Thursday, July 29, 2004

கம்யூனிகேஷன் குசும்பு

நம்ம பிரண்டு சொன்னாப்ள. பேஷறப்போ/எழுறச்சே ரொம்ப சிம்பிளா இருக்கணுமாம். தங்கத்துல செம்பு சேர்த்தால்தான் ஆபரணம் வருமாம். அப்புறம் பெயிண்ட்லே தின்னர் சேர்க்கணுமாம். ஆபீஸ்ல எனக்கு பக்கத்துல வடகிந்தியாவைச் சேர்ந்தவர். (நமக்கு வடக்கு, தெற்கு பீலிங்ஸ்ல்லாம் கிடையாது).

மனுஷன் பேஷ ஆரம்பிச்சா முற்றுப்புள்ளியே வெக்க மாட்டார். அதுவும் ஹிந்தி பேஷறா மாதிரி குழகுழான்னு. தெரியாம ஒருவாட்டி பக்கத்துல இருக்கிற ரெஸ்டாரெண்ட் போனோம் (ஹி ஹி கோக் குடிக்கத்தான்...). சாப்டோன பில்லு வந்தது. குசும்பன் தான் பயங்கர டீஸண்ட் பார்டியாச்சே ;-) பாய்ஞ்சு எடுத்தேன். வடக்குப் பார்ட்டி ஒரே அடம். தான்தான் பில்லு கட்டுவேன்னு. என்னடா இது இன்ப இம்சைன்னு நானும் விட்டுட்டேன். பார்ட்டி வாயத் தொறந்துச்சு. "டாலர் ரொம்பக் கம்மிதானே. நானே பே பண்றேன் (பைசா கம் ஹேன்னா, இஸ்லியே"). சுள்ளுன்னு எனக்கு ஏறிச்சு. சரி அப்புறம் பாத்துக்கலாம்னு வுட்டுட்டேன்.

அன்னைக்கு ஆரம்பிச்ச "சனி" திசை இன்னும் முடியவேயில்லை. போட்ட இருபது டாலரை எப்படியாவது திரும்ப வாங்கோணுமின்னு "வசூல்ராஜா"வா அலய ஆரம்பிக்க, "மவனே நடக்காதுண்ணு" நான் டபாய் ராஜாவானேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மல்யுத்தம் தான்:

வரா (வசூல் ராஜா); டரா (டபாய் ராஜா)

வரா: சும்மா சந்திப்போமா (அய்சேகி மில்த்தே ஹேன்)
டரா: சரிதாம்பா. எங்கே? (டீக்கே. லெகின் கிதர்)
வரா: எங்க வேண்டுமானாலும் ஓகே (கிதர் பி சலேகா)
டரா: நல்லது. இருந்தாலும் எங்கே? என்ன பண்றது (அச்சா. பிர்பி கிதர்? கியா கர்னா ஹே?)
வரா: என்ன வேணுமின்னாலும் செய்யலாம் (குச் பீ கரேங்கே)
டரா: சரி எத்தனை மணிக்கு? (கப் கர்னா ஹே?)
வரா: எப்ப வேணுமின்னாலும் (கபிபீ)
டரா: ரொம்ப நல்லது (பகூத் அச்சா)

(பல்லை நற நற'ன்னு நீங்க மட்டுமில்ல. எழுதுற நானும் தான்). அப்பப்ப யோசிக்கிறது. இந்தக் கொடுமைக் குசும்பிலேர்ந்து தப்பிக்க $20 மொய் எழுதலாமின்னு. இருந்தாலும் நம்ம குசும்பு புத்தி தடுக்குது.

செம்போ, தின்னரோ இந்த மாதிரி குழப்பரவாளைத் திருத்த ஐடியா தாரேளா???

பி.கு 1. வடக்கும் தெற்கும் சந்தித்தால்? இந்தப் பார்ட்டி, ஒரு மலையாளியோட நடத்தின உரையாடலின் தமிழாக்கம் அடுத்த பதிவில்....

பி.கு. 2.இந்த மாத பதிவுகள் டாப் 10 வரிசைல குசும்பனைச் சேர்த்துள்ளார் திவாகரனார். நன்றி. இதெல்லாம் தேவையான்னு நீங்க செல்லமா கோபிக்கிறது தெரியுது. என்ன பண்றது. குக்கி கிடச்ச குழந்தை மாதிரி ஒரு குதூகலம் தான்.

No comments: