Thursday, June 30, 2005

காலங்கார்த்தாலே என்னைப் பிறாண்டாதே

குசும்பனின் கூழ், கேப்பை, சுழியம், சின்னம், புணர்வு, தளிர், மயிர்ப்பு, துயரம், விளக்கு'மாறு, துத்த'நாகம், எரு(மை)ப்பணி, சந்தை, அமே(மை)தி, குதறல், பொளித்தல், தாளித்தல், அகழ்(வாராய்ச்சி), துப்பு (சீ...துலக்குதல்), ஷணம், மோருக்கு மோரான், +/-=* இன்ன பிற குறி'யீடுகள்

காலங்கார்த்தாலே என்னைப் பிறாண்டாதே
இடை'வேளையிலே சந்துமுனையில் சிந்து பாடாதே
எனக்குக் கணினி இருக்கிறது; 'சொப்ட்'வேர் இருக்கிறது;
'ஹார்டு-வேர்' மட்டும் இல்லை;
தின்ன, குடிக்க, கழிக்கவென்று
வலைப்பதியவேண்டும்; 'ஜோலி' பார்க்க வேண்டும்.

"ஙொக்கா மக்கா" என்றா உ(ரை)ரத்துச் சொன்னேன்?
உனக்கும் கணினி இருக்கிறது; சொப்ட்வேர் இருக்கிறது;
தின்ன, குடிக்க, களி(ழி)க்கவென்று
என்னமோ உண்டு உனது ஜோலி.

ஏச்சுக்காகும் உம் ஷாந்தி, நி'ஷாந்தி, 'வாந்தி';
கொல்லைக்காகுமா? இல்லை, சொல்,
சோறாக்கவேண்டுமெனும் படைப்புக்காகுமா? நிழலைத்
தொடர்ந்து தொடர்ந்தே வேலையத்துப் போனோம் இதுவரை நாம்;
இன்னும் தொடர்ந்து கீசவும் வேண்டுமா,
இந்த நாள் வேலைப்பொழுதில்?

வேலை வேளைகளில் போட்டுக் கொடுக்காதே;
எனக்கு வேறு வேலை இல்லையா?
உன் கழி(த்)தலுக்கு மறு கழிப்பாய்
ஒரு வலைப்பதிவை நறுக்கிப் போட.

பின்னூட்டென்ன? பின்னேஉட்டு என்ன? இல்லை,
ஒரு பக்க'வாதத்துக்கென்ன கேடு?
இந்துஜார் கரோ. கல் தேக்கே_ஜாயகா;
என் நாஷ்டா எனக்கு, கையில் உள்ளதுதான் நாஷ்டா.

பினா.குனா. இக்கவிதைக்கு போடறாமாரி ஒரு படங்-காட்டுங்கோண்ணா...

Monday, June 27, 2005

தினமொரு கடிதம்

என் உயிரினும் மேலான இணைய உடன்பிறப்பே,

இணையம் மூலம் இலக்கியம் வளர்க்காவிடினும், கடிதம் மூலம் கட்சி வளர்த்ததை காதல் கரட்டாண்டியிலிருந்து, கும்பகோணம் கோவால் வரை அறிவார்கள். இன்று கடிதம் எழுதாத ஜீவராசி எது? ஆங்கிலத்தில் மெக் ரயன் கூட 'You got Mail' என்று பாசத்தோடு கூறியதை நீ மறந்திருக்க மாட்டாய்.

ஒவ்வொரு தினமும் உனக்கு மடல் வரைய மறக்கக்கூடாதென்பது அண்ணா எனக்கிட்ட அன்புக்கட்டளை அல்(ல)வா? மற்றுமொரு நல்ல செய்தியுடன் இன்று நானுன்னை சந்திப்பதில் பெரு மகிழ்வும், பேரின்பமும் அடைகின்றேன் என்று சொன்னால் அது ந(மி)கைப்புக்குரியதா?

சின்னம்மா சொன்னால்தான் நடக்குமென்று தவறாக நினைத்திருந்தோரை கண்ணம்மா மூலம் திருத்தினான் நாராயணன் தம்பி. இதோ அவனின் மற்றுமொரு கை'வண்ணத்தில் ப்ரிய'நிமோ' அம்மா என்றவொரு பக்திக்காவியம். ஆங்கிலத்தில் 'Finding Nemo' என்று சக்கைப்போடு போட்ட படத்தை அழகு தமிழில், கொஞ்சும் காட்சிகளாக அமைத்திருக்கின்றேன்.

இதில் மீனாக நடிக்க சீனாவின் மஞ்சள் ஆற்றிலிருந்தோ அல்லது நைல் நதியிலிருந்தோ சொகுசுக்கப்பல் மூலம் பிடித்து வரவழைக்க வேண்டுமென்று "கண்மணி அன்போட காதலன் நான் எழுதும் கடிதம். மடல். லெட்டர். சரி ஏதோ ஒரு கழுதை", என்ற அருளிய குணாக் கலைஞன் கூறினான்.

இராம. நாராயணன் நடுத்தெரு நாராயணன் ஆக விருப்பமின்மையால் கூவத்தில் நாம் பிடித்த மீனோடு படத்தை எடுத்து முடித்து விட்டோம். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சென்று அறிந்து உணர்ந்தவன் நீ! பொன்மலர் நாற்றமுடைத்து என்று அனுபவத்தில் ஆழ்ந்தவனல்லவா நீ!

பாடல்கள் அருமையாக வந்துள்ளன. தொட்டுக் கொள்ள ஊறுகாய் போல் இதோ அவற்றிலிருந்து சில வரிகள். நகலெடுக்கப்பட்டதோவென்று 'அந்நியர்' சிலர் ஆச்சரியப்படலாம். மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்குமென்று ஆசான் கூறியதை பொய்த்துப் போகவிடலாமா?

கூவ ஆற்றினில் மீனொன்று நீந்திச் செல்கையில் வரும் பாட்டு:

"குமாரி...
உன் செதில்கள் காய்ந்து பிய்ந்து தொங்குதடி...
நாதாரி
உன் நாற்றம் குடலைப் பிடுங்கி கொல்லுதடி...
சோமாறி
என் கூவம் ஆறும் பொங்குதடி..."

முகாரி ராகத்தில் சில்லென்று வந்திருக்கின்றது.

மேலும், மீன்கள் இரண்டு சந்தித்துக் கொள்ளும்போது

"கண்ணும் கண்ணும் சீக்ரெட்டா
காலை கடனின் சிகரெட்டா
மாலையில் அடிக்கும் மார்கரிட்டா
நீ
மார்கரெட்டா?"

என்று நீ சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கப்போகும் பாடலும் உண்டு.

பெண்மீனைக் கவர 'நிமோ' என்னும் ஆண் மீன் ராப்'பி(ச்)சையில் பாடலும் உண்டு. கேள் உடன்பிறப்பே வரிகளை...

"நாறும் தலைவன் வருகுது நிமோ
தலைவனின் தானைத் தளபதி நிமோ
ஐம்பது வயது இளைஞன் நிமோ
நான்தான் நிமோ..."

(இதற்கு கொசுறு கோரஸாய் 'கீழ்ப்பாக்கம் நான்தானோ, ஏர்வாடி நீதானோ' என்ற இலக்கிய வரிகளும் உண்டு). இன்னும் கேள்...

செட்டிநாட்டு பேக்கிரவுண்டில் ஒரு தமிழ்நாடு (கர்நாடகமென்று பிறர் அழைப்பர்) சங்கீதத்தில் அருமையான பாடல்: "செட்டியாரு வீட்டு கணக்கே..." இது உள்ளங்களை கொள்ளையடிக்கப் போவதுறுதி.

இவை மட்டுமா...? ஆங்கிலத்தில் சொல்வார்களே "Exclusive Locations" அங்கெல்லாம் சென்று படம் பிடித்த பாடல்:

"குண்டக்க குண்டக்க
குண்டக்க மண்டக்க

குண்டக்க மண்டக்க
அண்டம் முழுதும் கடங்காரி
கண்டால் ஓடும் கண்ணுக்காரி
பையில் வைத்த செல்லுக்காரி
மனசை மயக்கும் கஞ்சாக்காரி
பைசா தராத கஞ்சக்காரி"

தீம் மியூசிக் இருக்கின்றதே... இதை பற்றி தனிமடலே எழுத உத்தேசித்திருக்கின்றேன். அப்போது திரையிசையினையும் கை வைப்போம். படத்தினை போஸ்டர் ஒட்டியும், ஒரு பக்க விளம்பரம் தந்ததோடு உன் பணி முடிந்து விட்டதாக எண்ணிவிடாதே! கண் துஞ்சாமல் படம் காட்டியே வாழவேண்டுமென்பதை வையகம் நமக்குத் தந்த பாடம். வெற்றிமாலையினை சூ(ட்)ட வேண்டியது உன் பொறுப்பு. என்ன புறப்பட்டு விட்டாயா?

அழியாத மற்றும் என்றென்றும் அன்புடன்,
இணைய கலைஞன்.

Thursday, June 23, 2005

மப்பு அகலக் காணலே மாட்சி

முத(ல்)லே சொல்லிவிடுகிறேன்; குடி'மக்களை நியாயப்படுத்துவது அல்ல என் நோக்கம். ஆனால் உலக நிகழ்வுகளை உன்னித்துக் கவனித்து வருவோமானால், பெரும்பாலும் குடிகாட்டும்_ஊடகங்கள் (இங்கே கண்ணும் கருத்தும் தெளிவில்லாது மப்பில் இருப்போர் குடிக்கட்டும்_ஊடகங்கள் என்று வாசிப்பார்கள்) உயர்குடி-தாழ்குடி பிளவுகளைப் பெரிதுபடுத்திக்காட்டுவதிலேயும் ஹார்டு டிரிங்க்-ஸொப்டு டிரிங்க் (ரம்-பெப்ஸி_ஒரு-பகுதி) ஆகிய கூட்டினை எள்ளி நகையாடுவதிலேயே கண்ணாக இருக்கின்றது; (கவனிக்க: இருக்கின்றார்கள் இல்லை)

ஆக, இத்தால் அறியப்படவேண்டியது என்னவென்றால், உலகில் உள்ள குடிப்பிரச்சனை அத்தனையும் "இடை_குடி".எதிர்."தாழ்_குடி" என்ற எதிர்நிலைகளைச் சுற்றி மட்டுமே. உலகின் எல்லாப்பிரச்சனைகளுக்கும் மூலகாரணம், குடிதான் என்று ஒடுக்கிச் சுருக்குவது எவ்வளவுக்கு மடத்தனமும் நேர்மையற்ற செயலுமோ அதைப்போலவே "குடிமக்களின் எல்லாச்சிக்கல்களுக்கும் அடிவேர் குடியே" என்பதும்; ஆனால், குடி என்பது நிச்சயமாக பல பிரச்சனைகளுக்குக் காரணமாக இருக்கின்றது. அத்தோடு, குடி எனும்போது, இடைநிலைக்குடி, தாழ்நிலைக்குடி என்ற வகைப்படுத்தலோடு மேல்நிலைக்குடி என்பதும் உள்ளடங்கியிருக்கின்றதென்பதை உணர்ந்துகொள்ளவேண்டும்.

குடிகாட்டும் ஊடகம், ஊடகவியலாளர் என்று ஏன் கூறுகின்றேனென்றால், தமிழ்உடையாரான ராமசாமி உடையார் போன்றோரும் அவருடைய குட்டி' உடையார்களும் மிக இலகுவாக குடிபானம்-தயாரிப்பாளர் அல்லாதவராக உருக்காட்டப்பட்டுத் தப்பிவிடலாம்; கிட்டத்தட்ட மல்லையா இந்நூற்றாண்டின் இப்பகுதியிலே செய்ததும் இதுவே; வேண்டுமானால், மோஹன் புரூவர்ஸ்சையுங்கூட இந்தப்பட்டியலிலே சேர்த்துக்கொள்ளலாம். இப்பட்டியலிலே, உடையாரையும், மல்லையாவையும் விட்டு விடுவோம்; பணமிகுதியானவர்கள், தாம் பீட்டர் ஸ்காட் விஸ்கியினைக் குடிப்பது நாம் அறிந்ததே - தம் 'பல' இருப்பினை (எததனை பெக் அடிப்பதென்ற) தக்க வைக்கச்- செய்தார்களா, அல்லது, இவர்கள் ஏற்கனவே சரக்கு விட்டு ஆடிகொண்டிருந்த நிலைநில்லாப்பாட்டினாலே (விஜய் மல்லையாவின் ஆய்வுரீதியான கிங்பிஷரை முன்னிறுத்திய போக்கு; ஜான்னி வாக்கரின் விஸ்கி'யிசத்தை முன்னிறுத்திய போக்கு; ஓல்டுகாஸ்க்கின் ரம்சுவைத்தலின் பாற்பட்ட கோக்கோடு முன்னிறுத்திய போக்கு) குடிச் சித்தாந்தத்தினை முன்னிலைப்படுத்தியவர்களுக்கு அறியாமலே நகர்த்துகாய்களானார்களா என்று சரியாக எனக்குப் புரியவில்லை (நானிப்போ அடிச்சது நச்சின்னு நாட்டுச் சரக்குங்கோய்!). ஆனால், இவர்களையும் இவர்களின் பொருட்களையும் ஹார்டு டிரிங்க்/ஸொப்டு டிரிங்க் கலந்து/முழுமைதோய்ந்தக்கூட்டுக்குடிக்கெதிரான நிலைப்பாடுள்ளோர்கள் மிகவும் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கின்றார்கள்; இன்னும் பயன்படுத்துகின்றார்கள்.

ஐம்பதுகளின் பிற்பகுதிகளிலும் அறுபதுகளிலேயும் எழுபதுகளின் முற்பகுதிகளிலும் குடி எதிர்ப்புப்போராட்டத்தினையும் ட்ரிங்க் எதிர்ப்பினையும் திராவிடபர'தேசியத்தினையும் முன்னிலைப்படுத்திய குடிதீண்டாக்கட்சிகளின் ஆளுமைக்கு முன்னாலே, ஒடுங்கிப்போயிருந்த டிரிங்க்/ஸொப்டு டிரிங்க் கலந்து/முழுமைதோய்ந்தக்கூட்டுக்குடிக்கெதிரான சக்திகள்,
குடிதீண்டாக்கட்சிகளின் அரசியல், பண்பாட்டுச்சீரழிவின்பின்னாலே, மீண்டும் உலகளாவிய குடித்தீவிரவாதத்தின்பின்னால் மறைந்துகொண்டு ஆழ வேரிட்டு முளையெடுத்து மேற்செல்ல முயல்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

இந்தக்காலகட்டத்திலே, இத்தகுசக்திகளின் காய்நகர்த்துதல், ஒடுங்கிப்போய்விட்ட மேல்நாட்டுக்'குடி'யின் ஏகாதிபத்தியத்தின் பலம்பொருந்திய கொள்கையான தனக்கு எதிரானசக்திகளைப் பிரித்தலும் தம்மை மீறாதவிதத்திலும் தம்நலத்தினைச் சேதப்படுத்தாதவிதத்திலும், தாம் கூறாக்கிப் பிளந்த எதிர்க்குடிசக்திகளிலே தமக்கு அடுத்த நிலையிலே குடியின் அடிப்படையிலே வைத்திருக்கும் குழுவுக்கெதிராக, குடிமட்டத்திலே குடிக்கும்சிரமமும் வைத்திருக்கும் குழுவினை மோதவிடுதலுமாக இருக்கின்றது. குடிபீடங்கள் முதன்முதலிலே, சாராயம்/கள்ளு குடிகளை
மேக்டோவல்குடிமாறுசம்பவத்தோடு ஒரு கண்துடைப்புக்காக அணுக முயன்றன. அதற்குக் காரணம், மல்லையாவின் அத்திவாரத்திலே ஆட்டம் வந்துவிடுமோ என்பதால், மேல்குடியிலே இருந்தவர்கள் பயமுற்றது.

---இடைவேளை

போஸ்டர்: என்னெழுத்து மெள்ள மெள்ளப் புரிந்ததாகக் கூறும் செல்வ'ம் கொழிக்கும் ராசு'களுக்கும், புரியாத நாடகம்போடும் 'நர்த்தகி ராமு'களுக்கும் சமர்ப்பணம். மேல்குடிகளென தம்மைக் கருதிக் கொல்லும் குடிசாதிகளுக்கு மூன்றெழுத்தென்பது எழுதிடாத விதியா? வோட்காவினை வல/இட'ம் பாராது அருந்திய செஞ்சட்டைத் தோழர்கள், ஹோசே குவர்வோ (சே-குவாரா போல் செக்ஸியாயில்லை!) என்னும் டெக்கீலாவை உதாசீனப் படுத்தவில்லையா? தாழ்த்தப்பட்ட குடியென்று 'கள்வெறி' கொண்டார்களை நோக்கி கல்வீசத் தோணுதடி...உன்'மத்தமும் ஏறுதடி

மப்பு தொடர்கின்றது

அதன் பின்னாலே, எதுவுமே பத்தாண்டுகளாக நடக்கவில்லை. பிறகு, குடிபீடங்களுக்கு ஈடான அ'மப்புத்தன்மை கொண்ட பொருட்பலமுள்ள கெனேடியன் விஸ்கி ஊடுருவலும் (மில்லியில் அடித்தவன் ஒண்ணே முக்கால் லிட்டருக்கு வெறும் இருபது டாலரே செலவீனம் செய்து) மத்தியகிழக்கிலே குடித்தொழிலுக்குப் போனவர்களூடாக உள்நுழைக்கப்பட்ட தீவீரவாத எவர்கிளியரிஸமும் (ஙொக்கா மக்கா அத்தனையும் ஆல்கஹால்) வெளிப்படையாகச் செயலாற்றத் தொடங்கிய காலத்திலே, தீவிர குடிஇயக்கங்களினை வைத்து குடிக்கூட்டுச்சக்திகள் செயலாற்றத்தொடங்கின என்று சொல்வேன். அண்மைக்காலத்திலே, வஜீர் என்னும் ஹார்டு கலந்த பியர் ஸொப்ட்-டிரிங்க் பி(ய)ரியர்களை அணுகலும் இதன்பாலானதே. கிட்டத்தட்ட, 'விஸ்கிகுருவுக்கு வன்னாயுதப்போரிட எத்துணை தெரிந்தபோதும், புழு டெக்கீலாவிலே (மெக்ஸிகோவில் புழுவைப் போட்டு டெக்கீலாவெனும் மது அருந்துவனம்) மிதந்தாலுங்கூட விஸ்கிகுருவின் மப்பு கலையாது அசையாதிருக்கும் சீடனாக, ஒரு ஷத்திரியனுக்குத்தான் ஆகும்' என்கிற குடிமகா(ப்)பார்வையைக் கொஞ்சம் தாழ்குடிகளுக்கு நகர்த்தியதுபோன்ற செயற்பாடு இதுவெனலாம். மீதியான தம்மை எஞ்சியிருக்கும் பணம், மிஞ்சியிருக்கும் தள்ளாடல் வகையிலே எதிர்கொள்ளக்கூடிய குடியினரை எதிர்கொள்ள, மற்ற குடிகளை படுத்திக் கொல்வது மிகவும் இலகுவாக இருக்கின்றது.


'05 ஜூன், 24 வியா. 1:18 கிநிநே.

பி.கு.: ஆண்/பெண்/அவதாரமாக/பெயரிலிகளாக/முகமூடிகளாக/குசும்பனாக வந்து திட்டிவிட்டுப்போகவும் கருத்துச்சுதந்திரம் உண்டு; மூலம்(!) எங்கேயெண்டு கண்டுபிடித்து, வழக்கேதும் போடமாட்டேன். ;-)

Part-II கூடவுண்டு. சாவதானமாய்... மப்பு கலைந்தவுடன்...

திரைத்துறையில் பார்ப்பனீயம்

அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா...அவ ஆத்துக்காரர் சொல்லுறத கேட்டேளே என்ற பாடல் பத்ரகாளியாய் ஒலிக்க, மாசிலா உண்மைக் காதேலே மாறுமோ செல்வம் வந்த போதிலே என்று கதாநாயகன் வினவ 'பேஷ¤ம் வார்த்தை உண்மைதானா' என்ற பானுமதி விஷ¤வலாய் வெளிப்பட... தத்தியன் என்ற திரைப்படத்தை பிர'பலங்கள் பிய்த்துப் பிறாண்டுகின்றார்கள்

குன்னக்குடி வைத்தியர்: எண்ணிப்பார்க்கையில் பார்ப்பனப் பத்திரிக்கையான விகடன் கூட பார்ப்பணீயத்தை முன்னிறுத்தி அடுத்த படிக்கு அழைத்துச் செல்லும் உன்னதமான கலைஞனை 'சே' என்று காயப்படுத்தியதை மறக்கவோ, மன்னிக்கவோ இயலவில்லை.
கவிக்குமார்: அட விஷயத்துக்கு வாருங்கள். தத்தியன் பெயருக்கேற்றவாறு தத்திதான். சாதா கூடா சோதா
குன்னக்குடி வைத்தியர்: அதை வுடுங்க கொமாரு. நான் என்ன குறை ஒன்றுமில்லை கோவிந்தா என்றா கூறினேன்?
கவிக்குமார்: நாயகிகளுக்கு அறிவில்லை என்ற ஆணாதிக்கத்தன்மையை திரையுலகிற்கு தொழில்நுட்ப பிருமாண்டத்தினால் நிறுவனப்படுத்த முயலும் சே'ங்கர் போன்றவரை கலைஞர் என்ற கட்டத்தில் வைக்க மனம் ஒப்பவில்லை (மூச்சிரைக்கின்றது)
குன்னக்குடி வைத்தியர்: மன்னன் என்னும் படத்தில் ரஜினி பேசிய பஞ்ச் டயலாக்குகள் ஞாபகமின்றி நினைவுக்கு வந்து தொலைக்கின்றது. தொந்தியன் படத்தில் வயதான ஹீரோவுக்கு வயதான வேடம் தந்து இயல்பை நிலைநாட்டி, இளைமையான நாயகிக்கு முதுமையான வேடம் தந்து, தொழில்நுட்பத்தின் மறுபரிமாணம் காட்டியவரை குத்திக் கிழிக்கக் கூடாதென்பதில் எனக்கு கவனமுண்டு. தமிழ் சினிமா முன்னேற வேண்டுமென்ற ஆதங்கம் நம்மிருவருக்கும் இருக்கின்றது.
கவிக்குமார்: your biased review is very shocking. How cud you tolerate such a stupid narration and blatant repetition of his earlier movies. If you think this movie helps tamil cinema to reach greater heights , i pity you.
குன்னக்குடி வைத்தியர்: என்ன இப்படி சூடாகிறீங்க குமார். சினிமா என்பது ஒரு பேண்டஸி. this is kindaa big canvas. சேங்கர் தன் படம் மூலம் காட்டிய உலகங்களைப் பாருங்கள். தொந்தியனில் அவுஸ்திரேலியா, பொய்ஸில் ஐரோப்பா, ச்சீன்ஸில் அமெரிக்கா என்று தத்ரூப பிருமாண்டங்களால் வரைப்படுத்திய மேற்பூச்சைப் பாருங்கள். இப்படியெல்லாம் வளர்ந்த, அழகான நாடுகள் உள்ளனவாவென்று நம்பமுடியாமல் நம்பவைக்கும் கெமரா கோணங்கள், பாடாய்ப்படுத்தும் வித்தியாசமான கோணங்கள் (தொந்தியனில் மண்மிதிக்கும் குடும்பம், சகதி காலிலிருந்து மூஞ்சியில் தெறிக்குமே...அதுபோல) இதெல்லாம் ஏன் கலைக்கண்களுக்கு தெரியாமல் போயின?
கவிக்குமார்: ஆனால் முந்திரசகியில் எடுக்கப்பட்ட துருக்கி உலகம் மட்டும் ஏன் உங்கள் கலைக்கண்களுக்கு உவப்பாயில்லை என்பததுதான் உண்மையான நடுநிலை கலைஞன்தானா (நீங்கள் அப்படிப்பட்டவர்தான் என்பது என் நம்பிக்கை) என்ற கேள்வியை எழுப்புகின்றது. தங்க கிளாஸில் சாராயம் கொடுத்தால் அது ஷீவாஸ் ரீகல் விஸ்கியாகிவிட முடியுமா? பிருமாண்டம் அவசியமில்லை என்பதை 'சாதல்' படம் மூலம் தயாரிப்பாளராய் காட்டியவருக்கு, இயக்குநராக கட்டத் தெரியாதா...?

