Sunday, July 30, 2006

பேசாத பேச்செல்லாம் பேசவந்தார்

எவ்வளவு நாள்தான் குண்டுச்சட்டியிலேயே குதிரை ஓட்டுவது? சரி ஊரையும் அடித்து ஒரு உலை வைப்போமே என்று கிளம்பியபோது நம்ம கண்ணகி கண்ணில் மாட்டினார்.

'என்னங்க மறுபடி மெரீனாவுல ஹாயா கடற்கரை காத்து வாங்குறீங்க போலருக்கு?' என்று ஆரம்பித்தேன்.
'ஆமாம் காற்று வாங்கப்போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்'ன்னு பாடற மாதிரியா கடற்கரை இருக்கு? அதுவும் ராத்திரியாச்சுன்னே இங்கே நிற்பதற்கு எனக்கே பயமாக இருக்கிறது. பேசாம குடோனிலேயே இருந்திருக்கலாம் போல...
'எப்பிடியோ வரவிருந்த இன்னொரு சுனாமிய தடுத்துட்டீங்க போலருக்கே?'
'அடப்பாவிங்களா இந்த பகுத்தறிவு ஆளுங்களோட ரோதனை தாங்க முடியலப்பா!'

பேசிக்கொண்டிருந்தபோதே நடிகர் திலகம் சிவாஜி தென்பட்டார். அழுதழுது கண்களெல்லாம் ரத்தச் சிவப்பாய் தோன்றின.
'என்னங்க ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு கடேசியில உங்களையும் கடிச்சிட்டாங்க போலருக்கு?'
'அட அத ஏன்பா கேக்குற? தமிழுக்கு என்ன சேவை செய்தேன்? அப்பிடின்னு ஜாதி சொல்லி அடிக்கிறாங்கப்பா... இவங்க முன்னேற்றத்திற்காக தமுமு ஆரம்பிச்சு கையில இருந்த மோதிரத்தக் கூட இழந்தேன். எல்லாரும் கேட்டாங்க முன்னேற்றத்துலேயே முன்னணி இருக்கேன்னு... அட தமிழனுக்கு ஒரு முன்னேற்றம் பத்தாதுன்னுதன் ரெண்டு வச்சி கச்சி நடத்தினேன். ஹூம் எல்லாம் என் நேரம்' என்றபடி 'ஜிஞ்ஞினக்கா சின்னக்கிளி சிரிக்கும் பச்சக்கிளி' என்ற சோக கீதம் இசைக்க ஆரம்பித்தார் செவாலியே. உண்மைக் கலைஞனுக்கே இந்த கதியென்றால் நான் எம்மாத்திரம் என்று நொந்து கொண்டேன்.

சைடில் 'சிவ சிவ சிவ சங்கரா நமக்கு எல்லாம் சாமிடா' என்ற பாடல் ஒலிக்க சிவன் சைடு வாக்கில் நடந்து போய்க் கொண்டிருந்தார்.
'என்ன மிஸ்டர் சிவன் நலமா?' என்றேன்
'அட நீ வேற குசும்பா... சிதம்பரசாமியான என்னை விட இப்ப ஆறுமுகச்சாமிதான் பேமஸ்'. பேசாம அவரோட சிலையை சித்சபையில வைச்சுடலாம்'
'ஓஹோ சிற்றம்பலத்தைத்தானே சொல்றீங்க?'
'அதான் வலைப்பதிவுல ஆர்க்கிடெக்சர் படமே போட்டிருந்தாங்களே. இப்போ எது பொன்னம்பலம்'னு கூட எனக்கே தெரியாது.'
'என்னது அப்ப பொன்னம்பலம் நீங்க இல்லியா?'
(சிவன் டென்ஷனாகிறார்)
'சரி சரி சபிச்சுடாதீங்க வரேன் என்று நழுவினேன்.

பாட்டு திடீரென 'யப்பா யப்பா அய்யப்பா கண்ணுல பிரஸ்னம் காட்டப்பா' உச்சஸ்தாதியில் அலறியது.

'வாங்க லார்டு அய்யப்பன். எப்பிடி இருக்கீங்க? ஆமாம் புலி எங்க கூட்டிட்டு வரலியா' என்று கிண்டினேன்.
'ஏம்ப்பா புலியப் பத்தி பேசி கிலி ஏத்துற? பொடாவுல புடிச்சி கிடிச்சு போட்டுடப் போறாங்க. இப்பதான் தம்பி படம் 110 நாள் விழாவுல கலந்த கையோட வரேன். அதான் புலிய கொஞ்ச நாளைக்கு ப்ளூ கிராஸுல கொடுத்துட்டு வந்திருக்கேன்'
'என்ன கோடம்பாக்கத்துக்கு நீங்களும் வந்திருக்கீங்க? உங்க தேவஸம் போர்டு தலைமை தந்திரி மோகனகண்டரு சொல்லி வந்தீங்களா?'
'அய்யப்ப சாமிக்கு இருக்குற மரியாதையே தவணை முறையில ஏலம் போடுறாங்க குசும்பா. இப்பதான் பிரஸ்னம் பிரச்சினை பின்னே போனது. மறுபடி மோகனரோட மோகப் பிரச்சினை. கல்லும் முள்ளும் மெத்தையாய் நடந்து வர என் உண்மை பக்தர்களை நினைத்து ஆறுதலடைகின்றேன்'
'ஜெய...'
'என்னது மறுபடி ஜெயமாலா பிரச்சினையா? ஆளை வுடு சாமி'
'இல்லீங்க ஐய்யப்பன். ஜெயம் என்றும் உங்களுக்கேன்னு சொல்ல வந்தேன்'
அய்யப்பன் ஆசுவாசமாகின்றார்.

பாடல் மாறுகின்றது...

உடலினை உறுதி செய்
ஏறு போல் நட
நேர்ப்படப் பேசு
நையப்புடை
நினைப்பது முடியும்

'யாரது யாரது தம்பி படப்பாடலை பா(போ)டுறது? உடனே ஆப் பண்ணுங்க' என்று பதறுகின்றார் அமைச்சர் பரிதி இளம்வழுதி.
'ஏங்க அது தம்பி படப்பாடல் இல்லீங்க பாரதியார் பாட்டு' என்றேன்.
'என்னது ஏங்கிட்டயே குசும்பா? ஏற்கெனவே நான் தம்பி பட 110 நாள் விழாவுல கலந்துகிட்டு முழிச்சிக்கிட்டு இருக்கேன். நீ வேற?'
'அதான் சொல்லிட்டீங்களே. நான் யாரோட பேச்சையும் கேக்கலேன்னு'
'தவறு. நான் தலைவர், தளபதி பேச்சை மட்டுமே கேட்பேன்'
'அப்போ கேக்கலைன்னு பேட்டி கொடுத்தீங்களே?'
'யோவ் அது மீட்டிங்லயா..."
'அப்போ தலைவரையோ, தளபதியையோ மீட் பண்ணினாலும் அவங்க பேச்சை கேக்க மாட்டீங்க அப்பிடித்தானே?'
'யப்பா தாவு தீந்து போச்சி ஆளை வுடு'


அப்போதுதான் கலை வாக்கிங் முடித்து கலைஞர் திரும்புகின்றார்.
'தல கலக்கிட்டீங்க. கலர் டிவி, அரிசி, ரெண்டு முட்டை'ன்னு கலக்குறீங்களே?'
'செப்பிஞ்சே நேனு சேஸ்த்தானு. சேஸிஞ்சே நேனு செப்தானு என்றான் பெத்தராயுடுவில் என் தம்பி ரஜினி. மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்குமென்று நான் அதை சுவீகரித்துக் கொண்டேன்'
'மிடாஸே யாருக்கு சொந்தம்னு கண்டு பிடிச்ச உங்களுக்கு சிறுதாவூர் பங்களா மட்டும் யாருதுன்னு கண்டுபிடிக்க முடியலியாக்கும்? உங்களோட முன்னாள் தம்பிகளான வைகோ, திருமா ரெண்டு பேரும் அது ஜெ'வோடது இல்லேன்னு சர்ட்டிபிகேட் கொடுக்கிறாங்க?'
'நான் கேட்கும் கேள்வியிலேயே பொதிந்துள்ள பதிலை உடன்பிறப்புகள் அறிவார்கள்'
'சட்டசபையை வாஸ்துபடி திருத்தியமைத்துள்ளாய் ஜெ கூறும் குற்றச்சாட்டு குறித்து?'
'மஞ்சள் துண்டால்' முகத்தை துடைத்தபடி 'பட்ஜெட் கூட்டத்தொடர் நலமாய் முடிந்ததிலிருந்து தெரியவில்லையா குசும்பா? மற்றபடி வாஸ்து பார்த்தது யாரென்று கண்ணகிக்கே தெரியும். வரட்டுமா?'

'கண்ணகி என்ன சொல்றீங்க?'ன்னு கேட்கத் திரும்பினால் அவர் சிலையாய் சமைந்து விட்டிருந்தார்.

Saturday, July 29, 2006

தேன்கூடு அரசியல்


கூட்டு வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக தேன்கூட்டைத்தான் கூறுவர். ஆனால் அங்கே நடக்கும் அரசியலைப் பற்றி வலைப்பதிவர்கள் கூட பேசமாட்டேன் என்றிருப்பதுதான் விந்தையிலும் விந்தை.

நேற்று ஒரு தகவல் படிச்சேன். அது என்னன்னா, தேனை புண்ணுக்கு மருந்தா வச்சுக் கட்டலாமாம். ஏன்னா தேனால கூட free'யா radicals உண்டாக்க முடியுமாம். என்ன கொடுமை பாத்தீங்களா? இங்கிலீஷுல வீக்கான நான் ஆங்கில திசாரஸ எடுத்துப் பாத்தா ரேடிகல்'னா அடிப்படை தீவிரவாதமுன்னு சொல்லுது. கொஞ்சம் சத்தமா சொன்னா தேன்கூட்டுக்கே தடாவோ பொடாவோ போட்டுடுவாங்க போலக்கீது!

அத்தோட விட்டுர்றதா? தேனுக்கு மட்டும் ஏனிப்படி தீவிரவத குணமுன்னு படிக்கப் போக, தேனீக்களைப் பத்தி நாம் அந்தக்காலத்துல படிச்சது மறந்து போயி ஒண்ணுமே தெரியாம இருந்துச்சா, சரி தேன்கூட்டையும் ஒரு கையி பாத்துரலாம்னு முடிவு செஞ்சேன். படிக்கப் படிக்க ஒரே ஆச்சரியம். உங்களுக்கும் இருக்கணுமே... இதைப்பற்றி காட்சியைக்கூட கனவாய்க் கண்டு எழுத்தாய் வடிக்கும் சுந்தரவடிவேல் எழுதவேண்டுமே என்று நினைத்தேன். அவர் ஏமாற்றவில்லை. நானும் ஏமாறவில்லை.

'தேன்' இலவச தீவிரவாதத்தை (free radicals) ஊக்குவிக்கின்றது என்ற ஊகமே தவறு என்கின்றார் இணையத்தில் எழுதும் பிரபல டாக்டர் சுந்தரவடிவேல். அதைப் பற்றி டில்லியிலிருந்து இயங்கும் 40 ‘தேசிய’(national) தேன்கூடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவை ஒவ்வொன்றிலும் உயர்ந்த 10 தேன்கூடுகளில் இருந்தபடி அந்தந்த தேனெடுக்கும் கூடுகளின் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் படைத்த தேனீக்களின் மதம், சாதி, பால் உட்பட பல விபரங்கள் சேகரிக்கப்பட்டன. இத்தேன்கூடுகளின் பட்டியலலைப் பிறகு தருகின்றேன் என்று மார் தட்டும் அவர், இவற்றில் 37 தேன்கூடுகளிலிருந்து பல விபரங்கள் கிடைத்ததையும் பட்டியலிடுகின்றார். ஆண்டாண்டு காலமாய் மனுதர்மத்தைக் கொண்டு அதர்மம் செய்யும் பிராமணீய சூழ்ச்சி மனித வாழ்க்கைக்கு மட்டும்தான் உண்டு என்று சொல்பவர்கள் கவனிக்கவும். ஒவ்வொரு தேன் கூட்டுலயும் மூனு வகை தேனீக்க இருக்கும். ஒரு 50,000 வேலைக்காரத் தேனீக்கள், ஒரு ராணி அப்புறம் 300-3000 ஆண் தேனீக்கள். இங்கேதான் தேன்கூடு வர்ணாசிரமம் ஒளிந்திருக்கின்றது என்கின்றார் சுந்தரவடிவேல்.

மேலும், "வேலைக்காரத் தேனீக்கள் எல்லாரும் பொண்ணுங்களாம். ஆனா முட்டையிடவோ, புணரவோ முடியாது. ஏன்னா ராணித் தேனீகிட்டயிருந்து வர்ற ஒரு சுரப்பை (pheromone) இவங்க சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க, இந்தச் சுரப்பு இவங்களை முட்டையிடாம வச்சிருக்கும். இந்தச் சுரப்புலேருந்து வர்ற வாசனைதான் அவுங்கவுங்க கூட்டை அடையாளம் கண்டுக்க உதவுது. வேற கூட்டுக்கு மாறிப் போமாட்டாங்க, அப்புடிப் போனா அங்க வேற வாசம், கொட்டு வாங்க வேண்டியதுதான்" என்ற கொடுமையையும் தெரிவித்தார்.

இது குறித்து தேன்துளி என்னும் பத்மா அரவிந்த் என்ற வலைப்பதிவாளரின் கருத்தைக் கேட்டேன். வழக்கம் போல அனைத்து செய்திக்கும் நன்றி கூறும் நல்லவரான அவர் இச்செய்திக்கும் நன்றி கூறி ஆரம்பித்தார், "இது கண்டிப்பாக கண்டிக்கப்பட வேண்டியது. என்ன கருத்துக் கூறுவது என்று நான் குழம்பியிருந்த வேளையில் நான் கூற நினைத்ததை என்னை விடத் தெளிவாக சுந்தரவடிவேல் கூறி விட்டார். நன்றி" என்றார்.

ஏன் வேலைக்கார தேனீக்கள் பெண்களாய் மட்டும் இருக்க வேண்டும்? இது குறித்து அச்சு ஊடகத்திலும் புகுந்து புறப்பட்ட பிரபல வலைப்பதிவரான ராமச்சந்திரன் உஷாவைக் கேட்டோம். "அட அத ஏன் கேக்குறீங்க... என்னைப் பொறுத்தவரை ஒரு சம்பவம் ஒரு முடிவுதாங்க. மேலும் ஒரு சம்பவத்துக்கு ஒரு கேள்வி கேக்கலாமுன்னுதான் மொதல்ல இருந்தேன்" என்று சஸ்பென்ஸோடு அவர் தொடர முயல அவரது விஷயதானத்துக்கு நன்றி சொல்லிப் புறப்பட்டேன்.

"தேனீக்கூட்டமே ஒரு விபச்சாரக் கூட்டம்", என்று காட்டமாக ஆரம்பித்தார் இணைய சமூக நீதிக்காவலரான கார்த்திக் (ர)மாஸ். இதற்கு சான்றாக கையிலிருந்த ஸ்கேன் செய்யப்பட்ட வால்மார்ட் டிஷ்யூ பேப்பரைக் காட்டினார். "வேலை செய்ய வேண்டுமாம். அதுவும் பெண்களாம். ஆனால் புணரக் கூட முடியாதாம்; இதிலிருந்தே தெரியவில்லையா இது பிராமணீய அவாள் சூழ்ச்சி", என்று தனது நீதியை நிலை நாட்டினார்.

'பெண்ணுக்கு பெண்தான் எதிரி' என்று மெல்ல ஆரம்பித்தார் அருணா ஸ்ரிநிவாசன். ராணித்தேனிதான் மத்த வேலைக்கார தேனீக்களுக்கு எதிரிங்றது வருத்தம் வரவைக்கின்றதென்றும், இது குறித்து அடுத்த மாத திசைகள் பெண்கள் சிறப்பிதழில் வரவிருக்கின்றதாகவும் தெரிவித்தார்.

முன்னாள் கொழாயடிச் சண்டையை இன்று தீர்த்துக் கொள்பவர் போல், "இது நல்லாருக்கு:)) நல்ல பதிவு" என்று குழப்(ம்)பினார் செல்வநாயகி.

"தேன்கூட்ட ஒரு குடும்பமால்ல நான் நினைச்சிக்கிட்டுருந்தேன். இப்ப என்ன ஆச்சி?" என்ற துளசி கோபாலை இன்னும் குழப்ப விரும்பாமல் அகன்றேன். தன்னோட எடைக்குச் சமமான எடையுள்ள அளவு தேனை ஒரு தேனீயால தூக்கிக்கிட்டு பறக்க முடியுமாம் என்ற செய்தியை அவர் கோபாலுக்கு தெரிவிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். அடுத்தமுறை இந்தியாவிலிருந்து திரும்பும் போது லக்கேஜ் ஹேண்டில் பண்ண ஊக்காமாய் இருக்குமென்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

"கூட்டுப்புழுவுலேருந்து புதுசா வெளியில வந்திருக்க சின்ன வேலைக்காரத் தேனீக்கள் மெழுகைச் சுரக்கும். குண்டூசி தலையளவுக்கு. அதையெல்லாம் பெரிய வேலைக்காரத் தேனீக்க சுரண்டிக்கிட்டு வந்து கூடு கட்ட, அறையை அடைக்கன்னு வச்சிக்குமாம். சுரப்பது ஒரு தேனி. அதை சுரண்டுவது இன்னொரு தேனி. இந்த இரண்டு தேனிக்களும் இணையாதா என்று சிறிய வயதிலிருந்து ஆதங்கப்பட்டவன் நான். ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் நடந்து வரும் இந்த அநியாயத்தை நிவர்த்தி செய்யத்தான் அய்யாவும், சின்னாய்யாவும் உளமாற உழைக்கின்றார்கள். இன்று இரு தேனீக்களும் இணைந்ததைப் பார்த்து தேன் குடித்த நரியாய் இருக்கின்றேன்" என்றார் குழலி.

"வேலைக்காரத்தேனீக்கள் என்றாலே இளக்காரமாகிவிட்டது. அதனால்தான் எல்லாரும் இளக்காரம் செய்கின்றார்கள்", என்று நொ(கொ)தித்தார் முத்து தமிழினி.

'உழைக்காமல் உண்டு கொழிக்கும் ராணித்தேனி ஒரு பாப்பாத்தி' என்ற அரிய தகவலை நியோ அகழ்வாராய்ந்து தெரிவித்தார். டோண்டுவோ "வேலைக்காரத் தேனீக்கள் இது குறித்து அதிகம் கவலைப்படக்கூடாது. போடா ஜாட்டான் தேனீக்களா", என்று சொல்லிவிட்டு தன் வேலையைப் பார்க்க வேண்டுமென்று தெரிவித்தார்.

ஒரு தேனீ போயி புதுசா ஒரு இடத்துல தேன் இருக்கதைக் கண்டுபுடிச்சுட்டு வந்துச்சுன்னா, கூட்டுக்குள்ல வந்து ஆட்டம் போடும் என்ற தகவலைக் கேட்டு நல்லடியார் கொதித்துப் போனார். இந்த மாதிரி பெண் தேனீக்கள் ஆட்டம் போடுவதை வன்மையாகக் கண்டித்து பதிவு போடப்போவதாகக் கூறினார். 'இதென்ன கொடுமை. பெண்தேனீக்களுக்கும் புர்கா போடுகின்றார்கள். இந்து மதம்தான் பெண் தேனீக்களுக்கு அதிக சுதந்திரம் கொடுக்கின்றது' என்ற தனது கருத்துடன் பதிலடி தரப்போவதாய் நேசகுமார் தனது ரகஸிய மறைவிடத்திலிருந்து தெரிவித்தார்.

இதனால் எரிச்சலடைந்த சீமாச்சு, "தேன்கூடுங்றது ஒரு பிரைவேட் பிராபர்டி. அங்க என்ன செய்யணுங்றத தேனீக்களே முடிவு செய்யட்டும்" என்றார்.

"தேன் கூட்டுல தேனீக்கள் ஆட்டம் போட்டதுங்றது பிரச்சினையா? இல்ல வேலைக்கார தேனீக்கள் ஆட்டம் போட்டதுங்றது பிரச்சினையா? இதையெல்லாம் வுட்டுட்டு தேனைக் குத்தம் சொல்றது என்ன நியாயம்?" என்று ரெண்டு படம், எழுபது சுய பின்னூட்டங்களோடு முகமூடி பதிவெழுதினார். இதனால் ஆவேசப்பட்ட ஆருரான், "ஈழத்தமிழருக்கு தேன் உயிர் போன்றது. தேனையும் அவர்களையும் பிரிக்க முடியாது. ஆனால் தேனெடுப்பதற்காக தீப்பந்தம் ஏந்தி ஞானசம்பந்தத்தை போல் தேன்கூட்டை எரித்தது பிராமணர்களே", என்ற திடுக் ரக குற்றச்சாட்டை முன் வைத்தார்.

"நம்மள மாதிரி கடுந்தோலுக்குள்ள தேனி கொட்டினா கொக்கி மாட்டிக்கிட்டு எடுக்க முடியாது. விர்ருன்னு கிளம்பி பறக்குற வேகத்துல கொடுக்கோட சேர்ந்த தேனீயோட கொஞ்சம் உடம்பும் பிஞ்சு போயிடும். அதனால மனுசனைக் கொட்டின தேனீ கொஞ்ச நேரத்துல செத்துப் போயிடும். இது தெரியாம கொட்டுன தேனீயை அடிச்சுக் கொல்ல நினைக்கிற விஷமத்தனத்தைதான் திம்மித்துவம்", என்றார் வஜ்ரா ஷங்கர். அதற்கு ஆமாம் போட்ட கால்கரி சிவா இத்தகைய திம்மித்துவ திமிரை தான் அரேபியாவில்தான் அதிகம் பார்த்ததாகக் கூறினார்.

"பொல்லாத தேனியே போகுமிடம் போய்ச் சேர்ந்தாயே" என்று தேனிக்கலம்பகம் கவிதையை எடுத்து விட்டார் ஜயராமன். "நீங்களாவது ஒரிஜினல் கவிதையைப் போட்டீங்க. ஆனா என் நெலமயப் பாருங்க. என்னோட படம் போட்டு போலிப்பதிவுல உல்டா படப்பாடல்களை போடறாங்களே..." என்று உண்மையாய் வருத்தப்பட்ட சிவஞானம்ஜியை எவ்வாறு தேற்றுவதென்று தெரியவில்லை.

"ஒரு சின்ன தேன்கூட்டுல 50,000 தேனீக்களா? ஒவ்வொரு தேனியும் வெறும் ஸ்மைலியைப் பின்னூட்டமா போட்டாக் கூட பிச்சுக்கிட்டு போகுமே" என்று இலவசக் கொத்தனார் கணக்குப் போட ஆரம்பித்தார். "எழுதினேன் ஆறு வரிக்கதை; கிட்டியது ஐம்பது பின்னூட்டங்கள்" என்று கூவினார் பாபா. கொட்டக் கொட்ட இவரும் ஆனாரோ தேனீ என்றால் எனக்கும் தேன்கூட்டிற்கும் சம்பந்தமில்லை என்றார். விட்டால் இதற்கு ஐம்பது சுட்டிகள் தருவாரென்ற பயத்தில் எஸ்கேப் ஆனேன்.

'ராணியும் மத்த தேனீக்கள் மாதிரிதான் முட்டையிலேருந்து வரும். ஆனா புழுக்களைப் பாத்துக்கற வேலைக்காரத் தாதிமார் தேனீக்கள் சில புழுக்களை மட்டும் தேர்ந்தெடுத்து அதுக்குன்னு சிறப்பான சாப்பாடு (ராயல் ஜெல்லி) குடுத்து வளப்பாங்களாம். அதுதான் பின்னாடி ராணித்தேனீயா வருமாம்' என்ற செய்தியைக் கேள்விப்பட்ட செந்தழல் ரவி இதையே 'தேனீக்களுக்கு ஒரு கேள்வி' என்ற பதிவாய் 'ஒரு ராணியை மட்டும் ஊட்டி வளர்ப்பது ஏன்' என்று போ(கே)ட்டுவிடலாமா என்று யோசித்தார்.

'ஆண் தேனீக்குக் கொடுக்கு இல்லை. இவங்களுக்குத் தேனும் சேகரிக்கத் தெரியாது. சும்மா சுத்திக்கிட்டு இருப்பாங்க. கூட்டுக்கு ஏதாச்சும் ஆபத்து வந்துட்டா கத்துவாங்க. அட அவிங்களும் நம்மளப் போலன்னா அவிங்களயும் நம்மளோட வருத்தப்படாத வாலிபர் சங்கத்துல உறுப்பினராக்கி விடமாலா?' என்று கைப்புள்ள சின்னப்புள்ளத்தனமாக் கேட்டுக் கொண்டிருந்தார்.

"ஆண் தேனீக்களோட முக்கிய வேலை ராணியைப் புணருதல். ஆனா ஒரு தரந்தான். அந்தப் புணர்ச்சி முடிஞ்சதுமே ஆண் ஈயோட உறுப்பு ராணியோட உறுப்புல மாட்டி அறுந்து போகும், உறுப்பறுந்த ஆண் தேனீ கொஞ்ச நேரத்துல செத்துரும்", என்றவுடன் நமக்கு குறியறுக்கும் வேலையைக்கூட வைக்கவில்லையே என்று ரோஸாவஸந்த் குலுங்கி குலுங்கி அழுதபடியே கால்பந்தாட்டம் பார்க்க சென்று விட்டார். குமரனோ ஒருபடி மேலே சென்று "புணரவி ஜனனம், புணரவி மரணம்" என்ற பாடலைப் போட்டு ஐநூறு பின்னூட்டங்களை அள்ளிச் சென்றார்.

தேனீக்களைப் பற்றி அனைத்து செய்திகளையும் படித்த தருமி, கண்களில் நீர் கசிய இன்ஸ்டண்ட் பதிவு போட்டு "This dude Worker Bee..." என்று உணர்ச்சி வசப்பட்டார்.

தேன்கூட்டு அரசியலைக் கேட்ட பத்ரி, அதற்கு தேனீக்களே முழுப் பொறுப்பு என்று சுட்டிக் காட்டினார். உதாரணமாக இஸ்ரேல், ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், அமெரிக்கா, அண்டார்டிகா போன்ற நாடுகளிலிருக்கும் தேன்கூடுகளைச் சுட்டிக் காட்டினார். இலங்கையில் தேன்கூடு பற்றி கருத்து தெரிவிப்பதைக் கவனமாகத் தவிர்த்தார்.

தேன் என்று வலைப்பூ வைத்திருக்கும் சிறில் அலெக்ஸை சந்தித்தேன். கட்டாயமாக எங்குமே, யாருக்குமே தேன் புகட்டப்படுவதில்லை என்று அவர்அடித்துக் கூறினார். நீங்கள் விரும்பினால் தேன் குடிக்கலாம். ஆனால் கட்டாய தேன் மாற்றம் நடந்ததே இல்லை என்றார்.

"தேனீக்களை நினைக்கும்போது எனக்கும் ஏதோ வருத்தமாக இருந்தது. புணர்ச்சியின் திளைப்பை அறிந்திராதவொரு வாழ்வினை அவை எப்படி வாழ்கின்றன? அல்லது புணர்ச்சியும் அதனைச் சார்ந்த விதிகளும், பிணக்குகளும் வேலையைக் கெடுக்கும் என்பதாலா அவர்களுக்கு இந்த முட்டையடிப்பு? பின் அவை எதனால் இன்புறுகின்றன? இந்தக் கடமையாலா? கர்ம யோகமா? யாரைக் காப்பாற்ற அந்த 4-5 வார ஓயா ஓட்டம்? புணர்ச்சியின்பம் உட்பட நிறையோ குறையோ வெளியிலிருந்து பார்க்கும் என் மனதின் கற்பிதங்களோ?" என்று சிந்தித்தபடி போலியார் அடுத்த கதைக்கு கருக் கிடைத்த மகிழ்ச்சியில் திளைப்பதாய் சிம்ரன் ஆப்பக்கடை ஏஜென்ஸியின் செய்தி கிட்டியது.

"என்னது ராணியா எங்க எங்க?" என்று முழுதாய் செய்தியைக் கூட உள்வாங்கிக் கொள்ளாமல் ஜொள்ளுப்பாண்டி நம்மை துரத்தினார். இவர் சீட்டுக்கட்டு ராணியைக் கூட விட மாட்டார் என்ற எண்ணம் வர ஓட ஆரம்பித்தேன்.

"ஓடினேன்...ஓடினேன்... வாழ்க்கையின் எல்லைவரை ஓடினேன்" என்று ஒருவர் கூட ஓடிவர ஆரம்பித்தார். "அட தேன்கூட்டுலயும் அரசியலா?" என்றவரை பரிதாபமாக ஏறிட்டுப் பார்த்து மெல்ல திடுக்கிட்டேன். "அட வாங்க காசி" என்றேன் மூச்சிரைத்தபடி...

(தேன்கூடு அரசியல் பற்றிய வாசகர் அனுபவங்கள் வரவேற்கப்படுகின்றன. அடுத்த பதிவில் தொடருவேன் :-)

Wednesday, July 26, 2006

பாப்பையா அரங்கம்

(விசு போயிட்டு சன் டிவி அரட்டை அரங்கத்துல பாப்பையா வந்தாருன்னு கேள்விப்பட்டேன். நிகழ்ச்சியை பாக்கத்தான் முடியல. ரோசிக்கக்கூடவா முடியாது? டைட்டிலு "சமூகநீதி காப்பவர்கள் அரசியல்வாதிகளா? வலைப்பதிவர்களா? சினிமாக்கலைஞர்களா?" இடம் காரைக்குடி செஞ்சி பொட்டல்.)

பாப்பையா (பாப்): ஹூம் வாங்கையா வாங்க. என்ன இப்பிடி குமிஞ்சிட்டீங்களே... ஆம்பளங்க கூட்டம் அதிகமா இருக்குதுன்னா வூட்டுக்கார அம்மாகிட்ட சண்டை போட்டு வந்தீகளான்னு கேக்கலாம். பொம்பளங்க கூட்டம் கூட அதிகமா இருக்குதேப்பா. இத்தனைக்கும் நான் சினிமாக்காரன் கூட இல்ல (ஹெஹ்ஹெஹ்ஹே) (கூட்டமும் சேர்ந்து சிரிக்கின்றது)

1: ராஜா ஸார் அந்த மைக்க இப்பிடி கொடுங்க. யாருங்க இப்பிடி கேனத்தனமா தலைப்பை வைச்சது? சமூகநீதின்னா என்னான்னு உங்க யாருக்காவது தெரியுமாய்யா?
பாப்: ஏன் நீங்க கொஞ்சம் சொல்லித்தாரது. தள்ளாத வயசுன்னுதான் இருக்கே, தவிர தெளியாத புத்தின்னு இல்லியே (சிரிப்பு)
1: இப்ப என்ன சொன்னீங்க? மக்களும் எதுக்கு சிரிச்சாங்க?
பாப்: அட என்னாப்பா நீ இந்த குதி குதிக்கிற? நம்ம ராஜா நல்லா புட்பால் ஆடுறவரு. அப்புறம் ஜிடானே மாதிரி முட்டிடுவாரு. அம்புடுதேன். ரெட் கார்டு கொடுக்க ரெப்ரி கூட கிடையாதப்பு.
1: என்ன மெரட்டுறீங்களா?
பாப்: அட யாரப்பா இந்த ஆளு. ஜோக்கு சொன்னா ரசிக்கணும்ப்பா. ராஜா மைக்க பாஸ் பண்ணுப்பா...
2: அய்யா வலைப்பூ படிச்சிருக்கீங்களா? சமூகநீதியை சும்மா பிச்சி உதற்றாங்கப்பு.
3: அட சும்மா ஒக்காருப்பா. எங்க தலைவரு ஒரு கொரலு உட்டாருன்னா போதும். நீதி தானா நெல நாட்டிக்கும்.
4. கஸ்மாலம் உன் தலீவரு என்னிக்கு கொரலு வுடுறது? சமூகநீதி என்னைக்கு கெடைக்கிறது? என் தலீவரைப் பாரு. கொரலு என்னா? எல்லாத்தையும் வுடுவாரு.
(ரவுசுப்பாண்டி கூட்டத்திலிருந்து சவுண்ட் கொடுக்கிறார். "யோவ் எல்லாத்தயும் உள்ள உடுறதுக்கு உன் தலீவரென்ன ரோஸா பூர்ஷ்வாவா? 'டேய் எவண்டா அந்த மலப்புழு'வென்று ஏகவசனத்தில் ஒருவர் தமிழில் தெகிரியமாய் எகிற கூட்டம் களை கட்டுகின்றது)
பாப்: ராசாக்களா (அட உன்¨னெய இல்ல ராஜா) நீங்க ரெண்டு பேரும் பூர்ஷ்வாவைப் பத்திப் பேசி அவரோட பூவாவுக்கு வேட்டு வைச்சிடாதீக. (சிரிப்பு)
2: தலைவர்களை நம்பிப் பிரயோஜனம் இல்லையென்றுதான் வலைப்பதிவாளர்கள் தனி இயக்கம் கண்டு சமூகநீதியை நிலை நாட்டுகின்றார்கள். அப்பேரியக்கம் 50 பேர்களை தன்னுடன் இணைத்து அசுர வேகத்தில் வளர்கின்றது. இதோ கிடைத்து விடும் நமது சமூக நீதி. கிடைத்து விடுமென்ன. கிட்ட வைப்பேன்.
பாப்: இதோ நீ கேட்ட சக்தி. திட சக்தின்னு இன்ஸ்டண்டா சமூகநீதி கெடைக்குதுன்னு நம்பர் -2 (என்று நிறுத்த கூட்டத்தில் சிரிப்பலை) அட அவரோட எண்ணைச் சொன்னேன்பா... சொல்லிட்டாரு. ஹீம்ம்ம் இப்ப மூணு என்ன சொல்றாரு?
1: ஏங்க சமூகநீதின்னா உங்களுக்கு என்னான்னு தெரியுமா? தெரிஞ்சா சொல்லுங்க பாப்போம். அரட்டையாம்... அரங்கமாம்...
4: உன் தலீவருக்கு ஏது வாய்ஸ்? அத்தான் அடக்கிப்புட்டோம்ல. இப்ப எங்க தலீவரப் பாரு. சென்ட்ரலுக்கே மருத்துவம் பாக்குறாரு...
3. அதுதான் ஊரே சிரிப்பா சிரிக்குதே... லேட்டஸ்ட் ஹிட்டுப் பாட்டு பாடறேன் கேளு...
"கோபாலா
ஏன் ஸார்?
எங்க போற?
AIIMS போறேன்
என்னா செய்ய?
சேவை செய்ய
தூக்கியடிச்சா?
கேஸ் போடுவேன்
யாரைப் போல
ஹூம் உங்கைய்யாப் போல
"
பாப்: (ஆஹா கூட்டணி வேலைக்கு உலை வைச்சிடுவானுங்க போலருக்கே என்ற கடுப்புடன்) சந்த்ரு பாட்டு ப்ப்ரம்மாதம்'ன்னு சொல்ல முடியுமா? சொல்லத்தான் விடுவாய்ங்களா? சரி நம்பர் மூணு சம்சாரத்தோட சண்டை போலருக்கே... சரி 4 வாங்க வாங்க ஒரு கை ஓசையாப் போகக்கூடாதுல்ல...
4: ஓவரா ஆடாதீங்கடா... ஒரு படத்தை ஓட விட்டோம். பெருந்தன்மையா 'லக்கலக்க' வெற்றிக்கு உண்மையான காரணமான எங்கள வுட்டுட்டு யாராருக்கோ போஸ்டர் ஒட்டுனீங்களே... நாங்க அத மறந்துடல. மவனே எங்க பெல்ட்டுக்கு வாங்க வைச்சிக்கிறேன்
3: அப்பு எங்ககிட்டயே பயாஸ்கோப்பா? மவனே ஜெயங்கொண்டம் தேர்தல் மறந்து போச்சா? உங்க பெல்ட்டுக்கே வருவோம். ஆனாலும் பெல்ட்டுக்கு கீழ அடிக்க மாட்டோம்.
1: (அழாத குறையாய்) அய்யா சமூகநீதின்னா என்னான்னு தெரியுமா?
பாப்: பெல்ட்டுக்கே வருவோம். பெல்ட்டுக்கு கீழ அடிக்க மாட்டோம். அட்றா சக்கை அட்றா சக்கை. வேட்டிக்கே பெல்ட் போட்டு புரட்சி செஞ்சவன் தமிழனாச்சே. கட்டி அவுந்துடாம சட்டுன்னு கழட்டி நச்சுன்னு எங்கப்பா என்னைய அடிச்சது ஞாபகத்துக்கு வருதுப்பு. இப்ப அந்தா மாதிரியான அடிய 3 நம்ம நாலுக்குக் கொடுத்துட்டாரேப்பா... ஸ்ஸப்பா என்னா அடி என்னா வலி (சிரிப்பு) ஹூம் வாங்க நாலு
5: எங்கள் நம்பர் டூவை மதிக்காமல் இருந்ததற்காக எங்கள் இயக்கத்திடம் நீங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும். கோரிக்கை வைப்பேன்.
பாப்: (ஜெர்க்காகி...இந்த டயலாக்கை எங்கேயோ கேட்டிருக்கேனே என்று யோசித்தவாறு) வாய்யா வா இம்சை அரசன் இரண்டாம் புலிகேசி மாதிரி ரெண்டுக்கு சப்போர்ட்டா வந்திருக்கீக. வாங்க வாங்க. என்ன எப்பவுமே சப்போர்ட் ரோல்தானா? கொஞ்சம் மெயின் ரோலும் பண்றது?
5: ஹிஹி என்ன செய்வது பாப்ஸ். சட்டியில இருக்குறதுதான அகப்பையில வரும். வைச்சுக்கிட்டா வஞ்சனை பண்ணப் போறேன். ஒரு எழுத்தாளனா சமூகநீதியைப் பாக்குறப்போ...
பாப்: (ராஜா சீக்கிரம் மைக்கை வேறாள்கிட்ட கொடுப்பா...என்று சிக்னல் செய்கிறார்)
1. அடப்பாவிங்களா? சமூகநீதின்னா என்னான்னே சொல்லாமே வஞ்சனை பண்றீங்களே? நியாயமா? இந்தக்கூட்டத்துல எத்தினி பேரு இப்பிடி சத்தியப் பெரமாணம் எடுக்க முடியும்... ஹைய்யோ ஹைய்யோ ஹைய்யய்யோ...

(இனிமேல் தொடர்ந்தால் குழப்பம் மேலிடலாமென்பதாலும், முதலாவது முறையென்று முன்னோட்டமிட்டதாலும், பின்னூட்டமாய், படம் பார்த்து வெளிவந்த பாக்கியவான்களிடம் மைக் பிடித்து பேட்டியெடுக்கின்றார்கள் சம்பந்தப்பட்ட டிவிக்காரர்கள்)

குழலி: ஹிஹிஹிஹி யாராரு சமூகநீதி பேசறதுன்னு வெளங்காமப் பூடிச்சு. அந்தக்காலத்துல அபிமன்யுவிற்கு எதிரா அரவாணன் செய்யாததா? சாதியென்ற சட்டகத்தை உடைத்த எமது ஐய்யாவும், அவரது அறங்காவலரான சமூகநீதிக் காவலரான சின்னய்யாவை விடவா மற்றவர்கள் செய்து காட்டி விட்டார்கள்? ராஜா என்ற பெயரிலேயே கண்வாய் கடந்தது தெரியவில்லையா? எனக்கென்னவோ முதாலாமவர் அறிவுப்பசி அண்ணாசாமி போலவே தெரிகின்றது.

முகமூடி: அடப்போங்கய்யா... சமூகமாம் நீதியாம். இவிங்க இப்பிடி இருக்கிறவரைக்கும் இளிச்சாவாய்த்தனமாய் இங்கிதமின்றி அலையமுடியுமே தவிர நான் கேட்டதுக்கு சத்தியம் போடக் கூட ஆளில்லங்றதுதான் நிதர்சனம். எனக்கென்னமோ நம்பர் ரெண்டு குவாட்டர் கோவிந்தன் போலத்தான் தோணுது. மத்தபடி நிகழ்ச்சியப் பத்தி நூறு பின்னூட்டம் வந்தா என்னோட பங்களிப்பான எழுபதாவது பின்னூட்டங்களில் அறுபத்து ஒன்பதில் பதில் சொல்வேன். மத்தபடி இந்த ஸ்டேட்மெண்டும் ஒரு வெறும் டிஸ்கிதான். முன்னாடியே சொன்னாலும் சொல்வேன்.

சுந்தரமூர்த்தி: (பலதும் சுட்டிக்காட்டி, சைகையுடன் பேசுகின்றார்) அன்று அவ்வாறு பேசிய மொழிநடையிலேயே, இன்று இவ்வாறு ஒருவர் பேசினால் அதற்கு அவரும் இவரும் ஒன்றுதானே? இதை நான் பாப்பையாவைப் போலவே சொல்ல முடியாது. பேசினால் கோர்ட், கேஸ் என்பார்கள். இல்லாவிட்டால் சுனா.மூனா என்பார்கள். இதையேத்தான் இணையார்த்தி அஃதாவது இணைய+மெக்கார்த்தி என்பார்கள். சரிதானே?

(டிவி நிருபர் தனது மண்டையில் மைக்கால் தானே அடித்துக் கொண்டு மூர்ச்சையாகின்றார். யாரோ மூர்ச்சை தெளிவிக்க...)

மாயவரத்தான்: எல்லா இடத்திலும் போஸ்டர் ஒட்டினார்கள். அது அந்த வாரம். போஸ்டர் ஒட்டுவதற்குதானே இடமே இருக்கின்றது. அது இந்த வாரம்.
கார்த்திக்ரமாஸ்: இங்கே பேசியவர்களில் பலர் தெருப்பொறுக்கிகள். விபச்சாரம் செய்கின்றவர்கள். கூட்டிக் கொடுக்கின்றவர்கள்

(நிருபர் பதறுகின்றார்)

ரோஸாவஸந்த்: பாஸ்டர்ட். அவனுங்க குறி அறுக்க வேண்டும்.

(ஒரு கூட்டமே ரோஸாவையும், கார்த்திக்ரமாஸையும் உச்சி மோந்த்து அழைத்துச் செல்லுகின்றனர்)

கோஷம்:

முன்னாள் தமிழ்மண நட்சத்திரம் ரோஸா வாழ்க
இன்றைய தமிழ்மண நட்சத்திரம் ரமாஸ் வாழ்க

காசி: ஆம் இப்படித்தான் எல்லாம் நடந்தது என்பதை தெளிவாகப் புலப்படுத்தவே, எனது ஒரு டஜன் பதிவுகளில் கிசுகிசுவாய்க் கூறினேன். என்னை விட சேவை செய்து மௌனம் காத்தவர் பலரென்றாலும் 'கூந்தலிருப்பவள் அள்ளி முடிந்துக் கொள்வாளெ'ன்று நீங்கள் கூறுவதை நன்றியோடு ஏற்றுக் கொண்டு, 'போட்டதை எடுத்த தெம்புடனாவது இப்போதைக்குச் செல்கின்றேன். பின்னர் பிளாக்தேசமாய் ஆங்கிலத்தில் வருவேன். போய்வருகின்றேன் நன்றி'.

(நிருபர் மேலும் குழம்ப...)

இப்போதைக்கு திரை

Saturday, July 15, 2006

சில வரலாறுகள் சில திரிபுகள்

குசும்பன் பதிவுகளெல்லாம் டாவின்சி கோடு மாதிரி இருக்கு (என்னோட கழிவுகள் கூட வானவில் கலரில் இருக்கும்: நன்றி இளவஞ்சி, இணை நிர்வாகி, தமிழ்மணம்) கொஞ்சம் புரியிற மேரி எய்து நைனா'ன்னு வேண்டுகோள் வராத இடமேயில்ல பாசு... சரி புரியிறா மேரி எய்துவோம்னு லின்ங்ஸ் கொடுத்தா எவ்ளோ இடங்கள்ல சுட்டி சுட்டி மேட்டர கண்டுக்கிறது? ஸ்ட்றைட்டா பேரப் போடு நைனா'ங்றாங்க. பேரு போட்டாலும் போடாட்டியும் தொடர் தாக்குதல்'னு கூச்சல் போட இணையத்துல ஆளுங்களா இல்ல?

சந்தேகம்: பார்த்தால் பசி தீரும்'ங்றது சொலவடைங்க. நம்ம உபிச பெயரிலி அண்ணை இல்லாத குறையை நிவர்த்தி செய்யும் வழியாய் ரோஸா அண்ணை இப்போ வந்துள்ளார். அவரோட ஸ்டேட்மெண்ட் 'குசும்பனை நான் படிப்பதில்லை. ஆனால் மலத்தின் சுவை பார்த்தாலே தெரியுமென்று'. அட்றா சக்கை (அப்டிப்போடு' என்றுதான் சொல்ல வந்தேன்). பார்த்தால் சுவை எப்படித் தெரியும்? அது சரி... வசூல் ராஜா பாணியில் சொலவடையை அனுபவிக்கணும். அர்த்தம் கேக்கப்படாது'ங்றேளா? அதுவுஞ் சரி...

