Monday, October 24, 2011
Sunday, January 02, 2011
சித்தப்பாவும் சில அப்ரசெண்டிகளும்
"ல்தமோ சைஆ" என மூத்தவலை பதிவர் பஞ்ச் டயலாக்குடன் தொடங்கியது எலக்கிய பொஸ்தக வெளி"ஈட்டு" விழா! ரெமி மார்டீன் சித்தப்பு "யாவரும் கேளீர்" என்று நர்சிம்ம"ராவா"க கூவ களை கட்டியது அரங்கம். கூடவே கும்மியடிக்க அப்ரசெண்டிகள் கொமெரா மற்றும் இத்யாதிகளுடன் ஆஜர். அப்புறம் BLOG'ட்டு பொதி போடணுமில்லே!
பொஸ்தகம் லிஸ்ட்டில் ஒன்றான "பூ மாது"வின் வாசம் தூக்கம் என்பதால் "தேக" வதையை பொருட்படுத்தாமல் வாதையுடன் ஈக்களும் அங்கே ஆஜர். "தனித்திரு விழித்திரு பசித்திரு" என்று திரு திரு வென சமோசாவை சவைச்சபடி கண்களில் கனலுடன் செங்கனல் சேட்டாவும் ஆஜர்! "தம்பி டீ இன்னும் வரல" என்றவுடன் லக்கி அடிச்ச லுக்குடன் நவயுக கிருஷ்ணனும் ஆஜர். ரெமி மார்டினுக்கு சைட்டிஷ்கின் ஆஜராக இதோ விழா கவரேஜ்.
சித்தப்பா: ஆஜர் ஆஜர் ஆஜர். இது பொஸ்தக வெளி"ஈட்டு" விழாவானு. மலையாளத்தில் பரஞ்சேங்கில் வல்லிய யுக்தியானு. இவிட புதியதாயிட்டு பணி கிட்டி. இவிட என்னை "புத்த நச்சி" போழ் கொண்டாடும் சொர்க்கமாணு! அடேய் அப்ரசெண்டிகளா சத்தம் போடாம இருந்தா எப்பிடி? "ச்சீ"லேவின் சில்வண்டுகள் தெரியுமா?
Corkஇ:
சரக்கு வைச்சிருக்கேன்
இறக்கி வைச்சிருக்கேன்
சாளரத்தை தொறந்து வைச்சி
கொமெண்ட் வேண்டியிருக்கேன்
சௌஜன்யா:
இந்த விழாவைப்போல்
எத்தனைபேர் காய்கிறார்களோ
இந்தக் இடையைப்போல்
எத்தனைபேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ
இந்தச் கட்டையைப்போல்
எத்தனைபேர் நலுங்குகிறார்களோ
அவர்கள் சார்பில்
உங்களுக்கு நன்றி
நவகிருஷ்ணா:
ஆஹா கவுஜ கவுஜ! மனச தொட்டீங்க! ஆனா "அடிக்கும்" போது தொட்டீங்க!
செங்கனல்: நல்லதோர் ஆரம்பம். ஸ்வீட் எடு கொண்டாடு.
சித்தப்பா: அடேய் அப்பரசிண்டிகளா...இது புதிய முயற்சிடா. பொஸ்தகத்த மாத்திரம் பேசுங்கடா. என்னோடத மறுபடியும் நா"வள்" வெளியீடு ஆக்கிடாதீங்க. ஏய் இது நைட் நேரம். நீ கூலிங் கிளாஸை கழட்டு
சைட்டிஷ்கின்:
கோலிவுட் சர்க்கிளிலே நொந்தலாலா
உந்தன் கிக்குஜிரோ தெரியுதில்லே நொந்தலாலா
எடுத்த காட்சியெல்லாம் நொந்தலாலா
தகேஷி கிட்டானோ தெரியுதில்லே நொந்தலாலா
நவகிருஷ்ணா: அப்போ இது உங்கதை இல்லையா? "மேட்டருக்கு வா!"
சைட்டிஷ்கின்: இது ஒரு "பூமாது" கதையாணு. நீங்கள் அதை வீட்டில் வைத்துப் படிக்க முடியாது.
ஜட்டி சுட்டதடா
கை விட்டதடா
லாலாக்கு நொந்தலாலாமா!
செங்கனல்: என்னாது "பூமாது" கதையா? அதாவது பூக்காரி(கை) கதையா? எங்க கொஞ்சம் ஊது....
குழல் ஈ: இதை நான் வன்மையாக ஆதரிக்கின்றேன்
Corkஇ: நண்பேண்டா
சௌஜன்யா: "பூமாதா" எங்கள் குலமாதா
செங்கனல்: மாது மதுவென்று இணையத்தில் ஏற்கெனவே க(பு)தைக்கப்பட்ட ஸங்கதிகளாணு. "மாஸ்க்"கிட்டு டாஸ்மாஸ்கிட்ட ஒரிஜினல் குசும்பிட்ட ரெண்டு புள்ளிகாரன்களைகண்ட இணையமாணு இது
நவபாரதி: நர்ஸிம்மா தீர்ப்பை மாத்து
Corkஇ: ஆ"ங்". அவாளை மாத்தச் சொல்லு. நான் மாத்துறேன்
சித்தப்பா: ஆணிய புடுங்க வேண்டாம். டேய் இது என்னோட பொஸ்தக வெழாடா
சைட்டிஷ்கின்: இதை பற்றி ராவுல ரெமி மார்டினுடன் பறையலாம்
சித்தப்பா: ஆதிவாசி. தினவை அடக்கி வாசி.
நர்சிம்ம"ராவ்": பேட்டி கொடுப்பவர் நாங்கள். தினவெடுத்து வருகிறது வரிப்பட்டாளம்
நவகிருஷ்ணா: என்னாது "தினவா?" பேட்டியா?
சித்தப்பா: அட ஆச்சரியத்துக்கு பொறந்தவனே! சீனியர் பதிவர்களைப் பாரு
குழல் ஈ: இதை நான் வன்மையாக எதிர்க்கின்றேன். ஏனிந்த கொலை வெறி?
சித்தப்பா: டேய் ஸாகி பாம்பர் வேணும்டா. முடியலடா
அத்திரி புத்திரி பார் டெண்டர்: யார் ஸார் அந்த ரைட்டர்? மதுரைக்காரரா?
சித்தப்பா: டேய் அப்ரஸெண்டிகளா. போதும் இத்தோட நிறுத்திக்கலாம். ரொம்ப நல்லவனாக்கீட்டீங்கடா. உங்க எல்லாருக்கும் "படைப்புபுரம்" நாவல் பார்சலேய்...
பொஸ்தகம் லிஸ்ட்டில் ஒன்றான "பூ மாது"வின் வாசம் தூக்கம் என்பதால் "தேக" வதையை பொருட்படுத்தாமல் வாதையுடன் ஈக்களும் அங்கே ஆஜர். "தனித்திரு விழித்திரு பசித்திரு" என்று திரு திரு வென சமோசாவை சவைச்சபடி கண்களில் கனலுடன் செங்கனல் சேட்டாவும் ஆஜர்! "தம்பி டீ இன்னும் வரல" என்றவுடன் லக்கி அடிச்ச லுக்குடன் நவயுக கிருஷ்ணனும் ஆஜர். ரெமி மார்டினுக்கு சைட்டிஷ்கின் ஆஜராக இதோ விழா கவரேஜ்.
சித்தப்பா: ஆஜர் ஆஜர் ஆஜர். இது பொஸ்தக வெளி"ஈட்டு" விழாவானு. மலையாளத்தில் பரஞ்சேங்கில் வல்லிய யுக்தியானு. இவிட புதியதாயிட்டு பணி கிட்டி. இவிட என்னை "புத்த நச்சி" போழ் கொண்டாடும் சொர்க்கமாணு! அடேய் அப்ரசெண்டிகளா சத்தம் போடாம இருந்தா எப்பிடி? "ச்சீ"லேவின் சில்வண்டுகள் தெரியுமா?
Corkஇ:
சரக்கு வைச்சிருக்கேன்
இறக்கி வைச்சிருக்கேன்
சாளரத்தை தொறந்து வைச்சி
கொமெண்ட் வேண்டியிருக்கேன்
சௌஜன்யா:
இந்த விழாவைப்போல்
எத்தனைபேர் காய்கிறார்களோ
இந்தக் இடையைப்போல்
எத்தனைபேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ
இந்தச் கட்டையைப்போல்
எத்தனைபேர் நலுங்குகிறார்களோ
அவர்கள் சார்பில்
உங்களுக்கு நன்றி
நவகிருஷ்ணா:
ஆஹா கவுஜ கவுஜ! மனச தொட்டீங்க! ஆனா "அடிக்கும்" போது தொட்டீங்க!
செங்கனல்: நல்லதோர் ஆரம்பம். ஸ்வீட் எடு கொண்டாடு.
சித்தப்பா: அடேய் அப்பரசிண்டிகளா...இது புதிய முயற்சிடா. பொஸ்தகத்த மாத்திரம் பேசுங்கடா. என்னோடத மறுபடியும் நா"வள்" வெளியீடு ஆக்கிடாதீங்க. ஏய் இது நைட் நேரம். நீ கூலிங் கிளாஸை கழட்டு
சைட்டிஷ்கின்:
கோலிவுட் சர்க்கிளிலே நொந்தலாலா
உந்தன் கிக்குஜிரோ தெரியுதில்லே நொந்தலாலா
எடுத்த காட்சியெல்லாம் நொந்தலாலா
தகேஷி கிட்டானோ தெரியுதில்லே நொந்தலாலா
நவகிருஷ்ணா: அப்போ இது உங்கதை இல்லையா? "மேட்டருக்கு வா!"
சைட்டிஷ்கின்: இது ஒரு "பூமாது" கதையாணு. நீங்கள் அதை வீட்டில் வைத்துப் படிக்க முடியாது.
ஜட்டி சுட்டதடா
கை விட்டதடா
லாலாக்கு நொந்தலாலாமா!
செங்கனல்: என்னாது "பூமாது" கதையா? அதாவது பூக்காரி(கை) கதையா? எங்க கொஞ்சம் ஊது....
குழல் ஈ: இதை நான் வன்மையாக ஆதரிக்கின்றேன்
Corkஇ: நண்பேண்டா
சௌஜன்யா: "பூமாதா" எங்கள் குலமாதா
செங்கனல்: மாது மதுவென்று இணையத்தில் ஏற்கெனவே க(பு)தைக்கப்பட்ட ஸங்கதிகளாணு. "மாஸ்க்"கிட்டு டாஸ்மாஸ்கிட்ட ஒரிஜினல் குசும்பிட்ட ரெண்டு புள்ளிகாரன்களைகண்ட இணையமாணு இது
நவபாரதி: நர்ஸிம்மா தீர்ப்பை மாத்து
Corkஇ: ஆ"ங்". அவாளை மாத்தச் சொல்லு. நான் மாத்துறேன்
சித்தப்பா: ஆணிய புடுங்க வேண்டாம். டேய் இது என்னோட பொஸ்தக வெழாடா
சைட்டிஷ்கின்: இதை பற்றி ராவுல ரெமி மார்டினுடன் பறையலாம்
சித்தப்பா: ஆதிவாசி. தினவை அடக்கி வாசி.
நர்சிம்ம"ராவ்": பேட்டி கொடுப்பவர் நாங்கள். தினவெடுத்து வருகிறது வரிப்பட்டாளம்
நவகிருஷ்ணா: என்னாது "தினவா?" பேட்டியா?
சித்தப்பா: அட ஆச்சரியத்துக்கு பொறந்தவனே! சீனியர் பதிவர்களைப் பாரு
குழல் ஈ: இதை நான் வன்மையாக எதிர்க்கின்றேன். ஏனிந்த கொலை வெறி?
சித்தப்பா: டேய் ஸாகி பாம்பர் வேணும்டா. முடியலடா
அத்திரி புத்திரி பார் டெண்டர்: யார் ஸார் அந்த ரைட்டர்? மதுரைக்காரரா?
சித்தப்பா: டேய் அப்ரஸெண்டிகளா. போதும் இத்தோட நிறுத்திக்கலாம். ரொம்ப நல்லவனாக்கீட்டீங்கடா. உங்க எல்லாருக்கும் "படைப்புபுரம்" நாவல் பார்சலேய்...
Friday, December 31, 2010
உங்களவரின் G ஸ்பாட்டைக் கண்டுபிடியுங்கள்
கண்ட கண்ட வைத்தியர்களிடம் லோ LOW வென அலைஞ்சி "கரக்கி குத்து"வதை விட இதோ எளுப்பமான மார்க்கங்களானு:
ஸ்டெப் 1: ராடியாவை விளி
ஸ்டெப் 2: கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
ஸ்டெப் 3: ராஜா கையை வைச்சா? சொர்க்கம் இவிடயானு
ஸ்டெப் 4: யோவ் அவா BJP எப்பிடி கண்டுபிடிச்சாளோ அப்பிடித்தான்யா நாங்களும் கண்டுபிடிச்சோம்
ஸ்டெப் 5: சந்தேகம் உண்டெங்கிள் இவிட விளிச்சு கேள்க்குக...
ஸ்டெப் 6: ஸங்கதி ஹாட்டானு.ஞான் அறியும் சேட்டா...
ஸ்டெப் 7: திராவிடத்துல G SPOT'ஆ? கலாஷி கொட்டு
ஸ்டெப் 9: யென்னாது ரெண்டே தாங்கல...இதுல மூணா? போடாங்கோ...
ஸ்டெப் 1: ராடியாவை விளி
ஸ்டெப் 2: கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
ஸ்டெப் 3: ராஜா கையை வைச்சா? சொர்க்கம் இவிடயானு
ஸ்டெப் 4: யோவ் அவா BJP எப்பிடி கண்டுபிடிச்சாளோ அப்பிடித்தான்யா நாங்களும் கண்டுபிடிச்சோம்
ஸ்டெப் 5: சந்தேகம் உண்டெங்கிள் இவிட விளிச்சு கேள்க்குக...
ஸ்டெப் 6: ஸங்கதி ஹாட்டானு.ஞான் அறியும் சேட்டா...
ஸ்டெப் 7: திராவிடத்துல G SPOT'ஆ? கலாஷி கொட்டு
ஸ்டெப் 8: ஒரு G இல்ல ரெண்டு G இல்ல...ரெண்டு G கண்டுபிடிச்சா 3 G சௌஜன்யமானு...
Thursday, December 30, 2010
G Spot
"இன்னாத்த சொல்வேணுங்கோ வடுமாங்கா ஊறுதுங்கோ
வடுமாங்கா ஊறட்டுங்கோ
வலைப்பதிவு ரெடி பண்ணுங்கோ"
ஜூட் மக்களே
ஒன்லி ஒன் ஒரிஜினல்
இணைய குசும்பன் ஆஜர்
அஜால் குஜால் கேரண்ட்டீடு
இப்போள் யெப்போளும்
ஸங்கதி செம ஹாட்டாணு!
"புத்த நச்சி புறப்புரம் தூக்கும்" எந்தா மனசிலாயோ?
ஓ புதிய வெளக்குமாறு பத்தி கூறியளோ?
அட கூறு கெட்ட குசும்பா! இது மலையாளமானு. அறிஞ்சோ?
கொறச்சு மலையாளம் ஞாங்கள்க்கு விவேக்கு பறஞ்சல்லோ?
பறைஞ்சு விட்டது ஸாரே
ஓ "கொச்சச்சன்" மாத்திரம் அறிஞ்சோ?
அடப்பாவிங்ளா? முடிலடா சாமி?
டைட்டில் எந்தானு? "அஞ்சரைக்குள்ள வண்டி" பறைஞ்சுவிடு!
ஞான் பறையும். பறையும்.
ஓ எக்கோ அல்லே
வடுமாங்கா ஊறட்டுங்கோ
வலைப்பதிவு ரெடி பண்ணுங்கோ"
ஜூட் மக்களே
ஒன்லி ஒன் ஒரிஜினல்
இணைய குசும்பன் ஆஜர்
அஜால் குஜால் கேரண்ட்டீடு
இப்போள் யெப்போளும்
ஸங்கதி செம ஹாட்டாணு!
"புத்த நச்சி புறப்புரம் தூக்கும்" எந்தா மனசிலாயோ?
ஓ புதிய வெளக்குமாறு பத்தி கூறியளோ?
அட கூறு கெட்ட குசும்பா! இது மலையாளமானு. அறிஞ்சோ?
கொறச்சு மலையாளம் ஞாங்கள்க்கு விவேக்கு பறஞ்சல்லோ?
பறைஞ்சு விட்டது ஸாரே
ஓ "கொச்சச்சன்" மாத்திரம் அறிஞ்சோ?
அடப்பாவிங்ளா? முடிலடா சாமி?
டைட்டில் எந்தானு? "அஞ்சரைக்குள்ள வண்டி" பறைஞ்சுவிடு!
ஞான் பறையும். பறையும்.
ஓ எக்கோ அல்லே
Wednesday, October 07, 2009
சராசரி எழுத்தாளன் For Dummies
வெகுசன ஊடகம், வெளங்காத சி(கு)த்திலக்கிய ஊடகம் என்று இரண்டு ஜாதி உண்டு. இதில் எழுதுபவர்கள் எழுத்தாளர்கள். அப்படியிருக்க இந்த டிஜிட்டல் கேமரா வந்தவுடன் அனைவரும் போட்டோகிராபர்கள் ஆகிவிட்டது போல், இணையம் வந்தாலும் வந்தது ஆளாளுக்கு ஒரு பூக்கடை (அட வலைப்பூங்க!) திறந்து, எழுத்தாளர்கள் ஆகிவிட்டார்கள். இருப்பினும் இணையத்தில் இலக்கியம் இல்லை, அங்கே எழுதுபவன் எழுத்தாளன் இல்லை என்று மேற்கூறிய ஊடக ஜாதியியலாளர்கள் பிரஸ்தாபிக்க பலரது உள்ளம் தொய்ந்து போனது. ஏதோ எழுத்தாளனாவது சாத்தியமோ இல்லையோ ஒரு சராசரி எழுத்தாளனாக வேண்டுமென்ற வீணாய்ப் போன ஆசை கொண்ட வலைப்பதிவர்களுக்கு இந்த பூ சமர்ப்பணம்.
1. எழுத்தாளனும் சராசரியும் வேறு வேறு. வில்லை எடுத்தவன் வில்லன் அல்ல என்பது போல் எழுதுபவர் அனைவரும் எழுத்தாளர் அல்ல என்பதை உணரவும். எந்த குப்பையை வேண்டுமானாலும் எழுதித் தொலைக்கலாம். ஆனால் சஹ-எழுத்தாளர்களை விமர்சனம் செய்யுமுன் ஒரு விண்ணப்பம் போட்டுவிட்டு, முடிந்தால் "டிராப்ட்" காப்பி அனுப்பி "அப்ரூவல்" வாங்கி விட்டு பதிவேற்றலாம்.
2. எழுத்தாளர்கள் கொலை வெறியுடன் சண்டை போடும் போது "கிராஸ்-பயரில்" மாட்டிக் கொள்ளாமல் இருப்பது சராசரிகளின் சாமர்த்தியத்தைப் பொறுத்தது. கருத்து கந்தசாமியாக முயற்சித்தால் அந்த "கந்தசாமியே" உங்களைக் காப்பாற்ற முடியாது என்பதை உணர்க!
3. வேப்பேரி ரிக்ஷமாமா, பிரெஞ்ச் மாமி, பிலிஸ்டைன் சமூகம், வாழ்வது எப்படி, இன்டலெக்ச்சுவல் இம்பேலன்ஸ் போன்ற சொல்லாடல்கள் எழுத்தாளர்களுக்கே உரிமம் ஆனவை. எடுத்தாள்வது என்பது மொன்னை கத்தியை வைத்து மொட்டை அடிப்பதற்கு சமானம். அயன் பற்றி வேண்டுமானால் எழுதலாம். ஆனால் அயன் ராண்ட் பற்றி எழுதினால் எழுத்தாளர்களின் "காண்ட்" ஆகி விடுவார்கள்.
4. பின் நவீனத்துவம், பின் நவீன மீள்பொருண்மை பக்கமெல்லாம் தலை என்ன உடலின் எந்த பாகத்தையும் நீட்ட வேண்டாம். சிக்கி சின்னா பின்னமாகி சீரழிவது நிச்சயம். எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆயிட்டனேன்னு வருத்தப்பட வேண்டியிருக்கும்.
5. சுயசரிதைக்கும், நாவலுக்கும் குறைந்தபட்சம் அடிப்படை வித்தியாசம் தெரிந்திருக்க வேண்டியது மிக அவசியம். ஆனால் சிக்கிக் கொண்டால் "அது என்ன என்னுடைய சுய சரிதையா? நாவல்யா நாவல்" என்று சொல்லி தப்பிக்க முயலக் கூடாது. ஏனென்றால் அது எழுத்தாளர்களுக்கே உரிமமான "சாக்கு-போக்கு"! நீர் ஒரு சராசரி என்பதை நினைவில் நிறுத்தித் தொலைக்கவும்.
6. முடிசுருள், பிலிம் சுருள் இத்தோடு சுருள்களை மூடிக் கொள்தல் நலம். உள்சுருள் உள்ளே போனால் உரோமம் கூட மிஞ்சாது என்று தெளிக! உதாரணமாக நீங்கள் 104 டிகிரி காய்ச்சல் என்ற நூல் எழுதியிருந்தால் அதில் உள்சுருளாக இப்படிப்பட்ட அறிவு செறிந்த கவிதைகள் எழுதியிருக்கலாம். உதாரணமாக:
வார்த்தைகள் அல்குதலாகி
அறுகிச் சிறுத்தது
வார்த்தைகளா
வடிவத்தின் படிமமா
படிமத்தின் பரிமாணமா
பரிமாணத்தின் பரிணாமமா
அல்குதலான அல்குலா
(பக்கம் 1005)
*****
பாசமாய் நான் வளர்த்த
பாச்சைப் பூச்சியின்
மீசைமயிரின் குறுகுறுப்புகள் ஊடே
உறைந்துவிட உள்விருப்பமுற்று
பாச்சையின்
அவுசை வாடை பட்ட
சுற்றுக் காற்று
அண்டமெங்கும் அடைந்து கிடப்பதாய்
அர்த்தங் கொண்டு
அலசிய போது
சாக்கடை புழுக்களூடே
கரப்பொன்று
மீசையாட்டியபடி
ஊரக் கண்டேன்
(பக்கம் : 2005)
******
இப்படி நீங்கள் கெக்கே பிக்கே என்று உளறியிருந்தாலும் உள்சுருளென்று உதார் விடக்கூடாது. உரிமம் இல்லாததால் உரித்து உப்புக் கண்டம் தடவி விடுவார்கள்!
7. நமக்கும் கொஞ்சம் இங்கிலிபீஸ் தெரியுமென்றாலும், படா படா எழுத்தாளர்களை மேற்கோள் காட்டக் கூடாது. அப்படி காட்டினாலும் அவர் புலிட்ஸர், எலிட்ஸர், நோ"பல்" போன்ற அவார்டுகள் அள்ளி குமித்திருக்கிறாரா என்று தெரிந்திருக்க வேண்டும். அல்லது அத்தகைய அவார்டுக்கு "ஈக்குவலாக" ஒரு அவார்டு வாங்கியிருக்கின்றாரா என்று அறிந்திருக்க வேண்டும். கலைமாமணி, கலாபவன் மணி, சாகித்ய அகாடமி, சங்கீத அகாடமி போன்ற அவார்டுகள் கணக்கில் கொள்ளப்பட மாட்டா!
8. சினிமா, இசை போன்ற விஷயங்களை எழுதும் போது அதீத ஜாக்கிரதை அவசியம். முக்கியமாக வசனம் எழுதியது யாரென்ற அடிப்படை விஷயத்தில் கோட்டை விட்டு விடாதீர்கள். உங்களது விமர்சனத்திற்கு முன்னர் எழுத்தாளர்கள் கருத்து என்ன என்பதை தெள்ளத் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். எனக்கு இசை பற்றி ஒன்றுமே தெரியாது என்று கூறிவிட்டு இளையராஜா ஒரு குப்பை என்று ஜல்லியடிக்க முடியாது. ஏனெனில் நீர் ஒரு சராசரி!
9. ஙௌக்கா மக்கா தண்ணியடிச்சது பத்தியாவது எழுதித் தொலையலாமென்றால் அங்கேயும் "பொலிறிக்ஸ்" பொலி போட்டு விடும். சாராயம், கள், பிரெஞ்சு ஒயின், ஸ்காட்ச் விஸ்கி இப்படி ஒவ்வொரு பானத்திலும் ஒரு பாணம் ஒளிந்து கொண்டிருப்பது அறிக!
10. இத்த எயுதுன நானும் ஒரு "ஆவரேஞ்" தான்! பாருநிவேதித/நைவேத்திய கொள்கைக்கும் இதுக்கும் காத தூரமென்று அறிக! :-)
1. எழுத்தாளனும் சராசரியும் வேறு வேறு. வில்லை எடுத்தவன் வில்லன் அல்ல என்பது போல் எழுதுபவர் அனைவரும் எழுத்தாளர் அல்ல என்பதை உணரவும். எந்த குப்பையை வேண்டுமானாலும் எழுதித் தொலைக்கலாம். ஆனால் சஹ-எழுத்தாளர்களை விமர்சனம் செய்யுமுன் ஒரு விண்ணப்பம் போட்டுவிட்டு, முடிந்தால் "டிராப்ட்" காப்பி அனுப்பி "அப்ரூவல்" வாங்கி விட்டு பதிவேற்றலாம்.
2. எழுத்தாளர்கள் கொலை வெறியுடன் சண்டை போடும் போது "கிராஸ்-பயரில்" மாட்டிக் கொள்ளாமல் இருப்பது சராசரிகளின் சாமர்த்தியத்தைப் பொறுத்தது. கருத்து கந்தசாமியாக முயற்சித்தால் அந்த "கந்தசாமியே" உங்களைக் காப்பாற்ற முடியாது என்பதை உணர்க!
3. வேப்பேரி ரிக்ஷமாமா, பிரெஞ்ச் மாமி, பிலிஸ்டைன் சமூகம், வாழ்வது எப்படி, இன்டலெக்ச்சுவல் இம்பேலன்ஸ் போன்ற சொல்லாடல்கள் எழுத்தாளர்களுக்கே உரிமம் ஆனவை. எடுத்தாள்வது என்பது மொன்னை கத்தியை வைத்து மொட்டை அடிப்பதற்கு சமானம். அயன் பற்றி வேண்டுமானால் எழுதலாம். ஆனால் அயன் ராண்ட் பற்றி எழுதினால் எழுத்தாளர்களின் "காண்ட்" ஆகி விடுவார்கள்.
4. பின் நவீனத்துவம், பின் நவீன மீள்பொருண்மை பக்கமெல்லாம் தலை என்ன உடலின் எந்த பாகத்தையும் நீட்ட வேண்டாம். சிக்கி சின்னா பின்னமாகி சீரழிவது நிச்சயம். எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆயிட்டனேன்னு வருத்தப்பட வேண்டியிருக்கும்.
5. சுயசரிதைக்கும், நாவலுக்கும் குறைந்தபட்சம் அடிப்படை வித்தியாசம் தெரிந்திருக்க வேண்டியது மிக அவசியம். ஆனால் சிக்கிக் கொண்டால் "அது என்ன என்னுடைய சுய சரிதையா? நாவல்யா நாவல்" என்று சொல்லி தப்பிக்க முயலக் கூடாது. ஏனென்றால் அது எழுத்தாளர்களுக்கே உரிமமான "சாக்கு-போக்கு"! நீர் ஒரு சராசரி என்பதை நினைவில் நிறுத்தித் தொலைக்கவும்.
6. முடிசுருள், பிலிம் சுருள் இத்தோடு சுருள்களை மூடிக் கொள்தல் நலம். உள்சுருள் உள்ளே போனால் உரோமம் கூட மிஞ்சாது என்று தெளிக! உதாரணமாக நீங்கள் 104 டிகிரி காய்ச்சல் என்ற நூல் எழுதியிருந்தால் அதில் உள்சுருளாக இப்படிப்பட்ட அறிவு செறிந்த கவிதைகள் எழுதியிருக்கலாம். உதாரணமாக:
வார்த்தைகள் அல்குதலாகி
அறுகிச் சிறுத்தது
வார்த்தைகளா
வடிவத்தின் படிமமா
படிமத்தின் பரிமாணமா
பரிமாணத்தின் பரிணாமமா
அல்குதலான அல்குலா
(பக்கம் 1005)
*****
பாசமாய் நான் வளர்த்த
பாச்சைப் பூச்சியின்
மீசைமயிரின் குறுகுறுப்புகள் ஊடே
உறைந்துவிட உள்விருப்பமுற்று
பாச்சையின்
அவுசை வாடை பட்ட
சுற்றுக் காற்று
அண்டமெங்கும் அடைந்து கிடப்பதாய்
அர்த்தங் கொண்டு
அலசிய போது
சாக்கடை புழுக்களூடே
கரப்பொன்று
மீசையாட்டியபடி
ஊரக் கண்டேன்
(பக்கம் : 2005)
******
இப்படி நீங்கள் கெக்கே பிக்கே என்று உளறியிருந்தாலும் உள்சுருளென்று உதார் விடக்கூடாது. உரிமம் இல்லாததால் உரித்து உப்புக் கண்டம் தடவி விடுவார்கள்!
7. நமக்கும் கொஞ்சம் இங்கிலிபீஸ் தெரியுமென்றாலும், படா படா எழுத்தாளர்களை மேற்கோள் காட்டக் கூடாது. அப்படி காட்டினாலும் அவர் புலிட்ஸர், எலிட்ஸர், நோ"பல்" போன்ற அவார்டுகள் அள்ளி குமித்திருக்கிறாரா என்று தெரிந்திருக்க வேண்டும். அல்லது அத்தகைய அவார்டுக்கு "ஈக்குவலாக" ஒரு அவார்டு வாங்கியிருக்கின்றாரா என்று அறிந்திருக்க வேண்டும். கலைமாமணி, கலாபவன் மணி, சாகித்ய அகாடமி, சங்கீத அகாடமி போன்ற அவார்டுகள் கணக்கில் கொள்ளப்பட மாட்டா!
8. சினிமா, இசை போன்ற விஷயங்களை எழுதும் போது அதீத ஜாக்கிரதை அவசியம். முக்கியமாக வசனம் எழுதியது யாரென்ற அடிப்படை விஷயத்தில் கோட்டை விட்டு விடாதீர்கள். உங்களது விமர்சனத்திற்கு முன்னர் எழுத்தாளர்கள் கருத்து என்ன என்பதை தெள்ளத் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். எனக்கு இசை பற்றி ஒன்றுமே தெரியாது என்று கூறிவிட்டு இளையராஜா ஒரு குப்பை என்று ஜல்லியடிக்க முடியாது. ஏனெனில் நீர் ஒரு சராசரி!
9. ஙௌக்கா மக்கா தண்ணியடிச்சது பத்தியாவது எழுதித் தொலையலாமென்றால் அங்கேயும் "பொலிறிக்ஸ்" பொலி போட்டு விடும். சாராயம், கள், பிரெஞ்சு ஒயின், ஸ்காட்ச் விஸ்கி இப்படி ஒவ்வொரு பானத்திலும் ஒரு பாணம் ஒளிந்து கொண்டிருப்பது அறிக!
10. இத்த எயுதுன நானும் ஒரு "ஆவரேஞ்" தான்! பாருநிவேதித/நைவேத்திய கொள்கைக்கும் இதுக்கும் காத தூரமென்று அறிக! :-)
Thursday, August 07, 2008
நோபலும் குப்பைத்தொட்டியும்
நான் எழுதியவனின் எழுத்தைத்தான் பார்ப்பேனே தவிர எழுதியவனின் பின்புலத்தைப் பார்ப்பதில்லை; இது சாரு நிவேதிதா எங்கோ குறிப்பிட்டதை நினைவிலிருந்து எழுதுகின்றேன். சாருவின் எழுத்துக்களை விரும்பியோ, விரும்பாமலோ ரசித்துப் படிக்க ஆரம்பித்து 5 ஆண்டுகள் ஆகியிருக்கலாம். ஜீரோ டிகிரி மற்றும் வரம்பு மீறிய பிரதிகள் புத்தகங்களை காசு கொடுத்து வாங்கி படித்திருக்கின்றேன். இணையத்தில் கோணல் பக்கங்கள் முதல் சாரு ஆன்லைன் வரை வாசித்து வந்திருக்கின்றேன்.
தசாவதாரம் பற்றி அவரது உயிர்மைக் கட்டுரையை http://uyirmmai.com/contentdetails.aspx?cid=43 வாசித்தேன். கலகக்காரர், கான்ட்ரோவர்ஸி கதாநாயகன் என்றே சாருவை பலர் கருதிக் கொண்டிருக்கும் வேளையில், பல நல்ல கட்டுரைகளைப் படைத்திருக்கும் சாருவால் குப்பையையும் அதிலும் மட்கிப்போன குப்பைக் கட்டுரையும் படைக்க முடியுமென்று நிரூபணம் செய்திருக்கின்றார். இப்போது அக்கட்டுரையில் சொன்ன மன்னனை நானும் நினைத்துப் பார்க்கின்றேன். சாருவைக் காண முடிகின்றது.
கமல் ஒரு கலைஞன். படைப்பாளி. சாருவைப் போல. மகாநதி படம் பார்த்ததிலிருந்து சாரு கமலை சக பயணியாக பார்த்து வந்திருக்கின்றார். சந்தோஷம். இப்போது தசாவதாரம் பார்த்ததிலிருந்து கமல் ஒரு ஜாதி/இன/மொழி வெறியராக (ஏனெனில் மகாநதி பற்றிய கருத்தில் கமல் இவ்வாறெல்லாம் இல்லை) சாருவுக்குத் தோன்றுகின்றார். இப்போதெல்லாம் சாரு ஒருவரைப் பற்றி திட்டி எழுதினால் அதில் திட்டப்பட்டவரின் பின்புலம் கண்டிப்பாகத் தெரியும். இந்துத்வா, பிராமணீயம், நார்ஸிஸம் என்று கமலுக்கு எதிராக கச்சை கட்டி கொச்சையாக தனது வழமையான பாணியில் சாடியிருக்கின்றார் சாரு.
தசாவதாரம் பற்றி கமலே குறிப்பிட்டது போல, "இதில் கதை என்று ஒன்று கிடையாது. 10 வேடங்களில் தோன்ற வேண்டுமென்ற முடிவு செய்யப்பட்ட பிறகு அதற்கென பின்னப்பட்ட திரைகதையே தசாவதாரம்". சாருவிற்கு ஒரு படைப்பாளியாக தனக்கு தோன்றியதை சுதந்திரமாக எழுதுவது சுகம் தருவதைப் போல கமலும் தனக்குத் தோன்றியதை படமாக எடுக்கும் சுதந்திரம் தரக் கூடாதா? பிரச்சினை என்னெவென்றால் கமலை "உலக நாயகன்" என்று கூறி விட்டார்கள். சாருவோ "இப்போது நான் என்ன நினைக்கிறேன் என்றால் , பிரான்ஸில் போய் பிரெஞ்ச்சில் மொழிபெயர்த்து அங்கேயாவது நான் ஒரு எழுத்தாளன் என்ற இடத்தைப் பிடிப்போம் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்" http://charuonline.com/may2008/theeranathi1.html என்று அங்கலாய்த்துக் கொள்கின்றார். ஒருவேளை இதுதான் சாருவின் அடிப்படைப் பிரச்சினையோ? கமல் எந்நாளும் சக கலைஞர்களைப் பார்த்து நீங்களெல்லாம் குப்பை. நான்தான் சர்வமும் என்று எங்கேயும் பீற்றிக் கொண்டதாய் நான் அறிந்திருக்கவில்லை. அதே தீராநதி நேர்காணலில் "நான் பத்து , இருபது வருடமாக ஒரு விஷயத்தை கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போல் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். என்னை மாதிரி இந்த உலகத்தில் பதினைந்து பேர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்" என்று பெரிய சுயதம்பட்டம் வேறு. அதுதான் கனிமொழி அவர்களே சொல்லிவிட்டார்களே...15 ஆண்டுகளுக்கு முன்னால் நீங்கள் தத்தெடுத்துக் கொண்டதாக...அது போதும் சாரு! உங்களின் பிரச்சினையே அங்கீகாரத்துக்கு காத்துக் கிடக்கும் செத்த மனோபாவம். நான்தான் பெரியவனென்ற அகங்காரம். இதே அகங்காரம் கமல் என்ற கலைஞனிடத்திலும் உண்டு. ஆனால் அடுத்தவரை மட்டம் தட்டி வரும் அகங்காரமல்ல அது. "எனக்குப் பிடித்ததை நான் செய்து கொண்டு சென்று கொண்டே இருப்பேன். உன்னை நான் தொல்லை செய்யப் போவதில்லை" என்ற மமதை. இதில் தவறென்ன சாரு?
எவ்வளவு நாட்கள்தான் கமல் என்ற "கதாநாயகன் பெரும்பாலும் பாலியல் தொழிலாளியையே மணந்து கொள்வான்; அல்லது, பாலியல் தொழிலாளியின் மகனாக இருப்பான்; அல்லது, ஏற்கனவே திருமணமாகிக் கைவிடப்பட்ட ஒருத்தியை மணந்து கொள்வான்". வேண்டுமானால் தசாவதாரத்தில் ஒரு வேடத்தை பாபாவின் பக்தராய்க் காட்டியிருக்கலாமோ? அஸின் முகுந்தா முகுந்தா பாட்டுக்கு உருகுவதைப் போல, விபூதி விழும் புகைப்படம் பார்த்து பாபா பக்தன் கமலும் "உருகினேன் மருகினேன்" http://charuonline.com/oldarticls/kp236.html என்று பாடியிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பீயளோ? யார் சர்க்கஸ் கோமாளி சாரு? அக்னாஸ்டிக் என்று முத்திரை குத்திக் கொண்டு ரஸ்புடீனின் ரஸாலீலாக்களையும், பாபாவின் தங்கமோதிரம்/செயின் எடுக்கும் தங்கமலை ரகஸியங்களையும் கண்டு வியக்கும் நீரல்லவா அக்மார்க் கோமாளி!
