Wednesday, December 22, 2004

வலி தரும் நிவாரணிகள்

"டாக்டரு முட்டி வலிக்குதுங்கோ"

ஹிந்திலே மருத்துவம் வேணுமுன்னா அதிகமா 'முட்டி மாராதீங்கோ' அப்படீன்னு சொல்லலாம். ஆனா அமெரிக்காவுல முடியாதீங்கண்ணா!

வயாக்ஸ் மாத்திரை போடுண்ணாங்கோ! அப்புறம் வேணாம். மாரடைப்பு வரும்ணாங்கோ.

சரி. செலிபெரெக்ஸ் போடாலாம்னு பாத்தா... அதுக்கும் அடிக்கிராங்க ஆப்பு. மாரடைப்பு வருமாம்.

ஏம்ப்பு... முட்டி வலிக்கு வழி கேட்டா மாரு வலிக்கு வழி சொல்றீகளே...

கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா

நம்ம தில்லியில பதினொன்னாம் வகுப்பு படிக்கறவா ரெண்டு பேரு எக்கு தப்பா விசேஷம் செஞ்சு, அதை செல்பேசி கேமராவுல பதிவு செஞ்சி, உலகம் பூரா இணையத்துல பரவ விட்டது பழைய சேதி. அந்த படத்துல தெளிவா பொண்ணு முகம் தெரியுது. ஆனா படம் முச்சூடும் பயலோட குரலும், குறியும் தான் இருக்குது. ஊடகத்துல கர்ச்'சீப்' கட்டுன அவனோட தீவிரவாத முகந்தான் தெரியுது. படத்துல முகமில்லாம பையனோட குரலை வைச்சு அவனுக்கு தண்டனை கிடைக்குமா? (மிமிக்கிரி வல்லுநர்கள் மன்னிக்க) கேஸ¤ அவுட் ஆயிடுங்கோ... ஆனா அந்தப் பொண்ணு? அதோட வாழ்வு? அதைப் பத்தி அந்தப் பொண்ணுக்கே கவலையில்லை போலிருக்கே?

அடுத்து நம்ம திரிஷா மாமி குளிக்றா மாரி பிட்டுப் படம் ஓடுதாம் நெட்லே. அதை மறுத்து அவாளோட அம்மா டீடெயில்ஸ் குடுக்றா! எப்படி... என் பொண்ணு குளிக்க போறதுக்கு முன்னாடி உடைகளை தூக்கி எறிய மாட்டா. ஒழுங்கா கழட்டி வைச்சுட்டுதான் குளிக்கப் போவா...இப்பிடி அப்படி...அச்சு பிச்சு பேட்டி வேற...

அதாவது ஒழுங்கா (அடுத்தவாள வச்சு) பிட்டு படம் எடுக்கறவாக்கு ஐடியாவ திரிஷா அம்மாவே கொடுத்திருக்கா... அட கஷ்ட காலமே... இதெல்லாம் தேவையா? சர்க்குலேஷனுக்காக பத்திரிக்கைதான் கேக்குதுன்னா அம்மாவுக்கு புத்தி எங்கன போச்சுதுலே?

ஸாரி ரொம்ப(வே) ஓவர்

நம்ம ஜோக்குகளுக்கு படம் போட மதன் சார கேட்டேன் .அவரு பிஸியாம். அதனால படமில்லாம ஜோக்கை படிங்க.

(மட வாசலில் இருவர்)

ஏங்க இந்த சாமியாருக்கும் அவருக்கும் என்ன வித்தியாசம்?

இவரு பட்டை போட்டிருக்காரு. அவரு நாமம் போட்டிருக்காரு. அவ்வளவுதான்.

அப்படின்னா ரெண்டு பேரும் சேர்ந்து மக்களுக்கு 'பட்டை நாமம்' போட்டிருக்காங்கன்னு சொல்லுங்க.

(கிராமத்தில் இருவர்)

ஏங்க அந்த பாதிரியாரை எல்லாரும் சேர்ந்து அடிக்கிறாங்க?