--இடைவேளை

போஸ்டர்: (அடப்பாவிகளா...ஓஸ்கார் பாவிச்சந்திரன் தயாரிப்பில் சேங்கர் 'சாதல்' படம் பண்ணினால் பணால்தான்... :-)

(வாதம் தொடர்கின்றது)

ஹல்வா சிட்டிபாபு: எனக்கு சேங்கரின் மீது மதிப்பு குறந்து கொண்டே வருகின்றது. தாலியை ஊக்கு ஸ்டாண்டாக மதிக்கும் காலத்தில் தாலி செண்டிமெண்ட் இல்லாமல் இயல்பாக படமெடுத்து வருகின்றார் என நம்பினேன். கதை இல்லாத சினிமா அதுவும் தமிழ் சினிமா என்பது சீரணிக்க முடியாத சமாச்சாரம் (ஙொக்கா மக்கா அப்படி வேற இருக்கா?). கடைசிப்படியில் நிற்கின்றேன் நான். அறிவு ஜீவி விமர்சனம் தா பேபி...
குன்னக்குடி வைத்தியர்: சும்மா இருந்த சங்கை 'ஊத' வைச்சுட்டீங்களேப்பா...அடுத்த பதிவு போடறேன். வுடு ஜூட்.

--திரை

அடுத்த வி(தண்டா)வாதம்

கவிக்குமார்: போலீஸை இதுக்கு மேல கேணப்பசங்களா காட்டியிருக்க முடியாது. நிஜ போலீஸ் மதுரை (ஜெயலட்சுமி) மடியிலும், சென்னைக் கொள்ளையிலும் பிஸியாக இருக்க, சேங்கரின் போலீஸ் திண்டிவனத்திற்கும், திருவையாறுக்கும் தத்தியனைப் பிடிக்க அலைகின்றாகள். எந்த விதமான திரைக்கதை நேர்த்தி இது? யதார்த்தங்களை சேங்கர் கொலை செய்தால் கலைஞன் என்பீர்கள். கஜினி கொலை செய்தால் குய்யோ, முறையோ போடுவீர்கள். தார்ச்சாலைக்கு பட்டுசேலை கட்டி, ஜரிகை பார்டர் போட்டாலும் அது தார்ச்சாலைதான். படைப்பாளியாய் விமர்சனம் செய்யுங்கள்.
குன்னக்குடி வைத்தியர்: தத்தியனில் செய்யப்படும் கொலைகளைப் பாருங்கள். ஹாலிவுட்டிற்கு இணையான கொலைகள். சண்டையைப் பாருங்கள் மேட்ரிக்ஸ் பட சண்டை. நடுவிலே ஓடை மாதிரி கதை. வற்றிப்போனாலும் ஓடை ஓடைதான். ஒன்றுமில்லாமல் சும்மா கதை விட்டு மூன்று மணி நேரம் ஓட்ட முடியுமா?
ஹல்வா சிட்டிபாபு (டென்ஷனாகின்றார்): புருடா புராணம் விடாதீங்க. சொன்னா கேட்டுக்கணும். எதுக்கெடுத்தாலும் ஆர்க்யூமெண்ட்.
குன்னக்குடி வைத்தியர்:
புராணம் என்ன பனியன் சைஸா..ஸ்மால், மீடியம், லார்ஜ்னு சொல்ல? எல்லாப் புராணமும் ஒரே சைஸ் தான், அதோட எஃபெக்ட் எப்போதுமே எக்ஸ்டிரா லார்ஜ் தான்!’ (சிலிர்க்கிறார்)
ஹல்வா சிட்டிபாபு: சரி சரி சரீர சுத்தமா கதைகருவுக்குப் போவோம். திருவல்லிக்கேணியில் காலை எழுந்தவுடன் சந்தியாவதனம் பண்ணிவிட்டு பஜனைக்கு போகும் குடுமி வைத்த வக்கீல் இராமனுஜ அய்யங்கார் என்ற அம்பி. இவருக்கு நாட்டில் எதுவுமே சரியில்லை என்ற சதா கவலை.
கவிக்குமார்: சதா கவலைதான் இடிக்கின்றது. அம்பியும் நானே...ரெமோவும் நானே என்று எனக்கே புரியும்போது சதாவுக்கு புரியவில்லை என்பதுதான் சதா கவலையாயிருக்கின்றது.
ஹல்வா சிட்டிபாபு: கோடி கோடியாக கொட்டினாலும் சுவையான ஆரோக்கியமான பதார்த்தமாக இருந்தால் சாப்பிடலாம். சுவையிருந்து பாஸ்ட்புட் கணக்காக ஸ்லோபாய்சனாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லவே இல்லை. டப்பு கொடுத்து பாக்கும்போது கப்பு அடிச்ச படம் இது. நுகர்'வோர் மன்றத்தில் வழக்குப் போட வேண்டும். கீர்த்தி அண்ணாவிடம் விபரம் கேட்க வேண்டும்.
கவிக்குமார்: அமெரிக்காவில் வேண்டுமானால் கைதட்டியிருக்கலாம். இங்கே மக்கள் வெயிலில் மண்டை காய்ந்து படம் பார்த்து ஊளையிடுகின்றார்கள்.
குன்னக்குடி வைத்தியர்: குணா குருவிக்காட்சியிலும் கூட ஊளையிட்டார்கள். கரகாட்டக்காரனில் குலவையிட்டார்கள். அம்மன் படத்தில் சாமியாடினார்கள். என்ன பண்ணுவது? தத்தியன் அதைப்பற்றியதல்ல. அதையும் தாண்டி புனிதமானது. முந்திரசகி மூன்று மாதத்தில் முந்திவிட்டது. மூன்று மாத மசாலாவிற்கும், ஒன்றரை வருட மசாலாவிற்கும் வித்தியாசமில்லையா? எட்டு வருட ஷீவாஸ் ரீகலுக்கும், 15 வருட ஷீவாஸ் ரீகலுக்கும் உள்ள வித்தியாசம்தான் அது. சேங்கர் என்ற மஹா கலைஞனைப் பாராட்ட டிஸ்கிளைமர் எதற்கு? உதார் விடுவதற்கு மன்னிக்கவும் உதாரணத்திற்கு ஒன்று சொல்வேன். அழிக்க வந்தானில் ஒருவர் நடிக்கின்றார். ஷாக் படத்தில் ஒருவர் நடிக்கின்றார். ஆனால் அழிக்க வந்தானை நான் வலிக்காமல் தான் குட்டுவேன். அது நடுநிலைமை இல்லையென்றால் so be it !
கவிக்குமார்: என்னதான் சொல்லுங்கள். தொழில்நுட்பமென்பது ஒரு ஜிகிடி. ஜீஜுபி. டோல் டப்பி மா! ஆனா கதையென்பது பாபா போன்றது. இரண்டாயிரம் ஆண்டுகளானாலும் உயிர்வாழ்வது. தனது ட்யூனை தானே காப்பியடிக்கும் தேவா போல, வெற்றி வேண்டுமென்பதற்காக தனது கதையையே காப்பியடித்துள்ளார் சேங்கர். அவருக்கே மல்டிபிள் பெர்ஸனாலிட்டி ஸிண்ட்ரோம். புருடா புராணச்சட்டப்படி அவருக்கு தண்டனை தரப்பட வேண்டும். கதைச்சொல்லி இப்படத்தில் கதைக்கொல்லியாகிவிட்டார்.
குருதமேல அழகர்: சம்பந்தமில்லாம தலய உடுறேன். எங்க பயர் பேக்ஸ் தியேட்டர்ல உங்க படம் சரியாத்தெரியல. குன்னக்குடியாரே ஸ்டைல் ஷீட்ட மாத்து!!!

4-D கொண்டாட்டம்

நம்பர்-1 என்று மார்பு (கூகிள் தேடு'பொறியில் மக்கள் சிக்கி ஏமாறுவதற்காக) தட்டிக்கொள்ளும் பல சனரஞ்சக பத்திரிக்கைகளில் ஒன்று, 3D கண்ணாடி போட்டு பல பலான படங்களை குளோஸப்பில் பார்க்கும்படி வரலாற்றில் முதன்முறையாக செய்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள யுனிவர்ஸல் ஸ்டுடியோவில் நம்ப ஆர்னால்டு சுவர்சுநக்கர் பிலிமான டெர்மினேடர் ஷோ காட்டுவானுங்க. அதுக்குப் பேரு 4-D ஷோ. அதாவது 3-D படத்தோட இன்னோரு டைமன்ஷன் (தமிழ்ப்'படுத்த' முடியல) சேத்து நிஜ ஆளுங்களும் சே(பூ)ந்து வெள்ளாடுவாங்க. அதுபோல இது குசும்பனோட 4-D ஷோ... என்ன கண்ணாடி போட்டுட்டேளா?

(குளிர் பிரதேச பின்னணியில், போட்ட/போடாத அரைகுறை உடையால் 'சொல்லாத இடம் கூட குளிர' தொகுப்பாளினி FM தமிழில் அறிவித்து கொல்லுகின்றார்)

எலாருக்கும் வண்க்கம். வெல்கம் டூ குசும்பன் 4-D ஷோ! எல்லாரும் நாங்க கொடுக்கிற காக்கிள்ஸ போட்க்கோங்க! படம் சூப்பரா தெர்யும்! அப்றம் சீட்டவுட்டு ஷோவுக்கு நட்வுல எளுந்த்திரிக்காதீங்க! ஷோ முடிஞ்சதும் வோட்டுப் போடவும் மற்க்காதீங்க! என்ஜாய் த ஷோ! பைய்ய் (பிளையிங் கிஸ் கொடுக்க ரசிகர்கள் அப்ளாஸ் காதை கிழிக்கின்றது)

(சினிமா தியேட்டர் போல ஒரு அறை. மணிரத்தினம் படம் போல இருந்தும் இல்லாதது போல வெளிச்சம். தட்டுத் தடுமாறியபடி ரசிகர்கள் அமர்கின்றார்கள். 3-D காக்கிள்ஸை போட்டுக் கொண்டு அமர, திகில் இசை பரவுகின்றது)

(மேடையில் பலர் அமர்ந்திருப்பது போல ஒரு பிரமை. கேரக்டர்களுக்கு நாமே ஒரு பெயர் கொடுப்போம்)

அரைமொட்டை ஹாசன்: முண்டை...முண்டை...நாயே...என் தாயே...பேயே...என் பெருச்சாளியே போய்சேந்த்திட்டியேடி...இப்ப படத்துல இனிமே யாரை நான் திட்டுவேன்...ஏய் கொத்தாளா...(தடார் படார் சப்தம்...ஹாசன் அறைந்து கொல்கிறார் தன்னைத்தானே)

(ரசிகர்கள் திக்பிரமை பிடிக்க...)

தொகுப்பாளினி: ஹேய் என்ன பயந்துட்டீங்களா அது ச்சும்மா... ஒரு டிரைலர். இனிமே ஒரே ஜாலிதான்...ம்ம்மாமா...பைய்ய்ய்ய்

(திட்டி முன்னேறுவோர் கழகம் மற்றும் கூட்டு-அணிகளின் மீட்டிங்...கரை வேட்டிகளுடன் உடன்பிறப்புகள் ஆஜர்)

அரைமுருகன்: ஐயா நடுரோட்டுல உக்காந்து போராட்டம் பண்ணதால உடம்புல ஒரே சூடு...அடுத்த பொஸ்த்தகத்துக்கு உரை போடுங்கய்யா. வேணா பல்காப்பியம்ன்னு புதுசா கூட எழுதுங்க. ஒரு ஊட்டி, கொடைக்கானல்னு உங்க செலவுல பொண்டாட்டி பிடுங்கல் இல்லாம ரெண்டு வாரம் ஓட்டினா சூடு சரியாயிடும்யா...

(அப்போது யாரோ குலுங்கி குலுங்கி அழுகின்றார்)

போ'கோ: ஐயா...உங்களுக்கு ஞாபகமிருக்குதா? நெஞ்சுக்கு நீதியானாலும், கஞ்சிக்கு சிங்கியானாலும் இந்தத் தம்பிதானே கூட இருந்தான். தடம் மாறிப் போனாலும் தண்டவாளங்களை, வண்டவாளங்களை மறக்குமோ இப்புகை வண்டி?

(கூட்டணி தலைவரான வலை'ஞர் செருமி, தனது கண்ணீரைத் துடைத்துக் கொள்கின்றார்)

அரை: (மனதுக்குள் பொருமுகின்றார். இந்தாளுக்கு அழுகாச்சி நாடகம் போட்டே ஆளைக் கவுக்கிறது வேலையாப்போச்சி...கிளிஸரின் போட்டாக் கூட நமக்கு இந்த இழவெடுத்த அழுகை வரமாட்டேங்குதே...)

ராமநேசு: நமக்கு இப்பிடி சுத்தி வளைச்சு பேச வராது. 'ஏக் ஜட்கா..தோ துக்கடா' ஹிஹி இந்த அம்புமணி புள்ளங்க டில்லியிலேர்ந்து பேசி பேசி நமக்கும் இந்தி ஒட்டிக்கிச்சு...யோவ் வெட்டு ஒண்ணு...

(தொண்டர் காதைக் கடிக்கின்றார்): ஐயா வெட்டணுமா எங்க எங்க?

ராமநேசு: எலேய் காடுவெட்டி கம்முன்னு கிட...

சன்'முடி: ஐயா கள்ளவோட்டு வாக்காளர் பட்டியல் கனஜோரா தயாராயிட்டு இருக்குய்யா. நம்ம வட்டம், மாவட்டம் எல்லாம் சும்மா வலைப்பூ மாதிரி ஜல்லியடிக்கிறாங்கய்யா

ராமநேசு: என்னாது டெண்டர் உடாம ஜல்லியடிக்கிறாங்களா? அப்ப போராட்டம்தான். இனிமே யாரும் ஜல்லியடிக்கக் கூடாது. வெட்டுறது, அடிக்கிறது, படப்பொட்டி கடத்துறது எல்லாத்தையும் டெண்டரே இல்லாம எங்க ஆளுங்கதான் செய்யணும்.

தொண்டர்: ஐயா அது வேற மாதிரி ஜல்லிங்க

ராமநேசு: யோவ் எந்த ஜல்லியா இருந்தா என்னய்யா? ஆமா ஜல்லிக்கு தமிழ்ல என்ன? 'சல்லி'யா? ஒழுங்காச் சொல்லுய்யா...இல்லன்னா உடன்பிறவாமல் கொல்லும் சகோதரி போட்டுத் தாக்கிடும்

வலைஞர் (கரகரப்புக் குரலில்) சரி சரி அமைதியாயிருங்க. சட்டசபைத் தேர்தல் வந்துடும் போலருக்கு. நாம இன்னும் சட்டையே செய்யாமல் அசட்டையாய் இருக்கக்கூடாது. இந்த தவனாண்டி எந்த சில்மிஷமும் செய்யலாம். நாம் சில்லுண்டியில்லையென்று நிரூபிக்க வேண்டும்.

பரிதிவிழும்புழுதி: யோவ் யாராவது விளம்பரம் போடுறாங்கன்னு அந்தாள்கிட்ட சொல்லுப்பா...மெகாசீரியல் பாக்கிற வியாதி அண்ணன் போகோவிடமும் தொத்திக்கிச்சு போல...சார்...சார் அழுதது போதும்...இந்தாங்க மெட்ரோ வாட்டர் குடிங்க...நான் சின்னப்புள்ளையா இருக்றச்ச

போகோ: அட தேவுடா...இப்புடுச் சூடு...

தொண்டர்: ஐயா ஏற்கெனவே நீங்க தெலுங்கர்ன்னாங்க...நீங்க இப்டிகா மாட்லாடினா வம்பு சார்

(இப்படி கூத்தும் கும்மாளமுமாக இருக்க சட்டென்று நாற்காலிகள் குலுங்குகின்றன...படபட'வென்னும் சப்தம் விஷ்விஷ்' என்று கதம்ப ஒலி. ரசிகர்களின் லப்டப் எகிறுகின்றது)

(இ(அ)டம் பொருள் ஏவல்: சந்தி'ரா காங்கிரஸ் கட்சியின் மிக மிக முக்கியமான கட்சி மாநாடு மெரினா பீச்சில் நடக்கின்றது.)

