Monday, July 03, 2006

ஜோஸ்யம் ஹேஸ்யம் பாஷ்யம்

காட்சி - 1

ஜோஸ்யம்

(இம்முறை வாஸ்து ஸாஸ்திரம் படி வீட்டைத் திருத்தி அமைத்த சின்னக் கலைவாணர் அருமை அண்ணன் விவேக் நமது வெற்றிக் கூட்டணியான பார்த்திபன், வடிவேலு, கருணாஸோடு சேர்கின்றார். இனி உங்கள் பாடு...)

வடி: என்னாடா தெறிச்சிக்கிட்டு ஓடி வர? நாயி கீயி விரட்டுச்சா?
கரு: (வழக்கமான பாணியில்) ஏன் கேக்க மாட்டே... மறைவிடங்களில் உள்காயம்பட்டிருந்தா உனக்குத் தெரியும் அதோட வலி
விவேக்: என்ன நாயி கடிச்சு உள்காயமா? அடப்பாவி தமிழனுங்களா... நாயி கடிச்சா வெளிக்காயம்தானடா வரும். எப்படா திருந்தப் போறீங்க?
கரு: அண்ணே சும்மா இருண்ணே. இது வேற நாயி
விவேக்: வேற நாயா... நான் வெறி நாய் கேள்விப்பட்டிருக்கேன். ஏன் சொறி நாய் கூட கேள்விப்பட்டிருக்கேன். ஆனா வேற நாயா? இப்பத்தாண்டா கேள்விப்படுறேன். அய்யா கெஞ்சிக் கேட்டுக்கிறேன். கொஞ்சம் கூட புரியும்படியா சொல்லவே மாட்டியா? பாரு ரெண்டு வார்த்தை நீ சொன்னதுக்கு அவனவன் பத்தி பத்தியா பொலம்புறானுங்களே...
வடி: எல்லாம் கெரகம் அவன சுத்துது. அனுபவிக்கிறான்
விவேக்: டேய் கெரகமெல்லாம் விண்வெளியில அது பாட்டுக்கு தானாச் சுத்துதுடா. நீங்க என்னடான்னா ஒருத்தனைச் சுத்துறதா ரீல் ஓட்டுறிங்களேடா. இப்பிடி கெரகம் ஒவ்வொருத்தனையும் சுத்த ஆரம்பிச்சா உலக மக்கள்ஸ் தொகைக்கு எவ்வளவு கெரகங்கள் தேவைப்படும்னு தெரியுமா? போங்கடா உங்கள நூறு கலாம் வந்தாலும் திருத்த முடியாதுடா
கரு: வடிவேலு அண்ணே... நாடி ஜோஸ்யம் பாத்தா எல்லாம் சரியாயிடுமா?
விவேக்: டேய் நாடியைப் நல்லதுக்கும் புடிப்பாங்க. டெட் பாடி ஆயிடுச்சான்னு கன்பர்ம் பண்ணவும் புடிப்பாங்க. சில நாட்டுக்கட்டை ஓல்டு லேடிஸ் சினிமாப் படத்துல மட்டும் மயங்கி விழுந்த ஹீரோயின் நாடி புடிச்சி பிரக்னெண்ட் மேட்டர சொல்வாங்க. ஆனா அதயே நீங்க மிஞ்சிட்டீங்களேடா. இப்ப நாடி ஜோஸியமா? ஆஹா உங்கள மில்லியன் பெரியார்கள் வந்தாலும் திருத்த முடியாது
பார்: ஸார் மில்லியன்'ன்னா என்ன?
விவேக்: (குழைகிறார்) ஹிஹிஹி நம்ம மொத மொறையா சந்திக்கிறோம். கொஞ்சம் ஓவரா பேசிட்டேனா? அப்பப்ப கொஞ்சம் சவுண்ட் உடலேன்னா மக்கள்ஸ் மதிக்கமாட்டாங்க. கொஞ்சம் புரிஞ்சுக்கங்க. ப்ளீஸ்.
பார்: ஓகே. Identity Crisis'ஸா? அட்ஸீஸ் பண்ணிக்கிறேன்.
விவேக்: சரி சரி நான் சொன்னதையெல்லாம் மறந்திடுங்க. நம்ம எல்லாரும் இன்னைக்கு சரக்கடிக்கிறோம். நான்தான் ஸ்பான்ஸர். ஓகேவா?
(ஓசியில கொடுத்தா பினாயிலையும் குடிக்கும் கூட்டமொன்று கிளம்பத்தயாராகின்றது. போகின்ற வழியில் எந்த இந்தியன் புத்தகக்கடை வர... பார்த்திபனுக்கு இலக்கிய தாகமெடுக்கின்றது. அனைவரும் கடைக்குள் நுழைகின்றனர்)
பார்: (வடிவேலுவைப் பார்த்து) இது படிச்சவங்க வந்து போற இடம். பாத்து பிஹேவ் பண்ணு புரியுதா?
வடி: அண்ணே எல்லாரும் ஏற்கெனவே படிச்சவங்கன்னா மறுபடி எதுக்கு புத்தகம் வாங்க இங்க வரணும்?
பார்: என்ன என்கிட்டயே நக்கலா?
வடி: (கை மெய் பொத்தி) ஹ்ம்ப்ப்
பார்: அது...
விவேக்: (படு ஸ்டைலாக ஒரு புத்தகத்தை எடுக்கின்றார்) ஹூம் "30 நாட்களில் ஹிந்தி கற்கலாம்". இப்பிடித்தானா நரசிம்ம ராவ்காரு 10 பாஷை பேசினாரா? (ஹூம்...அப்புத்தகத்தை பின்னர் வேறொரு அடுக்கில் வைக்கின்றார். பார்த்துக் கொண்டிருந்த பார்த்திபன் ஜெர்க்காகி)
பார்: டேய் இப்ப நீ என்ன பண்ணின?
விவேக்: (ஹ்ம்ம்ம்ம்) ஒண்ணுமில்லியேப்பா. ஒரு பொஸ்தகத்தை எடுத்தேன். அப்புறம் வைச்சிட்டேன். இது தப்புங்களா?
பார்: டேய் அந்த பொஸ்தகம் எடுத்த இடமென்ன? திருப்பி அந்த பொஸ்தகத்தை எடுடா. எடுத்தியா? இப்ப அந்த புஸ்தகத்துக்கு பின்னாடி இருக்கிற பொஸ்தகமென்ன?
விவேக்: ஆஹா... செம்மொழி தமிழ் புஸ்தகமா? பிரதர் ரேக் மாத்தி வைச்சிட்டேன். ஐ யாம் ஸாரி. உடனே சரியான இடத்துல வைச்சுடறேன்
பார்: ஹை இப்பிடி சிம்பிளாச் சொல்லிட்டா நாங்க விட்டுடுவோமா? நீ ஹிந்தியை வைச்சி தமிழை மறைக்கப் பாத்தே?
விவேக்: அண்ணே உங்க கற்பனைக்கு அளவே இல்லீங்களா?
பார்: அது மட்டுமா? அந்த தமிழின் பின்னாலிருக்கும் இனமான உணர்வுகளைக் கூடத்தான்
விவேக்: (அடப்பாவிங்களா ஒரு பொஸ்தகத்தை ரேக்கு மாதிரி வைச்சதுக்கு உலகப் போர் ரேஞ்சுக்கு பேசுறானே. அடடா கூட்டமும் கூடுதே. கூட்டத்தில் கைமா ஆக விரும்பாமல் பார்த்திபனின் கையை உயர்த்தி) தமிழுக்கு வாழும் அண்ணன் வாழ்க என்ற கோஷமிடுகின்றார்
வடி: (தமிழால் வாழும் அண்ணன்னு கோஷம் போடுகின்றார்)

காட்சி - 2

ஜோஸ்யம்+ஹேஸ்யம்

(ஒரு வழியாய் அனைவரும் சரக்'கடிக்கச் செல்கின்றார்கள். சைடு டிஷ்ஷை 'கடிக்கின்றார்கள்.)

