Wednesday, August 23, 2006

கதை திரைக்கதை வசனம் டைரக்ஷன் 2

(பொதுவா ஸீகுவல்' பத்தி எனக்குப் பெரிய அபிப்பிராயம் கிடையாது. இருப்பினும் சுஜாதா சொல்றமாதிரி 15 நிமிடப் புகழ் யாரை விட்டது? :-)

தருமி: (பேக்கிரௌண்டில் திகில் மியூஸிக்) மதுரை பக்கத்துல ஒரு குக்கிராமம். சின்ன வயசுல நம்ம ஹீரோ அழகர் ஆத்துல இறங்குறத பாக்குறதுக்காகப் போனபோது தவறி அழகருக்கு பதிலா ஆத்துல வுழுந்துடுறாரு. ப்ரீஸ். அப்புறம் குளோசப்புல அந்தக் குழந்தை ஆத்துல மூழ்குறது மாதிரி காட்டுறோம். கட். பிளாஷ்பேக் ஓவர். இதுனால நம்ம வளர்ந்து விட்ட அந்த ஹீரோவுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி நடந்ததெல்லாம் ஞாபகத்துக்கு வருதுங்ற ஒன்லைனர்தான் கதையே. இதுனால ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி நடந்த கொடுமைக்காக இப்ப இன்னும் வரும் ஆயிரம் ஆண்டுகளுக்கு எப்பிடி ஹீரோ பழி வாங்குறார்ங்கிறது ஸ்டோரி பில்டப். எப்பிடி? இந்த மாதிரி தத்துவ படங்களுக்கு கமலஹாசனை விட்டா வேற யாரு இருக்கா? This Dude Kamal... என்று அவர் உணர்ச்சி வசப்பட ("பேராஸிரியர் ஸார் ஏன் இப்பிடி என்னைய வதைக்கிறீங்க?" என்று குணா போல் ஸவுண்ட் விட்டபடி பேராஸிரியர் ஞானசம்பந்தத்திடம் அடைக்கலமாகின்றார் கமல்)

டோண்டு: (நள்ளிரவு வரை விழித்திருந்து பதிவு போட்டதில் கண்கள் சிவப்பாக இருக்கின்றது) நமக்கும் பீதியைக் கிளப்பத் தெரியும். ஆனா இப்ப அடிதடி ஸீஸனாக்கும். நம்ம ஹீரோ தன்னோட காரில் (அதாவது வாடகைக்காரெல்லாம் அவருடைய கார்தான்) செல்லும் போது செல்பேசி கிணுகிணுக்கிறது. ஒரு டெலிமார்க்கெட்டிங் பிகர் "லோனு வாங்கலையோ லோனு"ன்னு திருவிளையாடல் சிவாஜி கணக்காக கூவ, கோவம் வந்த ஹீரோ "டெலிராணியே எனக்கு போன்போடாத நீ; ஜென்ம ஜென்மமாய் இதுக்கு கட்டுப்பட்டு நீ" என்று கலாய்க்கின்றார். பாடலை எழுதிய ஜயராமனுக்கு நன்றி. இப்படியே பெண்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டிய அவசியத்தையும் ஆங்காங்கே ஹீரோ வலியுறுத்துவான். மசாலாவிற்கு குறைவேயில்லை. 'ஏங்க சிவஞானம்ஜி உங்களோட போலியைப் பிடிச்சு ஒரு கிளுகிளுப் பாடல் எழுதி வாங்கிட்டீங்கன்னா, அரேபியப் பாலைவனத்துல, கால்கரி சிவா உதவியோட படமாக்கிடலாம் என்ன சொல்றீங்க?'( சிவஞானம்ஜி உடல் முடியாத நிலையிலும் ஓடி எஸ்கேப்பாகின்றார்). அப்படியே இஸ்ரேல்-லெபனான் பார்டர்ல ஒரு சண்டைக் காட்சிக்கு வஜ்ரா இருக்கவே இருக்காரு. என்னது மியூசிக்கா? அதுக்குதான் நம்ம சிமுலேஷன் இருக்கவே இருக்காரே...அடப்போங்க ஸார் ஹீரோவுக்கு விவேக்க வுட்டா ஜனங்களுக்கு அட்வைஸ் கொடுக்க வேற யாரு இருக்கா? (அடப்பாவிங்களா... இம்சை அரசன் மாதிரி காமெடி பண்ணலாமுன்னு பாத்தா, டாக்குமெண்டரி போட்டு கவுத்துடுவானுங்களேன்னு விஸ்க்கென்று எஸ்கேப்பாகின்றார் விவேக்)

ஜொள்ளுப்பாண்டி: எனது பணி இளசுங்கள கவருவதே என்ற உன்னத நோக்கோடு ஹீரோவின் பயணம் பஸ்ஸாடாப்பில் தொடங்குகின்றது. காடு, மேடு, கழனி, கஞ்சித்தொட்டி என்று போகுமிடங்களிலெல்லாம் அவனுக்கு மவுசு. முதலில் காட்டில் ஒரு கரலாக்கட்டை பெண் காதலிக்கின்றாள். அதன்பின் மேட்டில் ஒரு திம்ஸுக்கட்டை. அப்புறம் கழனியில் ஒரு நாட்டுக்கட்டை. அப்புறம் கஞ்சித்தொட்டியில் ஒரு செமகட்டை என்று பட்டையக் கிளப்பும் ரோல். இது போதாதென்று வெளிநாடுகளுக்குச் சென்று வெள்ளைக்கட்டைகளோடும் விளையாடுகின்றார். கொசுறாக மாடல்கட்டைகளையும் கொஞ்சுகின்றார். இப்படம் மட்டும் வெளிவரட்டும். அப்புறம் அடுத்த மன்மதனாய் நாந்தான் பேசப்படுவேன். பாத்தீங்களா மன்மதன் நாந்தான்னா நயாந்தாரா யாருன்னு கேக்கிறீங்களே...ஹிஹிஹி? ('ஙௌக்காமக்கா'வென கதை கேட்ட இணையமக்கள் 'உருட்டுக்கட்டை'யுடன் துரத்த ஜொள்ளுப்பாண்டி அப்ஸ்காண்ட்)

காசி: நாளைய சமுதாயம் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டுமே என்ற எண்னத்தில் இன்றைய வரலாறுகளைப் பதிய வேண்டுமென்னும் தாகமுள்ளவன் என் ஹீரோ. தாபமுள்ளவன் என் ஹீரோ (உடனே பத்து பேர் கை தட்டுகின்றார்கள்). எல்லாவற்றையும் ஒரே இடத்தில் திரட்டி, வரலாற்றை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் உன்னத முயற்சியில், வில்லன்கள் குறுக்கிடுகின்றார்கள். "கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன் இதுவொரு தமிழ்மாலைப் பொழுது" என்று ஹீரோ பாடுகின்றார். வில்லன்களின் எல்லா கேள்விகட்கும் "மௌனமே காதலாய் ஒரு பாட்டுப் பாட வேண்டும்" என்று சொல்லிச் செல்லும் 'மௌனி'தான் என் ஹீரோ (கைத்தட்டல் அடங்க மறுக்கின்றது). இறுதியில் வெறுத்துப் போய் "சோதனை தீரவில்லை சொல்லி அழ யாருமில்லை" என்று பாடிவிட்டு, நித்தியசோதனை என்ற வரலாறு எழுதிவிட்டு, திரட்டியதை விற்று விடுகின்றான் ஹீரோ வெறும் தவசதானியங்களுக்கு (கேட்போரின் விசும்பொலி). இறுதியில் "கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை சாமியே அய்யப்பா" என்று ஹீரோ அமைதி காண ஐய்யப்பனிடம் செல்வதாய் படம் முடிகின்றது. ஹீரோவா நம்ம சேரனைப் போட்டுடலாம். என்ன அழும்கட்டத்தில் மட்டும் முகத்தை மூடிவிட்டால் போதும். மத்தபடி பொருத்தமான கேரக்டர். (ஐயப்பனோ "என்னால பணிக்கர் பிரஸ்னத்துக்குக் கூட தீர்வு சொல்ல முடியும். ஆனா இந்த நித்தியப் பிரச்சினைக்கு?" என்று கூறிவிட்டு புலி மீதேறி கிலியுடன் அடர்ந்த காட்டுக்குள் ஐக்கியமாகின்றார். இனி படத்தில் நடிக்கவே மாட்டேனென்று அரசியலில் புகுந்து விடுகின்றார் சேரன்).

வஜ்ரா ஷங்கர்: நீங்க நெனைச்ச மாதிரியே படம் இஸ்ரேலைச் சுத்திச் சுத்தி வருது. நீளமான அடுக்கு வசனங்களை, புள்ளி விவரத்தோடு அள்ளித் தெளிச்சி அசத்திப்புடுவோம்ல. "ஹைபா, ஹதேரா, ஆக்கோ மீது கத்யூஷா ராக்கெட்டுகள் விட்டு விட்டு Peace Peace என்று பேசுகின்றாயா? மவனே பீஸ் பீஸ் ஆக்கிடுவேன்"ன்னு அடித்தொண்டையியில ஹீரோ கத்துறதுலேர்ந்து ஸ்கிரீன் பிளே ஆரம்பம். ஸமீபகாலமா சுமார் 2000 ஆண்டுகளா இஸ்ரேலியர்கள் படும் துன்பத்தை நம்ம டோண்டுவின் உதவியில் அப்பிடியே தத்ரூபமாக் காமிக்கிறோம். என்னாது அப்ப வில்லனுக்கு யாரு வசன உதவியா? அட வெளங்காப்பயலுகளா... நம்ம நிலமெல்லாம் ரத்தம் எழுதின பாரா'தான். ஹீரோவா இவ்வளவு புள்ளி விவரங்களை அடுக்கத் தெரிஞ்ச ஒரே ஆளு நம்ம விஜயகாந்த்தான். வில்லனாய் அடி வாங்க சோப்ளாங்கி நம்ம லெபனான் சாரி சாரி லியாகத் அலிகான். படம் பேரா ஆக்காங் 'இஸ்ரேல்புரி' (தர்மபுரி படம் நட்டுக்கிட்டாலும் சரி இவனுங்க நம்மளோட அரசியல் வாழ்வையே அஸ்தமிக்க யோசிக்கிறாங்களே என்று தனது உதவியாளர் கன்னத்தில் பளாரென்று ஒரு அறை விட்டு விட்டு ஓடி ஒளிகிறார் கேப்டன்)

கைபுள்ள: "என்னடாது இதுவரைக்கும் பிஞ்ச கதையாக் கேட்டு காது பஞ்சராகிப் போச்சே, இன்னும் நம்ம கடிக்கக் கைபுள்ளய காணோமின்னுதான்ன பாக்குறீங்க? என்னடா இவன் சின்னப்பயதானேன்னு தானே நெனப்பு. ரேஸ்கல்ஸ்" என்று ஓப்பனிங்கிலேயே பிட்டைப் போட்டு நுழைகின்றான் இம்சை அரசன். அட அதாங்க நம்ம ஹீரோ வடிவேலு. வில்லனா ஒரு சேஞ்ச்சுக்கு நம்ம பார்த்திபன். வலைப்பதிவு முடமான பார்த்திபனிடம், "ஏண்டா வா.மாணிகண்டனுக்கு ஆப்போஸிட்டா எழுதுறது யாருன்னு தெரியுமா?" என்று கேட்பார். முழிக்கும் பார்த்திபனிடம் "Go. ராகவன்டா என் வென்ரு" என்று பொடனியில ஒண்ணு குடுக்குறதுக்கு இணையமே குலுங்கும். கல்யாணம் பண்ண வேண்டுமென்ற பார்த்திபனிடம் "எப்பேர்ப்பட்ட பொண்ணு வேணும்?" என்று வினவுவார். "ஏதோ வத்தலோ, தொத்தலோ" என்பார் பார்த்திபன். "வத்தல்னா அது சரி. அது ஒன் ரேஞ்சு. அதென்னடா தொத்தல்?" என்று மறுபடியும் ஒரு அடி. "தொத்தல்னா அடி என்னத்துக்கு? அவ்வ்வ்வ்வ்வ்" என்று பதுங்கும் பார்த்திபனைப் பார்த்து சவடாலாய் "டேய் தொத்தல்னா அது ஆப்பத்துக்கும், அல்வாவுக்கும் பொறந்த ஹைபிரிட்டுடா. ஒன் முகத்துக்கு தொத்தலா கேக்குது. இப்பிடியே பஸ் புடிச்சு துபாய்க்கு ஓடிப்போயிடு" என்று விரட்டும் போது உலகமே சிரிப்புச் சுனாமியில மூழ்கிடும்ல. என்னாது ஹீரோயினா மடிப்பு அம்ஸாவா... என்னது சின்னப்புள்ளத்தனமாயிருக்கு போயி மல்லிகா ஷெராவத்த அள்ளிட்டு வாடாங்கோவ்...(போலி கைப்புள்ள அலப்பரை தாங்க முடியாமல் வடிவேலு "அவனா நீயென்றபடி" வாய் பிளந்து நிற்கின்றார்)

(நீளம் தாங்க முடியலீப்பா... படிச்சுட்டு சொல்லுங்க அடுத்த முயற்சி செய்யலாம்)

15 comments:

Clown said...

அப்ப ஆரக்குள் தெரியுமா?ஹிஹி...

Anonymous said...

ஏதொ என்னால முடிஞ்சது...

சீன்: 1 டேக்: 1

ஹீரோ கால் செருப்புல ஒரு க்ளோச்ப், அப்புடியே ஜூம் அவுட் பண்ணி நல்ல இருட்டு பேக்ரவுண்டில் ஹீரோ கையில் துப்பாகியுடன் ஜேம்ஸ் பாண்டு ஸ்டைலில் ஒரு வட்டத்க்குள்ள நடந்து வரார். அப்புடியே ஒரு லாங்க ஷாட்டுக்கு ஜூம் பண்றோம்... இப்ப பாத்தா அதே வட்டம் ஒரு குழாய் மாதிரி தெரியுது. இப்ப கொஞ்சம் மிட்ரேஞ்சுக்கு ஜூம் பண்றோம்... பாத்தா அது தான் கைபர் கணவாய்! அப்புடியே குதிரைல வர்ரார்... அங்க தான் டைட்டில் சாங்கு வருது...

அஸிஸ்டண்ட் டைரக்டர்: சார் இந்த பாட்ட கோடம்பாக்கதில முதல்ல கம்போஸ் பண்ணிடுவோம். அப்புறம் ராஜா சார் கூட ஒரு ட்ரிப் ஹங்கேரிக்கு போய்ட்டுவந்து இந்த பாட்டு சிம்பனின்னு கிளப்பிவுட்ருவோம். படம் ரிலீஸ் ஆவறதுக்குள்ள கேசட்லயே போட்ட காச எடுத்துறாலாம்.

ஓ.கே ப்ப பேக்கப் சொல்லிடுங்க.

இன்னும் வரும்... :o)

Muthu said...

//நம்ம ஹீரோ தன்னோட காரில் (அதாவது வாடகைக்காரெல்லாம் அவருடைய கார்தான்) செல்லும் போது செல்பேசி கிணுகிணுக்கிறது.//

இதில் ராயல்டி பிரச்சினை வரலாம் குசும்பா

siva gnanamji(#18100882083107547329) said...

மனம்விட்டு சிரிக்க வைக்கின்றது!
keep it up

குசும்பன் said...

யப்பா clown,

ஆரக்குள் தெரிய நானனென்ன Matrix நியோவா? :-)

குசும்பன் said...

திரைக்கதை மன்னன்,

ஆஹா ஆஹா என்னா கற்பனை வளம்? கோலிவுட்டையே தூக்கி சாப்பிடுவேள் போல இருக்கே? :-)

குசும்பன் said...

முத்து(தமிழினி),

வாங்கய்யா... நான் டோண்டு பேரிலேயே தானே போட்டிருக்கேன். அப்புறம் எதுக்கு லாயல்டி?

இருந்தாலும் போட்டுக் குடுத்துடுவீங்க போலருக்கே? ;-)

குசும்பன் said...

நன்றி சிவஞானம்ஜி !!!

Boston Bala said...

சென்ற பதிவை விட இந்தப் பதிவு இன்னும் ராக்கெட் ஆக பறக்கிறது. ஏவுகணை பஸ்மாசுரனாக (என் பக்கம்) பூமராங் ஆகாத வரைக்கும் தொடர்ந்து பாராட்டுவேன் என்று கூறி விடை பெறுகிறேன் :-P

ஒவ்வொருத்தருக்காக நன்றி சொல்லி நீங்களும் எழுதி முடிச்சி வலையேத்துனதும் எவனாச்சும் பின்னூட்டம் இடமாட்டானான்னு ஒட்ட வூட்டு நாய் எதுக்காகவோ எச்சிலொழுக காத்துட்டு இருந்த மாதிரி காத்துக்கிட்டு இருப்பவரா என்ன??

எதற்கு தனித்தனியாக பதில்மொழி ;-)

குசும்பன் said...

பாபா பாபா,

நிங்கள் நம்பள்கி போன பதிவில் பின்னூட்டம் படிக்கவில்லையா?

இம்மாம் கஷ்டப்பட்டு குசும்பனோட பதிவைப் படிச்சி, ம(மி)திச்சி ஒரு பின்னூட்டம் போடறவாளுக்கு நான் பதிலே குடுக்கிறதில்லன்னு ஒரு கொறை இருந்திச்சி பாஸு...

இதெப்பிடின்னா மொய் எழுதுறவங்களுக்கு நாம தேங்காய் மூடி எச்ட்ராவா வச்ச பையா கல்யாணத்துல தருவோமே... அந்த மாதிரி...

மத்தபடி நமக்கு பின்னூட்டங்கள் வர்றதே அரிது. அதனால் எதிர்பார்ப்புமில்லை. ஏமாற்றமுமில்லை.

இதெப்பிடி இருக்கு? ;-)

கால்கரி சிவா said...

குசும்பா, என் லொகேஷனை மாத்து. பாலைவனத்திற்கு போன டின்னு கட்டிடுவானுங்க. ஆனா ஒரு ஐஸ் பாலைவனம் வேணுமின்னா அப்ரோச் மீ

சுவாமி said...

நீங்க சொன்ன மாதிரி வந்திட்டேன். பதிவ விட பாலாவிற்க்கு உங்கள் பதில் அருமை! (எப்பொவாவது
டோண்டு சாரோட dutch treat ஐ கொஞ்சம் கலாய்ச்சிருங்க)

PS: எனக்கு தேங்காய் வேண்டாம்!

குசும்பன் said...

கால்கரி ஸாரே,

லொகேஷன் நன்னா தெரிஞ்சவாங்றதாலே "டோண்டு" ஸார் உங்கள சொன்னார்! ஐஸ் பாலைவன லொகேஷன்ல இப்ப இருக்கேள். ரஜினிக்கே கிடைக்காத 'ஐஸ்'ஸோட கலாய்ச்சுட்டா போச்சு...

குசும்பன் said...

ஸ்வாமிஜி,

வாபஸ் வந்தற்கு தன்யவாத்!!! ஷுக்ரியா !!!

டோண்டு ஸாரை கலாய்க்கவா முடியாது? வாஸகர் விருப்பத்தை நிறைவேத்திட்டா போச்சு ;-)

Anonymous said...

ஐஸ் பாலைவனத்தில் நமிதா கூட கண்டிப்பா ஒரு சாங் வெக்கணும். வாலி சார் கிட்ட சொல்லி "ஐஸா ஐஸா... நைசா நைசா.. இது சைசா சைசா... இல்லயென் வயசா வயசா.." ன்னு போட சொல்லிருவோம். இந்த பாட்டுக்கு மியூஸிக் ஸ்ரீகாந்த் தேவாட்ட வுட்டுறலாம்.

அப்படியே பாட்டு முடிவதற்குள் ஐஸ் பாலைவனம் உருகி ஆறாக ஓடும். இதற்கெல்லாம் காரணம் global warming தான் என்றும், ஆரியர்கள் உணவை சமைத்து சாப்பிட ஆரம்பித்ததுதான் இதற்கெல்லாம் காரணம்னு கெளப்பிவுட்டோம்னா, பகுத்தறிவு கூட்டமும் படம் பாக்க வரும், யாரும் ரீல தூக்கிட்டு போயிடுவான்னு பயமுமில்ல!

படம் பேர் கண்டிப்பா தமிழ் தான்!