாள்வதும், பின்னர் அதற்கும் தனக்கும் எவ்வித தொடர்புமில்லை என்று பல்டியடிப்பதும் நல்ல பகிடி.

4. இப்படத்தில் போட்டியாக வருபவரும் ஒரு டாக்டரே. குணசித்திர வேடத்தில் வரும் Dr. பரமுவடிவேல Van Damme' பல இடங்களில் நாயகனை பின்னுக்குத் தள்ளி விடுகின்றார் என்பதே திகட்டாத உண்மை. ஜேம்ஸின் பிளவாளுமை எனப்படும் MPS பிரச்சினையை அழகாக பார்ப்பவர் கண்களுக்கு முன் பளிச்சென்று எடுத்துக் காட்டுகின்றார்.

5. இருப்பினும் பலருக்குத் தெரிந்த உண்மையை மீண்டும் மீண்டும் இவர் நிரூபணம் செய்ய முயற்சிக்கும் போது லேசான எரிச்சல் மூள்வதைக் கட்டுப்படுத்த முடிவதில்லை.

6. ஓரொண்ணு ஒண்ணு என்று வடிவேலர் பாட, கண்ணுனக்கு ரெண்டு என்று நாயகன் பிளவாளுமையை வெளிப்படுத்த, பரவை கறுப்பியம்மாவோ போடா என் பிழைக்கத்தெரிஞ்ச பதரு என்று ஜேம்ஸுக்கே டோஸ் விடுகின்றார்.

7. பஞ்ச் டயலாக்குகளுக்கு படத்தில் பஞ்சமேயில்லை. போட்டி டாக்டர், நாயகனின் பல அவதாரங்களைக் கண்டு வெறுப்புறவே, அவங்களிடை சண்டை மூள்கின்றது. தோற்றுப் போகும் நாயகனைப் பார்த்து இரக்கமுடன் "இன்று போய் ஈரப்பாயில் தேய்த்து, நாளை எழுந்திருந்தால் திரும்ப வா" என்று கூறுவதுதான் கிளைமாக்ஸ். தியேட்டரே விசில் சப்தத்தால் அதிரப்போவது நிச்சயம்.

8. பீட்டர் ஹேய்ன்ஸ் பல ஹாலிவுட் படங்களின் ஸ்டண்டுகளை மனதில் நிறுத்தி சண்டைக்காட்சிகளை வடிவமைத்ததற்கு ஒரு சபாஷ். ரண்டக்க பிராண்டிக்க என்று தொடங்கும் பாடலில் "உன்னைப் பனை மரத்தின் நெறியைப் போல மறைச்சேன்" என்னும் வரிகள் சுகம்.

9. நாயகனின் படங்கள் அதி பிரும்மாண்டமாய், காண்போரை கலக்குமுற செய்வதாய் தெரிந்தாலும், உள்ளேயிருப்பது உச்சபட்ச Hi-Fi அபத்த காட்சிகளென்பதை இப்படம் மீண்டும் நிரூபிக்கின்றது.

10. Dr. ஈரப்பாய் நனைத்து விட்டார். மீண்டும்.

பி.கு. நமது நாயகர் அடுத்த பிளவாளுமையை அதற்குள் எடுத்து விட்டதாய் ரகஸிய செய்தி. இதோ அடு(டி)த்த வடிவம் ;-)


'The நியாயஸ்தன்'

படத்த பாத்துப்புட்டா ஜூடா விமர்சனம் தரலேன்னா எப்டிங்கோ? இதோ கோட், சூட் போட்டு சண் டிவி பாணியில் திரை விமர்சனம்:

1. வெகு சமீபத்தில் 1921'ல் சார்லி சாப்ளின் நடித்து வெளிவந்த படம் 'The நியாயஸ்தன்'. தமிழுக்காக போராடுவர் அப்போது இல்லாத காரணத்தால் எந்தப் பிக்கல் பிடுங்கலுமின்றி இப்படம் வெளியானது.

2. வழக்கம் போல் காசிலியாக வரும் சார்லி தனது சொந்த செலவில் ஒரு தண்ணீர்ப் பந்தல் வைக்கின்றார். வருவோர் போவோர் அனைவரும் தாகசாந்தி செய்து வாழ்த்தி விட்டுப் போகின்றனர். சார்லியும் மகிழ்கின்றார். ஆனால் மகிழ்ச்சி நிலைத்ததா?

3. ஒருநாள் நள்ளிரவில் சிலருக்கு மட்டும் தண்ணீர் மறுக்கப்பட, சிறு கலவரம் மூழ்கின்றது. மௌனப்படம் ஆதலால் சார்லி வாய் திறக்கவில்லையா? இல்லை வாய் திறந்தும் நமக்குத்தான் கேட்கவில்லையா? என்ன காரணமென்று புரியாமல் வாசகர்கள் நியூஜிலாந்து வரை தலையைப் பிய்த்துக் கொள்கின்றார்கள்.

4. அப்போது நுகர்வோரில் ஒருவர் எனக்கும் தண்ணீர் வேண்டாம் எனக் கூற, அதற்கும் வழக்கம் போல நரசிம்ம ராவாக வாய்மூடி மௌனியாய் சார்லி.

5. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டமாம். அதுவும் இப்படத்தில் கழைக்கூத்தாடிகளுக்கு பஞ்சமேயில்லை. பேக்கிரௌண்டில் சிண்டு முடியும் வேலையும் சிறப்பாக நடந்தேறுகின்றது.

6. பாதிக்கப்படாமலும் குரல் கொடுத்தவர் நிலைமை மரத்தடி வரை நாறடிக்கப்படுகின்றது. அய்யா என் பெயரில் போலிக் குரல் கொடுக்கும் அந்த முறை கெட்ட சீனை எடுத்து விடுங்கள் என்று அவர் கூப்பாடு போட்டாலும், சார்லியின் கவனத்துக்கு மட்டும் அது வருவேனா என்று அடம் பிடிக்கின்றது.

7. கடைசியில் விஷயஞானி ஒருவர் தண்ணீர்ப் பந்தல் உனதானாலும் முறை கெட்ட சீன்கள் வந்தால் அதற்கு நீதான் பொறுப்பாவாய் என்று எச்சரிக்கை கொடுக்கின்றார். எதற்கும் கலங்காத சார்லி அத்தகைய சீன்களை களை எடுத்து பொதுவிலும் சொல்கின்றார்.

8. நகைச்சுவைப்படம் என்று செல்பவர்க்கு இப்படத்தின் மூலம் சீரியஸ் காமெடியை விருந்து படைக்கின்றார் சார்லி.

9. உலக அளவில் பேசப்படும் இப்படத்திற்கு ஓஸ்கர் கிடைக்கலாமென்றும் எதிர்பார்ப்பு நிலவுகின்றது.

10. 'The நியாயஸ்தன்' பிழைத்துக் கொள்வான். தக்கியாவது.

பி.கு. பட விமர்சனங்கள் தொடரும்...

Tuesday, November 15, 2005

விட்டு விடுதலையாவோம்

சுதந்திரமென்பது அவரவர் கண்ணோட்டத்திலென்று பெரியவா இணையத்துல ஷொன்ன அருள்வாக்கு. வாஸ்தவந்தான். ரெயிலுல முன்பதிவு செஞ்சவனுக்கு ஒரே ஒரு பெர்த் சொதந்திரம். பதிவே செய்யாதவனுக்கு வோணுங்ற ரயிலேறும் சொதந்திரம்.

சொதந்திர சொகத்தோட இருக்கோமின்னு நெனச்சிருந்தா ஒரு புத்தனோ ஏன் நம்மூரு சித்தன் கூட ஒலகுக்கு கெடச்சிருக்க மாட்டான்பா. அல்லாருக்கும் வாய்க்கையில ஒரு (கேடுகெட்ட) காலகட்டத்துல கேள்வி வரும். இன்னா பாஸு லைபு இம்ம்புட்டுதானான்னு... அப்ப சில பேருக்கு சுத்தமா புட்டுக்கிட்டு போயிடும். இன்னா கருமமான கேள்வி இதுன்னு, கெடச்சுதுலேயே உசந்த சரக்கா உள்ளே இறக்கிப்புட்டு "பழைய குருடி கதவ தொறடி'ன்னு கெடந்த இடத்துலேயே வாழ்க்கை உழல ஆரம்பிக்கும். செக்குமாடோ, கெணத்துத் தவளையோ, குண்டுச்சட்டி குதிரையோ மனுசப்பயலுவோல்ல பலரும் இப்பிடித்தானே கண்ணு காலத்தைக் கழிக்கிறோம்... இன்னும் சில பேரு கத வேற. அட இப்பவாவது வெளங்கிச்சே... கண்ணை மூடிக்கினே வாழ்வைத் தொலைச்சிப்புட்டோமேன்னு சுள்ளுன்னு உறைக்கும். செலந்தின்னா வல பின்னித்தான் வாழோணுமா? வலையைக் கிழிச்சிப்போட்டு வெளியே போனா ஒலகம் ஒத்துக்காதா? விஷப்பரீச்சதான். ஆனா செலந்தியோட முடிவு அதுக்கு மட்டுமா வெசப்பரீச்ச?

