Thursday, October 21, 2004

எனக்கொரு உம்மை தெரிஞ்சாகணும்

எனக்கொரு உம்மை தெரிஞ்சாகணும்

இணையத்தில் உறவுமுறை

பாரா சாரு கட்ளை போட்டாரு. மாமா மச்சான் உறவுமொறை இணையத்துல வெச்சுக்காதேன்னு...நம்மளை பொறுத்த வரை இது ஆவறத்துக்கில்ல பாசு...

நாந்தான் ஆரம்பத்துலேயே சொன்னேனே? நமக்குத் தேவை பிரண்ட்ஸ். அதுக்காக தோழா, தோழின்னு ஒரே மாதிரி சொன்னா போரடிக்காது? எனக்கென்னவோ சியாட்டல் செல்வியார், மதி அக்கார், பரி பாசு, பாரா சாரு, (பாட்டில்) பாலா புள்ளாண்டான், சங்கர் மருமான் அப்படின்னு சொன்னா ஒரு திருப்தி. அவா காயப்படாத வரை. ஆமா அல்லாரும் ஏன் கோவிச்சுக்கப் போறா? மாம்ஸ், மச்சி அப்படின்னு ஆம்பளைங்களும், அக்கா அப்படின்னு பொம்மனாட்டிகளும் காலேஜ் படிக்கறச்சே கூப்டிக்கலியா? தங்கச்சி அக்காவ கட்டி கொடுக்கவா போறோமின்னு யோசிச்சமா? இல்ல உடன் பிறவா சகோதரின்னு கோவப்பட்டோமா? ஈழநாதன் கூட நான் குமரனா இருக்கணும்னு அனுமானம் போட்டார். நான் என்றும் 22 பாட்டில் பாலாவை கிண்டலடிப்பேன். அட...இணையத்துல இதெல்லாம் சகஜமப்பா...

ஆனா மூர்த்தியண்ணாவும், மதியக்காரும் ஏன் உடன்படலை? ஆண்டவனுக்கே வெளிச்சம்.

1 comment:

ரா.சு said...

யாதும் ஊரே யாவரும் கேளிர் ?? குசும்பர் சொல்லுவதை எல்லாம் கேளுங்களேன்பா ! :-))