Friday, March 31, 2006

நிழற்படங்களும் ஓவர்களும்

இது ஒரு ஜாலியான போட்டி. முகமுள்ளவர்கள் நிழற்படங்களை தமது பதிவில் போட்டுக் கொள்கின்றார்கள். ஏன் முகமில்லாதவர்கள் கூட ஓவர்களை (icons) போட்டுக் கொள்கின்றார்கள். சரி இதப் பார்த்தவுடன் மனதில் பட்டதை உடனே சொல்லி விடலாமென்ற குசும்பு தோன்ற (யப்பா சாமிங்களா இது ச்ச்ச்சும்மாதான்)...

சரி முடிஞ்சா பாயிண்ட் பை பாயிண்ட் யாருன்னு கண்டுபிடிங்களேன்.

1. என்னங்க லேப்டாப் வைச்சி போட்ட அனாலிஸிஸ் இது. அதிகமா குத்தம் குறை இருக்குங்களா?
2. ஹீம். பதிவு போட்டு பத்து நிமிஷம் ஆச்சி. இன்னும் ஒரு பின்னூட்டம் கூட வரலியே? எல்லாரும் "பிஸி"யா இருப்பாங்களோ?
3. எவ்வளவுதான் நான் கரடியாக் கத்தினாலும் என் மேல போட்ட பிராக்கெட்ட நீங்க எடுக்கப்போறதில்ல. சரி நான் அப்படித்தான் வைச்சுக்குங்க.
4. (மியூசிக் ஆன்லைனில் டெக்னோ இசை அதிர்கின்றது) ஒரு கண்ணை உருட்டி மிரட்டினால் இன்னும் மக்கள் அதிகமா பயப்படுற மாதிரி இருக்கே
5. (குழைவு கலந்த குரலில்) என்னப்பா கல்லெறியும் கும்பல் இன்னும் கலைந்து போகவில்லையா? ஒரே ரோதனையாப் போச்சிப்பா.
6. பேரு இப்பிடி வெச்சாலும் வைச்சேன். பிளேபாயைப் போல் மக்கள் பாக்குறாங்கப்பா.
7. நான் ஒண்ணு நெனச்சு எழுதுறேன். இவனுங்க என்னடான்னா இலக்கிய மீனிங் கொடுக்குறானுங்களே. உள்குத்து ஏதாச்சும் இருக்குமோ?
8. நல்லவேளை தலையை மட்டும் போட்டேன். அதுக்கே கர்புர் சத்தம் கொடுக்க வைக்க முடியும்னா, முழுசாப் போட்டிருந்தா?
9. (ஹாலோவீன் மியூசிக்) உண்மையான கருவிழியான்'னா சும்மாவா?
10. என்னாது "சின்னப்புள்ள"த்தனமா இருக்கு?
11. என்னைப் பற்றி நன்றாக அறிந்து கொள்ளவும். மறுபடியும் சொல்கின்றேன். நன்றாக அறிந்து கொள்ளவும்.
12. என்ன இழவுடா இது. எம்மாம் நேரமா காத்துக்கிட்டு இருக்கேன். கோழி முட்டை இன்னும் போடவேயில்லியே?
13. (கட்டபொம்மன் சிரிப்பு) ஹ்ஹஹ்ஹா... எடுத்த பிறவியை ஏழாம் கண் கொண்டு பாரடா மானிடனே
14. (டிஷ்யூம்) என்ன நடக்குது இங்க?
15. என்னடா இது? வெளிறிப் போன பில்ட்டப்ப கொடுத்துட்டேனா?
16. செண்பகமே கற்பகமே... தென்பொதிகை சந்தனமே...
17. (பெருமூச்சு) ஹீம் இந்த போஸுல கண்டிப்பா ஐஸ்வர்யா ராய் அவுட்டு மச்சி
18. கண்டதை போடுவது போல எனக்கு பெருசு மாதிரி படம் போட்டு இளமையா இனங்காட்டுறது பிடிக்கும்ங்க
19. மீசையோட சைடுகளை சரியாக் கத்தரிச்சேனா தெரியலியே. சரி பரவாயில்லை. பாத்துக்கலாம்.
20. போ போ போ கணேசா... Go Get'em all
21. மலையாளக் கரையோரம் கவி பாடும் அருவி (என்ன தலவகிடு சரியாக்கீதா?)
22. பனைமரங்களும் மலர்வதுண்டு
23. பப்புல கொடுத்த பீருல ஷாக்காயிட்டேண்டா மாமு
24. (Smelling Sound) ஏங்கோ மணம் வீசுதே...
25. மீன் பிடிக்க வாரீகளா... ஹலோ மீன் பிடிக்க வாரீயளா?

அதிகம் கண்டுபிடிப்பவர்க்கு பரிசு கட்டாயம் உண்டு. போட்டி தொடரும் !!!

Tuesday, March 28, 2006

யாரை நொந்து என்ன பயன்?

(வைகைப்புயல் வடிவேலு தமிழ் இணையப்பதிவுகளால் கவரப்பட்டு ப்ளாக்ஸ்பாட் ஒன்றை ஆரம்பிக்கின்றார். எல்லாப் புகழ் பெற்ற இணைய பதிவுகளில் வரும் ஸ்டேண்டர்டு பின்னூட்டம் அவரது பதிவிலும் வர கலவரம் ஆஆஆ"ரம்பம்"; இதோ அந்த அரிய பின்னூட்டம்:)

Hi, I do not know how to comment in Tamil. I am really impressed to read your blog. Can you help me to write? Thanks. My email is paadu@XXX.com

ஆஹா இப்பிடி ஒரு தமிழ் ஆர்வலனா? இந்தா புடி மக்கா... ப்ளாக்கர் அக்கவுண்ட், ஹாலோஸ்கேன் பின்னூட்ட வசதி, ப்ரீ டெம்ப்ளேட்ஸ், தானியங்கி எழுத்துரு, வலைதிரட்டி (with Terms and Conditions :-), பயனர் கையேடு, வாக்குப்பதிவு முறை, ஐபீ அட்ரஸ் (க்கூம் ரொம்ப முக்கியம் பாரு), போன்றான ப்ளாப்ளாப்ளா அல்லது ஹலானா பலானா டிக்கானா மேட்டரை மூச்சு முட்ட வடிவேல் அனுப்பியும் வைத்தாகி விட்டது. பின்னர் தனியே சென்னை 5 ஸ்டார் பாரில் 5 பெக்'கடித்த பின் ஆங்கிலம் பேசும் பேரரிடம் (மதுரைத்) தமிழில் பேசும்படி வீரதீரமாய்க் கட்டளையிட்டுக் களித்த நஷா'வில் கவிழ்கின்றார்.

டேக் ஏ பிரேக்.

மக்கள்ஸ் இன்னைக்குத் தமிழ் இணையத்திலேயே முக்கி'யமான விஷயம் இதுதான் !!! டிஸ்கியா, யுனிகோடா எந்த பாண்ட் பெட்டரு? தனித்தமிழா, தங்கிலீஷா?

யுனிகோட்டுல சர்ச் பண்றது கஷ்டமாம். அப்ப திஸ்கியில ஈசியா தேட முடியுமா? டெக்னிக்கல் முடமான பலர் அறியார்.

தனித்தமிழ் நமக்கு வராதுங்கோ. தங்கிலீஷே தடுமாறும் போது என்னா பண்ணுவேணுங்கோ?

பல வட்டார "தண்ணி" கு()டிச்சதாலே வட்டார வழக்குகள் ஏகத்துக்கு கைவசம் உண்டு. என்னலே சொல்லுதே'விலிருந்து காய் போல்தோய்'ன்னு பம்பாய் டப்போரி வரைக்கும் பரிச்சயம் உண்டு. தவக்கா வெள்ளாட்டுலேர்ந்து இணைய சைடுகிக் மயில் ராவணர் வரைக்கும் புரிஞ்சாச்சு. பாக்கியென்னலா'ன்னு சிங்கைத் தமிழ் கொஞ்சம் சிங்கியடித்தாலும் சித்த நாழி இரு'ன்னும் சம்பாஷணை செய்ய முடியும்.

இப்ப மேட்டருக்கு வரேன். பாஸு உனக்குத் தெரிஞ்சதை, உன் முறையில எழுது. கோயிஞ்சாமி 8A'க்கா நீ எய்துற? இல்ல நீ சொல்லி அடிக்கிற படம் பேரு கொண்ட இடத்துல நீ பரிந்துரைக்கப்படுனுமின்னு நினைக்கிறியா? மக்கா வேஷ்ட்டா பிபி'யை (Blood Pressure'ப்பா பாத்தியா KGB'யை தமிழ்ப்'படுத்தின மாதிரி ஆகிப்போச்சிப் பாரு; மெய்யப்பண்ணா கோச்சிக்கப் போறாரு :-) அமெரிக்காவுல பிபி'ன்னா சின்ன கொயந்த வைச்சிக்கிட்டு இருக்காதவங்க்களுக்கும் தெரியும்பா) எகிற வுட்டுக்கினியே.

உமக்கு உம்மோட ஷ்டைல். நேக்கு என்னது. (அடச்சே... இத்தச் சொன்னதினால என்னோட பிபி எகிறலைங்காணும் ;-)

இம்மாம் மேட்டரை புட்டு புட்டு வைச்சிட்டு திருப்பி அந்த ஜெனிரிக் மயிலைப் படித்தேன்.

//I do not know how to comment in Tamil.//

அடப்பாவி உனக்கு தமிழ்ல கமெண்டுதான் உடணுமா?

//I am really impressed to read your blog.//

எம் பதிவுல இம்பிரெஸ் ஆனியா? அது சரி.

//Can you help me to write?//

வடிவேல் "நஷா"விலிருந்து மீண்டு வருகின்றார்.

என்னாது எப்பிடி எழுதுறதா? அட விளங்காப்பய மவனே. அப்பிடின்னா ஒனக்கு எழுதவே வராதா? சுத்தம். ஒனக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கு. பேசாம தேர்தல் கருத்துக் கணிப்பு அப்பிடின்னு பதிவு எழுது. வெளங்கிடுவ. வர்ட்டா... (இப்பிடி எத்தினி பேரு கெளம்பியிருக்காய்ங்கப்பா... நம்ம வெவரமில்லாம இத்தப்பத்தி ஒரு பதிவ போட்டுட்டோமே...)

அருஞ்சொற்பொருள்

நஷா: போதை

Sunday, March 26, 2006

நல்லதோர் கதை செய்தே

* ஏம்ப்பா அந்த புது ஆளு கதை சொல்ல வரேன்னிருந்தானே வந்தாச்சா?
* அய்யா ஆளு ஹாலுல ஒரு மணி நேரமா தவமா தவமிருக்காருண்ணே
* என்னது தவமா தவமிருந்தா? யப்பா தமிழ் சனத்த நம்பி இன்னொரு திரையிலொரு நாவல் எடுக்க முடியாதுப்பா... என்னாப்பா கதை ரெடியா?
* (பவ்யமாக) ரெடி ஸார் சொல்லட்டுமா? ஓப்பனிங் ஷாட் ஒரு பொட்டீக்கடை. ஹீரோ ஸ்டைலா ஒரு டீயை கிளாஸில் குடிக்கிறார்
* ஓகோ கிராமத்து சப்ஜெக்டா? செண்டிமெண்ட் தூக்கலா இருக்கணும்
* அட கவலையை வுடுங்க ஸார். அண்ணன்-தங்கை, அம்மா-மகன்'ன்னு ரெண்டு டிராக்குல ஜமாய்ச்சுடலாம்
* வடுமாங்கா ஸ்டைலுல ஒரு குத்துப்பாட்டு உண்டுல்ல?
* அதில்லாமலா? நயாந்தாராவையோ, சாயாசிங்கையோ போட்டு பட்டய கிளப்பிடலாம். பாட்டு கூட ஹிஹி நானே எழுதிட்டேன்ங்க
* (அப்பாடா பாடலாசிரியர் செலவு மிச்சம்) அது சரி காமெடிக்கு யாரு?
* பழைய ரஜினி டைரக்டர் மனோபாலாவையும், ஹீரோவையும் வைச்சு ஹிட் காமெடி ரெடி ஸார்
* (என்னையா இது எள்ளுன்னா எண்ணெய்யா இருக்கானே!) அது சரி படத்த எப்ப ஆரம்பிக்கலாம்?
* ஸார் இன்னும் கதையைவே கேக்கலியே?
* அட இவ்வளவு நேரம் கேட்டதென்ன? சரி சரி நீ இண்டஸ்ட்ரிக்கு புதுசுதானே. பழகிடுவ. ஆமாம் படம் பேரென்ன?
* UP ஸார்
* அடப்பாவி இப்போது இரண்டுபட்டிருக்கும் தமிழ்க்குடிதாங்கிகளை எம்மூலமா இணையவைச்சுடாதேய்யா...
* ஹிஹி அதெல்லாம் இல்லை ஸார். "உடையார்பாளையம்" டைடில செல்லமா UP. மதுர, சிவகாசி, திருப்பதி அப்பிடியே கொஞ்சம் BF (அ ஆ) செண்டிமெண்டைக் கலந்து வைச்ச டைட்டில் ஸார். A,B,C ஏன் D செண்டர்ல கூட படம் பிச்சிக்கினு ஓடும்
* அதென்னயா D செண்டர்?
* ஹிஹி டப்பிங் செண்டர் சார்
* (அடப்பாவி புதுசாவே இப்பிடி பொளந்து கட்டுறானே) சரி சரி படத்துலயும் இதே வேகத்தைக் காட்டு. என்ன?

(சமீபத்தில் [2006'ல்தான் டோண்டு ஸாரே] ஒரு நண்பரோடு பேசிக் கொண்டிருந்தபோது சொன்னார். தமிழனின் வீக்னெஸே எதையும் திரைப்படத்தோடு ஒப்பிட்டு பேசுவதுதானென்று. நான் ஒத்துக் கொள்கின்றேன். ப(பா)க்காத் தமிழனான நான் திராவிடம் பற்றி திரைப்படங்களில் அறிந்ததுதான் அதிகம். ஏன் பொட்டீக்கடை கூட குறும்படமெடுத்து அடுத்த சந்ததியருக்கு காட்ட வேண்டுமென கூறவில்லையா? இந்தியா ஸ்டோர்ஸில் மெம்பர்ஷிப் கட்டி கையில் தமிழ் டிவிடி எடுத்தவுடன் மனதில் ஓடிய மேற்கண்ட சிந்தனைகளை ஓணர் உடைத்தார்)
* சார் அருமையான படம் இது. என்ன வேணுமா?(முனகியபடி வீக்கெண்டு கெட்டுப்போகாம இருந்தா சரி) (படம்: அழகிய தீயே... பழைய படம்தான்... எல்லாம் உன்கையில்... சரக்கு கெட்டுப்போகாம காப்பாத்து என்று வேண்டியபடி...)

ஒரு பிளாஷ்பேக். பிரகாஷ்ராஜ் என்ற ஒரு குணச்சித்திர நடிகர். கன்னடர் என்று அறிகின்றேன். KB'யைக் குருவாக, தெய்வமாகப் போற்றுபவர். மொழியும், குருவும் இவரைத் தமிழராய்ப் பார்க்க முடியாமல் பலருக்குத் தோன்றினாலும், இவர் தமிழ் திரையுலகிற்கு செய்யும் பணிகள் பெரிதும் மதிக்கப்படவேண்டியவை. ஏராளமான இன்றைய டைரக்டர்களுக்கு அவர்கள் கஷ்டப்பட்ட காலத்தில் புரவலனாகவும், கைகொடுத்து தூக்கிவிடும் ஊக்கியாகவும் செயல்பட்டு வந்திருக்கின்றார். நல்ல கதைக்காக தானே தயாரிப்பாளராகவும் அவதாமெடுத்தவர். இன்று சினிமாவில் எடுத்த பணத்தை எனக்குத் தெரிந்த சினிமாவில்தானே செலவு பண்ண முடியுமென்று இவர் சொன்னாலும், அதிகமறியப்படாத கலைஞர்கள், கமர்ஷியல் வாடையில்லாத படங்களை எடுக்கவும் ஒரு தில்" (தில்: ஹிந்தியில் இதயம்) வேண்டும்.

அழகிய தீயே படத்திற்கு வருவோம். கோடம்பாக்க கனவுகளுடன் வலம் வரும் நான்கு (சந்திரன், மூர்த்தி, புயல், சித்தப்பா) இளைஞர்கள் (நான்கு மட்டுமா இன்றைய நிலையில்?). ஒரு மெடிக்கல் ரெப் இவர்களது அட்டாச்மெண்ட். மெடிக்கல் ரெப்பிற்கு திருமண நிச்சயத்தைக் கொண்டாட தனது ஆதர்ஸ நண்பர்களை அழைக்கின்றார். அப்பார்ட்டிக்கு டைரக்டர் சந்திரன் (ஹீரோ பிரசன்னா) வரப்போகின்றார் என்று மெ.ரெப்பின் எதிர்கால மனைவி ஆச்சரியப்படும்போது "என்னப் பத்தி என்னா நினைச்சே" என்று கனைத்தபடி மாப்பிள்ளை தொடங்குவது படத்தின் பிளாஷ்பேக்.

சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக பதிவுத் திருமணம் செய்து வாழ வேண்டிய கட்டாயத்தில் சந்திரனும், நந்தினியும் (ஹீரோயின் நவ்யா நாயர்). வில்லன் அப்பா (பிரமிட் நடராஜன்)'விடமிருந்து திருமண ஏற்பாட்டிலிருந்து தப்பிக்க நந்தினி மெ.ரெப் அண்ணனை நாடுகின்றார். அப்பா தேடிய மாப்பிள்ளை USA Software Engineer'ஆன அரவிந்தன் (பிரகாஷ்ராஜ்). (நம்ம பெரகாசு Software Engineer'ராம். வயசு வித்தியாசம் ரொம்பவே மோசம். அதுவும் மூட்ட மூட்டயா அமெரிக்காவுல பணம் சம்பாதிக்கிறாருன்னு, வில்லனப்பா சொல்லும் போது சிரிப்பு மீறுகின்றது. ஏன்ப்பா LA. Raam'மை இதுக்கெல்லாம் கன்சல்ட் செய்ய மாட்டீயளே :)

மெ.ரப். பிரசன்னாவிடம் ஹீரோயின் திருமணத்திலிருந்து தப்பிக்கும் வழி கேட்க, அவர் பிரகாஷ்ராஜிடம் ஒரு பொய்யான நவ்யா காதல் கதை எடுத்து விட, நல்ல மனிதனான அவர் இருவருக்கும் பதிவுத் திருமணம் செய்துவிடுகின்றார். பயங்கர பில்ட்-அப்புடன் வரும் பிரமிட் நடராஜன் கேரக்டர் அத்தோடு பணால். கதை for obvious reasons ஹீரோ,ஹீரோயினைச் சுற்றி சுழலுகின்றது. பார்ப்பவரைப் படுத்தாத, வெகு இயல்பான செண்டிமெண்ட் காட்சிகள். மற்ற படங்களில் வரும் காதல் காட்சிகளைக் கிண்டலடிக்கும் போது ஆஹா புது திருப்பம் கொண்டிருக்கும் கதையோ என்று யோசிக்க வைக்கின்றது.

கொலுசினைக் கண்டதும் காதல், பார்த்ததும் காதல், பார்க்காமலே காதல் இத்யாதி. மௌண்ற்றோடில் நிர்வாணமாக அலைந்து சொல்லும் காதல். எல்லாம் சரி. இப்படத்தில் "பூம்" என்று (உள்ளுக்குள்) வெடித்துச் சிதறும் காதல். அடடே இதுல வித்தியாசம் இல்லியே சந்துரு...?

பதிவுத் திருமணம் செய்து, ஒரே வீட்டில் வாழும் போது அழகான செண்டிமெண்ட் மூலம், ஹீரோவிற்கு ஹீரோயின் மீது (வில்லன்கள் தொந்தரவு ஏதுமின்றி) காதல் வருகின்றது. ஆனால் ஹீரோயின் தனது வாழ்வை தானே அமைக்க விரும்புவதாய் அளவுக்கதிகமாய் காட்டியபின், சிம்பிளாய் "பூம்" என்ற சவுண்டுடன் ஹீரோவுடன் காதலில் விழுவது கோலிவுட்டின் இன்னொரு பாணி.

சம்பந்தமேயின்றி நண்பன் மூர்த்தி ஹீரோ டைரக்டராக புக்கானவுடன் ஹீரோயினியின் மீதான காதலை சொல்வேன் என்று திண்ணை போன்றவொரு சுமைதாங்கியின் மீலமர்ந்து சவால் விடுத்தபின்னர், திடீரென்று செத்து விடுவதாய் காட்டுவதும் படத்தில் ஒட்டவில்லை.

மூன்றாம் பிறை போல காதலி காதலனை ம(து)றந்து விடுபடுவதாய் மட்டும் காட்டியிருந்தால் எங்கேயோ போயிருக்கும்.

போட்ட காசுக்கு பிரகாஷ்ராஜும், நானும் ஒன்றாய்தான் ஜெயித்தோம். Pirakash Way to Go !!! Radha Mohan as a Director you impressed ME!

வீணடிக்கப்பட்ட கேரக்டர் பேராசிரியர் ஞானசம்பந்தம்.

பிகு: ரமேஷ் விநாயகம் மியூசிக் கலக்கல். ஆனந்த் விநாயகம் போட்டோகிராபி பத்தி சொல்லுப்பா... ;-)

Sunday, March 19, 2006

**நாட்டு சரக்கு நச்சுன்னுதான் இருக்கு**


இனியவை 'நான்கு' இன்னாதவை 'நாற்பது'ன்னு வைத்தியர் தம்பி ரேசுநாதருக்கு பதில் எழுதோணுமின்னு காத்திருந்தா தோடான்னு முகமூடித் தம்பி சரக்க எடுத்து வுட்டிருக்கு. ஆஹா 12'வது லீவிலேயே பிஞ்சிலேயே பீரா'ப் போனவருன்னு தெரியாம போச்சிப்பா.

நாம ஸ்கோலு முடிச்சி கொஞ்சம் மூணு வருஷம் கழிச்சுத்தான் பீரப் பாக்க முடிஞ்சுது. குளோஸ் பிரண்டோட அண்ணனுக்கு கண்ணாலம் நிச்சயமாச்சுப்பா. அதுக்காக பார்ட்டி கொடுத்தாங்க. வாழ்நாள் முழுவதுவும் "டே ஸ்காலர்" எனப்படும் வீட்டிலிருந்தே செயல்படுபவரின் சோகக்கதை உங்களுக்குத்தான் தெரியுமே. அதுவும் ஒரு காலத்துக்கப்புறம் ஒரே ஊர்ல டெண்ட் போட்டு என் அப்பா உங்காந்துட்டார். அட அங்கன இங்கன டிரான்ஸ்பர் வந்தாலும் வூட்டுக்குப் பெரிய புள்ளய (நாந்தேன்) காவலுக்கு வெச்சிட்டுப் போயிடுவாரு.

ஙௌக்கா மக்கா... ஊர்ல என்னைத் தெரியாத ஆளே இல்லங்ற (அந்நிக்கே புகழ் பெற்ற)நெலம. நம்ம பாட்டி வேற சிட்டுக்குருவி லேகிய காளிமுத்து வைத்தியர் போல ஊருக்கே "உலை" வைக்கிற ஆசாமி. ரசினிகாந்த், பாக்கியராஜ் படங்கள் என்றால் முதல் நாளே துண்டு போடும் ஆள். யாருன்னே தெரியாத பெருசுங்க கூட நம்ம தலையைப் பாத்துட்டாப் போச்சி. "யப்பா ராசா நல்லாயிருக்கியா? பாட்டி நல்லாயிருக்காங்களா?"ன்னு ஒரு பத்து நிமிஷம் பிளேடு கண்டிப்பா உண்டு. இப்பிடி ஆயா பிரண்ட்ஸ், அப்பா பிரண்ட்ஸ், அம்மா பிரண்ட்ஸ், தம்பி பிரண்ட்ஸ் இல்லேன்னா இந்த பிரண்ட்ஸுக்கு பிரண்ட்ஸ்'ன்னு வாழ்க்கையிலே ஒரு "தனிமை"ங்றதே இல்லாமப் போச்சி பாஸு. இதுல தண்ணி எங்க அடிக்கிறது?

ஆனா "பார்ட்டி" சான்ஸை விட முடியுமா? இதோ நீ கேட்ட 'தனிமை' உன்னைத் தேடி வருகின்றது. உள்ளூரிலேயே ஹோட்டல்ல ரூமை புக் பண்றோம். பேர் கேட்ட உடனே ஒரு உடான்ஸ் பேரை சொல்லியாச்சு. என்னமோ நாட்டையே அழிக்க தீவிரவாதத் திட்டம் தீட்டுபவர்களைப் போல ஒரு பீலிங். பீரு பாட்டிலை தூரத்துல பாத்த பார்ட்டியான எனக்கு இப்போ கையில் கல்யாணி (அப்பிடின்னுதான் நியாபகம்). கண்களில் ஆனந்தக் கண்ணீர். "டேய் இவனுக்கு மோந்து பாத்தோன்ன போதை ஏறிடுச்சு பாரு" பக்கத்துல யாரோ கமெண்டு வுட்டதெல்லாம் தெரியாது.

மவனே அரை பாட்டில்தான் உள்ளே போச்சி. அரை மணி நேரம் கழிச்சு டிபன் கொடுத்தாங்க. நம்ம உடம்புல இருக்கிற பயாலஜி கிளாக்குல தண்ணியடிச்சா வாந்தியெடுக்கணும்'னு யாரோ ரவுஸா புரோக்ராம் போட்டு வச்சிட்டாங்க போலருக்கு. பீக் ஸீஸன் குற்றால அருவியாய் எடுத்தேன் எடுத்தேன் எடுத்துக் கொண்டே இருந்தேன். அடப்பாவி நல்ல முட்டை புரோட்டா போச்சேன்னு மனசுக்குள்ள நொந்துக்கிட்டேன். அதுக்கப்புறம் தண்ணியப் பத்தி நான் செஞ்சது வெறும் பேப்பர் ரிசர்ச் மட்டும்தான்.

கல்லூரி வாழ்க்கையில் டூர் போனபோது கூட தண்ணியடிக்கவில்லை. மச்சி பப்(PUB)'புக்கு போயி தண்ணியடிக்கணும் வரியா?ன்னு நண்பர்கள் இண்டீஸண்ட் ப்ரபோஸல் வைத்ததும், கடந்தகால "குற்றால அருவி" ஞாபகம் வர நாசூக்காக மறுத்தேன். அப்புறம் தான் தெரிந்தது. தங்கியிருந்த பெங்களூர் லாட்ஜிலிருந்து ரோடைக் கிராஸ் பண்ணி பப்'க்குப் போயி தண்ணியடிச்சுட்டு பத்திரமாக கூட்டி வர 'எஸ்கார்ட்' ஆகத்தான் என்னைக் கூப்டுறாங்கன்னு. அடப்பாவிங்களான்னு மனசுக்குள்ளே திட்டிக்கிட்டே சிகரெட் புகை, மற்றும் சைடு டிஷ் பதார்த்த சமையலறை புகையுடன் கண்கள் "தீப்பிடிக்க தீப்பிடிக்க" குளிர்பானம் அருந்தி "கொம்பெனி" கொடுத்தேன். மூணு பெக் விஸ்கியில் நண்பனொருவன் "சுயபுராணமே" படித்தான். ஆஹா விஸ்கியின் மாகாத்மியங்கள் என்று புத்தகமே போடலாம் போலிருக்கே என்ற நினைப்புடன் கையேந்தி பவன் இட்லிகளைக் கடித்தேன்.

அதெல்லாம் ஒரு "கனாக் காலம்" பாஸு. ஆனா இன்னிக்கு நம்ம நெலம அப்பிடியா?

டிரிங்ஸ் குறித்து ஒரு பயனர் கையேடு போடுற அளவுக்கு கைவசம் தகவல்கள். எல்லாம் என் உள்ளங்கவர் கள்வன் "அய்யனார் என்ற அடைக்கலம் காத்தவர்" என்ற குல சாமிதான் காரணம். மாட்டுப் பொங்கலன்று சாராயம் வைத்து சாமி கும்பிடுவதுதான் குலவழக்கம் என்று காலம் பிறழ்ந்து அல்லது தாழ்ந்து தகவல் சொன்ன பாட்டியை மனத்துக்குள் சபித்தேன். சரி சரி இப்பெல்லாம் சாராயத்திற்கு எங்கு போவது? சமீபத்து 2005' மாட்டுப்பொங்கல் செலிபிரேஷனில் அய்யனாருக்கு புளு லேபிள் ஸ்காட்ச் விஸ்கி சமர்ப்பணம்.
படையல் முடிந்தவுடன் எங்கே அய்யனார் ஒரு பெக் கேட்பாரோ என்ற பயம் கலந்த அவசரத்தில் புளூ லேபிலைக் என் தொண்டைக்குள் கவிழ்த்தபோது ஆஹா என்னவொரு பரவசம்! இந்த பரவசக் காட்சியைப் பார்க்க பாவம் பாட்டிக்குத்தான் கொடுப்பினை இல்லை. இருப்பினும் பாட்டி நினைவாய் படைக்கப்பட்ட காஞ்சிப்பருத்தி சேலை என்னைப் பார்த்து கண்சிமிட்டுவதாய் தோன்றியது "Blame it on Blue Label" என்று எனக்குத் தோன்றியது. உங்களுக்கு?

Monday, March 13, 2006

**முகமூடிகளின் அரசன்**



A Dragon in the shallows
Is toyed with by shrimps
A tiger out of the jungle
Can be tormented by a dog
ஆழங்குறைந்த இடத்தில் பறக்கும் பாம்புக்கு
ஆப்படிக்கும் இறால்கள்
காட்டினைத் துறந்த புலியையும்
ஆட்டம் காட்டும் நாய்


சீன மொழியில் வெளியாகி ஆங்கில சப்-டைட்டிலுடன் The King of Masks ஒரு வித்தியாசமான திரைப்படம். மேலே கண்ட பாடலும் அப்படத்தின் பிண்ணனியில் வருவதுதான். கிட்டத்தட்ட நம்ம ஊரு தெருக்கூத்து போல வயதான ஒரு சீனர் சட்சட்'டென்று தனது "முகமூடியை" மாற்றி வித்தை காட்டுபவர். எழுதப்படாத சீன மனுதர்ம விதிப்படி அவ்வித்தையை அவர் தனது வம்சத்தில் உதித்த ஒரு ஆண் வாரிசுக்கு மட்டுமே கற்றுக் கொடுக்க முடியும். அவரது சக-கலைஞர் ஒரு போதிசத்துவர். ஆணான அவர் பெண் வேடம் கட்டி நியூயார்க் பிராட்வே போல் நாடகம் போட்டு புகழ் பெற்றவர். முகமூடி மாற்றும் வித்தை அழிந்து போகக்கூடாதென்று நினைக்கும் அவர் தனது குழுவுடன் வயதான சீனரை இணையுமாறு அழைப்பு விடுகின்றார். ஆனால் அதை மறுக்கும் சீனக் கிழவர் ஒரு குழந்தையை தத்தெடுக்கின்றார். அதுகூட பெண் குழந்தையாய்ப் போய்விடுகின்றது. முகமூடி மாற்றும் வித்தை அழியாமல் போக அக்கலையை கிழவர் பெண்ணுக்குக் கற்றுக் கொடுத்தாரா என்பதை DVD எடுத்துப் பாருங்கள். இது லைப்ரரிகளில் கூடக் கிடைக்கும்.

பிகு:

1. இவ்வாரப் பதிவுகள் அனைத்தும் முன்னே பின்னே ஸ்டார்கள் போட்டே தொடங்கப்படும்.
2. இப்பதிவிற்கும் ஞானபீடம் எழுதிய மாஸ்(க்) பதிவிற்கும் ஒரு சம்பந்தமுமில்லை.

**விழலுக்கு இறைத்த நீர்**


சரி தலைப்பு நன்றாக வைத்தாயிற்று. இனிமேல் வார() நடசத்திரமில்லாவிடினும், ஏதாவது, நன்றாக எழுத வேண்டுமே? எனது ரசிகர்கள், வாசகர்கள், பரியின் வினையூக்கி பின்னூட்டத்தில் கேட்டது இன்னும் பாபா ரஜினியின் ஷூ'ப்பொறி போல் கிளம்பி உசுப்பேத்துகின்றது. நானும் நன்றாக எழுத முயற்சிப்பேன் :-) 2006'ல சிறந்த தமிழ் பிளாக்கா...(உள்மனம்: டேய் குசும்பா அடங்குடா....)

பெரிய ஆளானாவே கல்லடி, சொல்லடி படத்தான் வேண்டும். எடுத்துக்காட்டா என்னையே எடுத்துக்குங்க...சரி வேண்டாங்றீங்களா? அப்ப சரி வால்மார்ட்டை எடுத்துக்குவோம். எல்லாருக்கும் தெரியும் வால்மார்ட் வருடத்திற்கு 286 பில்லியன் டாலருக்கு யாவாரம் செய்யும் பலசரக்கு அங்காடி. மொத்தம் 12 லட்சம் பேரு வேலை பாக்குறாங்க. இன்னும் நிறைய புள்ளி விவரத்த அவுத்து வுடலாம் (நன்றி: இணையம்). அமெரிக்கா வந்ததுலேர்ந்து நமக்கு வால்மார்ட்தான் எல்லாமே! Butter சிக்கன் பண்ண ஆசைப்பட்டு, "Thank God It's not Butter"ங்ற சரக்கை வாங்கியாந்து ஆவி பறக்கும் வாணலியில் போட்டு, என்னாடா சிக்கன்ல மக்கன் (ஹிந்தி: வெண்ணெய்) வாசனையே வரல்லைன்னு பேக்கேஜைப் படிச்சுப் பாத்தா... அது வேறயாம். நம்ம நொள்ளைக் கண்ணுக்கு பட்டர் மட்டுமே பட்டது விதி...ஆனாலும் சரக்கி'லிருந்து, பலசரக்கு வரை எல்லாமே எனக்கு வால்மார்ட்தான். ஏறக்குறைய நிறைய அமெரிக்கர்களுக்கும் கூட...

நெட்லே நீங்க பார்ப்பேளே ரியல் ஸ்மைலி :-) அந்தப் படத்தோட "Roll Back" அப்பிடின்னு போஸ்டர் போட்டு "சலுகை விலை"யில் சமர்த்தாய் விற்பனை செய்வதில் வல்லவர்கள் வார்மார்ட்டார். இந்து ராமை இணையத்தில் வோட்ச் பண்ணும் (அவரே வோட்ச் செய்யப்படுவதை அறியாத) ராம்வோச்சர் போல, வால்மார்ட்டிற்கும் வாச்சர் உண்டு.

சரி வால்மார்ட்டின் மீது அமெரிக்காவில் சாட்டப்படும் குற்றச்சாட்டுகளை பார்ப்போம்:

1. தனது ஊழியர்களின் நலனில் அக்கறை எடுக்காத நிறுவனம். வால்மார்ட் தனது ஊழியர்களுக்கு செய்து தராத நலக் காப்பீடு திட்டங்கள், வீட்டு வசதி, குழந்தை பராமரிப்பு போன்ற அம்சங்களுக்காக சராசரி அமெரிக்க குடிமக்கள் தமது வரிகள் மூலமாக ஈடு செய்கின்றார்கள். 2004'ல் 1.5 பில்லியன் டாலர்கள் பொதுமக்கள் வரியிலிருந்து மேற்கண்ட (வால்மார்ட் செய்ய வேண்டிய காரியங்களுக்காக) காரியங்களுக்காக செலவீனம் ஆனது. அப்படியென்றால் ஊழியர்களின் நலனை புறந் தள்ளி, மக்களின் வரிப்பணத்தில் 1.5 பில்லியன் டாலர்களை கொழுத்த லாபமாய் சாப்பிட்டது வால்மார்ட்.

2. Be Indian; Buy Indian போல வால்மார்ட் "The Buy America Program" ஒன்றை 1994'ல் அறிவித்தது. ஆனால் இன்றைய நிலைமை வேறு. மொத்தம் எழுபது சதவீதம் வால்மார்ட்டில் விற்கப்படும் பொருட்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டவை. குறைந்த விலையில் தரமான பொருட்களை தருவதை குறிக்கோளாகக் கொண்ட வால்மார்ட் சீனாவிலிருந்து அமெரிக்கா செய்யும் மொத்த இறக்குமதியில் 10 சதவீதம் பங்களிப்பு செய்கின்றது. இதனால் மூடப்பட்ட அமெரிக்க தொழிற்சாலைகள், இழந்த அமெரிக்க வேலைவாய்ப்புகள் ஏராளம். வாஷிங்டன் போஸ்டும், நியூயார்க் டைம்ஸும் கதறுகின்றன.

3. அரக்கன்ஸாஸ் அசுரன்: ஒரு மணி நேர ஊதியமாய் அதிகுறைந்தபட்ச அளவான 9.68 டொலர்களே வழங்கி ஊழியர்களைப் பிழிந்து வேலை வாங்குகின்றது வால்மார்ட். கொசுறாக சட்டத்திற்கு புறம்பாய் ஊடுறுவிய (குறிப்பாய் மெக்ஸிகோ போன்ற நாடுகளிலிருந்து) ஆக்களுக்கு வேலை வழங்கியது; பெண் ஊழியர்களை பாகுபாடாய் நடத்துவது, சுற்றுப்புற சூழல் மாசு படுத்தப்படுவது இன்ன பிற விதயங்கள்...

4. காத்ரீனா சூறாவளி நிவாரணமாய் வால்மார்ட் மிகவும் தாராளமாய் நடந்து கொண்டது. 17 மில்லியன் டாலர் பணமாகவும், 3 மில்லியன் டாலர் பெறுமானமுள்ள பொருட்களும், தனது ஊழியர் மற்றும் வாடிக்கையாளர்களிடமிருந்து 4 மில்லியன் டாலர்களும் பெற்றுத் தந்தது வால்மார்ட். இவ்வாறு உதவிகளை அள்ளித் தெளித்தாலும் வால்மார்ட் வாட்ச்'சின் டைரக்டர் வில்லியம் ஜார்விஸ் ஜான்சனோ, "வால்மார்ட் ஏழைகளை தாக்கி, ஏழையாகவே வைத்திருக்கும் தொடர்மையம் கொண்ட சூறாவளி என்று விளிக்கின்றார்".

5. இவர்கள் சமீபத்தில் நிறுவனத்துக்குள் பகிர்ந்து கொண்ட "இன்சூரன்ஸ் பாலிஸி" லீக்கானது. அதில் இதய நோய் ஏற்படும் காரணிகளில் முக்கியமானதான கூடுதல் உடல் பருமன் பற்றிய குறிப்புடன், வால்மார்ட் ஊழியர்களுக்கு நிறுவனம் எவ்வளவு அதிகமாக இக்காரணியால் இன்சூரன்ஸ் செலவு செய்கின்றது போன்ற விவரங்கள் இடம் பெற்றிருந்தன. இது ஊழியர்களின் உடல்நலத்தில் வால்மார்ட் கொண்ட அக்கறையா? இல்லை என்று பலர் அடித்துக் கூறுகின்றார்கள் எதிர்ப்பாளர்கள். கொழுத்த லாபம் காணூம் வால்மார்ட் இதன் மூலம் நாளை உடல் பருமன் அதிகமானவர்களை வேலைக்கெடுக்காது போன்ற கருத்துகளை அள்ளி வீசுகின்றார்கள்.

6. அடிப்படை சம்பளம், நியாயமான நலப்பராமரிப்புத் திட்டம், பாகுபாடில்லா அணுகுமுறை, குழந்தைத் தொழிலுக்கு தீவிர எதிர்ப்பு நிலைப்பாடு, அமெரிக்கப் பொருட்களை வாங்குவது மற்றும் சக-சமூகத்தை மதித்தல் போன்ற ஆறு அம்ச கோரிக்கைகளுடன் வால்மார்ட்டை எதிர்த்து களம் கண்டிருக்கின்றது வேக்கப்-வால்மார்ட்.காம் என்ற அமைப்பு.

7. ராபர்ட் க்ரீன்வால்ட் படமே எடுத்துட்டார் ''Wal-Mart: The High Cost of Low Price''. இன்னும் பார்க்கவில்லை. நியூயார்க் டைம்ஸ் விமர்சனத்தில் ஆஹா ஓஹோ என்கின்றது. அந்த சுட்டியில சைடுல சுட்டுனீங்கன்னா இன்னும் சில பல செய்திகள். படம் வாங்கோணுமின்னா.
8. அப்படத்துடன் கொசுறா Confessions of a Wal-Mart Hit Man

இப்பதிவிற்கு இன்ஸ்பிரேஷன் தமிழ் சசியின் பதிவு.

பினா.குனா.

1. (குசும்பன் மனதுக்குள்) இது உனக்கு தேவையா? தாவு கீதா? தீந்து போச்சா? (உடனே அந்நியன் எபெக்டில்) டேய் பாடு... உன்னால முடியும். எழுது. எக்ஸ்ட்றா ஸ்பைசி சிக்கனோட ( நீ சொன்ன மக்கனோட இல்லேடா மாக்கான்) வால்மார்ட் இந்தியாவின் பொருளாதாரத்தை விரிக்கும் விதைமண் வழியா? இல்லை கரிக்கும் புதைமண் குழியா?ன்னு ஒலகத்துக்கு தெளிவு படுத்து...
2. (அமெரிக்கனு வீட்டு டர்க்கியே என்ற பாடல் பேக்கிரௌண்டுடன், ஆனந்தன் ஸ்டைலில்) அவா ஷொன்னா இவா எழுதுவா. அப்பிடியில்ல தல. அது பாட்டுக்கு அது. இது பாட்டுக்கு இது. என்னா புர்யுதா?

Sunday, March 12, 2006

வலிகளும் சில நிவாரணிகளும்


இணையத்தில் எவ்வளவு பேருக்கு கராத்தே தெரியும் என்று எனக்குத் தெரியாது. தற்காப்புக் கலைதான் என்றாலும் உணர்ச்சி வசப்படும் ஆசாமிகளும் கற்றுக் கொள்ளத்தான் செல்கின்றார்கள். கராத்தே, குங்ப்பூ போன்ற கலைகளும் ஒரு விதத்தில் யோகா மாதிரிதான். மார்ஷியல் ஆர்ட்ஸ் என்று அழைக்கப்படும் இக்கலைகளின் பயிற்சிகள் கூட ஒருவருக்கு உணர்வுகளை கட்டுப்படுத்தும் ஆற்றலை வழங்கும்.