ஏற்கெனவே ஆடு திருட்டு அங்க அதிகம். அவிங்ககிட்ட போயி 'ஆடுகளை என்னிடத்தில் வரவிடுங்கள்'ன்னு சொன்னா...கும்மிட்டாய்ங்க

(கிறிஸ்துவரும் இந்து நண்பரும்)

எங்க பாதிரியார் உங்க சாமியார் மாதிரியில்ல. பொம்பளைங்களோட தைரியமா சந்திச்சு ஆசிர்வாதம் வாங்கலாம்.

அதெல்லாம் சரி. புள்ளைங்களத்தான் நம்பி அனுப்ப முடியாது. சரிதானே?

(கிறிஸ்துவரும் இந்து நண்பரும்)

மத நல்லிணக்கம் வளர்க்க அந்த சாமியார் சர்ச் போக நினைச்சாரே...என்ன ஆச்சு?

கன்னியாஸ்ரீகள் ரொம்ப பயந்ததால விஸிட் கேன்சல் ஆயிடுச்சாம்

(தவமிருந்து வரம் பெறும் பக்தர் மற்றும் கடவுள்)

பக்தா மெச்சினேன் உன் தவத்தை. வேண்டும் வரம் கேள்.

நடிகை X எனக்கு உடனே கிடைக்க வேண்டும்.

ஐயகோ ஏற்கெனவே சாமியார் Y கஸ்டடியில் கொடுத்து விட்டேனே. வேறு வரம் கேள்.

சரி நடிகை Z எனக்கு உடனே கிடைக்க வேண்டும்.

அடப்பாவி ஏற்கெனவே அந்த சாமியாரோட பக்தன் கஸ்டடியில் கொடுத்து விட்டேனே. வேறு ஏதாவது வரம் இருந்தால் கேள்.

இதெல்லாம் எனக்கு தெரியும். பெண்கள் இல்லாத இடத்தில் பிறக்க வரம் தாரும்.

(கொஞ்சம் லேட்டாக புரிந்த கடவுள்) அடப்பாவி அவனா நீ (மயங்கி விழுகின்றார்)

Wednesday, December 15, 2004

காரு வாங்கலியோ காரு

நம்ப நேரம் பாருங்கோ கண்ணுல இப்படிப்பட்ட செய்தி/விளம்பரந்தான் விழுந்து தொலைக்கிறது. இப்பெல்லாம் அமெரிக்கா விமானத்துல கொரிக்க கடலையும், ஒரு மிடக்கு சோடாவையும் கூட நிறுத்திட்டா. நம்ம ஊரு சகாரா பிளேனு ஞாபகம் வருது. அடடா என்ன உபசரிப்பு.

டெல்டா விமான கம்பெனி டல்லாஸ் இல்லேன்னா இன்னோரு பெரிய இடத்தை மூடறதாம். அதாவது 7,000 பேருக்கு வேலைலேர்ந்து ஆப்பு. இப்படி வெண்ணிற ஆடை நிர்மலா மாதிரி 'மஞ்சக் கடுதாசு' கொடுக்கிற டெல்டா நிலைமைதான் மத்தவாக்கும்.

அப்பத்தான் இந்த செய்தி முடிஞ்சி விளம்பரம் வந்திச்சு. "எங்க ஷோ ரூமுக்கு வாங்க. கோர்மே காப்பி மற்றும் Small Snak (ஙொப்ரான கடலை அல்லது மல்லாக் கொட்டைப்பா) தரோம்". அது டயோடா ஷோ ரூம். காரு பேரு லெக்ஸஸ் LX I 2005. விலை சுமார் முப்பது லட்ச ரூபாய்க்கு மேல்.

C:\Documents and Settings\Sam\Desktop\Blog\Kusumban\lexus

ஒரு காப்பி, கடலை பாக்கெட் விலை உமக்குத்தான் தெரியுமே?

அட ஈஸ்வரா...இந்த மார்க்கெட்டிங் பேரு என்னாப்பா?