ஆஹா கொஞ்ச நாளா ஆளக் காணோம். வந்து வெயாக்கினாம் பண்றானேன்னு கோவிக்காதீங்க. இது வெந்த மனத்தின் வேதாந்தமல்ல...

நம்ம ஜப்பான் இளவரசி சயாகோ, "கல்யாணந்தான் கட்டிக்கினு ஓடிப் போலாமா"ன்னு திரிஷா மாமி போல பாட ஆரம்பிக்க, அவங்களோட ராஜகுடும்ப விதிகள் "கல்யாணந்தான் கட்டிகினு ஓடியே போயிடு"ன்னு முடிச்சிருச்சி. ஏன்னா சாதாரண குடிமகன் ஒருத்தர கண்ணாலம் கட்ட ஆசைப்பட்டாங்கோ... ராசா பரம்பரையில கட்டினா கட்டு; இல்லேன்னா அரண்மனை வாழ்வு CUT'ன்னு சொல்லிட்டாங்க. சயாகோ கலங்காம நேத்திக்கு கண்ணாலம் முடிச்சு பேலஸுக்கு பெப்பே சொல்லிட்டு கெளம்பிட்டாங்க. இப்போ சொந்தமா காரு ஓட்ட கத்துக்கினு, கடத்தெருவுக்கு ஷாப்பிங் போயின்னு சாதாரண 'குடி'மகளாய் வாழப்போறாங்களாம்.

ஙௌக்காமக்கா..."குடி உயர கோன் உயர்வான்"ன்னு எங்க தமிழ்ப்பாட்டி என்னிக்கோ சொன்னாங்க... சயாகோ விட்டு விடுதலையானதற்கு வாழ்த்துக்கள்.

சயாகோ மாமி (ராணிதான் இல்லே மாமின்னாவது சொல்வோமே :-)



Friday, November 04, 2005

கூகிள் குசும்பு

அடப் பாவிங்களா... இதுக்கு ஒரு முடிவே கிடையாதா?

Miserable Failure அப்பிடின்னு கூகிள்ல தேடச் சொல்லி பிரண்டு சொன்னாருப்பா... ஏதோ ஸீரியஸ் மேட்டருன்னு தேடினா மொதோ பேரா நம்ம புஷ்ஷய்யா... நீங்களும் கிளிக்குங்கள்... :-)

இதுதாண்டா திண்ணை

வலைப்பூ ஆரம்பித்து ஏறத்தாழ 17 மாதங்கள் முடிந்து விட்டன. கடந்த சில நாட்களாக ராத்தூங்க முடியலப்பா... அச்சுலகம் வேறு வாவாவா'ங்கிறது. பல தாளிகைகள் "வா ராசா பலரை தாளிக்கலாம்", என்று கூப்பாடு போடுகின்றன. இதில் எக்ஸ்குளூசிவ் செவ்வி கேட்டு பிரபல டிவி நிறுவனம் வேறு பீச்சே படுகயா (யோவ் பின்னாடியே தொரத்துதுன்னு சொல்றேன்). மேலும் பல வலைத்தளங்கள் .... ஓவர்நைட்டுல பேமஸானாலே இப்பிடி சிலபல ப்ராப்ளம்ஸ் வரத்தானே செய்யும் :-) (வேண்டாம் குசும்பா விட்டுடு'ன்னு யாரோ கதறுவது கேட்கின்றது)

விஷயம் ஒண்ணுமில்லைங்கோ... ஏதோ நான்பாட்டுக்கு கிறுக்கி ரெண்டு பதிவுகளை திண்ணைக்கு அனுப்பி வைச்சா, ப்ளுக்கா அதை பப்ளிஷ் வேறு பண்ணிட்டாங்கோ. இன்னிக்கு காலேலதான் பாத்தேன். இதோ அப்பதிவுகளின் சுட்டிகள்:

வெள்ளமும் நிவாரணமும்
புஷ்ஷாரே இணையகுசும்பனின் இலவச சேவை

பதிவுகளை வெளியிட்ட திண்ணைக்கு நன்றிகள் !!!

மேலும் புஷ்ஷைப் பற்றி அறியத்தந்த நண்பர் துணை ஜனாதிபதி டிக் சேனிக்கும், உள்குத்து அரசியலை எனக்கு வெளிச்சம் போட்ட ஸ்கூட்டர் லிபிக்கும், இன்னபிற இணையத்தளங்களுக்கும், ஊக்கம் கொடுத்த உண்மையானவர்களுக்கும், சப்பை மேட்டர் கூட எழுதத்தெரியாததாய் குறை கூறிய முகமிலிக்கும் திண்ணைப் பதிவுகள் சமர்ப்பணம் !!!