இக்கலையினைக் கற்றவரை, கலையினை அறிந்தோர் இனங்கண்டு கொள்தல் எளிது. ஒருவரின் ஸ்டான்ஸ் எனப்படும் நிற்கும் நிலை கூட ஒரு அறிவிப்பு சாதனமாகக்கூடும். அனுபவத்தில் அறிந்தவன் நான்.

இக்கலைகளில் சட்டதிட்டங்கள் நிறைய உண்டு. ஜப்பானில் இருமுறை பிளாக் பெல்ட் வாங்கிய எனது சன்சாய் பயிற்சிகளை விட, சட்ட திட்டங்களை விளக்கிய நேரமதிகம். குறிப்பாக எவ்விதமான போரிடும் முறைகளை தேர்ந்தெடுப்பது பற்றி அவர் மாய்ந்து மாய்ந்து விளக்கியிருக்கின்றார்.

சோலா(ர்)பிளெக்ஸ் (solarplex) என்பது நெஞ்சுக்கூடு கடைசி முறையாக இணையும் பகுதிக்கு (இறுதி நெஞ்செலும்பு கூடுமிடம்) மைக்ரான் அளவு இறங்கிய உடலின் பாகம். இங்கே கைமுஷ்டியின், பாம்பு விரல் மணிக்கட்டால் (பொதுவாக துருத்தியிருக்கும்) ஓங்கி ஒரு குத்து (punch) விட்டால் ஆள் காலியாகாவிட்டாலும், கோமாவிற்கு போவதுறுதி. இது "காட்டா" (Kata) எனப்படும் கராத்தே போர்முறைப் பயிற்சியில் இருக்கும். இருப்பினும் இவ்வகைத் தாக்குதல் ஒத்த பயிற்சியுடைய எதிராளியிடம்தான் பயன்படுத்தப்பட வேண்டும். பயிற்சி என்பது ஒருவர் பெற்ற டிகிரிப் பட்டம் போல அடைந்த பெல்ட். பிளாக் பெல்ட் வாங்கியவர் இன்னொரு பிளாக் பெல்ட் வாங்கியவரோடுதான் பொருதுவார். ஸ்பேரிங் எனப்படும் "நேருக்கு நேரான தாக்குதல் போட்டிகளில்" ஒத்த பெல்ட் உடையவரே சமர் செய்வர். தாக்கவும், தற்காக்கவும் ஒத்த பயிற்சியுடையவராலேயே முடியும் என்ற எழுதப்படாத சமநீதிக் கோட்பாட்டை காப்பாற்றுவது கராத்தே போன்ற கலைகளே.

அதே சமயம் இவ்விதமான விதிகளைக் கையாளாத குண்டர்களிடமிருந்து உங்களைத் தற்காத்துக் கொள்ள சில முறைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக கால்பாதத்தை முறுக்கி (மணிக்கட்டு போல் உருவாக்கி) எதிராளியின் விரைகளில் (Groin kick) ஓங்கி உதைப்பது. எல்லோராலும் இது முடியுமென்றாலும் இம்முறையை பயன்படுத்தி அடித்தால் "குறி நான் ஏன் பிறந்தேன்?" என்று அழுமளவிற்கு சேதாரத்தை உண்டு பண்ணும். இவ்விதமான அடிகளை சாதாரணமாகக் கற்றுக்கொள்வோரிடம் எந்த ஆசானும் பயிற்றுவிப்பதில்லை. காரணம் நாமறிந்ததே.

கருத்து ரீதியாக இல்லாமல் போகிற போக்கில் கராத்தே அடி அடிக்கும் ஒருவரை இணையத்தில் பார்த்தேன். இவருக்கு பெரிதாக நான் விளம்பரம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அவர்தான் பெயரிலி என்கின்ற ராம்வோச்சர் என்கின்ற ரமணீதரன் கந்தையா என்கின்ற (இன்னமும் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் நீங்கள் அலுத்துப் போய் விடுவீர்கள்).

இனிமேல் நான் தேவைப்பட்டால் ஒழிய சுட்டிகள் கொடுக்கப் போவதில்லை. என்ன செய்வது புதிதாக என்னைப் படித்து அவர்களை நண்பர்களாக ஆக்கிக் கொள்ளும் கட்டாயத்தில் குசும்பனைத் தள்ளி விட்டீர்களே பெயரிலி! மனுஷ்யபுத்திரன் சுராவுக்கு இவ்வளவு கோபம் அவசியமா? என்கின்ற பதிவை எழுதினார். பின்னூட்ட பேழைக்குள் செல்க:

மேற்கூறிய காராத்தே அடிகளைப் பார்ப்போமா? முதலில் அநாமதேயம் என்று சோலா(ர்)பிளெக்ஸ் அடி. பின்னர் மனுஷ்யபுத்திரன் காறி உமிழ்ந்த பின்னே (குண்டரில்லாவிடிடும்) விரைகளில் உதை பெயரிலி பெயரில். நல்லவேளை மனுஷ்யபுத்திரன் சிற்றிலக்கிய சண்டைகளைப் பார்த்ததால் அசரவில்லை. தெளிவாகத் தன் அடுத்த பதிவில் கூறுகின்றார்:

//தெருச் சண்டையில் எதிராளியை நிலை குலையச் செய்ய தங்கள் துணியை தூக்கிக் காட்டுகிறவர்களுக்கு நிகராக கீழ்த்தரமான தாக்குதல்களைத் தொடுப்பவர்கள் எல்லா ஊடகங்களிலும் இருப்பதுபோல இணையத்திலும் இருக்கிறார்கள். //

இதுதான் பெயரிலி அடி என்பது !!! மனுஷ்யபுத்திரனுக்கும் பெயரிலிக்கும் பங்காளிச் சண்டையா என்ன? படிக்கும் வாசர்களே சொல்லட்டும் !!!

இன்னொரு பெயரிலிச் சண்டை. உங்களுக்கு எதிராகக் கருத்துகள் வைக்கப்படுமானால் கருத்தைப் பார்க்காதே. கருத்தாவை அடி என்கின்ற பெயரிலிப் பாணிச் சண்டை. பொறுமை இருந்தால் நேயர்கள் வாசித்துப் பார்க்கவும். தனது கருத்துக்கு ஒவ்வாமல், தனது கடிதங்கள் ராயர் காப்பி கிளப்பிலே மட்டுறுத்தப்பட்ட கோபத்தின் வெளிப்பாடு //இந்த கணேசன், பரமசிவம்பிள்ளை என்பவர்களின் அஞ்சல்கள் புறப்பட்ட முகவரிகளும் குறைந்த பட்சம் பா. ராகவன் & இரா. முருகனின் ஓரோர் அஞ்சல் புறப்பட்ட முகவரிகளும் ஒன்றாக இருந்ததே.//

பெயரிலிக்குத் தேவைப்பட்டால் மச்ச, கூர்ம, வராக இன்னபிற அவதாரங்கள் எடுக்கலாமென்பதை கோயிஞ்சாமி-8A கூட இன்றைக்கு ஒத்துக் கொள்ளலாம். ஆனால் ஐபீ எங்கிருந்து வேண்டுமானாலும் வந்திருக்கலாமென்ற தற்காப்பு வசனம் வைக்கத் தெரியாத, தெரிந்தாலும் சில பல காரணிகளால் வைக்க விரும்பாவருக்கு (இரா. முருகனுக்கும், பாராவுக்கும் நான் அடியாளல்ல :-)) மே 2003'ல் ஆப்படித்தவர் பெயரிலி. இது ஸ்பெஷல் அடி. கைமுஷ்டி சோலா(ர்)பிளெக்ஸ் பதம் பார்க்க, கால்கள் இருவரின் விரைகளை அடிப்பது. (டைரக்டர் ஷங்கர் பார்த்தால் பீட்டர் ஹெயின்ஸ் மூலம் அடுத்த படத்தில் சண்டைக்காட்சி அமைக்க முடியும்)

ஆமாம் இந்த கோயிஞ்சாமி-8A யார்? இவர் ஏன் தனியாக பெயரிலிக்கு மெயில் போட வேண்டும்? இவரும் சன்னாசி கூறியது போல் ஒரு மயில் ராவணரா? இது மற்ற கோயிஞ்சாமிகளுக்குப் புரியுமா? படிக்காமல் பெயரிலிப் பதிவில் பின்னூட்டமிட்டேன் என்று நீக்கியவருக்கும் இவருக்கும் தொடர்புண்டா? இருவரும் ஒருவரா? இவற்றை தனியாகப் பார்ப்போம்.

எனது ஒரே ஒரு கேள்வி:

1. ஆறு மணி செலவு செய்து போஸ்டு போட்ட பெயரிலியே. போலி டோண்டு = குசும்பன் = முகமூடி இதை இன்னமும் நிறுவவில்லையே? தெளிவாக புரியும் வண்ணம் எழுத முடியுமா?

இதை விடத் தெளிவாக நான் கேட்க முடியாது.

முத்தாய்ப்பாக:

ஒருவர்: டேய் சூப்பர்மேனுக்கும் மேனுக்கும் என்னடா வித்தியாசம்?
மற்றொருவர்: மண்டு. ஜட்டி போட்டு பேண்ட் போட்டா மனுஷன். பேண்ட் போட்டு ஜட்டி போட்டா சூப்பர் மனுஷன்

ஒருவர்: டேய் கராத்தே தெரிஞ்சவனுக்கும் தெரியாதவனுக்கும் என்னடா வித்தியாசம்?
மற்றொருவர்: மண்டூகம். அடி வாங்கி கத்துறவன் மனுஷன். அடிச்சிட்டு (Kiya'ன்னு) கத்துறவன் கராத்தே தெரிஞ்சவன்

பேண்டுக்கு மேல ஜட்டி போட்டு kiyaa'ன்னு சூப்பர் அடி அடிச்சிட்டு கத்துற சூப்பர் பெயரிலியே! சிம்பிளாச் சொல்லு.... என் கேள்விக்கென்ன பதில்?

பிகு.

1. நான் எந்த காசு கொடுக்கும் எந்த ப்ராக்ஸி சேவையையும் பயன்படுத்தவில்லை.
2. ஹிஹி தொடரும்...

தம்பி - நையப்புடை



"உயிர்வலி எல்லாருக்கும் ஒண்ணுதான். அதை நீ உணரணும். தப்பு செஞ்சிட்டோம்னு நீ வருந்தி திருந்துறவரைக்கும் நான் உன்னை விடமாட்டேன். நீ எந்தப் பக்கம் திரும்பினாலும் உன்னை எதுத்து நிப்பண்டா" வில்லன் சங்கரபாண்டியனை நையப்புடைத்து தம்பி மாதவன் கூறும் வசனத்தில் படம் தொடங்குகின்றது.

"நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டுமென்பதை நம் எதிரிகளே தீர்மானிக்கின்றார்கள்" - மாவோ'வின் வரிகள் டைப்படிக்கும் ஸ்டைலில் கலக்குகின்றது.

"காசியின் ஆட்களை தம்பி அடித்துவிட்டான்" - சிங்கராயர் என்னும் சங்கரபாண்டியனின் அடியாள் உசுப்பேற்ற படம் சூடு பிடிக்கின்றது.

"வேடிக்கைப் பாத்தே வேட்டியில *ண்ணுக்குப் போயிட்டேன்" தம்பியின் அடியை சங்கரபாண்டியனுக்கு எடுத்தியம்பும் சிங்கராயரின் நகைச்சுவை கிச்சுகிச்சு மூட்டுகின்றது.

"உபதேசம் பண்ணா எவன் கேக்குறான். உதைச்சாத்தான் கேக்குறான்" - தம்பியின் நிதர்சனம் சுடுகின்றது.

"பாம்புகளுக்கு நடுவுல இருக்கேன். பாட்டெனக்கு வராது" - சாரா'ப் பாம்பான நாயகி அர்ச்சனாவிற்கு தம்பி விளக்கம் கொடுக்கின்றார்.

"சும்மா கிடந்த சிட்டுக்குருவிக்கு சோளம் குடுத்துப்புட்டேன்" என்று பாடும் தம்பி வருத்தப்படுகின்றாரா இல்லை களிப்போடு சொல்கின்றாரே என்று குழப்பம்.

வீட்டு மாமரத்தை வெட்டுவதைக் கூட தம்பியால் தாளமுடியவில்லை. "மரம் தானே விடு வேலு (தம்பி)" என்னும் வசனமும் வருகின்றது. படம் தமிழ்க்குடிதாங்கி மருத்துவர் இராமதாஸ் அய்யாவிற்கு சமர்ப்பணம் செய்யப்படுகின்றது (Title Credit).

"நான் சங்கரபாண்டியன். என் தம்பி சரவண பாண்டியன். நான் தெருவுல கிடக்கிற அசிங்கம். என்னைத் தேடி வந்து மிதிக்காத. நீ யாரோ நான் யாரோ..."- வில்லன் தம்பியிடம் தன்னிலை விளக்கம்.

"இழந்தது நானா இருக்கட்டும். அதுவே கடைசின்னு முடிவு பண்ணிட்டேன்" - குடும்பத்தையே காலி செய்த வில்லனைத் திருந்தும்படி தம்பி உருக்கம்.

"புலி புலியை அடிச்சுக் கொல்றதில்ல (அப்படியா!). சிங்கம் சிங்கத்தை அடிச்சுக் கொல்றதில்ல. விட்றுன்னு எவ்வளவோ கெஞ்சினேன். கதறுனேன். கேக்கலியே" - கல்லூரி விழாவில் தம்பி தன்னிலை விளக்கம்.

"காந்தி சொல்லி, காமராஜ் சொல்லி, பெரியார் சொல்லி, அண்ணா சொல்லி கேக்காத நீங்க ஏன் நான் சொல்லியா கேக்கப் போறீங்க? நான் கேப்பேன். எல்லாத்தையும் பொறுத்துப் போறதுக்கு நான் காந்தியும் இல்லே. கர்த்தரும் இல்லே. புனிதமான புத்தரும் இல்ல. மனுசன். சாதாரண மனுசன்" அதே விழாவில் தம்பி ஆவேசம்.

"அடையறதுக்கு ஒரு லட்சியமிருக்கு. வன்முறைங்ற வார்த்தை ஒழியிற வரைக்கும் நான் ஓய மாட்டேன்" - தம்பியின் சூளுரை.

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே - தோழர் சே குவாரா

உடலினை உறுதி செய்
ஏறு போல் நட
நேர்ப்படப் பேசு
நையப்புடை
நினைப்பது முடியும்

பாரதியின் பாடல் வரிகளோடு - சுபம்.

Friday, March 10, 2006

தூவானம் அரங்கம் - 1


(மழை விட்டாலும் விடாது தூவானம்பாங்க. பாருங்க கெளம்பிடாய்ங்க சினிமாக்காரங்க. நெறைய லின்க்குகள். அட Week எண்டு வருதுல்ல. என்ஞாய் மாடி)

