Friday, September 10, 2004

வர்ணஜாலம்

வாடாமல்லியில் வாசமில்லைதான்
வெளிர்ந்த அதன் காட்சியும் கவரவில்லை
ஆகாயமும் அடற்கடலின் நிறமீறறிந்ததுதான்
இளவேனிற்காலத்து பசுமை பரவாயில்லை
தகிக்கும் அரேபியத் தங்கம் இயலாமையால் இகழும்
வாடியுதிரும் மாலைச்சூரியனை மதிக்கவில்லை
குருதியெடுக்கும் ஊசி வலிக்கின்றது

vibgyor வானவில் பார்த்தவுடன்
வர்ணங்கள் இனிக்கிறது

பிகு: என்னடா ஆச்சு குசும்பனுக்கு'ன்னு கவலைப்படாதீங்கோ. சங்கர்கிருபா மரத்தடியில வானவில் கவிதை போட்டாரோயில்லியோ? கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டன்.

No comments: