Wednesday, March 14, 2007

டிஷ்யூம் டிஷ்கஷன்

விவேக், வடிவேல், பார்த்திபன் போன்ற அன்பர்கள் அடிக்கடி சின்னத் திரையில் எட்டிப்பார்க்கும் பெரிய நட்சத்திரங்களைப் போல இணையத்திலும் எட்டிப் பார்த்ததால் பிரச்சினை உருவாகின்றது. கோலிவுட் காமெடி டிராக்கை வலைப்பூக்களின் காமெடி சூப்பராக இருப்பதால் கிர்ரடித்துப் போகின்றது கோடம்பாக்கம். ஒன்று காமெடி வலைப்பதிவர்களை கடத்துவது, இல்லாவிடில் கவிழ்ப்பது போன்ற அஜெண்டாவுடன் நீலாங்கரை பங்களா ஒன்றில் ரகஸியா ஸாரி ரகஸிய கூட்டம் கூடுகின்றது. மேற்கொண்டு:

கவுண்டமணி நாம்பாட்டுக்கு ஏதோ போண்டாத்தலையா, பன்னித்தலையா, ஈஸ்வரன் கோயில் எண்ணெச்சட்டி'ன்னு கலக்கல் காமெடி பண்ணிக்கிட்டு இருந்தேன். இப்ப என்னடான்னா 'ஏர்போர்ட் தலையன்'ன்னு டெக்னிகலா ப்ளாக்ல எழுதுறானுங்களாம். இனிமே நம்ம மார்க்கெட்டு அவுட்டா?
விவேக் நேத்திக்கு இணைய அரங்கம் மீட்டிங்கிக்குப் போனேண்டா. இலவசக்கொத்தனாராம். ஏம்ப்பா வாஸ்துபடி இலவசமா கட்டித் தருவியான்னு கேக்கலாமுன்னு தோணிச்சி. அவிங்கெல்லாம் அமெரிக்கா மாதிரி ஸ்பீடா போறானுங்கப்பா
வடிவேலு அந்தக்கதய ஏன் கேக்குற? வருத்தப்படாத வாலிப சங்கம்ன்னு வைச்சிக்கிட்டு இவனுங்க பண்ர அலப்பர தாங்க முடியலீப்பா. யாரோ கைப்புள்ளையாம். நமக்கே பாடம் சொல்லித் தரானுங்கப்பா
விவேக் திராவிடத்தையும் விடாம சங்கம் வைச்சு சங்க அறுக்குறானுங்க. சீரியஸா காமெடி பண்றாங்கப்பா. ஆ வூன்னா அப்யூஸ்னு அவங்க விடற அலறலக் கேட்டாக்கா நரசிம்மராவ் ஆவி கூட வாய் தொறந்து நல்லா சிரிக்கும்ப்பா
கருணாதாஸ் ஜொள்ளுப்பாண்டின்னு ஒரு கேரக்டர் இருக்குதாம் பாஸ். "கட்டை"ங்ற டைட்டிலுலக் கூட பட்டையக் கெளப்புது பாஸ். அந்தாளோட அக்ரீமெண்ட் போட்டாலே பல படத்துக்கு பஞ்சர் டயலாக் எழுதலாம் பாஸ்
கவுண்டமணி இங்லீஷ் படத்துல அடிச்ச காப்பி எல்லாம் பத்தாதுன்னு இப்போ இண்டெர்நெட்டையும் இந்த நாயி உட மாட்டேங்குது பாரு. கருணா கம்முன்னு கெடக்கவே மாட்டியா
கருணாதாஸ் பாஸ் உன்னால பீட் பண்ண முடியலேன்னா ஜாயின் பண்ணிக்கோ
கவுண்டமணி இங்லீஷ் பழமொழி இன்னொரு தடவை சொன்னா பல்லைப் பேத்துப்புடுவேன்.
எஸ்ஜே சூர்யா டபுள் மீனிங்ல நான் டயலாக் பேசுறேன். ஆனா நெட்டுலே பாட்டையே பிட்டுப் பாட்டாப் போட்டு கில்மா கெளப்புறாங்கலாமே. இந்த ரேஞ்சுல போனா என்னோட பாபுலாரிட்டி என்னாவது?
செந்தில் ஓ போலி சிவஞானம்ஜி பிளாக்கச் சொல்றீங்களா?
கவுண்டமணிடேய் என்னடா இங்லீஷ்ல என்னென்னமோ கெட்ட கெட்ட வார்த்தையா சொல்ற... ஒண்ணுமே புரியலியேடா...
செந்தில் இப்பெல்லாம் ஒரிஜினல் ஆளுங்களுக்கு மேல போலிங்களுக்குத்தான் கிராக்கி ஜாஸ்திண்ணே! உதாரணமா போலி டோண்டுவை எடுத்துக்கங்க...
எஸ்ஜே அடப்பாவிங்களா அதையும் அதுக்குள்ள படிச்சிட்டீங்களா? என்னோட அடுத்த படத்துக்கு அங்கேருந்துதான் அஸ்திவாரம் போடலாமுன்னு இருந்தேன். அந்த ஐடியாவ ஆட்டங் காண வைச்சிடாதீங்கப்பா...
வடிவேலு ஓஹோ அதான் திருமகன்லேயே "பானை" ஒடைக்கிற வசனம் வந்துச்சா?
எச்ஜே சூர்யா அதுசரி ஒரு போலிப் பதிவைக் கூட உட்டு வெக்கலன்னு சொல்லு
கவுண்டமணி ஒரிஜினல் டூப்ளிகேட்டுன்னு டாஸ்மாக் சரக்குலதான் கேள்விப்பட்டு இருக்கேன். இப்போ இண்டெர்நெட் சரக்குலேயுமா?
செந்தில் என்னண்ணே நீங்க இன்னும் இருபத்தியோராம் நூற்றாண்டுக்கே இன்னும் வராம இருக்கீங்க. பதிவுல மட்டுமில்ல கமெண்டுப் பொட்டியிலேயும் காமெடி பண்றாய்ங்க
விவேக் என்னாது கமெண்ட்டுப் பொட்டியிலேயுமா? (ஆச்சர்யப்படுகின்றார்)
செந்தில் போங்க விவேக். ப்ரோபைல்ல கூட போலியிருக்குது
விவேக் என்னாது ப்ரோபைல்ல கூட போலியா? (மீண்டும் ஆச்சர்யப்படுகின்றார்)
செந்தில் நீங்க வெறும் காமெடியைத்தான் பாக்குறீங்க. ஆனாப் பாருங்க சீரியஸ் படத்தையே நெட்டுலேர்ந்து சுடலாம். இப்போ விஜயகாந்த வைச்சி "கச்சத்தீவு ராசா"ன்னு படமெடுத்தீங்கன்னு வைங்க. வில்லனா நெப்போலியனப் போட்டுட்டு "ஏண்டா இந்திய மீனவனை இலங்கை கப்பல் சுடும்போது இண்டியா நேவி என்னா மசுரு புடுங்கிக்கிட்டு இருந்துச்சா?"ன்னு கேப்பாரு. உடனே விஜயகாந்த் பொங்கிப் போயி "இந்திய இலங்கை கடலெல்லை தெரியுமா உனக்கு? ஏழு கடல்மைல்ல எட்டிப் பாக்கலாம் இலங்கையை. இங்க இருக்குற டிராலர் எண்ணிக்கை 3,036. மீனவர்கள் என்ணிக்கை 30,000. எழுபதிலேர்ந்து சுட்டதுல செத்தது 113 பேர். படுகாயமடைஞ்சது 1,005. ரெண்டு திராவிடக் கழகங்களும் கஜானாவை காலி செய்யிறதுலதான் இருந்துச்சு" இப்பிடியெல்லா விஷயத்தையும் நெட்டுல கொட்டியிருக்கானுங்க.
கவுண்டமணி இதையெல்லாம் எழுதுறானுங்களா? அவனுங்க என்ன வேலை வெட்டி இல்லாதவனுங்களா?
செந்தில் இதுல குசும்பு பண்றவனுங்களுக்கும் பஞ்சமே இல்ல. கார்த்திக் ரமாஸ்ன்னு ஒருத்தர் இதையே காமெடி பண்ணி "விஜயகாந்த் ஆட்சிக்கு வந்தா மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கே செல்ல வேண்டாம். நாங்களே மீன்களைப் பிடித்து வீட்டுக்கு வீடு அளிப்போம்"ன்னு சொல்வாரா அப்பிடின்னு கோக்குமாக்கு கேள்வி கேப்பாரு.
செந்தில்படத்துக்கு கோக்குமாக்கா டைட்டில் வைக்கணுமின்னா லக்கிலுக்கு'ன்னு ஒருத்தர் இருக்காரு. சாதிவெறியன்னு பிட்டப் போட்டு பின்னியெடுப்பாரு. அப்பிடியே தூய தமிழ்ல பேரு வைக்கணுமின்னா இராமகி இருக்காரு. திருட்டு திகிரியை ஒழிக்க வேண்டுமென்றால்...
கவுண்டமணி என்னாது திருட்டு திகிரியா?
செந்தில் அட ஆமாங்க திகிரின்னா இராமகி பாஷையில 'சிடி'ங்க
கவுண்டமணி அடங்கொக்காமக்கா இப்பிடியெல்லாம் கூட மேட்டரு நெட்டுல நடக்குதா?
வடிவேலு பெரியார் படத்தையே நெட்லேர்ந்து ஐடியாவப் பிக்கப் பண்ற அளவுக்கு மேட்டரு கொட்டிக் கெடக்குதாமே? மெய்யாலுமாவே? இப்பிடியெல்லாம் கூட மூலையில உக்காந்து சிந்திப்பாய்ங்களோ?
செந்தில்அண்ணே இப்ப எடுக்கிறாங்களே தசாவதாரம் அந்த ஐடியா கூட நெட்டுலதான் கெடைச்சதாம். உபயம் ஏதோ பெயரிலின்னு சொல்றாங்க...அவரு அத்தினி வேஷம் கட்டி அடிக்கிறவராம்
கவுண்டமணி ஆன்ன்ங் அந்தக் கதய இங்க உடாத அப்பனே... நவராத்திரி படம் வந்தப்ப உங்க நெட்டு இருந்துச்சாம் காட்டியும். அப்பாவியா வாயத் தொறந்தா கொசு வலம் வந்துட்டுப் போயிடுவீங்களே
செந்தில் அண்ணே கொசுன்ன உடனே ஞாபகம் வந்துடுச்சி. கொசு புடுங்கின்னு ஒரு ஆளு இருக்காரு. வண்டை வண்டையா திட்டறதுக்கு ஐடியா வேணுமின்னா அங்க போங்க.
கவுண்டமணிஎன்னாது கொசு புடுங்கியா? பேரு சூப்பரா இருக்கே
விவேக்இப்ப ஒண்ணு எனக்குப் புரியுது. காமெடியோ, டிராஜெடியோ நெட்டுல உள்ளவங்கள அடிச்சுக்க முடியாது. அதுனால கூட்டணியைப் போடு. நான் திராவிடம், தமிழ், இலவசம் மாதிரி ஆளுங்கள கவர் பண்றேன். மகளிர் அணியை கோவை சரளா பாத்துக்கட்டும். கொசுபுடுங்கி, லக்கிலுக் மாதிரி வெவகாரமான ஆளுங்கள கவனிக்கட்டும். வடிவேலு கைப்புள்ளைய கணக்கு பண்ணட்டும். குசும்பு புடிச்சவங்களை கருணாஸ் கவனிக்கட்டும்.
எஸ்ஜே சூர்யாஅப்ப நானு என்னா செய்யட்டும்?
விவேக் ஹஹ்ஹஹ்ஹா உங்களுக்குத்தான் ஏகப்பட்ட போலிகளைக் கவனிக்க வேண்டியதிருக்கே. கெட் செட் கோ...