ஆமாம் ஹிஸ்டரின்னா என்னாங்கோ? ஒரு கோட் "...history is always written by the winners. When two cultures clash, the loser is obliterated, and the winner writes history books - books which glorify their own cause and disparage the conquered foe. As Napoleon once said, "What is history, but a fable agreed upon?"... "By its very nature, history is always a one sided account."

--- The Da Vinci code by Dan Brown (page: 276)

சைடுடிராக் 1: யுனிக்கோடு, தேனி தானியங்கி எழுத்துரு இப்பிடி எதுவுமே தெரியாத டெக்னிகல் முடம் நான். இதையெல்லாம் யாரு செஞ்சாங்க? ரொம்ப நாளாத் தெரியில. ஒரு 'வரலாறு' கூட இல்ல. இன்னிக்கு உமர்தம்பி என்பவர் பற்றிய மரணச் செய்தியில் பல செய்திகளை, நிகழ்வுகளைத் தெரிந்து கொண்டேன். இப்படியும் ஒரு மனிதரா என்று வியந்து கொண்டேன். புகழ் வெளிச்சம் கிட்டவில்லை என்று ஆதங்கப்படும் மனிதருள், மாணிக்கம் உமர்தம்பி அவர்கள். அன்னாரது மரணம் ஒரு நிறைவிக்க முடியாத வெற்றிடம். பொன்னுடல் நீத்தாலும் அன்னார் புகழுடம்பு எய்தினார். அன்னாரது குடும்பத்திற்கு குசும்பன் ஆழ்ந்த அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கின்றான்.

இப்ப வரலாறுக்கு வர்றதுக்கு முன்னாடி ஒரு புவியியல் சமாச்சாரம். சில/பல மாற்றங்களில் நானும் கொஞ்சம் பிஸி. இதுவே செல்வராஜ் (தமிழ்மண இணை நிர்வாகி) சொன்னா நியூஸ். அதையே நான் சொன்னா தொடர் தாக்குதல். என்னப்பா நியாயமிது? சத்தியமா நௌப்ரானே புவியியல் மாற்றங்களில் நானும் பிஸி. உடனே தேசபக்தி அதிகமாகி இந்தியா போறேனா?'ன்னு கேள்வி கேக்காதீகப்பு. நம்ம தேசபக்திதான் இப்ப உலகமே (அதாங்க பெட்டி பூர்ஷ்வாவிற்கு தெரியும்) அறியுமே!

சைடுடிராக் 2: சொந்த செலவில் சூனியம் வைக்கிறது (நன்றி: இளவஞ்சிக்கு சொல்லிக் கொடுத்த 'யாரோ') அப்டீங்ற புது சொலவடையை கொஞ்ச நாளா மக்கள்ஸ் ப்ரீயா பயன்படுத்துறாங்க மாமே! 'அப்னே பேரோமே குலாட்டி (குத்துமதிப்பா சொந்த காலிலே குத்திக்கோ)' இப்பிடி ஆரிய மக்கள்ஸ் சொன்னதை திராவிடப்படுத்திய யாரோவிற்கு நன்றி!

இப்ப காலம் முந்தியமாதிரி இல்லை. உமர்தம்பி தன்னை, தனது சேவைகளை அடையாளப்படுத்த விரும்பாவிடினும் வரலாறு அன்னாரை அடையாளங்காணும். இனங்கண்டு கொள்ளும். பெருமிதத்தில் விம்மும். இதுவே வரலாறு தன்னை பெருமிதப்படுத்திக் கொள்ளும் பாங்கு.

ஆனால் நெப்போலியனின் வரலாறு குறித்த கூற்றை எடுத்துக் கொண்டு முன்செல்வோரும் இருக்கின்றார்கள் என்பதே வரலாற்று உண்மையும் கூட.

சைடுடிராக் 3: குசும்பனை தமிழ்மணத்தில் இருந்து நீக்கியதற்கு எதிராக தனது எதிர்ப்பை ரோஸாவசந்த் பதிவு செய்திருக்கிறாராம். அதாவது மாரல் சப்போர்ட்டாம். வேறெதுவும் செய்ய முடியாதாம். அது சரி... ரோஸாவிற்கு சிம்புவின் குறியறுக்க, பெட்டி பூர்ஷ்வா போர்வையில் பொங்க முடியும். ஈழத்தமிழர் அகதிகளாய் படும் அவஸ்தைளுக்கிடையே புட்பால் பார்த்தும் வயிறு எறிய முடியும். அவனவன் சுனாமிக்காக எல்லாம் செய்யும்போது வெறும் சுட்டிகளைத் தொகுத்து சேவை செய்ய முடியும்... அப்பப்பா என்ன ஒரு நியாயம்? மக்கள்ஸே எல்லா இடத்திலேயும் துண்டு போடுங்கள். யாரு கண்டா நாளைக்கு உங்களுக்கேக் கூட உதவலாம்...

பேக் டு ட்ராக்: ஏதோ புனைப் பெயருல ஒளிஞ்சிக்கிட்டு தன்னத்தாக்கிறதா காசி தன்னோட 'வரலாறு' பதிவில போட்டிருக்கார். யப்பாடி ஏதோ வரலாறுல ஒரு பகுதி (கேவலமாயிருந்தாலும்) எனக்கும் கெடைச்சிது மகிழ்ச்சியே! மகாபாரத சகுனி போல... இராமாயண கூனி போல...

இப்பதான் நெப்போலியனே மறுபடியும் ஞாபகத்துக்கு வராரு.

என்னை யாருன்னு காசிக்கு தெரியாதாம்? அப்பாடி... இப்பதான் தெரிஞ்சுதாம். அவரோட பழைய பின்னூட்டத்தை எடுத்துப் போடுவோமா?

ஓஓஓஓ ஒண்ணும் தெரியாத பாப்பா போட்டுக்கிச்சாம் தாப்பா...

இந்தாளு இன்னோரு ஆளை வலைப்பூ ஆசிரியரா கூப்புட்டாராம். அது சரி. என்னா மாசம்? என்னா ரிலேஷன்சிப் அப்போ? போடுவோமா பப்ளிக்ல? ஆனாலும் போற போக்கில அள்ளித் தெளிச்சிட்டு 'புனிதவான்' பிம்பம் தேடுற ஆளை இப்பத்தான்யா பாக்குறேன். என்னா பண்றது? வரலாறுக்கு மொத்த குத்தகை இன்னைக்கு காசி பக்கம். நடாத்துங்க ஸார்.

பாவம் உமர்தம்பி... இந்திய ஜனாதிபதிக்கு கடிதம் கூட எழுதத் தெரியாத ஆசாமி...தனது சேவைகளை சுயதம்பட்டம் செய்ய... தனது 'நம்பகத்திற்கு பா(கா)த்திரமான ஆக்களிடம் தனது சேவையை விற்கும் தயாள குணம்' மிடில் ஈஸ்டிலிருந்து பிடுங்கி நடப்பட்ட மரமான தேச பக்தி'... இவை எதுவுமே அறியாத விச்ராந்தியாய்...

தருமி ஸார் போல ஒணர்ச்சி வசப்பட்டு சொல்றேன் "KASI You De Man".

வாழ்க! வளர்க!

Friday, July 14, 2006

மதிப்பிற்குறிய மாமிக்கு

என்னாப்பா... யக்கோக்வ்வுன்னு கூவிக்கினினு இர்ந்த பார்ட்டி மாமிக்கு மாறிட்ச்சேன்னு வர்த்தமா கீதா? அட இப்ப இணையமே உங்களை மாமின்னு தானே முத்திரை குத்துது. அப்புறமென்ன? வலைப்பூக்களே (தமிழ்மணம்???) முடிவெடுத்தப்போ நாம்மட்டும் எம்மாத்திரம்? தருமி ஸார் மாதிரி ஒணர்ச்சி வசப்பட்டு "When You are in Rome do what Romans do!" அப்பிடின்னு சொல்லிக்கிறேன்.

"Salsa Verdae" அப்பிடின்னு சொல்லி ஜூட் வுட ஆசைதான். அட என்னான்னு சொல்வேனுங்க... கருத்து ஊறுதுங்கோ...

இப்போ என்னாகிப் போச்சி? இமேஜு டேமேஜாகிப் போச்சா? இமேஜுன்னா என்னாங்க? ஒரு சின்ன பேக்டிராக்...

இதே மேரி முன்னாடி ஜெயஸ்ரீ மாமி தங்கமணி பதிவுல பின்னூட்டத்துல கூவிச்சி. என்னாச்சி? அனாதை ஆனந்தன்'ங்ற சமூகநீதி கனவான் "உங்க ஊட்டு பொண்ணுங்க எங்கன சவரம் பண்ணிக்கிது"ன்னு சூப்பர் கேள்வி கேட்டிச்சி. திராவிட சமூகத்தின் ஏகபோக பிரதிநிதியான தங்கமணி அந்த பின்னூட்டத்தை அனுமதித்த ரகஸியம் என்ன?

அட இன்னிக்கு மாலடிமையின் மலவருடியாய் தன்னை அறிவிக்காது சொரிந்து கொண்டிருக்கும் சிங்கைக்காட்டான் குழலி அங்கன என்ன சொன்னார்? வெறும் கக்கூஸை கழுவினால் பாப்பாத்தி தலித் ஆக முடியுமான்னு? ஏன்னா செப்டிக் டாங்கிலேர்ந்து அள்ளுறது வேற ஆளுங்களாம். அட அட அடடா என்னா தத்துவம் என்னா தத்துவம்... எனக்கு அன்னிக்கே கேட்க தோணிச்சு. கொழலி வூட்டுல "எல்லாம்" முடிச்ச பின்னாடி "சமூகநீதி" நெலை நாட்ட அவரோட வூட்டு ஆளுங்களே "அத்த" "Dispose" செய்றாங்களான்னு... ஆனா இப்பிடியெல்லாம் கேக்க முடியுமா? சிங்கப்பூருல புருஷோத்தமன் குழலி எப்பிடி "டிஸ்போஸ்" செய்யிறாரு? சிங்கப்பூரு உடுங்க. ஆட்டோமேடிக்கா அள்ளலாம். கடலூர்ல என்ன நடக்குது? இவரோட காந்தான் (குலம் கோத்திர மக்கள்) "self Disposal" செய்கிறார்களா? யக்கோவ் இப்பிடித்தான் கேக்கோணும். இதக் கேக்க, இப்பிடிக் கேக்க தெம்பும் வேணும்.

இன்னிக்கு முத்து தமிழினிக்கு காவடி தூக்கிக்கிட்டு உங்க கிட்ட என்னா பின்னூட்டம் கொழலி உடுறாரு? ஏன் முத்து அணுகமுடியாதவரான்னு... இதையே அந்தக்காட்டான்கிட்ட உங்களால பதிலுக்கு கேக்க முடிஞ்துதா? "அட பண்ணாடையே... டெம்ப்ளேட்ல ஒரு நிரல்துண்டைப் போட்டா ரெபர் பண்ற லிங்க் தெரியும்ங்றத அறியாத டெக்னிகல் முடம் நான். சரி தெரியாம எழுதிட்டேன். அதுக்கு பின்னூட்டத்துல ரவுடி மாதிரிக் கத்தாம ஒரு மின்னஞ்சல் முத்து தமிழினி எனக்கு போடலாம் தானே. நான் என்ன அப்பிடி அணுக முடியதவளா?" அப்பிடின்னு நியாயமாக் கேட்டிருக்கலாம். ஆனா உங்களால அது முடியாது. வாங்கிக் கட்டிக்க மட்டுமே தெரியும்.

கூட்டிக் கொடுப்பது பார்ப்பான் குலமென்றதெற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் நீங்க போடறீங்களாம். அப்பிடி என்ன மோசமா சொல்லிட்டாங்கன்னு இந்த குதி? இதுக்கு தமிழ்மண நிர்வாகிகள் என்ன செய்ய முடியும்? ஏதோ இன்னிக்கு ஆளைத் தெரியும்னு நிர்வாகிகளை கேள்வி கேக்கறீங்க... நாளைக்கு யாரு "துட்டு" போட்டு "இலவச" சேவை செய்யப்போறாங்களோ? அப்போ யாரைக் கேள்வி கேப்பீக?

அது சரி தமிழ் மண நிர்வாகிகளைப் பத்தி நான் ஆபாச பதிவு போட்டதுக்கு மொதோ பின்னூட்டமே நீங்க உட்டீங்கன்னு சவுண்டு வுட்டுபோட்டீங்க. ஆனா ஏன் அந்த பதிவு? தமிழ்மணத்தின் இணை துணை நிர்வாகியான இளவஞ்சி குசு, பீ, மூதி'ன்னு தரமான பதிவு போட்டதுக்கு எதிர்வினைதானே அது. அங்கன போயி 'இளவஞ்சி உன் பதிவைத் தூக்கு'ன்னு நடுநிலைமையா உங்களால சொல்ல முடியாது. ஏன்னா குசும்பன்கிட்ட சொன்னா கேட்டாலும் கேப்பான்ங்றது உங்களோட நம்பிக்கை. உங்களை மாதிரி பலரும் சொல்லவும் செஞ்சாங்க. ஆனா இணையத்துல எல்லாரும் என்னைய மாதிரி ஏப்பை சாப்பையாவா இருப்பாக?

ராமன் ஸ்ரீநிவாசன் ஐயங்கார் என்பவரை நீங்கள் அறிவீர்களா? ரோஸாவசந்த் என்ற செந்தமிழ் நாமகரணத்துடன், பெட்டி பூர்ஷ்வா என்ற புரட்சிப் பெயரோடு இணையத்தில் வலம் வருகிறவரை விடவா பிராமணர்களைப் பற்றி தரக்குறைவாக மற்றவர் எழுதிவிட்டனர்? வாயைத் திறந்தாலே நாக்குப்பூச்சி நெளியும் மொழிநடையோடு இவர் செய்யும் "திராவிட சேவை"யை நீங்கள் அறிவீர்கள் தானே? இந்த லட்சணத்தில் அடுத்தவரை நோட்டம் அந்தாளு சொல்வார். தான் ஒரு பிராமணராய் இருந்தும் பிராமணீயத்தை எதிர்க்கிறேன் என்று சொல்லி விட்டு எழுத வந்தவரா ரோஸா? இந்தாளு மாதிரி 'போலியா' எழுதினாவது ஒரு ரெகக்னிஷன் நெட்டுல கிட்டும். அத்த வுட்டுப்போட்டு நீங்களும் கரடியா கத்துறீங்க மாமியாப் பொறந்தது தலை விதின்னு...

முதல் மரியாதை படம் பாத்தீங்களா? அதுல எல்லாரும் சிவாஜியை நெருக்கி ராதாவை நீங்க சின்ன வீடா வெச்சிருக்கீங்களான்னு கேப்பாய்ங்க. உண்மையில்லேன்னாலும் நம்புற கூட்டமில்ல அது. அதுனால "ஆமா. அவள நான் வெச்சிருக்கேன்"ன்னு சிம்பிளா பதில் சொல்லிட்டு துண்டை ஒதறி தோள்ல போட்டுக்கிட்டு போய்க்கினே இருப்பாரு. நம்ம பாலிஸியும் அதேதான்.

இப்ப பாருங்க... வர்ர பின்னூட்டத்துக்கு பதிலு. ஏன் பின்னூட்டத்தை வெளியிட முடியிலன்னு ஒரு விளக்கம். சப்பைக்கட்டுகளுக்கு பதில் வியாக்கியானம். அப்புறம் வழக்கம் போல வூட்டுக்காரர், குழந்தைகள், இந்தியா பயணம்'ன்னு ஏதோ நார்மலாயிட்ட மாதிரி ஒரு பதிவு. யக்கோவ் இது இண்டர்நெட். முடிஞ்சா துளசி அக்கா மாதிரி 'எல்லோருக்கும் நல்லவரா' இருங்க. நடுநிலைமையாத்தான் இருப்பேன்னா பாவம் இப்பிடித்தான் ஆகும். என்ன எதிர்காலத்துல இந்த மாதிரி நான் மடல் போடமாட்டேன்.

மத்தபடி குடும்பம், குட்டியப் பாருங்க. வீணா டென்ஷன் ஆக வேண்டாம். உங்களப் பத்தி தெரிஞ்சவங்களுக்கு உங்களப் புரியும். தெரியாதவங்களுக்கு 'குனிஞ்சு குத்தடி ஜைனக்கா' போட்டாலும் புரியாது. இத்த புரிஞ்சுக்கங்க.

பொடிப்பய அட்வைஸ் குடுக்கிறேன்னு தப்பா எடுத்துக்காதீக. இலவசமா என்னால கொடுக்க முடிஞ்ச சேவை அது மட்டும்தான்.

அன்புடன்,
குசும்பன்.

பி.கு. எனக்கும் இப்பிடி இலவசமா மூட்டை மூட்டையா எனக்கும் அட்வைஸ் வந்திருக்கு. பலசமயம் இந்தக்காத தொறந்து அந்தக் காது வழியா வுட்டுருக்கேன். ஒருவேளை இந்த அட்வைஸாவது பயன்படலாமோ? :-)

Monday, July 03, 2006

ஜோஸ்யம் ஹேஸ்யம் பாஷ்யம்

காட்சி - 1

ஜோஸ்யம்

(இம்முறை வாஸ்து ஸாஸ்திரம் படி வீட்டைத் திருத்தி அமைத்த சின்னக் கலைவாணர் அருமை அண்ணன் விவேக் நமது வெற்றிக் கூட்டணியான பார்த்திபன், வடிவேலு, கருணாஸோடு சேர்கின்றார். இனி உங்கள் பாடு...)

வடி: என்னாடா தெறிச்சிக்கிட்டு ஓடி வர? நாயி கீயி விரட்டுச்சா?
கரு: (வழக்கமான பாணியில்) ஏன் கேக்க மாட்டே... மறைவிடங்களில் உள்காயம்பட்டிருந்தா உனக்குத் தெரியும் அதோட வலி
விவேக்: என்ன நாயி கடிச்சு உள்காயமா? அடப்பாவி தமிழனுங்களா... நாயி கடிச்சா வெளிக்காயம்தானடா வரும். எப்படா திருந்தப் போறீங்க?
கரு: அண்ணே சும்மா இருண்ணே. இது வேற நாயி
விவேக்: வேற நாயா... நான் வெறி நாய் கேள்விப்பட்டிருக்கேன். ஏன் சொறி நாய் கூட கேள்விப்பட்டிருக்கேன். ஆனா வேற நாயா? இப்பத்தாண்டா கேள்விப்படுறேன். அய்யா கெஞ்சிக் கேட்டுக்கிறேன். கொஞ்சம் கூட புரியும்படியா சொல்லவே மாட்டியா? பாரு ரெண்டு வார்த்தை நீ சொன்னதுக்கு அவனவன் பத்தி பத்தியா பொலம்புறானுங்களே...
வடி: எல்லாம் கெரகம் அவன சுத்துது. அனுபவிக்கிறான்
விவேக்: டேய் கெரகமெல்லாம் விண்வெளியில அது பாட்டுக்கு தானாச் சுத்துதுடா. நீங்க என்னடான்னா ஒருத்தனைச் சுத்துறதா ரீல் ஓட்டுறிங்களேடா. இப்பிடி கெரகம் ஒவ்வொருத்தனையும் சுத்த ஆரம்பிச்சா உலக மக்கள்ஸ் தொகைக்கு எவ்வளவு கெரகங்கள் தேவைப்படும்னு தெரியுமா? போங்கடா உங்கள நூறு கலாம் வந்தாலும் திருத்த முடியாதுடா
கரு: வடிவேலு அண்ணே... நாடி ஜோஸ்யம் பாத்தா எல்லாம் சரியாயிடுமா?
விவேக்: டேய் நாடியைப் நல்லதுக்கும் புடிப்பாங்க. டெட் பாடி ஆயிடுச்சான்னு கன்பர்ம் பண்ணவும் புடிப்பாங்க. சில நாட்டுக்கட்டை ஓல்டு லேடிஸ் சினிமாப் படத்துல மட்டும் மயங்கி விழுந்த ஹீரோயின் நாடி புடிச்சி பிரக்னெண்ட் மேட்டர சொல்வாங்க. ஆனா அதயே நீங்க மிஞ்சிட்டீங்களேடா. இப்ப நாடி ஜோஸியமா? ஆஹா உங்கள மில்லியன் பெரியார்கள் வந்தாலும் திருத்த முடியாது
பார்: ஸார் மில்லியன்'ன்னா என்ன?
விவேக்: (குழைகிறார்) ஹிஹிஹி நம்ம மொத மொறையா சந்திக்கிறோம். கொஞ்சம் ஓவரா பேசிட்டேனா? அப்பப்ப கொஞ்சம் சவுண்ட் உடலேன்னா மக்கள்ஸ் மதிக்கமாட்டாங்க. கொஞ்சம் புரிஞ்சுக்கங்க. ப்ளீஸ்.
பார்: ஓகே. Identity Crisis'ஸா? அட்ஸீஸ் பண்ணிக்கிறேன்.
விவேக்: சரி சரி நான் சொன்னதையெல்லாம் மறந்திடுங்க. நம்ம எல்லாரும் இன்னைக்கு சரக்கடிக்கிறோம். நான்தான் ஸ்பான்ஸர். ஓகேவா?
(ஓசியில கொடுத்தா பினாயிலையும் குடிக்கும் கூட்டமொன்று கிளம்பத்தயாராகின்றது. போகின்ற வழியில் எந்த இந்தியன் புத்தகக்கடை வர... பார்த்திபனுக்கு இலக்கிய தாகமெடுக்கின்றது. அனைவரும் கடைக்குள் நுழைகின்றனர்)
பார்: (வடிவேலுவைப் பார்த்து) இது படிச்சவங்க வந்து போற இடம். பாத்து பிஹேவ் பண்ணு புரியுதா?
வடி: அண்ணே எல்லாரும் ஏற்கெனவே படிச்சவங்கன்னா மறுபடி எதுக்கு புத்தகம் வாங்க இங்க வரணும்?
பார்: என்ன என்கிட்டயே நக்கலா?
வடி: (கை மெய் பொத்தி) ஹ்ம்ப்ப்
பார்: அது...
விவேக்: (படு ஸ்டைலாக ஒரு புத்தகத்தை எடுக்கின்றார்) ஹூம் "30 நாட்களில் ஹிந்தி கற்கலாம்". இப்பிடித்தானா நரசிம்ம ராவ்காரு 10 பாஷை பேசினாரா? (ஹூம்...அப்புத்தகத்தை பின்னர் வேறொரு அடுக்கில் வைக்கின்றார். பார்த்துக் கொண்டிருந்த பார்த்திபன் ஜெர்க்காகி)
பார்: டேய் இப்ப நீ என்ன பண்ணின?
விவேக்: (ஹ்ம்ம்ம்ம்) ஒண்ணுமில்லியேப்பா. ஒரு பொஸ்தகத்தை எடுத்தேன். அப்புறம் வைச்சிட்டேன். இது தப்புங்களா?
பார்: டேய் அந்த பொஸ்தகம் எடுத்த இடமென்ன? திருப்பி அந்த பொஸ்தகத்தை எடுடா. எடுத்தியா? இப்ப அந்த புஸ்தகத்துக்கு பின்னாடி இருக்கிற பொஸ்தகமென்ன?
விவேக்: ஆஹா... செம்மொழி தமிழ் புஸ்தகமா? பிரதர் ரேக் மாத்தி வைச்சிட்டேன். ஐ யாம் ஸாரி. உடனே சரியான இடத்துல வைச்சுடறேன்
பார்: ஹை இப்பிடி சிம்பிளாச் சொல்லிட்டா நாங்க விட்டுடுவோமா? நீ ஹிந்தியை வைச்சி தமிழை மறைக்கப் பாத்தே?
விவேக்: அண்ணே உங்க கற்பனைக்கு அளவே இல்லீங்களா?
பார்: அது மட்டுமா? அந்த தமிழின் பின்னாலிருக்கும் இனமான உணர்வுகளைக் கூடத்தான்
விவேக்: (அடப்பாவிங்களா ஒரு பொஸ்தகத்தை ரேக்கு மாதிரி வைச்சதுக்கு உலகப் போர் ரேஞ்சுக்கு பேசுறானே. அடடா கூட்டமும் கூடுதே. கூட்டத்தில் கைமா ஆக விரும்பாமல் பார்த்திபனின் கையை உயர்த்தி) தமிழுக்கு வாழும் அண்ணன் வாழ்க என்ற கோஷமிடுகின்றார்
வடி: (தமிழால் வாழும் அண்ணன்னு கோஷம் போடுகின்றார்)

காட்சி - 2

ஜோஸ்யம்+ஹேஸ்யம்

(ஒரு வழியாய் அனைவரும் சரக்'கடிக்கச் செல்கின்றார்கள். சைடு டிஷ்ஷை 'கடிக்கின்றார்கள்.)

விவேக்: டேய் இப்ப நான் சொல்றேண்டா சூப்பர் ஜோஸியம். அம்மா கிட்ட சீறிக்கிட்டு போன சிறுத்தை அறிவாலயத்துல கூடிய சீக்கிரமே சரண்டர் ஆகப் போகுது. தனக்காக எதையும் வெட்டுபவர் "தமிழோடு தமிழிணைந்தது'ன்னு அறிக்கை வுடுவாரு. தமிழா இது நிதர்சனம்டா... நீயே பாரு இது நடக்கலேன்னா தமிழுக்குத்தான் அவமானம்..."
வடி: (என்னது இவன் மறுபடியும் 'போகஸ்'ல வரான்னே என்ற 'பொச்சுக்காப்புடன்') சரி சரி வந்துட்டா...?
விவேக்: ரொம்ப ஸிம்பிள். தமிழை கட்டாய பாடமாக்கிய கலைஞரை ஆரத்தழுவுவதில் ஆச்சரியமில்லை என்று இணையத்தில் திராவிடர்கள் கூவுவார்கள்
கரு: எனக்கு ஒண்ணுமே புரியலியே. கொஞ்ச நாளைக்கு முன்னாடிதானே எச்சில் இலை அப்பிடி இப்பிடின்னு பேசினாங்களே?
விவேக்: அட நாதாரிகளா இதுகூட உங்களுக்கு புரியாதா? 'இருத்தலியம்' (நன்றி: குழலி) முக்கியமானதுடா. அப்பிடி இப்பிடி செஞ்சாவது இருத்தலே முக்கியம். இல்லேன்னா என்னாடா அவனுங்களைச் சாவச் சொல்றீங்களா அப்பிடீன்னு சிங்கப்பூர் வரை கேப்பானுங்க...
கரு: ஓ... அப்பிடின்னா கடந்த காலத்துல ஒரு புலியை ஆந்திராவுல பலி கொடுத்தாங்களாமே? ஏதோ மேகஜின்ல படிச்சேன். அதுக்குன்னு இப்பிடியா கால்ல வுழுறது?
விவேக்: மடத் தமிழனுக்கு புலிக்கும், சிறுத்தைக்கும் வித்தியாசம் தெரியலியே... அப்புறம் சிறுத்தை காலுல வுழலை. ஏண்டா கற்பனை இப்பிடியெல்லாம் கற்பனை பண்றீங்க. சிறுத்தை பசித்தாலும் எச்சிலிலை தின்னாது.
வடி:
அதெல்லாம் சரி என் வென்று. வேறென்னா செய்யும்?
விவேக்: ஏன் பொக்கே கூடக் கொடுக்கும்.
வடி: அட இதப் பாருடா... அப்புறம்
விவேக்: ஆனா சிறுத்தையோட கதைய 'டார்டார்'னு கிழிச்சுப்போட்டாய்ங்க. ஒரு வாட்டி கூட மேடையிலயோ, தனியாவோ எலீக்ஷன்ல ஏத்தலையாமே? மட்டு மருவாதையில்ல?
வடி: ஹலோ ஹலோ இது என் ஸ்டைலு. அதான் இப்போ ஒண்ணாக் கூடி கைகளை உயர்த்திட்டோம்'ல
விவேக்: ஓ ஸாரி ஸாரி மப்புல ஸ்டைலு மாறிடிச்சு... மரத்தமிழர்களே நன்றாகக் கேளுங்கள். 'பிரிவோம் சந்திப்போம்'ங்ற முறையில திரும்பி எல்லாரும் ஒண்ணு சேருங்க...
கரு: ஏங்க மரத்தமிழர்ல ஸ்பெல்லிங் மிஸ்டேக்
விவேக்: சரியாத்தாண்டா சொன்னேன் என் மரத்தமிழா. மரத்திற்கும் மறத்திற்கும் வித்தியாசம் அறியாதவனா நான்? உங்களை எத்தனை உ.வே.சா. வந்தாலும் திருத்த முடியாது
வடி: எனக்கு 'உவ்வேக்' தெரியும். ஆனா உவேசா யாருப்பா?
விவேக்: அட தானைத் தமிழா... தமிழுக்கு தொண்டு செய்தவனை சாதியால் மறந்தாயோ? சாதிகள் இல்லையடி பாப்பா என்று முழங்கினானே முண்டாசுக்கவிஞன்.
வடி: (மனதிற்குள் விவேக்கை நோக்கி) அப்புறம் என்னாத்துக்கு சாதி பேருல நடத்துன வெளாவில கலந்துக்கிட்டு உஞ்சாதி ஆளுகளுக்கு பிரைஸ் கொடுத்தே?
விவேக்: (ரஜினி ஸ்டைலில்) ஹஹ்ஹஹா.. இதெல்லாம் ஜுஜூப்பீ எனக்கு என் ரூட்டே தெரியாது. ச்சும்மா விளாவுல களந்துக்கிட்டேன். சிவாஜி ஸீன்ஸ ஸ்பெயின்ல சுட்ட்டுட்டாங்க. ஷங்கரோட எப்பவோ வொர்க் பண்ணியிருக்கணும். ஜஸ்ட் மிஸ்ஸாயிடுச்சி.
பார்: டேய் ஸ்பான்ஸர் ஸார். ஓவரா மப்பாயிடுச்சு போலருக்கு. வாய்ஸ் குழறுகின்றது மாம்ஸ்.
விவேக்: இப்ப ஸ்டெடியா பாடறேன் கேளும் வோய்.

"நாண்டா உங்கப்பண்டா நல்லமுத்துப் பேரண்டா
வலைப்பூ எழுதி பாடஞ் சொல்ல வாரேண்டா வாரேண்டா"


வடி: என்னாது பாடம் கத்துக் கொடுக்க வாரியா? சைக்கிள் கேப்புல சைத்தன்ய ரதம் வுடுறானே...
கரு: அண்ணே இப்ப நீங்க பாடுன பாட்டு கபடி ஆட்டத்துலதானே பாடுவாங்க?
விவேக்: டேய் சொல்லி அடிக்கிறதுல நான் கில்லிடா
வடி: ஹூம் சொல்லாம நான் அடிச்சா அது ஜல்லியா?
(பாரில் இவர்களது அடாவடி தாங்க முடியாது ஒருவர் வெகுண்டு எழுகின்றார்)
ஒருவர்: அட தரங்கெட்ட பயலுகளா... உங்களுக்கு நல்ல மனமே கெடையாதா?
வடி: பெர்சே கொஞ்சம் அடங்குறது... ISO மாதிரி உங்கிட்ட முத்திரை வாங்கித்தான் நாங்க பேசணுமோ?
கரு: ஹேய் யூ ஓல்டுமேன். கிளாட் டு மீட் யூ. நீங்கதான் இந்தியன் தா(த்)தாவா?
ஒருவர்: யூ யூ யூ... நான் தமிழ் தா(த்)தாடா தரங் கெட்டவனே
கரு: ஹேய் ஹேய் ஹேய் தமிழ்நாடு இந்தியாவுலதானே இருக்கு. பாத்தா மெத்த படிச்ச மேதாவி மாதிரி தெரியுற. இப்பிடி சில்லறையா பேசுறியே. கமான் கமான் டெல் மி. இ...ண்...டி...யா... (நன்னன் போல் ஆங்கில வகுப்பெடுக்கின்றார்)
ஒருவர்: ஆஹா நீ மேல்ஜாதியான அந்த குறிப்பிட்ட ஜாதிதானே? எனக்குத் தெரியும். எல்லாமே புரிந்து விட்டது.
பார்: ஹலோ பெருசு ஸார். இப்ப என்ன நடந்துச்சுன்னு இப்பிடி "டிங்கிரி டிய்யாலே" போடறீங்க? யார் சார் நீங்க?
ஒருவர்: உங்களை நான் இரண்டு வயதில் பார்த்த ஞாபகம் வருகின்றது
பார்: என்னாது ரெண்டு வயசுல நடந்தது ஞாபகம் வருதா? இது கொஞ்சம் ஓவராத் தெரியில?
ஒருவர்: (பிளட் பிரஷர் எகிற) ஆஹா நீதான் அந்த 'மனிதனா'?
விவேக்: இங்க எல்லாரும் மனிதங்க தானேப்பா. மனிதன்ல "அதென்னப்பா அந்த மனிதன்"? கொழப்பமா இருக்கேப்பா. ஒருவேளை சரக்கு டூப்ளிகேட்டா? இந்த சுத்து சுத்துதே
தமிழ் பசி: இந்தியாவில் தமிழ்நாடு ஒரு அங்கமாக இருப்பதையே விரும்புகின்றேன்
விவேக்: ஆஹா இந்தாளு தொல்லை தாங்க முடியலேப்பா. ஏதோ கான்ட்ராக்டர் மாதிரியே அனாலிசிஸ் பண்றாருப்பா

== CUT & FREEZE ==

(காட்சி மாற்றம். இந்தியாவின் ஒரு தென்கோடியில் பிரௌசிங் சென்டர். பேச்சிலர் டிகிரியைத் தொலைக்கும் வயதில், அச்சு ஊடகத்தில் வளரும் இளந்தாரி ஒருவர் வலை மேய்கின்றார்)

இளந்தாரி (இள): (தனக்குள்) ஆஹா ரொம்ப நாளைக்கப்புறம் குசும்பன் பதிவு. அட என்னாத்த எழுதியிருக்காருன்னு ரெண்டு மணி நேரமா மண்டையப் பிச்சிக்கிறேன். ஒண்ணுமே பிரியலியே. நம்ம தலீவரோட மௌனத்தக் கூட புரிஞ்சுக்கலாம். ஆனா குசும்பன் ரைட்டிங் ஒ(ம)ண்ணுமே புரியலியே. புரியணுமின்னா ஒரு 'கட்டிங்' போடணுமா? இல்லே சதுரமேசையில சக வலைப்பதிவரோட 'சிட்டிங்' போடணுமா? தல சுத்துதே... (சப்தமாக) அர்ரே பாபா ஜல்தி ஆவ். இப்படிச் சூடு...
அருகிலிருந்தவர் (அரு): என்னங்க சாமியார் பேரச் சொல்றீங்க?
இளந்தாரி: அடப்போய்யா இவரு இணைய சாமியார்யா
அரு: ஓஹோ அந்த போலிச் சாமியாரா?
இள: அதெப்பிடி உங்களுக்கும் தெரியும் அவரு போலின்னு?
அரு: "எல்லார்க்கும் நல்லவர்" அப்பிடின்னு பட்டம் வாங்கணுமின்னா கஷ்டம் ஸாரே. அந்த மேரி நடந்துக்கிட்டு வந்தாரு இவரு. இப்போ என்ன ஆச்சி? நெட்டுல ஒரு பிளாட் வாங்க பிட்ட (Bid) போட்டாரு. உங்களுக்கு இந்த பிளாட் ஒத்து வராதுன்னு முகத்துல அடிச்ச மேரி சொல்லிப்போட்டாங்களாம். நான் அப்பவே சொன்னேன். மனுசன்னா ஒரு நெலைப்பாடு வேணுமின்னு. கேட்டாத்தானே?
இள: (ஆச்சரியத்துடன்) இப்பிடி வெலாவரியா தாக்கல் (தகவல்) சொல்றீங்களே... நீங்க யாருங்க?
அரு: (உணர்ச்சிவயப்பட்டு) ஆமாம் தாக்கல்தான். அதுவும் தொடர் தாக்கல். தனியஞ்சல் செய்தேன். காரியம் கை மீற பொதுவில் பின்னூட்டினேன்.
இள: தாக்கலா? தாக்குதலா? என்னங்க கில்லி மாதிரி அடிக்கிறீங்க?
அரு: பொறுக்கி
இள: யேய்யேய் மருவாதையாப் பேசு. சிரிச்சுப் பேசுற பொம்பளையும், அழுது பொழைக்கும் ஆம்பளையையும் நான் மட்டும் இல்ல என் தலைவர் கூட நம்பமாட்டார்
அரு: அட அது இல்லைப்பா... நம்ம விஜய் கில்லிக்கு அடுத்தபடி 'பொறுக்கி' படத்துக்கு பூஜை போட்டுருக்காரு
இள: எனக்கென்னமோ 'கில்லி'க்கு பேசாம 'பொறுக்கி'ன்னே பேரு வைச்சுருக்கலாம். அதத்தானே சின்ஸியரா நீங்க பண்றீங்க. ஹிஹிஹிஹிஹி
அரு: (தெறிக்கின்றார்)

== CUT & FREEZE ==

காட்சி - 3

ஜோஸ்யம்+பாஷ்யம்

(பேக் கிரௌண்ட் பாடல். பாரில் காட்சி தொடர்கின்றது)

ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
ஏன் ஏன் ஏன்?


(மக்கள் கூட்டம் ஏன் ஏன் ஏன் என்று எக்கோ செய்கின்றது. பாட்டை மாத்து என்று குரல்களும் ஓங்கி ஒலிக்கின்றது. அப்போது கூட்டத்தில் ஒரு சிறிய சலசலப்பு. பார்த்திபன் & கோ பஞ்சாயத்து பண்ண விரைகின்றது)

பார்: யேய் நிறுத்துங்கப்பா. மப்பு தலைக்கேறியவுடனே அடிதடியை ஆரம்பிச்சுட வேண்டியதுதானா? இப்ப என்னா நடந்திச்சு
சண்டைக்கோழி 1 (ச 1 குழறலுடன்): உங்களுக்கு அடிப்படை பிரச்சினை புரியாது
வடி: ஏம்ப்பா புரியாட்டி சொல்லிக்குடுப்பா. புரிஞ்சுக்குவோம்ல
ச 1: மறுபடியும் சொல்றேன். உங்களுக்கு அடிப்படை பிரச்னை புரியாது. ஒரு பிரச்சினைனா 360 டிகிரி சுத்தி மாறுகட்டோட பாக்கணும்.
சண்டைக்கோழி 2: ஏய் எனக்கு திட்டவும் தெரியும். திட்டு வாங்கவும் தெரியும். உனக்குப் பிரச்னை பத்தி என்னா தெரியும்? நேத்துக் கூட ஹுவர் டேம் பிரச்சினைல மோதா பட்கர் உண்ணாவிரதம் இருந்ததை அருந்ததி கவரேஜ் பண்ணியதை எடிட் செய்யாமல் இணையத்தில் வந்ததைப் பார்த்து குழம்பி, புட் பால் முடிந்ததும் எழுதுவதாய் உத்தேசித்துள்ளேன். ஹூம் இவனுங்க எல்லாம் சமூகச் சேவை பண்றவங்களாம்...
ச 1: எப்பிடித்தான் இப்பிடி பொறுமையா இந்தாளால பேச முடியுதோ?
வடி: இப்ப இந்தாளு என்ன பேசினாருன்னு அவருக்குப் புரிஞ்சி பஞ்ச் டயலாக் பேசுறாரு?
ச 1:
யேய் நாந்தான் மொதலிலேயே சொன்னேல்ல. உங்களுக்கு அடிப்படை பிரச்னை தெரியாது. (நடுவிரலை உயர்த்திக் காட்டுகின்றார்) எங்க பக்கத்துல இதுக்குத்தான் வாசுவை மூடிட்டு வேலையப் பாருங்க
விவேக்: அடப்பாவிங்களா... வாஸ்து கேட்டிருக்கேன். வாசுவா? எப்பிடிப்பா மூடிறது? (ஆங் அப்பிடின்னா அப்படியா?)
பார்: யேய் இங்க வா. நடு விரலு உசந்து இருக்கு. அப்புறம் எங்களைப் பாத்து வாசுவை மூடச் சொன்னே. இப்ப நாங்க வாசுவை மூடிக்கிட்டோம்னா அப்புறம் எப்பிடி வேலை பாக்க முடியும்?
வடி: அடப் புடிச்சார் பாரு அண்ணாச்சி பாயிண்ட...
ச 1: அப்புறம் அதென்ன ஒங்கிட்ட மட்டும் தான் வெரலு இருக்கா இப்பிடி காமிக்க. அதென்ன அடிப்படை பிரச்சினைதானே. இப்ப நான் தீத்து வைக்கிறேன் பாரு (என்றபடி நீண்டிருந்த விரலை நறுக்கென்று கடிக்க ச -1 துள்ளுகின்றது). இப்ப என்ன பண்ற கட்டை விரலை நீட்டு
ச -1: (தலையாட்டி மறுக்கின்றது) மறுபடியும் கடிக்கலேன்னா நீட்டுறேன்
பார்: ஹூம் நீட்டினாயா? இப்போது அதை லேசாம மடக்கு. இந்த "சைன்" தான் உனக்கு லாயக்கு. சூ(ஃ)ப்பிக்கிட்டே போ. அடியென்னடா அடி... கடி உதவுறது மாதிரி அண்ணன் தம்பி கூட உதவமாட்டான்

மனது எரிகின்றது (*A* பதிவு)

பல வருடங்களாக நடந்து கொண்டிருக்கின்றது. கண்டு கொள்வார்தான் இல்லை. பிரேஸில், அர்ஜெண்டினா, யேர்மனி, பிரான்ஸ் போன்ற புகழ் பெற்ற நாடுகள் முதல் அனைத்து அணிகளும் இப்படியா என்று பலமுறை வியந்ததுண்டு.

மூர்க்கத்தனத்துக்கொரு அளவேயில்லையா?

அதுவும் இது படு சுத்தமான அழுகுணி ஆட்டமல்லவா? அதுவும் பல கோடிப் பேர் பார்க்க பப்ளிக்கா?

ச்சீய்ய்ய் நான் ஏன் கால்பந்தாட்டம் பார்ப்பதில்லை தெரியுமா? :-))









பிகு: போட்டோக்களை பகிர்ந்து கொண்ட நண்பருக்கு நன்றி.

Sunday, July 02, 2006

கடைசி வார்த்தை

இவன் அவனா? அவன் இவனா? என்ற குழப்பத்தில் KARZ படத்தின் கேப்ஷனான "The Burden of Truth"ல் மூழ்கியிருக்க நீள் வாரயிறுதி
முடியும் தருவாயில் சில வார்த்தைகள்...

கவிதைகள் தைத்தவையாக இருப்பவதை விட புரிதலையே அதிகம் விரும்புகின்ற அற்ப ஜீவன் நான். சில சமயம் வெறும் வசனங்கள் கூட எனக்கு கவிதையாகத் தெரிவதை "Blame it on Beer" என்று சொல்ல முடிவதில்லை. எடுத்துக்காட்டாக KARZ படத்தில் ஒரு வசனம்:

தர்த் நே தும்கோ ஜனம் தியா?
யா
ஜனம் நே தும்கோ தர்த் தியா?


[வலி உனக்கு உயிர் தந்ததா?
இல்லை
உயிரே உனக்கு வலியானதா?
]

அதே போல் சமீபத்தில் (அட நேத்துப்பா...) படித்த ஞானக்கூத்தன் கவிதை ஒன்று...

கடைசி வார்த்தை

கதறிக் கதறி அழுகிறாள் மனைவி
என்னை அறியீரோ? யாம் உன் கிழத்தி
இவர்நும் மக்கள். என்கிறாள்
சற்றுக் கண்ணைத் திறந்து பார்த்தவர்
மீண்டும் யாவர் நீவிர் என்கிறார்

கடைசியில் சொல்லப்படும் வார்த்தைகள்
கொடுமையின் நீல வண்ணத்தில் தோய்ந்தவை
முதற்கண் அவ்வாறு சொன்னீரே
என்று குற்றம் சாட்டிப் பயனில்லை

கடைசியில் சொல்லப்பட்டுபவை
அதற்குமுன் சொல்லப்பட்டதற்கெல்லாம்
சொக்காய் மாற்றிப் போடுபவை

மேதாவி என்பவன்
முதலில் சொல்லும் பொழுதே
கடைசியில் சொல்லப் போவதை
மனதில் ஒத்திகை பார்ப்பவன்

கடைசி வார்த்தைகளில்
நட்பு பகைமை
சொத்து அழிவு
உறவு தாயாதி
கற்பு கலைப்பு
ஏற்பு நிராகரிப்பு
அணைப்பு பிரிப்பு
எல்லாம் சங்கிலிக் கணைகளாய்ப் பிணைந்திருக்கும்
எல்லா சந்தர்ப்பங்களிலும்
கடைசி வார்த்தைகள் எளிதாய்ப் புலப்படும்
கவிதையின் இறுதிப்பகுதி தவிர

-ஞானக்கூத்தன்

நன்றி: பென்சில் படங்கள்
விருட்சம் வெளியீடு

பி.கு. இது வெறும் கவிதை குறித்த பதிவுதான் என்று நான் கூறினாலும், பதிவினைப் படித்து, இரு மணி நேரம் செலவு செய்து அ(ன)ர்த்தம் தேடப்
போகும், சென்னையில் மையம் கொண்ட புயலொன்று புரிந்து கொள்ளவாப் போகின்றது? :-)