இந்த வாரம் இவர் - மாயூரனார்

பிடித்தது - தலைவர் ரஜினிகாந்த்
'பிடி'ப்பது - பெரிசு கருணாநிதி
படித்தது - மாயூரம் (மயிலாடுதுறைன்னு யார்ப்பா பேரை மாத்தினது? நல்லவேளை பெரிசில்லை? ;-))
பிடிக்காதது - முரசொலி
பார்ப்பது - சன் டிவி
கனவு - சந்திரமுகி
நண்பர்கள் - ஏனைய ரஜினி ரசிகர்கள்
எதிரிகள் - கருணாநிதியை அண்டியிருப்பவர்கள்
நிரந்தர எதிரி - ஐய்யா ராமதாஸ்
வீட்டுக் குசும்பர் - Master R. சந்தோஷ் (வீட்டில் கணிணியின் பவர் ஆப் பட்டனை அடிக்கடி அமுக்குவதால்!)
புதிய நண்பர் - போட்டுத்தாக்கு விஜய்
எப்போதும் நண்பர் - ரஜினி ராம்கி
விரும்பும் வாசஸ்தலம் - இமயமலை
வழக்கம் போல - 'ஊருக்குத்தானா உபதேசம்'

நமக்கப்புறம் வலைப்பூவுக்கு ஒருமாசம் அப்புறமா வந்து டகால்ட்டி வேலை காட்டி மாயூரத்தார் குசும்பனை கவர்ந்துவிட்டார். ('லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா?'). அதற்காக இணைய குசும்பன் பேரவை (?) சார்பாக இவ்வார 'குசும்புத் திலகம்' பட்டம் பெறுபவர் நமது பெருமதிப்பிற்குறிய அண்ணன் கி.ரமேஷ் குமா(சும்ப)ர்!!!

அப்பப்போ பட்டம் வழங்கி வலைப்பூ மக்களை அசத்தலாம்னு திட்டம். ஆனா காசு கொடுத்து வாங்கற விருதில்ல இது. அதுனால காசனுப்பி ஏமாறாதீங்க. திருப்பி அனுப்ப மாட்டேன்!!!

ஸாரி கொஞ்சம் ஓவர்

சொந்த சாமியார் ஜோக்குகள். அடிக்க வர்றதுக்குள்ள வுடு ஜீட்டேய்...

1. (போலீஸ் கஸ்டடியில் சாமியார்)

ஏட்டய்யா...சின்ன வயசிலேயே நான் சாமியாராயிட்டேன். அதனாலதான் நான் 'குட்டி'சாமியார். மத்தபடி நீங்க நினைக்கிற மாதிரி 'குட்டி'யெல்லாம் இல்ல...

2. (மன்னரவையில் இருவர்)

நம்ம ராஜா பயங்கர உஷார் பேர்வழிதான்

எப்படி சொல்ற?

இந்தச் சாமியாரைப் பார்த்ததும் அந்தப்புர பாதுகாப்பைப் பலப்படுத்திட்டாரே!

3. (ஆசிரம வாசலில் இருவர்)

ஏம்ப்பா...பெண்களுக்கு அனுமதியில்லைன்னு போர்டு போட்டிருக்கே...ஒருவேளை ஒரிஜினல் சாமியாரா இருக்குமோ?

அட நீங்க வேற. அவரு பொண்ணுங்களை நீலாங்கரை சொகுசு பங்களாவுலதான் சந்திப்பாராம்.

4. (பஸ்ஸ்டாண்டில் இருவர்)

ஏன் ஸார்? செல்வராகவன் சாமியாரை மையமா வைச்சி படம் எடுக்கிறாரே...டைட்டிலு என்னங்க?

மன்மதராஜா

5. (அருள்பாலிக்கும் கூட்டத்தில் இருவர்)

ஏங்க என்ன கேட்டாலும் 'எல்லாம் அவன் பாத்துப்பான்னு' மேல நோக்கி கை காட்டாம, கிழக்குப் பக்கமா சாமியார் கை காட்டுராரே...ஏன்?

அங்கதானே தேனாம்பேட்டை 'பங்க் குமார்' இருக்கான்.