வடிவேலு: அண்ணே நம்ம பொழப்ப பாத்தீங்களா? என்னைய மாதிரி ஒரு டூப்ளிகேட்டு விஜெய் டிவியில செயிக்கப்போவது யாருன்னு ஆக்டிங் கொடுக்கிறானாமே? ஒரே சின்னப்புள்ளத் தனமால்ல இருக்கு.
பார்த்திபன்: டேய் அன்பே சிவம் பாத்தியா?
வடி: ஆமாம் காசு குடுத்து தியேட்டர்ல பாத்தேன் அதுக்கென்ன இப்போ?
பா: ஆத்திகனுக்கு சிவம்தான் அன்பு. நாத்திகனுக்கு அன்புதான் சிவம். அப்பிடின்னா அன்புக்கு சிவம் டூப்ளிகேட்டா?
வடி: ஹூம்...(அடிஆத்தீ. கொழப்புறானே லுக்) எனக்கு மந்திரி அன்புமணி அப்புறம் டிரம்ஸ் சிவமணி தெரியும் (கடவுளே உள்குத்தா?)
பா: கேள்விக்கு பதில் தெரியல்லீன்னா கொழப்பிடணும். அதுதான் இப்போதைய இணைய டிரெண்ட்.
வடி: அப்பிடியாப்பா?
பா: அப்பிடின்னா எனக்குப் பதில் தெரியலேன்னு சொல்றியா?
வடி: அது இல்லப்பா
பா: அப்ப நான் உன்னைக் கொழப்பினேனா?
வடி: யப்பா மவராசா முன்னாடி வந்தா கடிக்கிற பின்னாடி போனா ஒதக்கிறியேப்பா...
பா: இப்ப முன்னாடி நிக்கிற. அப்ப நான் நாயா?
வடி: என்னாப்பா ஒரு பேச்சுக்கு சொன்னா
பா: இப்ப ஏன் பின்னாடி போனே? என்னை கழுதைங்கிறியா?
வடி: யப்பா சாமி ஆளை வுடு. உங்கிட்ட மல்லுக்கட்ட நான் தயாராயில்லப்பா.
பா: அப்பிடின்னா பயந்துட்டேன்னு சொல்றியா?
வடி: என்னப்பா இப்பிடி வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் கேட்டா நான் என்னாப்பா பண்ணுவேன்?
பா: ஏன் பேசாம இருக்கலாம்ல. (இரண்டு கைகளாலும் அடங்கெனும் சைகை காட்டுகின்றார்)
வடி: (கெஞ்சும் குரலில்) அண்ணே இந்த முட்டாப்பயலுக்கு ஐபீ அட்ரஸ்ன்னா என்னான்னு சொல்லுங்களேன்?
பா: ஏண்டா பேச்சை மாத்துறியா? (கர்ஜிக்கும் குரலில்)முதல்ல உன்னோட அட்ரசை சொல்லு.
வடி: (ஆஹா ஜெயக்காந்தன் டயலாக்க வுட்டு திமுக'காரன்கிட்ட தேர்தல் நேரத்துல அடி வாங்க வைச்சிடுவானோ என்ற பயத்தில் அட்ரஸ் சொல்லுகின்றார்)
பா: டேய் அதென்ன பழைய டோர் நம்பர். புதுசா யாரு மாத்தினது?
வடி: கார்ப்பரேஷன் ஆளுதான்
பா: அப்டிப்போடு. உன்கிட்டயே கேக்காம உன்னோட டோர் நம்பர மாத்துற மாதிரி ஐபீ நம்பர மாத்துனா அது டைனமிக் ஐபீ. சரி வெள்ளை மாளிகை நம்பர மாத்த முடியாதில்ல. அது மாதிரி ஒரே ஐபீ நம்பரா இருந்தா அதுதாண்டா ஸ்டேடிக் ஐபீ.
வடி: (காலில் விழுகின்றார்) அண்ணே எங்கியோ போயிட்டீங்கண்ணே! ஐபீ பத்தி கேட்டா அதோட அட்ரஸையும் சேத்து சொல்றீங்கண்ணே.
பா: அப்பிடின்னா என்ன என்னைய அதிகப்பிரசங்கின்னு சொல்றியா?
வடி: அட விடுப்பா. ஏதோ என் சிறு மூளைக்கு எட்டியது.
பா: ஏன் அப்ப உனக்கு மெயின் மூளை இல்லியா?
வடி: இப்படியெல்லாம் பேசப்படாது. என்னோட மூளையோட சைசு சிறுசு'ங்றேன்.
பா: என்னது சிறுசா? ஏண்டா எல்லா அதான் பிராப்ளத்துக்கும் நீ காரணங்றாங்களா?
வடி: அண்ணே அப்பிடி நான் என்னா தப்பு பண்ணிட்டேன்? சின்னதா கேள்வி சிலபல கேட்டேன். அது தப்பா?
பா: அத "நீ"யே கேட்டியா?
வடி: (தலையை சொறிகின்றார்) ஹிஹிஹி
பா: அட பா(?)டு. நல்ல கேள்விகள்தானேப்பா? நறுக்குன்னு நேரா'வே கேட்கலாமுல்ல. சரி அத்த வுடு. ஆமாம் ஐபீ பத்தி எதுக்கு கேள்வி கேட்ட?
வடி: நம்ம வூட்டுக்குப் பக்கத்துல ஒரு கம்ப்யூட்டர் கைபுள்ள இணையத்துல ஏதோ ஐபீ புடிக்கறாங்கோ'ன்னு சொல்லிச்சு. அதான் என்னமோ ஏதோன்னு கேட்டேன்.
பா: ஆமா ஐபீ என்ன நாயா புடிக்கிறதுக்கு?
வடி: அடப்போப்பா வெவரம் இல்லாம பேசிகிட்டு. அதான் மோப்பம் புடிச்சு ஐபீ சொல்றாய்ங்களாம்
பா: அப்டிப்போடு மோடி வித்தை காட்றாங்களா? சரி இந்த ரெட்டை ஐபீ முறை பத்தி தெரியுமா?
வடி: (ஆஹா ரெட்டை டம்ளர் வெவகாரத்தை கெளர்றானே) என்னாது?
பா: அட ஸ்டேடிக் ஐபீ வெச்சிக்க முடியல்லேன்னா அவனவன் டைனமிக் ஐபீ வெச்சிக்கணும். புரியுதா?
வடி: அப்பாடி. இம்புட்டுதானா?
பா: என்ன இம்புட்டுதானா? டைனமிக் தெரியாத டான்ஸர் ஸ்டேடியம் கோணல்ன்னு சொன்னாளாம்.
வடி: டான்ஸரா? எங்க ஊர்ல வேற மாதிரியில்ல சொல்வாய்ங்க.
பா: வேண்டாம் என் வாயைக் கிளறாதே. அப்புறம் போலியா ஏதாவது பேசிடப் போறேன்
வடி: க்கும். குப்புற விழுந்தாலும் குறுந்தாடியில மண்ணு ஒட்டாதே ஒனக்கு
பா: டேய் அது "மீசை"ன்னுல்ல சொல்லுவாங்க. ஏன் சொலவைடைய மாத்துற?
வடி: நீ மட்டும் டான்ஸர்'ன்னு மாத்துவ நான் குறுந்தாடி'ன்னு சொல்லப்படாதா?
பா: நீயும் நானும் ஒண்ணா? நான் சொன்னா அது நகைச்சுவை. நீ சொன்னா அது குரூர நகைச்சுவை.
வடி: என்னமோ போப்பா. அநேகமா நீ இணைய உலாவு மையத்திலேயே குடியிருக்க போலிருக்கு. நடத்து. நடத்து. (கையை வீசும் போது அருகிலிருந்த பொம்மை கீழே விழுந்து உடைகின்றது)
கவுண்டமணி: (சூரியன் பட அரசியல்வாதி போல உணர்ச்சிவசப்பட்டு) ஆஹா பொம்மைகள் உடைபடும் நேரம்
பா: என்னங்க சொன்னீங்க?
மணி: பொம்மைகள் உடைபடும் நேரம்
வடி: அது சரி. ஏன் நான் உடைச்சா மட்டும் சொல்றீங்க. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கமண்ட்டு பொட்டியில ஏகத்துக்கு பொம்மைங்க உடைஞ்சதே அப்ப எங்க போயிருந்தீங்க? போட்டா புடிக்கவா?
மணி: நாமார்க்கும் குடியல்லோம். நமனை அஞ்சோம்.
பா: அது சரி மணிக்கு(ம்) வாயடைச்சுப் போச்சா?
மணி: முதல்முறை பல்முளைத்த காலத்தே பால்ய நண்பன் வடிவேலுக்கு நானெழுதிய கட்டுடைக்கும் கரங்கள் என்ற கடிதத்தில் நடந்த நெடுங்கதையாடலை மீள்பதிவு செய்கின்றேன்.
வடி: சரியாப்போச்சி. போய்யா போய் கமர்கட்டை கடிச்சிட்டு ஆளை வுடு. உன் கையை காலா நெனைச்சு
பா: அப்ப காலை என்னன்னு நெனைப்பே?
வடி: நீயென்னப்பா நொச்சு நொச்சுன்னு. கண்ணைத் திறப்பா காலும் தெரியும்.
மணி: நீங்கள் சொல்வதற்கான காரணிகள் அரசியல் சார்பு கொண்டவையானாலும் திரிப்பற்ற...
செந்தில்: டேய் மணி. தெகிரியமிருந்தா ஒண்டிக்கொண்டி வாடா. என்ன பயந்துட்டியா? ஹா ஹா ஹா ஹா
பா: ஆமாம். இந்தாளு அரசியல்ல அம்மாகிட்ட சேந்தாலும் சேந்தாரு. அப்பிடி ஷோ காட்டுறதே வேலையாப் போச்சி
வடி: யப்பா செந்திலு. யாரு பயந்தா? எப்பிடி பயந்தா? பயந்து என்ன பண்ணாரு? வெவரமாப் புட்டு புட்டு வெச்சாதானப்பா புரியும்
செ: சூச்சூ. இது போதுமா? அரிசிமா. இது போதுமா. டேய் என்னோட ஐபீ தருவேன்.
பா: (என்ன தொந்தரவாப் போச்சே. ஆளாளுக்கு ஐபீ தரேங்கிறான்) சரி ஐபீ குடு. செந்தில்: ஐபீ எனக்கு அம்மா தந்த முகவரிடா.
வடி: வெளங்கிரும். அம்மா கொடுத்த ஐபீயா? கண்டிப்பா அது டைனமிக்தான். எப்ப வேணாலும் மாறும்.
பா: அம்மாவே கொடுத்தாலும் மாறுவது மாறத்தானே செய்யும்?
வடி: (அடப்பாவி ஞானபீடம் மாதிரி பேசுறானே)
செந்தில்: என்னிடத்தில் சொல் சுயமைதுனம் செய்யும் மணியே அங்கே செய்ய முடியுமா?
பா: என்னப்பா இது உயிர்மை புத்தக விழாவுல குட்டி இலக்கிய குறிக்கீடு செய்யிற மாதிரி செந்தில் பேசுறாரே?
வடி: என்னிக்கோ ஒருதபா சொப்பனஸ்கலிதம்'ன்னு சொன்னியே இதுதானா அது?
பா: அட வர வர நீயும் தேறிட்ட போலருக்கு. எல்லாம் அண்ணனோட சகவாசமா?
விவேக்: டேய் அவனவன் வூட்டுல தட்டுமுட்டு சாமான் இல்லேன்னு ஸ்டோருக்கு ஓடியாடி வரான்னா உங்களுக்கு வேலை வெட்டி இல்லாம வீதி நியாயம் பேசித் திரியரீங்களேடா?
வடி: வந்துட்டான்யா வந்துட்டான்யா இனி கடா வெட்டிப் பூசைதான் போ
பா: விவேகமில்லாம பேசாதீங்க. அவருதான் ஸ்டோர் பில்லு, பஸ் ரிக்கெட், கழிவறைத்தாள்'ன்னு அலிபி வெச்சுருக்காருல்ல
வடி: கழிவறைத்தாளா? அடப்பாவி அதக்கூட விடலியா?
விவேக்: முடியாதுடா. என்னால விடவே முடியாதுடா. அப்பளத்தை பொரிச்சும் திங்கலாம். சுட்டும் திங்கலாம். ஏன் அப்பிடியேயும் சாப்பிடலாம்.
பா: மொத்தத்துல இப்ப என்ன சொல்ல வர்ரீங்க?
விவேக்: இருங்க பக்கத்து ஊர்ல ஒரு கோலி சோடா குடிச்சிட்டு வந்து சொல்ரேன்
வடி: யப்பு பில்ல மறக்காம கொண்டாந்துடுப்பு. குழந்தை ஸ்கேன் மாதிரி படம் காமிக்க வசதியா இருக்கும்
டூப் வடிவேல்: அட அழகாகத் தோலுரிக்கின்றீர்களே
பா: டேய் டூப்பு நீ அடங்கவே மாட்டியா? மணி பேசாம நீங்க இவருக்கு ஒரு ஜெயமோகன் சுராவுக்கு அனுப்பின மாதிரி ஒரு முன்னூறு பக்க கடிதம் அனுப்புங்க. அப்பத்தான் அடங்குவாரு
பாரதிராஜா: (கரகர குரலில்) செல்வராஜ். எனக்கு கதை தருவதில் கில்லாடி. என்னை விட பிரமாதமாகக் கதை விடுவார். எனக்குப் பல படங்களுக்கு கதை கர்த்தாவே இவர்தான். நன்றி. நன்றி நன்றி
வடி: நன்றியா? ஆஹா இப்பிடி எத்தினி பேருடா கெளப்பியிருக்கீங்க? எதுக்குடா நன்றி? சொன்னா "De Nada"ன்னு ஸ்பானிஷ்ல கலக்குவோம்ல.

(தொடரும்)

Sunday, March 05, 2006

தமிழும் பொடிமட்டைகளும்





யோஜிம்போ, தகஜூம், துவஜஸ்தம்பம், அஜக்மஜக் என்ற இலக்கிய வார்த்தைகளை என் போன்ற ஆக்களுக்கு அறிமுகம் செய்து வைத்த சன்னாசி அண்ணாச்சிக்கு. வணக்கமுங்கோ. ரொம்ப நாளா அடக்கி வைச்சிருந்த ஆசையெல்லாம் அவுத்துப் போட்டு ஆட வுடறீங்க போலிருக்கு. தமிழக அரசியலுக்கு ராமதாஸ் தமிழ்த்குடிதாங்கி போல இணையத்தில் இலக்கியகுடிதாங்கியா வந்துட்டீங்க போலிருக்கு. அப்பிடியே சிலருக்கு இடிதாங்கியாவும் அமைஞ்சதுக்கு வாழ்த்துக்கள்!!! பொடி ஏகத்துக்குப் போக மூக்குக்கே பிடிச்சு போயிடுச்சு போலிருக்கே. இப்ப மொதல்ல பொடியைப் பிரிப்போம். அப்புறமா மூக்குக்கு வைத்தியம் பாப்போம். ஆஜ் ஸே பகுத் ஜோர்ஸே மாடி. (இன்னியிலேர்ந்து அடிச்சு ஆடப்போறேன்)

PKS, குசும்பன் பெயரை எடுத்தாலும் எடுத்தார். என் நிலைமை இப்படியாகுமென்று நான் எதிர்பார்த்ததுதான். என்ன PKS என்னைப் போயி
இலக்கியவாதிகளை வறுத்தெடுக்கின்றேன் அப்பிடி இப்பிடின்னு பெரிய ஆளா ஆக்கி வுடுறீங்க? பாருங்க சன்னாசிக்கு மூக்கு வேத்துடுச்சி. எத்தனை தீவிரவாதிகளை ஸாரி இலக்கியவாதிகளை குசும்பன் வறுத்தெடுத்தான் என்று நாக்கைப் பிடுங்கிக்கொள்ளும் ஒரு கேள்வி கேட்கின்றது தமிழ்ப்பாம்பு. என்ன சன்னாசி ஒரு நாளைக்கு எத்தனை தடவை என்னோட குசும்பன் பதிவுக்கு அட்டெண்டெண்ஸ் போடறீங்க? நான் வறுக்குறது என்னான்னு உங்களுக்குப் போயி நான் சொல்லியா தெரியணும்? :=))

இப்ப நம்ம விஷயத்துக்கு வரேன். உங்களோட மட்டுறுடுறுத்தல் பதிவையும் பின்னூட்டங்களையும் பார்த்தேன். உங்களோட அஜக் மஜக் பின்னூட்டத்தையும் http://dystocia.weblogs.us/archives/196#comment-1207 பார்த்தேன். போலியாக ஆபாசப் பின்னூட்டத்தால் பலரும் பாதிக்கப்பட்டதற்கு உண்மையான டோண்டுவே காரணம் என்று தீர்ப்பெழுதிய பெரும்பான்மை கூட்டத்தில் நீரும் ஒருவர்தானே? உம்முடைய IP' மற்றும் வேறு சில அடையாளங்களை யாரோ எடுத்துப் போட்டதற்காக அங்கே போய் ஒப்பாரி வைக்கலாம். ஏன் கேஸ் கூட போடலாம். அந்த இழவை எடுக்காமல் எதுக்காக அடுத்தவன் தாலி அறுக்க வேண்டும்? (இந்த வாக்கியம் உங்களைப் போல் இலக்கியமாக எழுத நானெடுத்த முதல் ஸ்டெப்).