சனிசங்கர ஐ**: என்னய்யா இது...வலைப்பதிவர் கூட்டத்துக்குக் கூட ஆளுங்க அதிகம் வந்திருக்கும். நம்ம கட்சி மாநாட்டுக்கு ஆளுங்களே காணோம்.

தொண்டர்: என்ன இப்படிக் கேட்டுட்டீங்க? மேடையில பாருங்க... இவ்வளவு தலைவர்களை ஒரே இஅடத்தில் சேப்பதுக்கே தாவு தீந்து போச்சி... இந்த லட்சணத்துல தொண்டர்கள் கூட கேக்குதா?

இளகியகோவன்: இப்பெல்லாம் தமிழ் தமிழ்'ன்னு சிலர் காட்டுமிராண்டித்தனமாக அலைகின்றார்கள்

தொண்டர்: ஐய்யோ இந்தாளுக்கு வேற வேலையே இல்லையா? ஏற்கெனவே 'ஊது'பவர்'ன்னு சொல்லி வாங்கிக்கட்டிக்கிட்டாரு இப்போ இது வேறயா?

புஷ்பவனம் நாமமூர்த்தி: இதற்கெல்லாம் ஒரே தீர்வு என்னை தலைவராகப் போட்டுவிடுங்கள்

(வாய்திறக்காமல் இருக்கும் தலைவர் தாசனைப் பார்த்து தொண்டர்): இவங்கப்பாவே தேவலாம்ப்பா...பாக்குப் போடறதுக்காவது வாயைத் திறப்பாரு

ஏலகிரி பெரபு: என்னை யாருமே கண்டுக்கவோ, கண்டிக்கவோ இல்லை. நான் டில்லிக்குப் போறேன். அன்னைக்கிட்ட சொல்றேன்.

ஜெயம்தி: ஐயா நானும் கட்சியிலதான் இருக்கேன்யா... என்னை யாராவது திட்டவாவது செய்ங்களேன்...ப்ளீஸ்

கார்ட்டிக்: இளைஞரணி திரட்ட வேண்டும். யூத் இஸ் ப்யூச்சர்.

(தொண்டர் அர்த்தம் புரியாமல் தலையை சொறிய அருகிலிருந்தவர்) அட இவருக்கும் தலைவராக ஆசை வந்துடுச்சுப்பா...பாவகங்கை தொகுதியில நின்னுடுவாரு போலருக்கே...

(காங்கிரஸ் பாலா)காபா: வயசான காலத்துல நிம்மதியா தலைவர் பதவியில இருக்க உடமாட்டேன்றாங்களே

(முதல் மரியாதை ஸ்டைலில் தொண்டர் ஒருவர்) ஏம்ப்பா நம்ம பவனுக்கு சொத்து பத்தெல்லாம் எவ்வளவு தேறும்?

(டேய் சொத்துக் கணக்குக் கேக்குறான்...உருவுடா வேட்டிய என்ற சவுண்ட் வர வேட்டிகள் ரசிகர்களின் கண் முன்னே விஷ்விஷ்'என்று பறக்கின்றது. நடுவிலே வைகிங் அண்டர்வேர் தெரிய யாரோவொருவர் 'தூள்' என்று கத்தி கலகலப்பூட்டுகின்றார். புரியாத ஒரு சிறுமி அப்பாவியாய் 'வைகிங்கதானே சொன்னீங்க சித்தப்பா', என்று சொல்ல திரை)

தொகுப்பாளினி: என்ன மக்க்களே 4-D ஷோ ரசிச்சீங்களா? மீண்டும் உங்க்ளுக்காக அடுத்த வாரம் இதே டைமில வந்த்து உசிரை எடுக்றேன். அதுவரைக்கும் டாட்ட்டா...ச்ச்சீயூ...

Thursday, June 16, 2005

போடா போடா புண்ணாக்கு

போடாத தப்புக் கணக்குன்னு...

கம்முன்னு மூலைல குந்திக்கினு குசும்பு பண்ணிக்கினு கிடந்தவனையும் மனுஷனா மதிச்சு மஸ்ட்-டூ கேட்டுக்கினதால, அப்பீட் குடுக்க வழியில்ல மாம்ஸ¥! வந்தது கோபம். பிடி புஸ்தகம்! சும்மா கிடந்த நாதாரிய உசுப்பி விட்டுட்டேளே!

நம்பள்கி புஸ்தக வாசனை ஜாஸ்தியில்லைபா! நிம்பள்கி போஸ்ட் படிச்சான். குசும்'படிச்சான்! கேஸ¤ கீஸ¤ போட்டுடா'தேள்...

மஸ்ட்-டூ உமக்கு ஞாபகம் இருக்கா? (அம்மா சுமதி அப்ப நீ ... சிவாஜி ஸார் வசனம் பாஸ¤). ரத்தம் ஒரே நிறம்'ன்னு யாரோ சுஜாதா மாமி எழுதிண்டு இருந்தா! மறந்து போச்சா நோக்கு! நாயகி எமிலி'ன்னு நினைப்பு. போர் மூள்வதற்குள் உன்னை கர்ப்பம் செய்துவிடுகிறேன் வா' அப்படின்னு வசனம் படிச்ச ஞாபகம் வருதே! யானைக்கால் கொண்டு தலை இடறுதல் கூட சிறுசா ஞாபகம்!

அம்..ஹீம்.. அப்புறம் சவீதா'ன்னு ஒரு ஜீவன். முத்தாரத்துல எழுதுனது. என்னமோ கிணறு... பூதம்... கேனையா... அப்படீன்னு... ஒரு தொடர்கதை. ஸ்கோல்ல, ஸ்டோரி டெல்லிங்ல (காடுவெட்டி தமிழ்க்குடி தாங்குவோர் மன்னிக்க) அண்ணாச்சி (நாந்தான்) சுகுற்றா அவரோட கதையை அள்ளி வுடுவேன்.

அட.. பழைய நெனைப்புதான் பேராண்டி... அப்படின்னு டோண்டு ஸார் ஆப்படிக்கு முன்னர்...

படிச்ச ரெண்டு புக்கைப் போடுறதுக்குள்ள மூச்சும், மூச்சாவும் முட்டுது. இது நாயமா மஸ்ட்-டூ? இருந்தாலும் அய்யா ஆட்டைக்கு வாரன். தடுக்க ஏலுமா?

அவா அவா பொஸ்தக லைப்ரரி படம் காமிக்கறச்சே நான் படிக்கிறதே வலைப்பூக்கள்தான். பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு. அப்படியே படிச்சிடுவேன். நான் மேயற பூக்கள் சில இங்கே...

மேரா டோலக் by கோல்டுபெல் - பிடித்த வரிகள்: ஓல்டு மாங்க் என்னும் ரம்மைக் குடிப்போமடா...சாலைகளெல்லாம் சலம்பல் செய்யவே
பிக்கல்: by தமிழ்சாம்பு இவர் பொதுவாகப் புனைவது பிடிக்கும்
Tulsi மேடை by பெரிய மேடம்: நினைத்தது, நினைக்காதது, பார்த்தது, பார்க்காதது, கேட்டது, கேட்காதது இப்படி எதைப்பற்றியும் படிக்கலாம்.
தூங்க முடியல by சுகவாசி: சில தூங்கமுடியாத நேரங்கள், சர்ச்சசைகள்
Friendly Sneeze by F(r)iend : ஊறலில் திளைத்த நண்பன் உள்ளதை எ(உ)ள்ளல்
இலைகளின் மறைவில் by துவாரக்க்கா: ஹிஹி நியூமராலஜி புக்குங்கோ
பிரெண்ட்ஸ் by பிரெண்ட்ஸ் இது ஒரு 'கூட்டு'ப் புத்தகம். சமையல் குறிப்புகள் தேடி ஏமாற வேண்டாம்
பெயிண்ட் பிரஷ் by குன்னக்குடி வைத்தியர் ஜினிமா ஜிகிடி பகடி'க்கு குறைவில்லை.
போட்டு சாத்து by ஹல்வா சிட்டிபாபு தலை நிமிர்ந்து தமிழ் படிக்கலாம்
பெ(க)ண்ணோட்டம் by கவி கருணாதாஸ் : கருத்துக் குறிப்பு விமர்சன விவாதங்கள்
சொத்து by சொத்து அடி மனதின் ஆழத்தில் கொஞ்சம் அப்படி கொஞ்சம் இப்படி
அடாவடி by அடிதடி சோடாபுட்டி, சைக்கிள் செயின், ஆசிட் முட்டை இத்யாதி சைபோக் by சிவிதா மிஸ்ஸல்ல மிஸ்ஸஸ¤மல்ல ஆணல்ல பெண்ணல்ல நீயல்ல நானுமல்லாத கண்ணோட்டம்
கழுவுதலும், நழுவுதலும் by நழுவி தப்பு தப்பா போடுவேன்னு எதிர்பார்த்தா அதுக்கு நான் பொறுப்பில்ல ;-)

இப்படியே இன்னும் பல பொஸ்தகம் பத்தி போடலாம். நம்மகிட்ட சுமார் 574 புத்தகம் இருக்குங்க. நம்பர் கூட எகிறிகிட்டே இருக்கு. ஆனா authors எல்லாம் அடிக்க வர்ற மாதிரி இருக்கு. வுடு ஜீட்.
வேடம்

தேனி தேன் கொடுக்கின்றது
மாடு தோல் கொடுக்கின்றது
யானை தந்தம் கொடுக்கின்றது
மயில் இறகு கொடுக்கின்றது
கெட்டவேளை
நாய் தன்னைத்தானே நக்கிக்கொள்கின்றது

குன்னக்குடி வைத்தியர்

புலி வருது புலி வருது

புலி வருது, புலி வருதென்கின்ற கதையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதோ புலி வந்தேவிட்டது. கிலி கொள்ள வேண்டாம். தொடர்ந்து பாருங்கள்/ படியுங்கள்.

விளையாட்டுப் புலிகள்




பதுங்கும் புலி

நக்கப்போகும் புலி

குளியல் புலி

அட நீதானா அந்தப்புலி?

கூட்டுப் புலிகள்

உறங்கும் புலி (டேய் தட்டி எழுப்பாதே...)

கடைசியாக...
வெள்ளைக்காரப் புலி


புள்ளிவிவரப் புலி'களுக்காக...

ஜெ ஜெ சில டைரிக்குறிப்புகள்

பின்புலம்: அகில உலகமே கொண்டாடும் பிளாட்டினத் தாரகை ஜெயமோகினி தனது செயற்கரிய செய்கைகளால் அண்டத்தையே ஆட்டிப் படைக்க முயற்சிகள் மேற்கொள்ள தனது தொண்டரடிபொடியார்களை அழைத்து மூளைச் சூறாவளி (brain stroming?) செய்கின்றார். இதோ காட்சி விரிகின்றது.

காட்சி - 1
இடம்: ஜெயமொகினியின் அலுவலக அறை
மாந்தர்: ஜெயமோகினி மற்றும் மேலே குறிப்படப்பட்டோர்

(ஜெயமோகினி வழக்கம் போல் 2 மணி நேரம் தாமதமாய் வர, நடுக்கத்திலும், பதற்றத்திலும் தொண்டரடிப்பொடியார்களின் கால் மற்றும் கைவிரல் நகங்கள் பாதி காலியாயிருந்தன)

கோழிமுத்து: ஜகம் போற்றும் அம்மா வாழ்க வாழ்க

(அனைவரும் வரிசையாக வாழ்த்துப் பத்திரம் வாசிக்கின்றனர்)

ஜெ: (சிடுசிடுக்கின்றார்) சரி...சரி... எதுக்காக நாம் கூடியிருக்கின்றோம்னு தெரியுமில்ல...

(அனைவரும் தலையாட்டுகின்றனர்)

ஜெ: சட்டுபுட்டுனு ஐடியாக்களை அவிழ்த்து விடுங்க...

இணையக்குமார்: அம்மா... கம்ப்யூட்டரே என்னான்னு எனக்குத் தெரியாது. என்னை கம்ப்யூட்டர் அமைச்சராக்கி அழகு பாத்தீங்க. நானும் மக்கள் கிட்ட A, B, C'ன்னு கதை உட்டேன். அடப் பாருங்க C'ன்னு ஒரு கம்ப்யூட்டர் மொழி இருக்காம். என்னே உங்கள் தீர்க்க தரிசனம்.

s.s. முந்திரன்: (மனதுக்குள்) ஆஹா ஆஹா அள்ளி உடுறாரே... கவனிச்சுக்கின்றேன்

இணையக்குமார்: அம்மா இப்போ புதுசா blog அப்படின்னு ஒரு technology. அங்கே தமிழ்ல கூட எழுதலாமாம். Latest Fashion'னே அதுதான். நாமகூட அம்மா'ங்ற பேருல ஒரு பிளாக் போடலாம்.

சோதா ரவி: என்ன நெட்ல பிளாட்டா? நமக்கும் ஒண்ணு வாங்கிப் போடுங்க.

இணையக்குமார்: யோவ் அது பிளாக். பிளாட்டுல்ல...

s.s. முந்திரன்: ஆமாம்மா நானும் கேள்விப்பட்டேன். ஏதோ சனிக்கோடுல எழுதலாமாம். நம்ம தோஷத்தையெல்லாம் எழுதியே கழிச்சிடலாம். ஏம்ப்பா யானையெல்லாம் தானம் கொடுத்தா அங்க வாங்குவாங்களா?

இணையக்குமார்: ஏய் முந்திரி அது யுனிகோடுய்யா... நானே தேவலாம் போல. அம்மா அங்கே தோழியர்'ங்ற பிளாக் ரொம்ப பிரபலம். நம்ம சின்னம்மா கூட சேந்து நீங்க ஒரு பிளாக் போட்டா பிச்சிக்கிட்டு போகும். என்ன சொல்றீங்க?

ஜெ: (யோசிக்கின்றார்) உருப்படியா ஒரு யோசனை சொன்னீங்க. ஆமாம் அங்க என்னென்னல்லாம் எழுதலாம்

இணையக்குமார்: என்ன வேணாலும் எழுதலாம் தாயி...

ஜெ: கோழிமுத்து, நீங்க என்ன நினைக்கிறீங்க...

கோழிமுத்து: என்னம்மா இப்படி கேட்டுட்டீங்க... 'அம்மா அந்தாதி'ன்னு உங்க புகழைப் பாடலாம். 'நிதி அதோகதி'ன்னு போட்டும் தாக்கலாம்.

S.S: அப்படியே 'பறக்கும் பச்சையும், காவியின் இச்சையும், மஞ்சளின் கொச்சையும்'ன்னு இலக்கியக் கட்டுரையும் எழுதலாம்மா

ஜெ: அட S.S. என்ன தமிழ்ல்ல பொளந்து கட்டுறீங்க?

S.S: எல்லாம் உங்க கடைக்கண் அருளாலம்மா

தளர்மதி: 'ஆற்காட்டிலிருந்து மொடக்குறிச்சி' வரைன்னு குறுநாவல் போடலாம்மா. அதை அப்படியே நம்ம 'வடமேற்குப் பதிப்பகத்துல' புக்கா போட சொல்லிட்டா சூப்பரா இருக்கும்மா.

ஜெ: கையெழுத்து போடவே ததங்கினத்தோம் போடுற ஆளு நீங்க குறுநாவலா எழுதுறீங்க... அடங்குங்க

சோதாரவி: அம்மா அப்படியே 'சாப்டு டாக்' (soft-talk) அப்படின்னு நம்ம 'சபி' பெர்னார்டை விட்டு பேட்டி எடுக்கச் சொல்லலாம். அதை நம்ப டிவிலயும், நெட்டிலையும் போட்டுறலாம்மா...முன்னாடி பேட்டியெடுத்த ஒரு சோமாறியைப் போட்டுத் தாக்கலாம்

ஜெ: பட்டை அடிச்சு, கொட்டை மாட்டுனத்துக்கப்புறம், பகுத்தறிவோட நீங்க செஞ்ச செஞ்ச ரெண்டாவது நல்ல காரியம் இது. டி.டி.வி. பணகரன் கிட்ட சொல்லி உடனே ஏற்பாடு பண்ணுங்க.