வின்சென்ட் பூவராகவன் என்பது ஒரு தலித் பாத்திரப்படைப்பு. அதனால் கறுப்பு நிறம். இறுதியில் உயர்சாதி ஒருவனின் குழந்தையைக் காப்பாற்றப் போய் உயிரையும் விடுகின்றான். தலித் என்றாலே கறுப்பா? உங்களது வார்த்தைகளில் "தலித் மக்கள் என்றால் அவ்வளவு அருவருப்பான தோற்றத்துடனா இருக்கிறார்கள்? " நல்ல கேள்வி! அதே போல் புத்திசாலித்தனமாக இன்னொரு கேள்வியையும் முன் வைக்கின்றீர்கள். இம்முறை ரங்கராஜ நம்பி குறித்து "அது சரி, பன்னிரண்டாம் நூற்றாண்டில் மனம் புத்தி இந்திரியம் ஆகியவற்றுக்கு விகாரம் இல்லாத ஸத்வ குணத்தை அளிக்கக்கூடிய ஆகாரத்தை உண்டு பெருமாள் சேவை செய்துகொண்டிருந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் இப்படித்தான் மல்யுத்த வீரர்களைப் போல் இருந்தார்களா?". ஆக உங்கள் கருத்துப்படி ரங்கராஜ நம்பி ஒரு பருப்பு தயிர் சாதம் சாப்பிடும் ஒல்லிக்குச்சியாய் அசட்டு அம்பியாய் காட்டப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அதுதான் அவாளைப் பற்றி உமது மனதில் பதிந்துள்ள பிம்பம். அது சரியெனத் திடமாக நம்பி, நம்பி பாத்திரத்தை ஏளனப்படுத்த முடிகின்றது. இருபதாம் நூற்றாண்டு வரை அதிகம் அறிப்படாத குங்பூ என்ற சண்டைக்கலை உருவான இடம் இந்தியா. உருவாக்கியது Bodhidharma என்ற துறவி. உருவாக்கப்பட்டது சுய ஒழுங்கு முறைகளைப் பின்பற்றுவதற்காக. இதனடிப்படையில் சைவ வைஷ்ணவ மோதல்கள் நிகழ்ந்த சமயத்தில் தன்னையும், தனது மதத்தையும் காப்பாபாற்றிக் கொள்ள ஒரு ரங்கராஜ நம்பி உடற்பயிற்சி செய்து மல்யுத்த வீரனைப் போல் காட்சியளிக்கக் கூடாதா? சினிமா என்பது 50% Fantassy 50% Reality என்று கூறியவர் கமல். நம்பி வேடத்தில் குலோத்துங்கனின் ஆட்களை அடிப்பதை விஜய்யின் ஹீரோ சேஷ்டையோடு ஒப்பீடு செய்து சந்தோஷப்பட்டுக்கொள்கின்றார். ஒரு முன்னணி டைரக்டரிடம் சமீபத்தில் உரையாட சந்தர்ப்பம் கிடைத்த பொழுது சாருவின் கருத்தையே அவரும் முன் வைத்தார். தனது இடத்தை தக்க வைக்கத்தான் ஸ்டீராய்டு பயன்படுத்தி கிண்ணெண்று உடலை முறுக்கி கமல் சண்டைக்காட்சிகள் வைத்திருப்பதாக! அருமையான ஒப்பீடுகள்! எழுத்தாளர் தேவிபாலாவை தோற்கடித்து உம்மை நிலைப்படுத்திக் கொள்ளத்தான் தினமும் 20 மணி நேரம் படித்து எழுதுகின்றீர்கள் என்று உங்களிடம் யாரேனும் கூறினால் என்ன சொல்வீர்கள்? அவரவர் இடம் அவரவர்க்கு.
எனது பார்வையில் பூவராகவன் பாத்திரம் தான் மிகக் கச்சிதமாகவும், உயரியதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது என்று தோன்றுகின்றது. மண்ணுக்காப் போராடி, உயர்சாதியினரின் சூழ்ச்சிக்கு அடிபணியாமல் கொண்ட கொள்கையில் உறுதிப் பிடிப்பாக இருப்பது, ஒரு குழந்தயின் உயிரைக் காப்பாற்ற தனதுயிர் துறப்பது என்று பூவராகவன் ஒரு உயிரோட்டமுள்ள, கண்ணியவானாகத் தெரிகின்றான். ஆரவமுதன்தான் பூவராகவன் என்று ருக்மணிப் பாட்டி கதறி அழுவதும், அதைக் கண்டு முகம் சுளிக்கும் தனது மகனை "ஜாதிப் பிசாசே" என்று சாடுவதும், சாரு நிவேதிதாவிற்கு தெரியவில்லை. ஒரு வேளை கிருஷ்ணவேணி பாட்டிக்கு (ருக்மணிப்பாட்டி அல்ல) பூவராகவனின் கறுப்பு நிறம் தெரியவில்லை போலும்.
ஒருவேளை பூவராகவனை வெள்ளையாய்க் காட்டி, சந்தான பாரதியின் சூழ்ச்சிகளுக்கு இடம் கொடுத்து, அவருடன் சமமாக தண்ணியடிப்பது போல் காட்டி, மொள்ளமாறி முடிச்சவிழ்க்கி வேளைகளைக் காட்டுவது போல் வைத்திருந்தால் சாரு சந்தோஷப்பட்டிருப்பார் போலும்! ஆஹா தலித்தை வெள்ளையாக் காட்டி, உயர் சாதியினரோடு சரிக்கு சமமாக சதிகள் செய்ய வைத்து உயரிய சமுதாய சிந்தனைப் புரட்சிக்கு வித்திட்டார் கமல். அவர் எனது ஸகஹிருதயர் என்று கொண்டாடியிருப்பார்.
கமலின் நார்ஸிஸம் பற்றிப் பேசுகின்ற சாரு தனது நாறும் நார்ஸிஸத்தை மறந்து விட்டார் போலும். தனது பிரதிபிம்ப படைப்புகளான முனியாண்டி, நேநோ, பெருமாள், குருசாமி பாத்திரங்கள் போல இப்போது புனே பூபதியும் இணைந்து கொண்டார். கலீபுல்லா கமல் வேஸ்ட்; கதைக்கு தேவையே இல்லை. ஆமாம் ஒத்துக் கொள்கின்றேன். படத்தில் கதையே இல்லை; தேவையுமில்லை என்று கமலே கூறுகின்ற போது கலீபுல்லா மட்டுமென்ன. யாருமே தேவையில்லை தான்.
என்னமோ அமோரஸ் பெரஸ், கிராம்-21போன்ற Alejandro Gonzalez Inarritu படங்களில் சமூகத்திற்கு மிகவும் உதவுகின்ற கதையம்சம் இருந்தது போலவும், தசாவதாரம் போன்ற படங்களில் அது மிஸ்ஸிங் என்பது போலவும் அங்கலாய்த்து இருக்கின்றார் மனுஷன். Alejandro ஒரு சிறந்த கதை சொல்லி என்பதை மறுக்கவில்லை. கேயாஸ் தியரியைக் கையாண்டுள்ள விதம் இந்திய சினிமாவில் எடுக்கப்பட்ட முதல் முயற்சிகளில் ஒன்று என்பதால் தசாவதாரத்தின் குறைபாட்டினை ஏற்றுக் கொள்ளக் கூடாதா? மல்டிபிள் பெர்ஸனாலிட்டி டிஸார்டர் தீமைக் கொண்ட அந்நியன், சந்திரமுகிக்கு சாருவின் கருத்தென்ன என்று படிக்க முடியவில்லை. அறிவியல் மற்றும் அதன் புனைவு கதைகளத்தை கையாள்வது மிகவும் கடினம். மேலும் அதில் ஒருவரே பத்து வேடமேற்பதென்பது முன் பின் யாரும் நினைத்திராதது.
கபிலன் தனது தலைவன் பூவராகவன் பூவுடல் எதிரே கவிதை பாடிய காட்சியையும் நொந்து கொண்டிருக்கின்றார். கமலுக்கு அடிப்படை புரிதல் கூட இல்லையென்று. சாரு பேசாமல் நீங்கள் ஸ்டோரி டிஸ்கஷனுகளுக்குச் சென்று சிரத்தையாய் உமது ஐடியாக்களைக் கொடுக்கவும். நீர் கொடுக்கின்ற ஒவ்வொரு வாயில் நுழையா பேர் கொண்டவர்கள் எடுத்த சினிமாக்களையும் இவ்வாறு அக்கு வேறு ஆணிவேராக கிழித்து தோரணம் போட முடியும். ஜார்ஜ் கார்லின் http://www.imdb.com/name/nm0137506/ என்ற ஒரு அமெரிக்க காமெடியன், எழுத்தாளர் மற்றூம் நடிகர் கடந்த ஜூன் மாதம் இறந்தார். தனது மரணத்திற்கு யாரும் துக்கப்படாமல் தனது Funeral Services போது அனைவரும் சிரிக்க வேண்டுமென்று வேண்டுகோளுடன் மறைந்தார். அதே போல் தான் அவரது இறுதிச் சடங்குகளும் நிறைவேற்றப்பட்டன. அப்படியிருக்க இறந்த தலைவன் முன்னல் இரங்கற்பா பாடும் அளவுக்கு நாமும் முன்னேறலாம் (?) என்ற சிந்தனை தவறா என்ன சாரு?
முஸ்லிம்களை அந்நியர்களாகச் சித்தரித்து தனது இந்துத்துவ சிந்தனையை கமல் முன்னிருத்துவதாக சாரு சாடுகின்றார். கமல் அரசியலுக்கு வருவது மாதிரி தெரியவில்லை. 2011 முதல்வர்கள் ஆக ஆசைப்படுவோரின் பட்டியலில் அவர் பெயர் இல்லை. மேலும் இந்துத்துவ கருத்துக்களை முன்வைப்பதால் அவரது படம் ஓடி விடுமா என்றும் சொல்ல முடியாது. ஆனால் உங்களை மாதிரி ஆட்களால் இப்படியெல்லாம் கூட சிந்திக்க முடியுமென்ற போது எனக்கு "full"அரித்து விட்டது. மருதநாயகம் என்கின்ற கான்சாகிப் திரைப்படம் எனது டிரீம் ப்ரோஜெக்ட் என்று கோடிகளை அள்ளி இறைத்து, இன்னும் இறைக்கப் போகும் கமல் எப்படி இந்துத்துவா கருத்தை கொண்டிருந்து அதை திணிக்கவும் முடியும் சாரு?
என்றோ கேட்ட ஒரு கதை. லோகாதய குழியில் விழுந்த ஒரு வழக்கமான மானுடன் ஒரு விபத்தை சந்திக்கின்றான். புத்தம் புது மெர்செடெஸ் பென்ஸ் கார் டோட்டல் டேமேஜாகின்றது. உயிர் பிழைத்த அவனிடம் டாக்டர் "நீங்கள் உயிர் பிழைத்ததே பெரிது; அதனால் கார் போனால் பரவாயில்லை" என்கின்றார். அய்யோ கார் போச்சா என்று பதறுகின்றான் மானுடன். அவனுக்கு கார்தான் பெரிது. டாக்டரோ "ஹலோ தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சு என்பார்கள். அதுபோல் உங்களுக்கு வெறும் கையோடு போயிற்று" என்கின்றார். அப்போதுதான் வலது கையை எடுத்த விவரம் மானுடக்கு தெரிந்தது. உடனே அவன் "ஐய்யோ எனது ரோலக்ஸ் வாட்ச் போச்சே" என்கின்றான். கலிபுல்லா என்ற பாத்திரம் மூலம் நான் பார்ப்பது வேறு. "நல்லவேளை விசாரணை என்ற பெயரில் மசூதியில் இருந்ததால் சுனாமியிலிருந்து தப்பித்தோம்" என்ற கெட்ட விஷயத்திலும் ஒரு நல்லதை தேடும் சாதாரண மனித மனதின் வெளிப்பட்டினை அரசியலாக்கும் தந்திரம் என்னை ஆச்சரியப்படுத்துகின்றது.