உங்களுக்கு சுயப்புத்தி முழுவேலையாக என்ன செய்கின்றது என்று எனக்குத் தெரியாது. ஆனால் சொல்புத்தி கூட காயடிக்கப்பட்டதுதானா (உங்கள் பிரயோகமே)? நாந்தான் பெயரிலிக்கு பகிரங்கமாய் -/ச்சீய்த்த்தூதூஊஊஊஊ'விற்கு என்ற பதிவில் சவால்கள் வைத்தேனே? அப்பதிவினைப் படிக்கவில்லையா? படித்தும் புரியவில்லையா? எக்கச்சக்கமாக பொடிமட்டை பிரித்ததில் எல்லாமே மழுங்கி விட்டதா? அந்தக் கூட்டத்திலிருந்து நீங்க இப்ப புதுசா வந்த இடிதாங்கின்னா உங்களால அஜக் மஜக் படங்களை நிறுவ முடியுமா? ஓப்பனா சவாலை முடிஞ்சா ஏத்துக்கணும். இல்லாவிடில் மஹாநதியில் கமலுக்கு கூறப்படும் அறிவுரை போல வாயையும், அத்தையும் மூடிண்டு இருந்தா ஷேமம். சும்மா பின்னூட்டத்தில் லிங்க் போட்டு அவந்தான் இவன் என்று நான் உட்பட எல்லாரும் சொறிஞ்சுக்க முடியும். அடுத்தவன் கிட்ட போயி "உன் நேர்மையை சந்தேகிக்கின்றேன்", நிகழ்தகவின் விளையாட்டு, புடலங்காய், புண்ணாக்கு என்று உங்களைப் போல் பினாத்துவதுதான் பப்பட இலக்கியமோ?

சின்னவன் இவனோ? குசும்பன் இவனோ? முகமூடி இவனோ? என்ற ஹேஷ்யங்கள் கிளப்பி, போலியாகப் படம் காட்டுவதுதான் பெயரிலியின் ஸ்பெஷாலிட்டி. அதை உரித்துக் காயப் போட்டாகி விட்டது. அவரிடம் போய் அவரது நேர்மையை சந்தேகிக்க தமிழ்ப்பாம்பால் முடியுமா? இல்லை இந்தப் பாம்பு வேறு மகுடிக்கு ஆடுகின்றதா? இந்தப் பாம்பு எடுக்கும் படத்தை பின்னாலிலிருந்து (இந்த இயக்குநர் ஒரு Back Specialist :-) If you know what I mean :-)) இயக்குபவர் யார்? ராம் ஜானே !!! (கடவுளான ராமபிரானுக்கே வெளிச்சமென்று இந்தியில் கூறுவார்கள்)

ரொம்ப நாட்களாக அரித்துக் கொண்டிருக்கும் இன்னொரு விஷயத்தையும் இன்னிக்கே சொறிஞ்சுடலாம். தமிழ்மணம் குறித்து என்று ஒருமுறை பொடிமட்டை பிரித்தீர்கள். இது குறித்து பொதுவில் நான் பேசமாட்டேன் என்று நினைத்திருப்பினும் கொஞ்சம் எனக்கும் பொடி மட்டை பிரிக்க ஆசை வந்து விட்டது. கருத்து சுதந்திரம், சர்வாதிகாரம், நாய் கூடச் சீந்தாதென்ற உமது அபத்த, இடியாப்ப கருத்துகளைத் தாண்டிச் செல்கின்றேன். குடியரசுத் தலைவருக்கு ஏன்யா கடிதம் எழுதினீர் என்று காசியை நான் கேட்டதாக உருவகம் செய்து கொண்டீர்களா? அடப் போய்யா நீயும் உன் பொடிமட்டையும். அந்த இழவு (குசும்புத்தலைவருக்கு மடல்) பதிவைத் தேடியெடுத்து நல்லா திரும்பப் படிக்கவும். சுட்டிகள் போட அலுப்பா இருக்கு.

அப்புறம் இந்த சாவு விஷயம். செத்தது சுரா. படிச்சோ படிக்காமலோ சுரா தமிழ் கூறும் நல்லுலகில் அறியப்பட்ட பெயர். அவர் இறந்ததற்கு ஒருவர் அஞ்சலிப் பதிவு போடுகின்றார். ஏன்யா ஒருத்தன் செத்துப் போனா எந்த கலாச்சாரமா இருந்தாலும் அடப்பாவமே, அடக்கடவுளே, அய்யய்யோ அவரா, சே தெரியாதே இப்படித் தான் குரல்கள் வருமே தவிர "தகவலுக்கு நன்றி" என்று எந்த மனித ஜென்மமும் சொல்லாது. நீங்க எப்படியோ எனக்குத் தெரியாது. சாவு விஷயத்துல சங்கு சத்தம் கேக்கலாண்டா ஆனா ஜால்ரா அடிக்கிறீங்களேன்னு சொன்னா உமக்கு //இருப்பினும், சாவு குறித்த செய்தியைக் கூடக் கிண்டலடிக்குமளவு குசும்பின் தரம் இறங்கும் என்பது நானும் எதிர்பார்த்திராதது.//

அப்பாடி இப்போ கொஞ்சம் நிம்மதி. சாவு விஷயத்தில் நான் குசும்பு செஞ்ச பாவம் தீந்துடும். கார்த்திக் ரமாஸ் மன்னிக்கா விட்டாலும் சுரா'வின் ஆவி என்னை மன்னித்து விடும்.

சன்னாசி ஒரு நல்ல ஸ்போக்ஸ்மேன் ஆக பெர்பார்ம் பண்ண வாழ்த்துக்கள். ஆனால் சைடுகிக் வேலை, மயில் ராவணர்கள், பொடிமட்டை என்று மீண்டும் மீண்டும் சிரிப்பு என்ற சன் டிவி ப்ரோகிராமாகி விட்டால் மக்களுக்குப் போரடித்தாலும் அடிக்கலாம்.

மற்றபடி PKS உங்களுக்குப் பதிலாக தனது பின்னூட்டத்தில் கூறியது போல //திருமா மற்றும் வை.கோ.வைப் பற்றிய முகமூடியின் பதிவு இது. முடிந்தால் உங்கள் விமர்சனங்களை அதுகுறித்து வையுங்கள். நானும் படிக்கிறேன். திருமாவையும் வை.கோ.வையும் தலையில் கொள்கை வீரர்களாகத் தூக்கி வைத்து ஆடிக் கொண்டிருந்தவர்கள், எதிர்க்கருத்து உடையோரை பார்ப்பனியத்துக்கு விலைபோய் விட்டதாகக் குற்றம் சாட்டியவர்கள், திருமாவும் வை.கோ.வும் பிராமணரான அம்மாவிடம் இன்று சரணாகதி அடைந்ததை ராஜதந்திரம் என்று ஏன் பம்மாத்து செய்து கொண்டிருக்கிறார்கள்? ஆளுக்கு ஒரு நியாயமா? பேச வேண்டிய விஷயம் இதுதான். ஓட்டுப் பொறுக்குகிற, பதவியை, அதிகாரத்தை எதிர்பார்க்கிற அரசியல் சமரசங்கள் - ராஜதந்திரங்கள். ஆனால், ஒரு விஷயத்தில் எந்தப் பலனையும் எதிர்பாராமல் யாரும் கருத்துச் சொன்னால், அவர்கள் விலைபோனவர்களா?// இதற்கு உங்களிடம் அல்லது உங்கள் கூட்டத்தில் யாருக்கேனும் பதிலுண்டா?

பிகு. அதீத பொடி ஆஸ்த்துமாவில் கொண்டு போய் விட்டுவிடப் போகின்றது :-). அலெக்ஸாண்டர் போப் என்று நினைக்கின்றேன். எப்போதோ அவர் பொடிமட்டையை பற்றி ஒரு கவிதை எழுதியதாக ஞாபகம். முடிந்தால் எடுத்துப் போடுங்கள். நன்றி.

Friday, March 03, 2006

நாய்


காலம் கடந்துண்ணும் எதிர்மனைப் பார்ப்பான்
எச்சிற் களையைத் தெருவில் எறிந்தான்
ஆள் நடவாத தெருவில் இரண்டு
நாய்கள் அதற்குத் தாக்கிக் கொண்டன
ஊர் துயில் குலைத்து நாய்கள் குரைக்கவும்
அயல்தெரு நாய்களும் ஆங்காங்கு குரைத்தன
நகர நாய்கள் குரைப்பது கருதிச்
சிற்றூர் நாய்களும் சேர்ந்து குரைத்தன
நஞ்சை புஞ்சை வயல்களைத் தாவிக்
கேட்கும் குரைச்சலின் குறைச்சலைக் கேட்டு
வேற்றூர் நாய்களும் குரைக்கத் தொடங்கின
சங்கிலித் தொடராய்க் குரைத்திடும் நாய்களில்
கடைசி நாயை மறித்துக்
காரணம் கேட்டால் என்னத்தைக் கூறும்?

ஞானக்கூத்தன் - ஞானக்கூத்தன் கவிதைகள், விருட்சம் வெளியீடு, ரூ80.00.

பட உதவி: நன்றி http://www.rotten.com/library/culture/dog-shit/
பட கருத்தாக்கம் நன்றி: பெயரிலி http://kusumban.blogspot.com/2006/02/blog-post_15.html
படம் நன்றி: http://www.rotten.com/library/culture/dog-shit/

Wednesday, March 01, 2006

சொலவடை சில உம்மைகள்

சுந்தரமூர்த்தி: காலு எங்கப்பா பாக்க முடியலீய்யே

குழலி: அம்மா காலத்துல மாவட்ட செயலாளர் செத்த மாதிரி சாகச் சொல்றீங்களா? இத இத எதிர்பார்த்தேன்

கர்நாடிக் டமாஸ்: (aka கெடாவெட்டி குரு இல்லே கார்த்திக் ரமாஸ்): தமிழகத்தேர்தலுக்கு சில பாபாக்கள் வந்தால், அவர்கள் கூட "அம்மா காலில்"தான் விழவேண்டியிருக்கும். (என்ன பெயரிலி, தங்கமணி, சுந்தரவடிவேல், சுந்தரமூர்த்தி... ஹிஹிஹிஹி வழக்கம் போல உண்மையை உளறிட்டேனா?)

உம்மைகள்