Slowசனா: அம்மா அப்படியே இந்த பொருமா, கோயதாஸ் ஆளுங்களுக்கு பஞ்ச் வைக்கிற மாதிரி நம்ம பிளாட்டுக்கு ஸாரி பிளாக்குக்கு 'தோழியர்எக்ஸ்பிரஸ்'ன்னு பேரு வைப்போம். இல்லேன்னா 'அம்மாஎக்ஸ்பிரஸ்' அப்பிடின்னு வைக்கலாம். எவனாவது எதுத்து கேள்வி கேட்டா மெயிலு, குட்ஸ¤, டிரெயினு இதுக்கெல்லாம் தமிழ்ல்ல என்னன்னு கேட்டு ஆட வெச்சிரலாம்...

ஜெ: என்ன 'சுலோ'? சூப்பர் ஸ்பீடுல போற? வெரி குட் வெரி குட். அடுத்த அறிக்கை உம் பேருல போட்டுடலாம்.

சுலோ: (தனது மகனான 'இளகிய'கோவனைப் பற்றிய கவலையில் மூழ்குகின்றார்) அம்மா... நம்ம டிவி மேல கேஸ் போட்டு முடக்கப் பாக்குறாங்க. ஆனா கம்ப்யூட்டரை யாரும் முடக்கமுடியாது. அதுனால உடனடியா பிளாக்கணும்மா.

S.S. என்னாது உங்க டிவி மேல கேஸ் போட்டாங்களா? ஆட்டைக்கடிச்சு, மாட்டைக்கடிச்சு கடைசியிலே டிவியையும் விட்டு வைக்கலியா மஞ்சத்துண்டு மடையன்?

சுலோ: யோவ் அது என் வீட்டு டிவியில்லையா? ஜெ ... சே... அம்மா டிவிய்யா ... (இழவு இந்தாளு வாயைத்தொறக்கலேன்னு யாரழுதா?)

(அப்போது 'ரண்டக்க ரண்டக்க குண்டக்க மண்டக்க' என்கின்ற மியூசிக் கேட்கின்றது. அனைவரும் கிலியோடு திரும்பிப் பார்க்கின்றனர். கரடி முடியை சிலுப்பியவாறு திக்விஜய T. ராஜேந்திரர் நுழைகின்றார்)

தி. எட்டுத்திக்கும் அம்மா பேரை சொல்லும். தித்திக்கும் அல்வா கூட கொல்லும். தகிக்கும் அய்யா வெச்சேன் ஆப்பு. கொதிக்கும் உங்கைய்யாவுக்கு கொடுடா சூப்பு.

ஜெ: சரி சரி ரொம்ப கடிக்காம விஷயத்துக்கு வாங்க.

தி. அட்றஸ் இலாதவங்களுக்கு முகவரியே நீங்கதான் அம்மா. முக' வரியும் நீங்கதான்.

(ஜெ புன்னகைக்க, கோழிமுத்து கடுப்பாகின்றார்)

கோழிமுத்து: அம்மா... முகவரி என்னம்மா முகவரி... சொத்து வரி, கலால் வரி, சுங்க வரி, வருமான வரி, அரி கிரி அசெம்பிளி எல்லாமே நீங்கதான்.

தி. வரி என்றவுடன் வரி'ந்து கட்டுவோரைக் கண்டால் சிரி சிரி என்று சிரிக்கத்தான் தோன்றுகின்றது. அம்மா உடனடியாக ஒரு இளைஞரணி தொடங்கவேண்டும். மூஞ்சிபுரம், கும்மியடிப்பூண்டி வெற்றிகள் வெறும் முகவுரையே. முடிவுரையாய் தமிழகத்தை பறித்து உங்கள் காலடியினில் கிடத்த எனக்கு ஆணையிடுங்கள்.

ஜெ: ஆமாம். நல்ல யோசனை. ஆனால் தலைவராக் கூடிய தகுதியுடைய இளைஞன் யார்?

தி. எதிர்க்கட்சியினைப் பாருங்கள். தாத்தா ஆகிவிட்டவர் இளைஞரணித்தலைவர். என் மகன் இப்போதுதான் 'கடிக்கவே' ஆரம்பித்துள்ளான். அவனொரு சுள்ளான். இதயத்திலும் இளைஞன் நான்.

(சோதாரவி இப்போது கடுப்பாகின்றார்)

சோ: தங்கத் தாயே...நூலறுந்த பட்டமும், வாலறுந்த வானரமும் நிலை கொள்ளாது (தனக்குத்தானே சிரித்துக் கொள்கின்றார்)

இணையக்குமார்: அம்மா பிளாக் ஆரம்பிச்சு ஓட்டுக் கூட போடலாம்மா இப்ப...

தளர்மதி: ஹையா ஜாலி... அப்ப ஓட்டக்கூட நம்ப ஆளுங்களே வெச்சே குத்திடலாம். ஆமா கொமாரு... எலக்ஷன் கமிட்டி கிமிட்டி கெடையாதுல்ல... ஐநூறை அள்ளி விட்டு அலப்பர பண்ணிடலாம்.

இணையக்குமார்: ஐபி அட்றஸ் மாத்தி ஓட்டு குத்தணுமாம். என்னமோ டைனமிக் அட்றஸ் இருந்தா நல்லதாம்.

S.S: என்னாது IB சதியா? டைனமைட்டா? அம்மா பொடா கேஸ¤ல போட்டுத் தள்ளிடலாம்.

இணையக்குமார்: (தலையிலடித்துக் கொள்கின்றார்) ஐய்யோ ஐய்யோ ஐயய்யோ கொஞ்ச நஞ்ச கம்ப்யூட்டர் அறிவும் போயிடும் போலருக்கே

(மேலும் பேசுவதற்கு 'சரக்கு' இல்லாததால் அனைவரும் தவிக்க, 'மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி' என்ற பேக்கிரவுண்ட் பாடலுடன் தோழியை நாடிச் செல்கின்றார் ஜெ)

பின்குறிப்பு: மேலே குறிப்பிட்டவை அனைத்தும் சுய கற்பனையே. Autos and Court cases will not be entertained.

Wednesday, June 01, 2005

சிரிய' நெக்கரே

எங்கேயோ சிரி'ய நக்கும்விழா
சிரி'கிழிந்தவர்கள் போனால் அறிஞர்களின் 'தூத்தும்' திறனையும்
போனால்போகிறதென அங்கீகரிக்கின்றன கிழிந்த சிரி'கள்
நக்கினார்கூடி 'நக்கிக்' கொள்கின்றார்கள்
புதிதாய் நக்கிய சிரி'யின்சிக்கெடுத்துச் செய்த, ஈருமுடி சுழற்றி
அடுத்தகுடி கெடுக்கும் அகங்கார யோனிகளில்
சிட்டி'ப்பாம்புகளாய் *க்கிறது அந்தக்குறி
மேடையில் நின்றபடி

சென்னை டவுன்பஸ்ஸின் ஜீன்ஸ் சரசரப்புகளையும்
கலங்கரைகோபுர உச்சியிலிருந்து சேரிக்கட்டிலின் சமரசத்தையும்
அவுசாரிகளின் பெருத்த'இடையியலையும் தொடர்ந்த மீள்பார்வைகள்
சிரி'கிழித்து தொங்கியமுலை சிறுங்காரம் கலைய
அறுத்துக் கிழித்து அலங்காரம் கதற
கலவிக்குறிமின்னும் ஏத்துகின்றது

சட்டையிலிருந்து பிரிந்த பொத்தான்
ஓரங்களில் தேய்ந்துபோய் உருண்டு வீழ்கிறது தன்னைத்தானே
நொந்துகொண்டும் வெந்துகொண்டும்
உருண்டு ஓடும் பொத்தான்களைநோக்கி
செல்கின்றன குறிகள் யோனிகள் தைக்க.
வேறுநாதியற்ற நாதாரிகள் போல்
உபயோகமற்ற இக்குறிகள்மூலம்
தன் மேலாண்மையை காட்டமுயலும்
இந்தக் குருட்டு குறிகள்போல்

சிரி'கிழித் தெறிக்கிறது, குறி
இடம்பாராது திறந்த யோனியைப் போல்


சிரி' திறந்தாள்