விவேக்: டேய் இப்ப நான் சொல்றேண்டா சூப்பர் ஜோஸியம். அம்மா கிட்ட சீறிக்கிட்டு போன சிறுத்தை அறிவாலயத்துல கூடிய சீக்கிரமே சரண்டர் ஆகப் போகுது. தனக்காக எதையும் வெட்டுபவர் "தமிழோடு தமிழிணைந்தது'ன்னு அறிக்கை வுடுவாரு. தமிழா இது நிதர்சனம்டா... நீயே பாரு இது நடக்கலேன்னா தமிழுக்குத்தான் அவமானம்..."
வடி: (என்னது இவன் மறுபடியும் 'போகஸ்'ல வரான்னே என்ற 'பொச்சுக்காப்புடன்') சரி சரி வந்துட்டா...?
விவேக்: ரொம்ப ஸிம்பிள். தமிழை கட்டாய பாடமாக்கிய கலைஞரை ஆரத்தழுவுவதில் ஆச்சரியமில்லை என்று இணையத்தில் திராவிடர்கள் கூவுவார்கள்
கரு: எனக்கு ஒண்ணுமே புரியலியே. கொஞ்ச நாளைக்கு முன்னாடிதானே எச்சில் இலை அப்பிடி இப்பிடின்னு பேசினாங்களே?
விவேக்: அட நாதாரிகளா இதுகூட உங்களுக்கு புரியாதா? 'இருத்தலியம்' (நன்றி: குழலி) முக்கியமானதுடா. அப்பிடி இப்பிடி செஞ்சாவது இருத்தலே முக்கியம். இல்லேன்னா என்னாடா அவனுங்களைச் சாவச் சொல்றீங்களா அப்பிடீன்னு சிங்கப்பூர் வரை கேப்பானுங்க...
கரு: ஓ... அப்பிடின்னா கடந்த காலத்துல ஒரு புலியை ஆந்திராவுல பலி கொடுத்தாங்களாமே? ஏதோ மேகஜின்ல படிச்சேன். அதுக்குன்னு இப்பிடியா கால்ல வுழுறது?
விவேக்: மடத் தமிழனுக்கு புலிக்கும், சிறுத்தைக்கும் வித்தியாசம் தெரியலியே... அப்புறம் சிறுத்தை காலுல வுழலை. ஏண்டா கற்பனை இப்பிடியெல்லாம் கற்பனை பண்றீங்க. சிறுத்தை பசித்தாலும் எச்சிலிலை தின்னாது.
வடி:
அதெல்லாம் சரி என் வென்று. வேறென்னா செய்யும்?
விவேக்: ஏன் பொக்கே கூடக் கொடுக்கும்.
வடி: அட இதப் பாருடா... அப்புறம்
விவேக்: ஆனா சிறுத்தையோட கதைய 'டார்டார்'னு கிழிச்சுப்போட்டாய்ங்க. ஒரு வாட்டி கூட மேடையிலயோ, தனியாவோ எலீக்ஷன்ல ஏத்தலையாமே? மட்டு மருவாதையில்ல?
வடி: ஹலோ ஹலோ இது என் ஸ்டைலு. அதான் இப்போ ஒண்ணாக் கூடி கைகளை உயர்த்திட்டோம்'ல
விவேக்: ஓ ஸாரி ஸாரி மப்புல ஸ்டைலு மாறிடிச்சு... மரத்தமிழர்களே நன்றாகக் கேளுங்கள். 'பிரிவோம் சந்திப்போம்'ங்ற முறையில திரும்பி எல்லாரும் ஒண்ணு சேருங்க...
கரு: ஏங்க மரத்தமிழர்ல ஸ்பெல்லிங் மிஸ்டேக்
விவேக்: சரியாத்தாண்டா சொன்னேன் என் மரத்தமிழா. மரத்திற்கும் மறத்திற்கும் வித்தியாசம் அறியாதவனா நான்? உங்களை எத்தனை உ.வே.சா. வந்தாலும் திருத்த முடியாது
வடி: எனக்கு 'உவ்வேக்' தெரியும். ஆனா உவேசா யாருப்பா?
விவேக்: அட தானைத் தமிழா... தமிழுக்கு தொண்டு செய்தவனை சாதியால் மறந்தாயோ? சாதிகள் இல்லையடி பாப்பா என்று முழங்கினானே முண்டாசுக்கவிஞன்.
வடி: (மனதிற்குள் விவேக்கை நோக்கி) அப்புறம் என்னாத்துக்கு சாதி பேருல நடத்துன வெளாவில கலந்துக்கிட்டு உஞ்சாதி ஆளுகளுக்கு பிரைஸ் கொடுத்தே?
விவேக்: (ரஜினி ஸ்டைலில்) ஹஹ்ஹஹா.. இதெல்லாம் ஜுஜூப்பீ எனக்கு என் ரூட்டே தெரியாது. ச்சும்மா விளாவுல களந்துக்கிட்டேன். சிவாஜி ஸீன்ஸ ஸ்பெயின்ல சுட்ட்டுட்டாங்க. ஷங்கரோட எப்பவோ வொர்க் பண்ணியிருக்கணும். ஜஸ்ட் மிஸ்ஸாயிடுச்சி.
பார்: டேய் ஸ்பான்ஸர் ஸார். ஓவரா மப்பாயிடுச்சு போலருக்கு. வாய்ஸ் குழறுகின்றது மாம்ஸ்.
விவேக்: இப்ப ஸ்டெடியா பாடறேன் கேளும் வோய்.

"நாண்டா உங்கப்பண்டா நல்லமுத்துப் பேரண்டா
வலைப்பூ எழுதி பாடஞ் சொல்ல வாரேண்டா வாரேண்டா"


வடி: என்னாது பாடம் கத்துக் கொடுக்க வாரியா? சைக்கிள் கேப்புல சைத்தன்ய ரதம் வுடுறானே...
கரு: அண்ணே இப்ப நீங்க பாடுன பாட்டு கபடி ஆட்டத்துலதானே பாடுவாங்க?
விவேக்: டேய் சொல்லி அடிக்கிறதுல நான் கில்லிடா
வடி: ஹூம் சொல்லாம நான் அடிச்சா அது ஜல்லியா?
(பாரில் இவர்களது அடாவடி தாங்க முடியாது ஒருவர் வெகுண்டு எழுகின்றார்)
ஒருவர்: அட தரங்கெட்ட பயலுகளா... உங்களுக்கு நல்ல மனமே கெடையாதா?
வடி: பெர்சே கொஞ்சம் அடங்குறது... ISO மாதிரி உங்கிட்ட முத்திரை வாங்கித்தான் நாங்க பேசணுமோ?
கரு: ஹேய் யூ ஓல்டுமேன். கிளாட் டு மீட் யூ. நீங்கதான் இந்தியன் தா(த்)தாவா?
ஒருவர்: யூ யூ யூ... நான் தமிழ் தா(த்)தாடா தரங் கெட்டவனே
கரு: ஹேய் ஹேய் ஹேய் தமிழ்நாடு இந்தியாவுலதானே இருக்கு. பாத்தா மெத்த படிச்ச மேதாவி மாதிரி தெரியுற. இப்பிடி சில்லறையா பேசுறியே. கமான் கமான் டெல் மி. இ...ண்...டி...யா... (நன்னன் போல் ஆங்கில வகுப்பெடுக்கின்றார்)
ஒருவர்: ஆஹா நீ மேல்ஜாதியான அந்த குறிப்பிட்ட ஜாதிதானே? எனக்குத் தெரியும். எல்லாமே புரிந்து விட்டது.
பார்: ஹலோ பெருசு ஸார். இப்ப என்ன நடந்துச்சுன்னு இப்பிடி "டிங்கிரி டிய்யாலே" போடறீங்க? யார் சார் நீங்க?
ஒருவர்: உங்களை நான் இரண்டு வயதில் பார்த்த ஞாபகம் வருகின்றது
பார்: என்னாது ரெண்டு வயசுல நடந்தது ஞாபகம் வருதா? இது கொஞ்சம் ஓவராத் தெரியில?
ஒருவர்: (பிளட் பிரஷர் எகிற) ஆஹா நீதான் அந்த 'மனிதனா'?
விவேக்: இங்க எல்லாரும் மனிதங்க தானேப்பா. மனிதன்ல "அதென்னப்பா அந்த மனிதன்"? கொழப்பமா இருக்கேப்பா. ஒருவேளை சரக்கு டூப்ளிகேட்டா? இந்த சுத்து சுத்துதே
தமிழ் பசி: இந்தியாவில் தமிழ்நாடு ஒரு அங்கமாக இருப்பதையே விரும்புகின்றேன்
விவேக்: ஆஹா இந்தாளு தொல்லை தாங்க முடியலேப்பா. ஏதோ கான்ட்ராக்டர் மாதிரியே அனாலிசிஸ் பண்றாருப்பா

== CUT & FREEZE ==

(காட்சி மாற்றம். இந்தியாவின் ஒரு தென்கோடியில் பிரௌசிங் சென்டர். பேச்சிலர் டிகிரியைத் தொலைக்கும் வயதில், அச்சு ஊடகத்தில் வளரும் இளந்தாரி ஒருவர் வலை மேய்கின்றார்)

இளந்தாரி (இள): (தனக்குள்) ஆஹா ரொம்ப நாளைக்கப்புறம் குசும்பன் பதிவு. அட என்னாத்த எழுதியிருக்காருன்னு ரெண்டு மணி நேரமா மண்டையப் பிச்சிக்கிறேன். ஒண்ணுமே பிரியலியே. நம்ம தலீவரோட மௌனத்தக் கூட புரிஞ்சுக்கலாம். ஆனா குசும்பன் ரைட்டிங் ஒ(ம)ண்ணுமே புரியலியே. புரியணுமின்னா ஒரு 'கட்டிங்' போடணுமா? இல்லே சதுரமேசையில சக வலைப்பதிவரோட 'சிட்டிங்' போடணுமா? தல சுத்துதே... (சப்தமாக) அர்ரே பாபா ஜல்தி ஆவ். இப்படிச் சூடு...
அருகிலிருந்தவர் (அரு): என்னங்க சாமியார் பேரச் சொல்றீங்க?
இளந்தாரி: அடப்போய்யா இவரு இணைய சாமியார்யா
அரு: ஓஹோ அந்த போலிச் சாமியாரா?
இள: அதெப்பிடி உங்களுக்கும் தெரியும் அவரு போலின்னு?
அரு: "எல்லார்க்கும் நல்லவர்" அப்பிடின்னு பட்டம் வாங்கணுமின்னா கஷ்டம் ஸாரே. அந்த மேரி நடந்துக்கிட்டு வந்தாரு இவரு. இப்போ என்ன ஆச்சி? நெட்டுல ஒரு பிளாட் வாங்க பிட்ட (Bid) போட்டாரு. உங்களுக்கு இந்த பிளாட் ஒத்து வராதுன்னு முகத்துல அடிச்ச மேரி சொல்லிப்போட்டாங்களாம். நான் அப்பவே சொன்னேன். மனுசன்னா ஒரு நெலைப்பாடு வேணுமின்னு. கேட்டாத்தானே?
இள: (ஆச்சரியத்துடன்) இப்பிடி வெலாவரியா தாக்கல் (தகவல்) சொல்றீங்களே... நீங்க யாருங்க?
அரு: (உணர்ச்சிவயப்பட்டு) ஆமாம் தாக்கல்தான். அதுவும் தொடர் தாக்கல். தனியஞ்சல் செய்தேன். காரியம் கை மீற பொதுவில் பின்னூட்டினேன்.
இள: தாக்கலா? தாக்குதலா? என்னங்க கில்லி மாதிரி அடிக்கிறீங்க?
அரு: பொறுக்கி
இள: யேய்யேய் மருவாதையாப் பேசு. சிரிச்சுப் பேசுற பொம்பளையும், அழுது பொழைக்கும் ஆம்பளையையும் நான் மட்டும் இல்ல என் தலைவர் கூட நம்பமாட்டார்
அரு: அட அது இல்லைப்பா... நம்ம விஜய் கில்லிக்கு அடுத்தபடி 'பொறுக்கி' படத்துக்கு பூஜை போட்டுருக்காரு
இள: எனக்கென்னமோ 'கில்லி'க்கு பேசாம 'பொறுக்கி'ன்னே பேரு வைச்சுருக்கலாம். அதத்தானே சின்ஸியரா நீங்க பண்றீங்க. ஹிஹிஹிஹிஹி
அரு: (தெறிக்கின்றார்)

== CUT & FREEZE ==

காட்சி - 3

ஜோஸ்யம்+பாஷ்யம்

(பேக் கிரௌண்ட் பாடல். பாரில் காட்சி தொடர்கின்றது)

ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
ஏன் ஏன் ஏன்?


(மக்கள் கூட்டம் ஏன் ஏன் ஏன் என்று எக்கோ செய்கின்றது. பாட்டை மாத்து என்று குரல்களும் ஓங்கி ஒலிக்கின்றது. அப்போது கூட்டத்தில் ஒரு சிறிய சலசலப்பு. பார்த்திபன் & கோ பஞ்சாயத்து பண்ண விரைகின்றது)

பார்: யேய் நிறுத்துங்கப்பா. மப்பு தலைக்கேறியவுடனே அடிதடியை ஆரம்பிச்சுட வேண்டியதுதானா? இப்ப என்னா நடந்திச்சு
சண்டைக்கோழி 1 (ச 1 குழறலுடன்): உங்களுக்கு அடிப்படை பிரச்சினை புரியாது
வடி: ஏம்ப்பா புரியாட்டி சொல்லிக்குடுப்பா. புரிஞ்சுக்குவோம்ல
ச 1: மறுபடியும் சொல்றேன். உங்களுக்கு அடிப்படை பிரச்னை புரியாது. ஒரு பிரச்சினைனா 360 டிகிரி சுத்தி மாறுகட்டோட பாக்கணும்.
சண்டைக்கோழி 2: ஏய் எனக்கு திட்டவும் தெரியும். திட்டு வாங்கவும் தெரியும். உனக்குப் பிரச்னை பத்தி என்னா தெரியும்? நேத்துக் கூட ஹுவர் டேம் பிரச்சினைல மோதா பட்கர் உண்ணாவிரதம் இருந்ததை அருந்ததி கவரேஜ் பண்ணியதை எடிட் செய்யாமல் இணையத்தில் வந்ததைப் பார்த்து குழம்பி, புட் பால் முடிந்ததும் எழுதுவதாய் உத்தேசித்துள்ளேன். ஹூம் இவனுங்க எல்லாம் சமூகச் சேவை பண்றவங்களாம்...
ச 1: எப்பிடித்தான் இப்பிடி பொறுமையா இந்தாளால பேச முடியுதோ?
வடி: இப்ப இந்தாளு என்ன பேசினாருன்னு அவருக்குப் புரிஞ்சி பஞ்ச் டயலாக் பேசுறாரு?
ச 1:
யேய் நாந்தான் மொதலிலேயே சொன்னேல்ல. உங்களுக்கு அடிப்படை பிரச்னை தெரியாது. (நடுவிரலை உயர்த்திக் காட்டுகின்றார்) எங்க பக்கத்துல இதுக்குத்தான் வாசுவை மூடிட்டு வேலையப் பாருங்க
விவேக்: அடப்பாவிங்களா... வாஸ்து கேட்டிருக்கேன். வாசுவா? எப்பிடிப்பா மூடிறது? (ஆங் அப்பிடின்னா அப்படியா?)
பார்: யேய் இங்க வா. நடு விரலு உசந்து இருக்கு. அப்புறம் எங்களைப் பாத்து வாசுவை மூடச் சொன்னே. இப்ப நாங்க வாசுவை மூடிக்கிட்டோம்னா அப்புறம் எப்பிடி வேலை பாக்க முடியும்?
வடி: அடப் புடிச்சார் பாரு அண்ணாச்சி பாயிண்ட...
ச 1: அப்புறம் அதென்ன ஒங்கிட்ட மட்டும் தான் வெரலு இருக்கா இப்பிடி காமிக்க. அதென்ன அடிப்படை பிரச்சினைதானே. இப்ப நான் தீத்து வைக்கிறேன் பாரு (என்றபடி நீண்டிருந்த விரலை நறுக்கென்று கடிக்க ச -1 துள்ளுகின்றது). இப்ப என்ன பண்ற கட்டை விரலை நீட்டு
ச -1: (தலையாட்டி மறுக்கின்றது) மறுபடியும் கடிக்கலேன்னா நீட்டுறேன்
பார்: ஹூம் நீட்டினாயா? இப்போது அதை லேசாம மடக்கு. இந்த "சைன்" தான் உனக்கு லாயக்கு. சூ(ஃ)ப்பிக்கிட்டே போ. அடியென்னடா அடி... கடி உதவுறது மாதிரி அண்ணன் தம்பி கூட உதவமாட்டான்

5 comments:

Anonymous said...

குசும்பன்,

நிறைய பேர்களை காயப்பட்டுவிட்டீர்கள் என்று உம்மீது இணையத்தில் குற்றச்சாட்டுகளை முன் வைத்து அறச்சீற்றம் கொண்டோர் சில உண்டு. இதைப் பற்றி இங்கு நான் குறிப்பிட்டே
ஆக வேண்டும்.

குறிப்பாக இளவஞ்சியுடனான பதிவுப் பகர்வுகள் முக்கியமானதென்றே கருதுகின்றேன்.

மேட்டிமை மேதமையைவிட, பேதமையை ஸ்வீகாரம் கொண்ட சில ஸ்ருங்காரங்கள் உலவும் இணையமிது. மேதமை விளைவிக்கும் ஆபத்தை விட பேதமை பேராபத்து உண்டாக்கும்.

எடுத்துக்காட்டாக "குசும்பன்" என்ற பெயர் உங்களுடையதாக நீங்கள் நினைக்கலாம். அது மேட்டிமை மேதமையாகக் கூட வரலாம். அதற்காக குறும்பன், குசும்பு, 'குசு'ம்பன், வம்பன்,
தொம்பன் என்று யார் எழுதினாலும் அது உங்களையே என்று நீங்கள் நினைத்தால் அது பேதமை.

உங்கள் எழுத்துகளை ஆர்வமுடன் வாசித்து வருபவர்களில் நானும் அடையாளம் கண்டு கொள்ள விழைகின்றேன்.

"அப்டிப்போடு", "மரம்" என்ற பெயர்களில் எழுதும் "பெண்" ஒருவர் போகிற போக்கில் உங்கள் மீது சகதி வாறியடித்து விட்டு இளவஞ்சியின் பதிவில் சென்றுள்ளார். அது அவரது உரிமை.

ஆனால் "அப்டிப்போடு" என்று கோலிவுட் படங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பிரயோகம் எல்லாவற்றிற்கும் "கேஸ் போடுவேன்" என்று இணையத்தில் குதித்த "அப்டிப்போடு"
என்ற ஜந்து முயலுமா? அதென்ன "அப்டிப்போடு" காப்பிரைட் செய்யப்பட்ட பிரயோயகமா?

இப்போது கூட "மரத்திற்கும் மறத்திற்கும் வித்தியாசம் அறியாதவனா நான்? உங்களை எத்தனை உ.வே.சா. வந்தாலும் திருத்த முடியாது" என்று கூறியிருக்கின்றீர்கள். இதற்கு
இங்கே பதில் கூறும் தெம்பு இல்லாமல் வேறெங்கேயோ, மண்டபத்தில் மதியின்றி யாரோ எழுதிக் கொடுத்ததைக் கக்கி ஒரு பின்னூட்டம் அந்த அற்ப ஜந்துவிடமிருந்து வரத்தான் போகின்றது.

உலகமே தன்னைச் சுற்றி உருள்கின்றது என்பது மேட்டிமை மேதாவித்தனம் அந்த ஜந்துவிடமில்லை. அது பேடித்தனமான பேதமை.

இதில் இணைய "அப்டிப்போடு" இளவஞ்சியின் பதிவில் எழுதியதைப் போல் "இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து எழுதுங்கள்... என நாசூக்காக சொல்லி விட்டு நடையக் கட்டலாம்தான்... ஆனால் முடியவில்லை....இந்தக் கெரகங்களெல்லாம்... முடியவே
முடியாது சாமி....!!. நேரத்துக்காக காத்திருக்க வேண்டியதுதான்....."

அப்டிப்போடாதவன்

Anonymous said...

நெட்டுல ஒரு பிளாட் வாங்க பிட்ட (Bid) போட்டாரு. உங்களுக்கு இந்த பிளாட் ஒத்து வராதுன்னு முகத்துல அடிச்ச மேரி சொல்லிப்போட்டாங்களாம். நான் அப்பவே சொன்னேன். மனுசன்னா ஒரு நெலைப்பாடு வேணுமின்னு. கேட்டாத்தானே?

பார்ப்பனர்கள் தமிழ்மணத்தின் ஊதுகுழலாக இருக்கலாம். உரிமையாளர்கள் ஆகமுடியாது. அது தெரியாமல் பாஸ்டன் பாலாஜி மூலம் பார்ப்பனர்கள் விலைக்கு கேட்டால் கொடுத்துவிடுவோமா. தமிழ்மணத்தை பார்ப்பனர்களுக்கு விற்காத காசிக்கு தமிழ்வலைப்பதிவு உலகம் கடமைபட்டிருக்கிறது.

Anonymous said...

பதிவு குசும்பு
அல்லாம் ரொம்ப
சூப்பர்ணா. டபுள்
ஆக்டிங் அத விட
சூப்பர்ணா. பத்து
பின்னூட்டம்
இப்படியே
போடட்டுமாண்ணா?
நீங்கதான் குந்தவை
வந்தியத்தேவன்னு கை
நழுவி போட்டு
ஒட்சாச்சு. டிலிட்
பண்ண ரெண்டு நாள்
தோணல. அப்பால டிலிட்
பண்ணி அப்பன்
குதிருக்குள்ளே
இல்லேண்ணு கடசி
வார்த்தயா
எதுக்குண்ணா
இன்கேர்ந்து
கூவணும்.

Anonymous said...

பதிவு குசும்பு
அல்லாம் ரொம்ப
சூப்பர்ணா. டபுள்
ஆக்டிங் அத விட
சூப்பர்ணா. பத்து
பின்னூட்டம்
இப்படியே
போடட்டுமாண்ணா?
நீங்கதான் குந்தவை
வந்தியத்தேவன்னு கை
நழுவி போட்டு
ஒட்சாச்சு. டிலிட்
பண்ண ரெண்டு நாள்
தோணல. அப்பால டிலிட்
பண்ணி அப்பன்
குதிருக்குள்ளே
இல்லேண்ணு கடசி
வார்த்தயா
எதுக்குண்ணா
இன்கேர்ந்து
கூவணும்.

Anonymous said...

பதிவு குசும்பு
அல்லாம் ரொம்ப
சூப்பர்ணா. டபுள்
ஆக்டிங் அத விட
சூப்பர்ணா. பத்து
பின்னூட்டம்
இப்படியே
போடட்டுமாண்ணா?
நீங்கதான் குந்தவை
வந்தியத்தேவன்னு கை
நழுவி போட்டு
ஒட்சாச்சு. டிலிட்
பண்ண ரெண்டு நாள்
தோணல. அப்பால டிலிட்
பண்ணி அப்பன்
குதிருக்குள்ளே
இல்லேண்ணு கடசி
வார்த்தயா
எதுக்குண்ணா
இன்கேர்ந்து
கூவணும்.