(ஆளு புடிக்க சினிமாக்காரங்க வாராஹப்பு. நான் சைலண்டாய் எஸ்கேப் :-)

7 comments:

லக்கிலுக் said...

//செந்தில்படத்துக்கு கோக்குமாக்கா டைட்டில் வைக்கணுமின்னா லக்கிலுக்கு'ன்னு ஒருத்தர் இருக்காரு. சாதிவெறியன்னு பிட்டப் போட்டு பின்னியெடுப்பாரு.//

எதுக்கு இந்த கொலைவெறி?

அது சரி நக்கல் எல்லாம் திராவிடர்கள் மீது மட்டும் தானா? குடுமிப் பார்ட்டிங்க மேல குசும்பனுக்கு சாப்ட் கார்னர் போல இருக்கே? :-))))))

குசும்பன் said...

//குடுமிப் பார்ட்டிங்க மேல குசும்பனுக்கு சாப்ட் கார்னர் போல இருக்கே? :-))))))//

ஆஹா ஆரம்பிச்சுட்டீங்களா? விட்டுப் போன அவா லிஸ்ட் கொடுங்கோ... ஜமாய்ச்சுடலாம் ;-))))

நம்ம குசும்புல எதையும் பாக்கி வைக்கிறதில்லங் காணும் ஓய்!

Anonymous said...

யோவ் குசும்பு,

ஹரிஹரன்னு ஒரு நல்லவர் இருக்காரு ஓய். எவ்ளோ கொடுத்தாலும் வாங்கிப்பாராம். அவரை கொஞ்சம் கவனி ஓய்.

குசும்பன் said...

ஏம்ப்பா அனானி,

இண்டெர்நெட் இருட்டுக் கடையில் போட்டு அவரையும்தாம்ப்பா உருட்டினோம்?...

S Murugan said...

டிஸ்யூம் டிஸ்கஷன் நல்லாருக்கு....நல்ல சிந்தனை...அவரவர் தொணில சொல்லியிருப்பது ரசிக்கதக்கது.

சீமாச்சு.. said...

என்ன ராஜா.. ரொம்ப நாளா ஆளைக் காணோம்..?

இப்ப எங்க இருக்காப்புல?

மெயில் போடுங்களேன்?

அன்புடன்,
சீமாச்சு...

Anonymous said...

discussion nalla kkeethu! Kusumbanukku hats offf!sorru jatti offf...!