எம்ஜியாரின் நடனம், கமல் நடனம் அருமையான கம்பேரிஸன். கமலுக்கு பாங்ரா என்ன நடனமே ஆடத் தெரியவில்லை! ஹலோ இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியவில்லை சாரு? அவ்தார் சிங்கின் பாத்திரம் இன்னும் நன்றாக மெருகேற செய்திருக்கலாம் என்பதை கண்டிப்பாக ஒத்துக் கொள்கின்றேன். ஆனால் பஞ்சாபி உச்சரிப்பு குறித்து பேசுவதெல்லாம் கொஞ்சம் ஓவர். ஹேராமில் ஆங்கிலம், ஹிந்தி, வங்காள மொழிகளின் கலவை பலருக்கு புரியவில்லை. அதனால் அவதார் சிங்கின் உச்சரிப்பை பொறுத்துக் கொள்ளலாம் என்றே படுகின்றது.
மேக்கப்பில் செயற்கைத்தனம் (கலீபுல்லா, ப்ளெட்சர், புஷ்) இருந்தது உண்மைதான். ஆனால் ஒன்பது பேய்கள் உலவுகின்றன என்று கூறுகின்றீர்கள்! கொஞ்ச நாட்களுக்கு முன்பு (http://charuonline.com/ இணையதளத்தில் தேடி படித்துக் கொள்ளவும் நேயர்களே) நீங்கள் மாறுவேடத்தில் கல்லூரிகளுக்கு சென்று மாணவ மாணவிகளோடு மிங்கிள் ஆகி விடுவதாய் எழுதியிருந்தீர்கள். அதாவது எந்த அளவிற்கு மாறுவேடமென்றால் ஒரு பெண் உங்களை ஸ்டூடெண்ட்டாக நினத்து டா போட்டுதான் பேசுவாளாம். அந்த கர்மாந்திர மாறுவேட ரகஸியத்தை கமலுக்கு சொல்லிக் கொடுக்கலாமே சாரு! கோடி கோடியாய் ஹாலிவுட் மேக்கப் மேனிடம் அழுவதற்கு உங்களுக்கு கொடுக்கலாம். எப்படி வசதி?
சாருவின் வாதம்:
"இப்போதெல்லாம் ஒருவரே நூறு வேடத்தில்கூட நடிக்கலாம். ஒசாமா பின் லாடனைப் போல் ஒரு முக மூடியைச் செய்து முகத்தில் ஒட்டிக் கொண்டால் ஆயிற்று கதை. வெளிநாடுகளில் அரசியல் போராட்டங்களின் போது தங்களுக்குப் பிடிக்காத ஒரு அரசியல் தலைவரின் முகமூடியை ஆயிரக்கணக்கான பேர் முகத்தில் அணிந்துகொண்டு ஊர்வலம் போவது சகஜமாகப் பார்க்கக்கூடிய ஒன்று. ஒரே ஊர்வலத்தில் ஆயிரம் புஷ்களை நாம் பார்க்க முடியும். அப்படியிருக்க, இதற்கெல்லாம் போய் உலக நாயகன் பட்டம் கொடுத்துக்கொண்டிருந்தால் எப்படி?"
சரிங்க உலக நாயகன் பட்டத்தை நீங்களே வாபஸ் வாங்கிக் கொள்ளுங்கள். அல்லது இனிமேல் நீங்கள் அப்படிக் கூப்பிடாதீர்கள். அல்லது அவ்வாறு வரும் செய்திகளைப் படிக்க வேண்டாம்.
கிராமியக் கலைஞர்களையும் கலைமாமணி விருது கொடுத்து கௌரவிக்கப்படும் வேளையில், கஞ்சா கருப்புக்கும், இந்திரா பார்த்தசாரதிக்கும் ஒன்றாகக் கொடுக்கப்பட்டதால் கேவலமாகப் பார்க்கின்றார். ஏனய்யா இந்த ஓர வஞ்சனை? காமெடிக் கலைஞன் என்றால் கேவலமா?
உச்சபட்ச காமெடியாய் கமலை ஜெயலலிதாவுடன் ஒப்பிடுகின்றார். மக்களே இந்த ஒப்புமையைப் படித்து விட்டு அவரவர் விருப்பப்படி சிரித்துக் கொள்ளலாம்.
இன்னொன்று சிரிக்க "கடைசியாக ஒன்று. இது ஒரு ஆசிய வெள்ளைக்காரர் சொன்னது. கமலின் பத்து வேடங்களைப் பற்றிக் கேள்விப்பட்டதும் உடனடியாக ஜாக்கி சான் கேட்டாராம், ‘தமிழ் சினிமாவில் அந்த அளவுக்கு நடிகர்கள் பஞ்சமா?’ என்று."
ஆமாம் சிவாஜி கணேசன் காலத்திலிருந்து கமல் காலம் வரை தமிழ்நாட்டில் நடிகர்களுக்கு பஞ்சம் இருந்து கொண்டுதான் இருக்கின்றது! போதுமா? நிம்மதியாய் அடுத்த கழிசலை தொடங்கவும்.
இப்படிக்கு,
"சாரு" ஹாசன்
தசாவதாரம் பற்றி அவரது உயிர்மைக் கட்டுரையை http://uyirmmai.com/contentdetails.aspx?cid=43 வாசித்தேன். கலகக்காரர், கான்ட்ரோவர்ஸி கதாநாயகன் என்றே சாருவை பலர் கருதிக் கொண்டிருக்கும் வேளையில், பல நல்ல கட்டுரைகளைப் படைத்திருக்கும் சாருவால் குப்பையையும் அதிலும் மட்கிப்போன குப்பைக் கட்டுரையும் படைக்க முடியுமென்று நிரூபணம் செய்திருக்கின்றார். இப்போது அக்கட்டுரையில் சொன்ன மன்னனை நானும் நினைத்துப் பார்க்கின்றேன். சாருவைக் காண முடிகின்றது.
கமல் ஒரு கலைஞன். படைப்பாளி. சாருவைப் போல. மகாநதி படம் பார்த்ததிலிருந்து சாரு கமலை சக பயணியாக பார்த்து வந்திருக்கின்றார். சந்தோஷம். இப்போது தசாவதாரம் பார்த்ததிலிருந்து கமல் ஒரு ஜாதி/இன/மொழி வெறியராக (ஏனெனில் மகாநதி பற்றிய கருத்தில் கமல் இவ்வாறெல்லாம் இல்லை) சாருவுக்குத் தோன்றுகின்றார். இப்போதெல்லாம் சாரு ஒருவரைப் பற்றி திட்டி எழுதினால் அதில் திட்டப்பட்டவரின் பின்புலம் கண்டிப்பாகத் தெரியும். இந்துத்வா, பிராமணீயம், நார்ஸிஸம் என்று கமலுக்கு எதிராக கச்சை கட்டி கொச்சையாக தனது வழமையான பாணியில் சாடியிருக்கின்றார் சாரு.
தசாவதாரம் பற்றி கமலே குறிப்பிட்டது போல, "இதில் கதை என்று ஒன்று கிடையாது. 10 வேடங்களில் தோன்ற வேண்டுமென்ற முடிவு செய்யப்பட்ட பிறகு அதற்கென பின்னப்பட்ட திரைகதையே தசாவதாரம்". சாருவிற்கு ஒரு படைப்பாளியாக தனக்கு தோன்றியதை சுதந்திரமாக எழுதுவது சுகம் தருவதைப் போல கமலும் தனக்குத் தோன்றியதை படமாக எடுக்கும் சுதந்திரம் தரக் கூடாதா? பிரச்சினை என்னெவென்றால் கமலை "உலக நாயகன்" என்று கூறி விட்டார்கள். சாருவோ "இப்போது நான் என்ன நினைக்கிறேன் என்றால் , பிரான்ஸில் போய் பிரெஞ்ச்சில் மொழிபெயர்த்து அங்கேயாவது நான் ஒரு எழுத்தாளன் என்ற இடத்தைப் பிடிப்போம் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்" http://charuonline.com/may2008/theeranathi1.html என்று அங்கலாய்த்துக் கொள்கின்றார். ஒருவேளை இதுதான் சாருவின் அடிப்படைப் பிரச்சினையோ? கமல் எந்நாளும் சக கலைஞர்களைப் பார்த்து நீங்களெல்லாம் குப்பை. நான்தான் சர்வமும் என்று எங்கேயும் பீற்றிக் கொண்டதாய் நான் அறிந்திருக்கவில்லை. அதே தீராநதி நேர்காணலில் "நான் பத்து , இருபது வருடமாக ஒரு விஷயத்தை கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போல் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். என்னை மாதிரி இந்த உலகத்தில் பதினைந்து பேர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்" என்று பெரிய சுயதம்பட்டம் வேறு. அதுதான் கனிமொழி அவர்களே சொல்லிவிட்டார்களே...15 ஆண்டுகளுக்கு முன்னால் நீங்கள் தத்தெடுத்துக் கொண்டதாக...அது போதும் சாரு! உங்களின் பிரச்சினையே அங்கீகாரத்துக்கு காத்துக் கிடக்கும் செத்த மனோபாவம். நான்தான் பெரியவனென்ற அகங்காரம். இதே அகங்காரம் கமல் என்ற கலைஞனிடத்திலும் உண்டு. ஆனால் அடுத்தவரை மட்டம் தட்டி வரும் அகங்காரமல்ல அது. "எனக்குப் பிடித்ததை நான் செய்து கொண்டு சென்று கொண்டே இருப்பேன். உன்னை நான் தொல்லை செய்யப் போவதில்லை" என்ற மமதை. இதில் தவறென்ன சாரு?
எவ்வளவு நாட்கள்தான் கமல் என்ற "கதாநாயகன் பெரும்பாலும் பாலியல் தொழிலாளியையே மணந்து கொள்வான்; அல்லது, பாலியல் தொழிலாளியின் மகனாக இருப்பான்; அல்லது, ஏற்கனவே திருமணமாகிக் கைவிடப்பட்ட ஒருத்தியை மணந்து கொள்வான்". வேண்டுமானால் தசாவதாரத்தில் ஒரு வேடத்தை பாபாவின் பக்தராய்க் காட்டியிருக்கலாமோ? அஸின் முகுந்தா முகுந்தா பாட்டுக்கு உருகுவதைப் போல, விபூதி விழும் புகைப்படம் பார்த்து பாபா பக்தன் கமலும் "உருகினேன் மருகினேன்" http://charuonline.com/oldarticls/kp236.html என்று பாடியிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பீயளோ? யார் சர்க்கஸ் கோமாளி சாரு? அக்னாஸ்டிக் என்று முத்திரை குத்திக் கொண்டு ரஸ்புடீனின் ரஸாலீலாக்களையும், பாபாவின் தங்கமோதிரம்/செயின் எடுக்கும் தங்கமலை ரகஸியங்களையும் கண்டு வியக்கும் நீரல்லவா அக்மார்க் கோமாளி!
வின்சென்ட் பூவராகவன் என்பது ஒரு தலித் பாத்திரப்படைப்பு. அதனால் கறுப்பு நிறம். இறுதியில் உயர்சாதி ஒருவனின் குழந்தையைக் காப்பாற்றப் போய் உயிரையும் விடுகின்றான். தலித் என்றாலே கறுப்பா? உங்களது வார்த்தைகளில் "தலித் மக்கள் என்றால் அவ்வளவு அருவருப்பான தோற்றத்துடனா இருக்கிறார்கள்? " நல்ல கேள்வி! அதே போல் புத்திசாலித்தனமாக இன்னொரு கேள்வியையும் முன் வைக்கின்றீர்கள். இம்முறை ரங்கராஜ நம்பி குறித்து "அது சரி, பன்னிரண்டாம் நூற்றாண்டில் மனம் புத்தி இந்திரியம் ஆகியவற்றுக்கு விகாரம் இல்லாத ஸத்வ குணத்தை அளிக்கக்கூடிய ஆகாரத்தை உண்டு பெருமாள் சேவை செய்துகொண்டிருந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் இப்படித்தான் மல்யுத்த வீரர்களைப் போல் இருந்தார்களா?". ஆக உங்கள் கருத்துப்படி ரங்கராஜ நம்பி ஒரு பருப்பு தயிர் சாதம் சாப்பிடும் ஒல்லிக்குச்சியாய் அசட்டு அம்பியாய் காட்டப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அதுதான் அவாளைப் பற்றி உமது மனதில் பதிந்துள்ள பிம்பம். அது சரியெனத் திடமாக நம்பி, நம்பி பாத்திரத்தை ஏளனப்படுத்த முடிகின்றது. இருபதாம் நூற்றாண்டு வரை அதிகம் அறிப்படாத குங்பூ என்ற சண்டைக்கலை உருவான இடம் இந்தியா. உருவாக்கியது Bodhidharma என்ற துறவி. உருவாக்கப்பட்டது சுய ஒழுங்கு முறைகளைப் பின்பற்றுவதற்காக. இதனடிப்படையில் சைவ வைஷ்ணவ மோதல்கள் நிகழ்ந்த சமயத்தில் தன்னையும், தனது மதத்தையும் காப்பாபாற்றிக் கொள்ள ஒரு ரங்கராஜ நம்பி உடற்பயிற்சி செய்து மல்யுத்த வீரனைப் போல் காட்சியளிக்கக் கூடாதா? சினிமா என்பது 50% Fantassy 50% Reality என்று கூறியவர் கமல். நம்பி வேடத்தில் குலோத்துங்கனின் ஆட்களை அடிப்பதை விஜய்யின் ஹீரோ சேஷ்டையோடு ஒப்பீடு செய்து சந்தோஷப்பட்டுக்கொள்கின்றார். ஒரு முன்னணி டைரக்டரிடம் சமீபத்தில் உரையாட சந்தர்ப்பம் கிடைத்த பொழுது சாருவின் கருத்தையே அவரும் முன் வைத்தார். தனது இடத்தை தக்க வைக்கத்தான் ஸ்டீராய்டு பயன்படுத்தி கிண்ணெண்று உடலை முறுக்கி கமல் சண்டைக்காட்சிகள் வைத்திருப்பதாக! அருமையான ஒப்பீடுகள்! எழுத்தாளர் தேவிபாலாவை தோற்கடித்து உம்மை நிலைப்படுத்திக் கொள்ளத்தான் தினமும் 20 மணி நேரம் படித்து எழுதுகின்றீர்கள் என்று உங்களிடம் யாரேனும் கூறினால் என்ன சொல்வீர்கள்? அவரவர் இடம் அவரவர்க்கு.