Friday, December 10, 2004

ஆஹா கிளைம்பிட்டாய்ங்கடா...

அது ஏனோ பாசு...எக்குத்தப்பு மேட்டரா நம்ம கண்ணுல படுது. ஏற்கெனவே 'செல்பேசி' பிரச்சினையை சொல்லியிருந்தேன். இப்போ புச்சா Laptop சேந்துடுச்சு கண்ணா...

மடியிலே வைச்சி (அப்புறம் அதை எங்கன வைக்கிறதுன்னு என்னை வையாதீக!!!) யூஸ் பண்ணா விரை வெப்பம் (ஆஹா தமிளு...) ஜாஸ்தியாயி கெர்ப்ப அணுக்கள் (உபயம்: சிட்டுக்குருவி லேகிய காளிமுத்து வைத்தியர் விளம்பரம்) கொறைஞ்சுடுமாம்.

பூச்சி மருந்தடுச்சி சாப்பாடே பாதி விஷமாக்கினீங்க..இப்போ செல்போன் வைச்சுக்காதே, லேப்டாப் யூஸ் பண்ணாதே...கொயந்தை பொறக்காதுன்றீங்க...

சின்னப்புள்ளீங்களை இப்டிகா பயமுறுத்தாதீங்க... சாமியாருங்ககிட்டதான் புள்ள வரம் கேட்டுப் போகோணும்...அங்கே போனா 'இலவசமா' தராங்கன்னு 'இணையம்' சொல்லுது...

Wednesday, December 01, 2004

போடாங் ஙோ

இன்ன்னிய தேதிவர ஒரு மக்காவும் சாமி சைடுல வரல. நேசமோடு வெங்கடேஷ் கூடவா? அல்லாரும் சேம் சைடு கோலு போடணுமா? சாமி தகுதியை வுடுங்கோ... வயசுக்குமா மர்யாதை இல்லே?

பாரா கோவுச்சிக்கினாரு... சுவர்ணமால்யாவோவோட ஜல்சான்னு நெற்றிக்கண் எய்தலாமான்னு? பத்ரி சாரு மதன் கார்ட்டூனு போட்டேன்னு ஜஹா வாங்கிட்டாரு...

200 கோடி சொத்தை 2600 கோடி ஆக்குறது துறவியோட வேலையா? இராம.கி. கேள்வி கேக்குறார்.

எல்லாஞ் சரி. 70 வயசு சாமி அனுராதா ரமணன் கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி செஞ்சாரா? சாமிக்கே 'வயாக்ரா' தந்ததாரு?

இம்மாநாளு கம்முன்னு அனுராதா சும்மா இருந்த காரணம் என்னா? குரு சிஷ்யை உறவு சொல்ற உஷா நிலைமை என்னா?

சதுர்வேதி சாமி மண்டை காயறதுக்குள்ள உம்மை ஷொல்லிடுங்கோ!!!

ஙொய்யா மக்கா....

சினிமாவுல மொத்தம் ஒன்பது கருதானாம். காதல், பாசம், விட்டுக் கொடுத்தல், தியாகம், சந்தேகம், பிரிந்தவர் சேர்தல், பழிவாங்குதல், வறுமையிலிருந்து முன்னேறுதல் & தெய்வீகம்.

ஆமாம்... நேக்கொரு சந்தேகம்...

காதல் பாசமில்லையா? காதல் விட்டுக்கொடுத்தலில்லையா (காதலுக்கு மரியாதை போல?) காதல் தியாகமில்லையா? காதல் சந்தேகம் தருவதில்லையா? காதல் பிரிந்தவர் சேர்வதில்லையா? காதல் தெய்வீகமில்லையா?

ஆக மொத்தத்தில் காதல், வறுமையிலிருந்து முன்னேறுதல் (காதல் வறுமையில் தள்ளளலாம்!!!) என்று இரட்டை கருக்களே சினிக்கதைகளுக்கு மிஞ்சுகின்றன. என்னப்பு நாஞ் சொல்றது?