எனது பார்வையில் பூவராகவன் பாத்திரம் தான் மிகக் கச்சிதமாகவும், உயரியதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது என்று தோன்றுகின்றது. மண்ணுக்காப் போராடி, உயர்சாதியினரின் சூழ்ச்சிக்கு அடிபணியாமல் கொண்ட கொள்கையில் உறுதிப் பிடிப்பாக இருப்பது, ஒரு குழந்தயின் உயிரைக் காப்பாற்ற தனதுயிர் துறப்பது என்று பூவராகவன் ஒரு உயிரோட்டமுள்ள, கண்ணியவானாகத் தெரிகின்றான். ஆரவமுதன்தான் பூவராகவன் என்று ருக்மணிப் பாட்டி கதறி அழுவதும், அதைக் கண்டு முகம் சுளிக்கும் தனது மகனை "ஜாதிப் பிசாசே" என்று சாடுவதும், சாரு நிவேதிதாவிற்கு தெரியவில்லை. ஒரு வேளை கிருஷ்ணவேணி பாட்டிக்கு (ருக்மணிப்பாட்டி அல்ல) பூவராகவனின் கறுப்பு நிறம் தெரியவில்லை போலும்.
ஒருவேளை பூவராகவனை வெள்ளையாய்க் காட்டி, சந்தான பாரதியின் சூழ்ச்சிகளுக்கு இடம் கொடுத்து, அவருடன் சமமாக தண்ணியடிப்பது போல் காட்டி, மொள்ளமாறி முடிச்சவிழ்க்கி வேளைகளைக் காட்டுவது போல் வைத்திருந்தால் சாரு சந்தோஷப்பட்டிருப்பார் போலும்! ஆஹா தலித்தை வெள்ளையாக் காட்டி, உயர் சாதியினரோடு சரிக்கு சமமாக சதிகள் செய்ய வைத்து உயரிய சமுதாய சிந்தனைப் புரட்சிக்கு வித்திட்டார் கமல். அவர் எனது ஸகஹிருதயர் என்று கொண்டாடியிருப்பார்.
கமலின் நார்ஸிஸம் பற்றிப் பேசுகின்ற சாரு தனது நாறும் நார்ஸிஸத்தை மறந்து விட்டார் போலும். தனது பிரதிபிம்ப படைப்புகளான முனியாண்டி, நேநோ, பெருமாள், குருசாமி பாத்திரங்கள் போல இப்போது புனே பூபதியும் இணைந்து கொண்டார். கலீபுல்லா கமல் வேஸ்ட்; கதைக்கு தேவையே இல்லை. ஆமாம் ஒத்துக் கொள்கின்றேன். படத்தில் கதையே இல்லை; தேவையுமில்லை என்று கமலே கூறுகின்ற போது கலீபுல்லா மட்டுமென்ன. யாருமே தேவையில்லை தான்.
என்னமோ அமோரஸ் பெரஸ், கிராம்-21போன்ற Alejandro Gonzalez Inarritu படங்களில் சமூகத்திற்கு மிகவும் உதவுகின்ற கதையம்சம் இருந்தது போலவும், தசாவதாரம் போன்ற படங்களில் அது மிஸ்ஸிங் என்பது போலவும் அங்கலாய்த்து இருக்கின்றார் மனுஷன். Alejandro ஒரு சிறந்த கதை சொல்லி என்பதை மறுக்கவில்லை. கேயாஸ் தியரியைக் கையாண்டுள்ள விதம் இந்திய சினிமாவில் எடுக்கப்பட்ட முதல் முயற்சிகளில் ஒன்று என்பதால் தசாவதாரத்தின் குறைபாட்டினை ஏற்றுக் கொள்ளக் கூடாதா? மல்டிபிள் பெர்ஸனாலிட்டி டிஸார்டர் தீமைக் கொண்ட அந்நியன், சந்திரமுகிக்கு சாருவின் கருத்தென்ன என்று படிக்க முடியவில்லை. அறிவியல் மற்றும் அதன் புனைவு கதைகளத்தை கையாள்வது மிகவும் கடினம். மேலும் அதில் ஒருவரே பத்து வேடமேற்பதென்பது முன் பின் யாரும் நினைத்திராதது.
கபிலன் தனது தலைவன் பூவராகவன் பூவுடல் எதிரே கவிதை பாடிய காட்சியையும் நொந்து கொண்டிருக்கின்றார். கமலுக்கு அடிப்படை புரிதல் கூட இல்லையென்று. சாரு பேசாமல் நீங்கள் ஸ்டோரி டிஸ்கஷனுகளுக்குச் சென்று சிரத்தையாய் உமது ஐடியாக்களைக் கொடுக்கவும். நீர் கொடுக்கின்ற ஒவ்வொரு வாயில் நுழையா பேர் கொண்டவர்கள் எடுத்த சினிமாக்களையும் இவ்வாறு அக்கு வேறு ஆணிவேராக கிழித்து தோரணம் போட முடியும். ஜார்ஜ் கார்லின் http://www.imdb.com/name/nm0137506/ என்ற ஒரு அமெரிக்க காமெடியன், எழுத்தாளர் மற்றூம் நடிகர் கடந்த ஜூன் மாதம் இறந்தார். தனது மரணத்திற்கு யாரும் துக்கப்படாமல் தனது Funeral Services போது அனைவரும் சிரிக்க வேண்டுமென்று வேண்டுகோளுடன் மறைந்தார். அதே போல் தான் அவரது இறுதிச் சடங்குகளும் நிறைவேற்றப்பட்டன. அப்படியிருக்க இறந்த தலைவன் முன்னல் இரங்கற்பா பாடும் அளவுக்கு நாமும் முன்னேறலாம் (?) என்ற சிந்தனை தவறா என்ன சாரு?
முஸ்லிம்களை அந்நியர்களாகச் சித்தரித்து தனது இந்துத்துவ சிந்தனையை கமல் முன்னிருத்துவதாக சாரு சாடுகின்றார். கமல் அரசியலுக்கு வருவது மாதிரி தெரியவில்லை. 2011 முதல்வர்கள் ஆக ஆசைப்படுவோரின் பட்டியலில் அவர் பெயர் இல்லை. மேலும் இந்துத்துவ கருத்துக்களை முன்வைப்பதால் அவரது படம் ஓடி விடுமா என்றும் சொல்ல முடியாது. ஆனால் உங்களை மாதிரி ஆட்களால் இப்படியெல்லாம் கூட சிந்திக்க முடியுமென்ற போது எனக்கு "full"அரித்து விட்டது. மருதநாயகம் என்கின்ற கான்சாகிப் திரைப்படம் எனது டிரீம் ப்ரோஜெக்ட் என்று கோடிகளை அள்ளி இறைத்து, இன்னும் இறைக்கப் போகும் கமல் எப்படி இந்துத்துவா கருத்தை கொண்டிருந்து அதை திணிக்கவும் முடியும் சாரு?
என்றோ கேட்ட ஒரு கதை. லோகாதய குழியில் விழுந்த ஒரு வழக்கமான மானுடன் ஒரு விபத்தை சந்திக்கின்றான். புத்தம் புது மெர்செடெஸ் பென்ஸ் கார் டோட்டல் டேமேஜாகின்றது. உயிர் பிழைத்த அவனிடம் டாக்டர் "நீங்கள் உயிர் பிழைத்ததே பெரிது; அதனால் கார் போனால் பரவாயில்லை" என்கின்றார். அய்யோ கார் போச்சா என்று பதறுகின்றான் மானுடன். அவனுக்கு கார்தான் பெரிது. டாக்டரோ "ஹலோ தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சு என்பார்கள். அதுபோல் உங்களுக்கு வெறும் கையோடு போயிற்று" என்கின்றார். அப்போதுதான் வலது கையை எடுத்த விவரம் மானுடக்கு தெரிந்தது. உடனே அவன் "ஐய்யோ எனது ரோலக்ஸ் வாட்ச் போச்சே" என்கின்றான். கலிபுல்லா என்ற பாத்திரம் மூலம் நான் பார்ப்பது வேறு. "நல்லவேளை விசாரணை என்ற பெயரில் மசூதியில் இருந்ததால் சுனாமியிலிருந்து தப்பித்தோம்" என்ற கெட்ட விஷயத்திலும் ஒரு நல்லதை தேடும் சாதாரண மனித மனதின் வெளிப்பட்டினை அரசியலாக்கும் தந்திரம் என்னை ஆச்சரியப்படுத்துகின்றது.
எம்ஜியாரின் நடனம், கமல் நடனம் அருமையான கம்பேரிஸன். கமலுக்கு பாங்ரா என்ன நடனமே ஆடத் தெரியவில்லை! ஹலோ இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியவில்லை சாரு? அவ்தார் சிங்கின் பாத்திரம் இன்னும் நன்றாக மெருகேற செய்திருக்கலாம் என்பதை கண்டிப்பாக ஒத்துக் கொள்கின்றேன். ஆனால் பஞ்சாபி உச்சரிப்பு குறித்து பேசுவதெல்லாம் கொஞ்சம் ஓவர். ஹேராமில் ஆங்கிலம், ஹிந்தி, வங்காள மொழிகளின் கலவை பலருக்கு புரியவில்லை. அதனால் அவதார் சிங்கின் உச்சரிப்பை பொறுத்துக் கொள்ளலாம் என்றே படுகின்றது.
மேக்கப்பில் செயற்கைத்தனம் (கலீபுல்லா, ப்ளெட்சர், புஷ்) இருந்தது உண்மைதான். ஆனால் ஒன்பது பேய்கள் உலவுகின்றன என்று கூறுகின்றீர்கள்! கொஞ்ச நாட்களுக்கு முன்பு (http://charuonline.com/ இணையதளத்தில் தேடி படித்துக் கொள்ளவும் நேயர்களே) நீங்கள் மாறுவேடத்தில் கல்லூரிகளுக்கு சென்று மாணவ மாணவிகளோடு மிங்கிள் ஆகி விடுவதாய் எழுதியிருந்தீர்கள். அதாவது எந்த அளவிற்கு மாறுவேடமென்றால் ஒரு பெண் உங்களை ஸ்டூடெண்ட்டாக நினத்து டா போட்டுதான் பேசுவாளாம். அந்த கர்மாந்திர மாறுவேட ரகஸியத்தை கமலுக்கு சொல்லிக் கொடுக்கலாமே சாரு! கோடி கோடியாய் ஹாலிவுட் மேக்கப் மேனிடம் அழுவதற்கு உங்களுக்கு கொடுக்கலாம். எப்படி வசதி?
சாருவின் வாதம்:
"இப்போதெல்லாம் ஒருவரே நூறு வேடத்தில்கூட நடிக்கலாம். ஒசாமா பின் லாடனைப் போல் ஒரு முக மூடியைச் செய்து முகத்தில் ஒட்டிக் கொண்டால் ஆயிற்று கதை. வெளிநாடுகளில் அரசியல் போராட்டங்களின் போது தங்களுக்குப் பிடிக்காத ஒரு அரசியல் தலைவரின் முகமூடியை ஆயிரக்கணக்கான பேர் முகத்தில் அணிந்துகொண்டு ஊர்வலம் போவது சகஜமாகப் பார்க்கக்கூடிய ஒன்று. ஒரே ஊர்வலத்தில் ஆயிரம் புஷ்களை நாம் பார்க்க முடியும். அப்படியிருக்க, இதற்கெல்லாம் போய் உலக நாயகன் பட்டம் கொடுத்துக்கொண்டிருந்தால் எப்படி?"
சரிங்க உலக நாயகன் பட்டத்தை நீங்களே வாபஸ் வாங்கிக் கொள்ளுங்கள். அல்லது இனிமேல் நீங்கள் அப்படிக் கூப்பிடாதீர்கள். அல்லது அவ்வாறு வரும் செய்திகளைப் படிக்க வேண்டாம்.
கிராமியக் கலைஞர்களையும் கலைமாமணி விருது கொடுத்து கௌரவிக்கப்படும் வேளையில், கஞ்சா கருப்புக்கும், இந்திரா பார்த்தசாரதிக்கும் ஒன்றாகக் கொடுக்கப்பட்டதால் கேவலமாகப் பார்க்கின்றார். ஏனய்யா இந்த ஓர வஞ்சனை? காமெடிக் கலைஞன் என்றால் கேவலமா?
உச்சபட்ச காமெடியாய் கமலை ஜெயலலிதாவுடன் ஒப்பிடுகின்றார். மக்களே இந்த ஒப்புமையைப் படித்து விட்டு அவரவர் விருப்பப்படி சிரித்துக் கொள்ளலாம்.
இன்னொன்று சிரிக்க "கடைசியாக ஒன்று. இது ஒரு ஆசிய வெள்ளைக்காரர் சொன்னது. கமலின் பத்து வேடங்களைப் பற்றிக் கேள்விப்பட்டதும் உடனடியாக ஜாக்கி சான் கேட்டாராம், ‘தமிழ் சினிமாவில் அந்த அளவுக்கு நடிகர்கள் பஞ்சமா?’ என்று."
ஆமாம் சிவாஜி கணேசன் காலத்திலிருந்து கமல் காலம் வரை தமிழ்நாட்டில் நடிகர்களுக்கு பஞ்சம் இருந்து கொண்டுதான் இருக்கின்றது! போதுமா? நிம்மதியாய் அடுத்த கழிசலை தொடங்கவும்.
இப்படிக்கு,
"சாரு" ஹாசன்
Wednesday, March 14, 2007
டிஷ்யூம் டிஷ்கஷன்
விவேக், வடிவேல், பார்த்திபன் போன்ற அன்பர்கள் அடிக்கடி சின்னத் திரையில் எட்டிப்பார்க்கும் பெரிய நட்சத்திரங்களைப் போல இணையத்திலும் எட்டிப் பார்த்ததால் பிரச்சினை உருவாகின்றது. கோலிவுட் காமெடி டிராக்கை வலைப்பூக்களின் காமெடி சூப்பராக இருப்பதால் கிர்ரடித்துப் போகின்றது கோடம்பாக்கம். ஒன்று காமெடி வலைப்பதிவர்களை கடத்துவது, இல்லாவிடில் கவிழ்ப்பது போன்ற அஜெண்டாவுடன் நீலாங்கரை பங்களா ஒன்றில் ரகஸியா ஸாரி ரகஸிய கூட்டம் கூடுகின்றது. மேற்கொண்டு:
கவுண்டமணி நாம்பாட்டுக்கு ஏதோ போண்டாத்தலையா, பன்னித்தலையா, ஈஸ்வரன் கோயில் எண்ணெச்சட்டி'ன்னு கலக்கல் காமெடி பண்ணிக்கிட்டு இருந்தேன். இப்ப என்னடான்னா 'ஏர்போர்ட் தலையன்'ன்னு டெக்னிகலா ப்ளாக்ல எழுதுறானுங்களாம். இனிமே நம்ம மார்க்கெட்டு அவுட்டா?
விவேக் நேத்திக்கு இணைய அரங்கம் மீட்டிங்கிக்குப் போனேண்டா. இலவசக்கொத்தனாராம். ஏம்ப்பா வாஸ்துபடி இலவசமா கட்டித் தருவியான்னு கேக்கலாமுன்னு தோணிச்சி. அவிங்கெல்லாம் அமெரிக்கா மாதிரி ஸ்பீடா போறானுங்கப்பா
வடிவேலு அந்தக்கதய ஏன் கேக்குற? வருத்தப்படாத வாலிப சங்கம்ன்னு வைச்சிக்கிட்டு இவனுங்க பண்ர அலப்பர தாங்க முடியலீப்பா. யாரோ கைப்புள்ளையாம். நமக்கே பாடம் சொல்லித் தரானுங்கப்பா
விவேக் திராவிடத்தையும் விடாம சங்கம் வைச்சு சங்க அறுக்குறானுங்க. சீரியஸா காமெடி பண்றாங்கப்பா. ஆ வூன்னா அப்யூஸ்னு அவங்க விடற அலறலக் கேட்டாக்கா நரசிம்மராவ் ஆவி கூட வாய் தொறந்து நல்லா சிரிக்கும்ப்பா
கருணாதாஸ் ஜொள்ளுப்பாண்டின்னு ஒரு கேரக்டர் இருக்குதாம் பாஸ். "கட்டை"ங்ற டைட்டிலுலக் கூட பட்டையக் கெளப்புது பாஸ். அந்தாளோட அக்ரீமெண்ட் போட்டாலே பல படத்துக்கு பஞ்சர் டயலாக் எழுதலாம் பாஸ்
கவுண்டமணி இங்லீஷ் படத்துல அடிச்ச காப்பி எல்லாம் பத்தாதுன்னு இப்போ இண்டெர்நெட்டையும் இந்த நாயி உட மாட்டேங்குது பாரு. கருணா கம்முன்னு கெடக்கவே மாட்டியா
கருணாதாஸ் பாஸ் உன்னால பீட் பண்ண முடியலேன்னா ஜாயின் பண்ணிக்கோ
கவுண்டமணி இங்லீஷ் பழமொழி இன்னொரு தடவை சொன்னா பல்லைப் பேத்துப்புடுவேன்.
எஸ்ஜே சூர்யா டபுள் மீனிங்ல நான் டயலாக் பேசுறேன். ஆனா நெட்டுலே பாட்டையே பிட்டுப் பாட்டாப் போட்டு கில்மா கெளப்புறாங்கலாமே. இந்த ரேஞ்சுல போனா என்னோட பாபுலாரிட்டி என்னாவது?
செந்தில் ஓ போலி சிவஞானம்ஜி பிளாக்கச் சொல்றீங்களா?
கவுண்டமணிடேய் என்னடா இங்லீஷ்ல என்னென்னமோ கெட்ட கெட்ட வார்த்தையா சொல்ற... ஒண்ணுமே புரியலியேடா...
செந்தில் இப்பெல்லாம் ஒரிஜினல் ஆளுங்களுக்கு மேல போலிங்களுக்குத்தான் கிராக்கி ஜாஸ்திண்ணே! உதாரணமா போலி டோண்டுவை எடுத்துக்கங்க...
எஸ்ஜே அடப்பாவிங்களா அதையும் அதுக்குள்ள படிச்சிட்டீங்களா? என்னோட அடுத்த படத்துக்கு அங்கேருந்துதான் அஸ்திவாரம் போடலாமுன்னு இருந்தேன். அந்த ஐடியாவ ஆட்டங் காண வைச்சிடாதீங்கப்பா...
வடிவேலு ஓஹோ அதான் திருமகன்லேயே "பானை" ஒடைக்கிற வசனம் வந்துச்சா?
எச்ஜே சூர்யா அதுசரி ஒரு போலிப் பதிவைக் கூட உட்டு வெக்கலன்னு சொல்லு
கவுண்டமணி ஒரிஜினல் டூப்ளிகேட்டுன்னு டாஸ்மாக் சரக்குலதான் கேள்விப்பட்டு இருக்கேன். இப்போ இண்டெர்நெட் சரக்குலேயுமா?
செந்தில் என்னண்ணே நீங்க இன்னும் இருபத்தியோராம் நூற்றாண்டுக்கே இன்னும் வராம இருக்கீங்க. பதிவுல மட்டுமில்ல கமெண்டுப் பொட்டியிலேயும் காமெடி பண்றாய்ங்க
விவேக் என்னாது கமெண்ட்டுப் பொட்டியிலேயுமா? (ஆச்சர்யப்படுகின்றார்)
செந்தில் போங்க விவேக். ப்ரோபைல்ல கூட போலியிருக்குது
விவேக் என்னாது ப்ரோபைல்ல கூட போலியா? (மீண்டும் ஆச்சர்யப்படுகின்றார்)
செந்தில் நீங்க வெறும் காமெடியைத்தான் பாக்குறீங்க. ஆனாப் பாருங்க சீரியஸ் படத்தையே நெட்டுலேர்ந்து சுடலாம். இப்போ விஜயகாந்த வைச்சி "கச்சத்தீவு ராசா"ன்னு படமெடுத்தீங்கன்னு வைங்க. வில்லனா நெப்போலியனப் போட்டுட்டு "ஏண்டா இந்திய மீனவனை இலங்கை கப்பல் சுடும்போது இண்டியா நேவி என்னா மசுரு புடுங்கிக்கிட்டு இருந்துச்சா?"ன்னு கேப்பாரு. உடனே விஜயகாந்த் பொங்கிப் போயி "இந்திய இலங்கை கடலெல்லை தெரியுமா உனக்கு? ஏழு கடல்மைல்ல எட்டிப் பாக்கலாம் இலங்கையை. இங்க இருக்குற டிராலர் எண்ணிக்கை 3,036. மீனவர்கள் என்ணிக்கை 30,000. எழுபதிலேர்ந்து சுட்டதுல செத்தது 113 பேர். படுகாயமடைஞ்சது 1,005. ரெண்டு திராவிடக் கழகங்களும் கஜானாவை காலி செய்யிறதுலதான் இருந்துச்சு" இப்பிடியெல்லா விஷயத்தையும் நெட்டுல கொட்டியிருக்கானுங்க.
கவுண்டமணி இதையெல்லாம் எழுதுறானுங்களா? அவனுங்க என்ன வேலை வெட்டி இல்லாதவனுங்களா?
செந்தில் இதுல குசும்பு பண்றவனுங்களுக்கும் பஞ்சமே இல்ல. கார்த்திக் ரமாஸ்ன்னு ஒருத்தர் இதையே காமெடி பண்ணி "விஜயகாந்த் ஆட்சிக்கு வந்தா மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கே செல்ல வேண்டாம். நாங்களே மீன்களைப் பிடித்து வீட்டுக்கு வீடு அளிப்போம்"ன்னு சொல்வாரா அப்பிடின்னு கோக்குமாக்கு கேள்வி கேப்பாரு.
செந்தில்படத்துக்கு கோக்குமாக்கா டைட்டில் வைக்கணுமின்னா லக்கிலுக்கு'ன்னு ஒருத்தர் இருக்காரு. சாதிவெறியன்னு பிட்டப் போட்டு பின்னியெடுப்பாரு. அப்பிடியே தூய தமிழ்ல பேரு வைக்கணுமின்னா இராமகி இருக்காரு. திருட்டு திகிரியை ஒழிக்க வேண்டுமென்றால்...
கவுண்டமணி என்னாது திருட்டு திகிரியா?
செந்தில் அட ஆமாங்க திகிரின்னா இராமகி பாஷையில 'சிடி'ங்க
கவுண்டமணி அடங்கொக்காமக்கா இப்பிடியெல்லாம் கூட மேட்டரு நெட்டுல நடக்குதா?
வடிவேலு பெரியார் படத்தையே நெட்லேர்ந்து ஐடியாவப் பிக்கப் பண்ற அளவுக்கு மேட்டரு கொட்டிக் கெடக்குதாமே? மெய்யாலுமாவே? இப்பிடியெல்லாம் கூட மூலையில உக்காந்து சிந்திப்பாய்ங்களோ?
செந்தில்அண்ணே இப்ப எடுக்கிறாங்களே தசாவதாரம் அந்த ஐடியா கூட நெட்டுலதான் கெடைச்சதாம். உபயம் ஏதோ பெயரிலின்னு சொல்றாங்க...அவரு அத்தினி வேஷம் கட்டி அடிக்கிறவராம்
கவுண்டமணி ஆன்ன்ங் அந்தக் கதய இங்க உடாத அப்பனே... நவராத்திரி படம் வந்தப்ப உங்க நெட்டு இருந்துச்சாம் காட்டியும். அப்பாவியா வாயத் தொறந்தா கொசு வலம் வந்துட்டுப் போயிடுவீங்களே
செந்தில் அண்ணே கொசுன்ன உடனே ஞாபகம் வந்துடுச்சி. கொசு புடுங்கின்னு ஒரு ஆளு இருக்காரு. வண்டை வண்டையா திட்டறதுக்கு ஐடியா வேணுமின்னா அங்க போங்க.
கவுண்டமணிஎன்னாது கொசு புடுங்கியா? பேரு சூப்பரா இருக்கே
விவேக்இப்ப ஒண்ணு எனக்குப் புரியுது. காமெடியோ, டிராஜெடியோ நெட்டுல உள்ளவங்கள அடிச்சுக்க முடியாது. அதுனால கூட்டணியைப் போடு. நான் திராவிடம், தமிழ், இலவசம் மாதிரி ஆளுங்கள கவர் பண்றேன். மகளிர் அணியை கோவை சரளா பாத்துக்கட்டும். கொசுபுடுங்கி, லக்கிலுக் மாதிரி வெவகாரமான ஆளுங்கள கவனிக்கட்டும். வடிவேலு கைப்புள்ளைய கணக்கு பண்ணட்டும். குசும்பு புடிச்சவங்களை கருணாஸ் கவனிக்கட்டும்.
எஸ்ஜே சூர்யாஅப்ப நானு என்னா செய்யட்டும்?
விவேக் ஹஹ்ஹஹ்ஹா உங்களுக்குத்தான் ஏகப்பட்ட போலிகளைக் கவனிக்க வேண்டியதிருக்கே. கெட் செட் கோ...
(ஆளு புடிக்க சினிமாக்காரங்க வாராஹப்பு. நான் சைலண்டாய் எஸ்கேப் :-)
கவுண்டமணி நாம்பாட்டுக்கு ஏதோ போண்டாத்தலையா, பன்னித்தலையா, ஈஸ்வரன் கோயில் எண்ணெச்சட்டி'ன்னு கலக்கல் காமெடி பண்ணிக்கிட்டு இருந்தேன். இப்ப என்னடான்னா 'ஏர்போர்ட் தலையன்'ன்னு டெக்னிகலா ப்ளாக்ல எழுதுறானுங்களாம். இனிமே நம்ம மார்க்கெட்டு அவுட்டா?
விவேக் நேத்திக்கு இணைய அரங்கம் மீட்டிங்கிக்குப் போனேண்டா. இலவசக்கொத்தனாராம். ஏம்ப்பா வாஸ்துபடி இலவசமா கட்டித் தருவியான்னு கேக்கலாமுன்னு தோணிச்சி. அவிங்கெல்லாம் அமெரிக்கா மாதிரி ஸ்பீடா போறானுங்கப்பா
வடிவேலு அந்தக்கதய ஏன் கேக்குற? வருத்தப்படாத வாலிப சங்கம்ன்னு வைச்சிக்கிட்டு இவனுங்க பண்ர அலப்பர தாங்க முடியலீப்பா. யாரோ கைப்புள்ளையாம். நமக்கே பாடம் சொல்லித் தரானுங்கப்பா
விவேக் திராவிடத்தையும் விடாம சங்கம் வைச்சு சங்க அறுக்குறானுங்க. சீரியஸா காமெடி பண்றாங்கப்பா. ஆ வூன்னா அப்யூஸ்னு அவங்க விடற அலறலக் கேட்டாக்கா நரசிம்மராவ் ஆவி கூட வாய் தொறந்து நல்லா சிரிக்கும்ப்பா
கருணாதாஸ் ஜொள்ளுப்பாண்டின்னு ஒரு கேரக்டர் இருக்குதாம் பாஸ். "கட்டை"ங்ற டைட்டிலுலக் கூட பட்டையக் கெளப்புது பாஸ். அந்தாளோட அக்ரீமெண்ட் போட்டாலே பல படத்துக்கு பஞ்சர் டயலாக் எழுதலாம் பாஸ்
கவுண்டமணி இங்லீஷ் படத்துல அடிச்ச காப்பி எல்லாம் பத்தாதுன்னு இப்போ இண்டெர்நெட்டையும் இந்த நாயி உட மாட்டேங்குது பாரு. கருணா கம்முன்னு கெடக்கவே மாட்டியா
கருணாதாஸ் பாஸ் உன்னால பீட் பண்ண முடியலேன்னா ஜாயின் பண்ணிக்கோ
கவுண்டமணி இங்லீஷ் பழமொழி இன்னொரு தடவை சொன்னா பல்லைப் பேத்துப்புடுவேன்.
எஸ்ஜே சூர்யா டபுள் மீனிங்ல நான் டயலாக் பேசுறேன். ஆனா நெட்டுலே பாட்டையே பிட்டுப் பாட்டாப் போட்டு கில்மா கெளப்புறாங்கலாமே. இந்த ரேஞ்சுல போனா என்னோட பாபுலாரிட்டி என்னாவது?
செந்தில் ஓ போலி சிவஞானம்ஜி பிளாக்கச் சொல்றீங்களா?
கவுண்டமணிடேய் என்னடா இங்லீஷ்ல என்னென்னமோ கெட்ட கெட்ட வார்த்தையா சொல்ற... ஒண்ணுமே புரியலியேடா...
செந்தில் இப்பெல்லாம் ஒரிஜினல் ஆளுங்களுக்கு மேல போலிங்களுக்குத்தான் கிராக்கி ஜாஸ்திண்ணே! உதாரணமா போலி டோண்டுவை எடுத்துக்கங்க...
எஸ்ஜே அடப்பாவிங்களா அதையும் அதுக்குள்ள படிச்சிட்டீங்களா? என்னோட அடுத்த படத்துக்கு அங்கேருந்துதான் அஸ்திவாரம் போடலாமுன்னு இருந்தேன். அந்த ஐடியாவ ஆட்டங் காண வைச்சிடாதீங்கப்பா...
வடிவேலு ஓஹோ அதான் திருமகன்லேயே "பானை" ஒடைக்கிற வசனம் வந்துச்சா?
எச்ஜே சூர்யா அதுசரி ஒரு போலிப் பதிவைக் கூட உட்டு வெக்கலன்னு சொல்லு
கவுண்டமணி ஒரிஜினல் டூப்ளிகேட்டுன்னு டாஸ்மாக் சரக்குலதான் கேள்விப்பட்டு இருக்கேன். இப்போ இண்டெர்நெட் சரக்குலேயுமா?
செந்தில் என்னண்ணே நீங்க இன்னும் இருபத்தியோராம் நூற்றாண்டுக்கே இன்னும் வராம இருக்கீங்க. பதிவுல மட்டுமில்ல கமெண்டுப் பொட்டியிலேயும் காமெடி பண்றாய்ங்க
விவேக் என்னாது கமெண்ட்டுப் பொட்டியிலேயுமா? (ஆச்சர்யப்படுகின்றார்)
செந்தில் போங்க விவேக். ப்ரோபைல்ல கூட போலியிருக்குது
விவேக் என்னாது ப்ரோபைல்ல கூட போலியா? (மீண்டும் ஆச்சர்யப்படுகின்றார்)
செந்தில் நீங்க வெறும் காமெடியைத்தான் பாக்குறீங்க. ஆனாப் பாருங்க சீரியஸ் படத்தையே நெட்டுலேர்ந்து சுடலாம். இப்போ விஜயகாந்த வைச்சி "கச்சத்தீவு ராசா"ன்னு படமெடுத்தீங்கன்னு வைங்க. வில்லனா நெப்போலியனப் போட்டுட்டு "ஏண்டா இந்திய மீனவனை இலங்கை கப்பல் சுடும்போது இண்டியா நேவி என்னா மசுரு புடுங்கிக்கிட்டு இருந்துச்சா?"ன்னு கேப்பாரு. உடனே விஜயகாந்த் பொங்கிப் போயி "இந்திய இலங்கை கடலெல்லை தெரியுமா உனக்கு? ஏழு கடல்மைல்ல எட்டிப் பாக்கலாம் இலங்கையை. இங்க இருக்குற டிராலர் எண்ணிக்கை 3,036. மீனவர்கள் என்ணிக்கை 30,000. எழுபதிலேர்ந்து சுட்டதுல செத்தது 113 பேர். படுகாயமடைஞ்சது 1,005. ரெண்டு திராவிடக் கழகங்களும் கஜானாவை காலி செய்யிறதுலதான் இருந்துச்சு" இப்பிடியெல்லா விஷயத்தையும் நெட்டுல கொட்டியிருக்கானுங்க.
கவுண்டமணி இதையெல்லாம் எழுதுறானுங்களா? அவனுங்க என்ன வேலை வெட்டி இல்லாதவனுங்களா?
செந்தில் இதுல குசும்பு பண்றவனுங்களுக்கும் பஞ்சமே இல்ல. கார்த்திக் ரமாஸ்ன்னு ஒருத்தர் இதையே காமெடி பண்ணி "விஜயகாந்த் ஆட்சிக்கு வந்தா மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கே செல்ல வேண்டாம். நாங்களே மீன்களைப் பிடித்து வீட்டுக்கு வீடு அளிப்போம்"ன்னு சொல்வாரா அப்பிடின்னு கோக்குமாக்கு கேள்வி கேப்பாரு.
செந்தில்படத்துக்கு கோக்குமாக்கா டைட்டில் வைக்கணுமின்னா லக்கிலுக்கு'ன்னு ஒருத்தர் இருக்காரு. சாதிவெறியன்னு பிட்டப் போட்டு பின்னியெடுப்பாரு. அப்பிடியே தூய தமிழ்ல பேரு வைக்கணுமின்னா இராமகி இருக்காரு. திருட்டு திகிரியை ஒழிக்க வேண்டுமென்றால்...
கவுண்டமணி என்னாது திருட்டு திகிரியா?
செந்தில் அட ஆமாங்க திகிரின்னா இராமகி பாஷையில 'சிடி'ங்க
கவுண்டமணி அடங்கொக்காமக்கா இப்பிடியெல்லாம் கூட மேட்டரு நெட்டுல நடக்குதா?
வடிவேலு பெரியார் படத்தையே நெட்லேர்ந்து ஐடியாவப் பிக்கப் பண்ற அளவுக்கு மேட்டரு கொட்டிக் கெடக்குதாமே? மெய்யாலுமாவே? இப்பிடியெல்லாம் கூட மூலையில உக்காந்து சிந்திப்பாய்ங்களோ?
செந்தில்அண்ணே இப்ப எடுக்கிறாங்களே தசாவதாரம் அந்த ஐடியா கூட நெட்டுலதான் கெடைச்சதாம். உபயம் ஏதோ பெயரிலின்னு சொல்றாங்க...அவரு அத்தினி வேஷம் கட்டி அடிக்கிறவராம்
கவுண்டமணி ஆன்ன்ங் அந்தக் கதய இங்க உடாத அப்பனே... நவராத்திரி படம் வந்தப்ப உங்க நெட்டு இருந்துச்சாம் காட்டியும். அப்பாவியா வாயத் தொறந்தா கொசு வலம் வந்துட்டுப் போயிடுவீங்களே
செந்தில் அண்ணே கொசுன்ன உடனே ஞாபகம் வந்துடுச்சி. கொசு புடுங்கின்னு ஒரு ஆளு இருக்காரு. வண்டை வண்டையா திட்டறதுக்கு ஐடியா வேணுமின்னா அங்க போங்க.
கவுண்டமணிஎன்னாது கொசு புடுங்கியா? பேரு சூப்பரா இருக்கே
விவேக்இப்ப ஒண்ணு எனக்குப் புரியுது. காமெடியோ, டிராஜெடியோ நெட்டுல உள்ளவங்கள அடிச்சுக்க முடியாது. அதுனால கூட்டணியைப் போடு. நான் திராவிடம், தமிழ், இலவசம் மாதிரி ஆளுங்கள கவர் பண்றேன். மகளிர் அணியை கோவை சரளா பாத்துக்கட்டும். கொசுபுடுங்கி, லக்கிலுக் மாதிரி வெவகாரமான ஆளுங்கள கவனிக்கட்டும். வடிவேலு கைப்புள்ளைய கணக்கு பண்ணட்டும். குசும்பு புடிச்சவங்களை கருணாஸ் கவனிக்கட்டும்.
எஸ்ஜே சூர்யாஅப்ப நானு என்னா செய்யட்டும்?
விவேக் ஹஹ்ஹஹ்ஹா உங்களுக்குத்தான் ஏகப்பட்ட போலிகளைக் கவனிக்க வேண்டியதிருக்கே. கெட் செட் கோ...
(ஆளு புடிக்க சினிமாக்காரங்க வாராஹப்பு. நான் சைலண்டாய் எஸ்கேப் :-)
Subscribe to:
Posts (Atom)










