Wednesday, December 15, 2004

ஸாரி கொஞ்சம் ஓவர்

சொந்த சாமியார் ஜோக்குகள். அடிக்க வர்றதுக்குள்ள வுடு ஜீட்டேய்...

1. (போலீஸ் கஸ்டடியில் சாமியார்)

ஏட்டய்யா...சின்ன வயசிலேயே நான் சாமியாராயிட்டேன். அதனாலதான் நான் 'குட்டி'சாமியார். மத்தபடி நீங்க நினைக்கிற மாதிரி 'குட்டி'யெல்லாம் இல்ல...

2. (மன்னரவையில் இருவர்)

நம்ம ராஜா பயங்கர உஷார் பேர்வழிதான்

எப்படி சொல்ற?

இந்தச் சாமியாரைப் பார்த்ததும் அந்தப்புர பாதுகாப்பைப் பலப்படுத்திட்டாரே!

3. (ஆசிரம வாசலில் இருவர்)

ஏம்ப்பா...பெண்களுக்கு அனுமதியில்லைன்னு போர்டு போட்டிருக்கே...ஒருவேளை ஒரிஜினல் சாமியாரா இருக்குமோ?

அட நீங்க வேற. அவரு பொண்ணுங்களை நீலாங்கரை சொகுசு பங்களாவுலதான் சந்திப்பாராம்.

4. (பஸ்ஸ்டாண்டில் இருவர்)

ஏன் ஸார்? செல்வராகவன் சாமியாரை மையமா வைச்சி படம் எடுக்கிறாரே...டைட்டிலு என்னங்க?

மன்மதராஜா

5. (அருள்பாலிக்கும் கூட்டத்தில் இருவர்)

ஏங்க என்ன கேட்டாலும் 'எல்லாம் அவன் பாத்துப்பான்னு' மேல நோக்கி கை காட்டாம, கிழக்குப் பக்கமா சாமியார் கை காட்டுராரே...ஏன்?

அங்கதானே தேனாம்பேட்டை 'பங்க் குமார்' இருக்கான்.

2 comments:

துளசி கோபால் said...

குசும்பரே!

நல்ல ஜோக்குங்க! இன்னும் எழுதுங்க!
இப்ப 'சாமியாருங்க சீஸன்' தானே?

அதென்ன சொந்த சாமியார்?

என்றும் அன்புடன்,
துளசி.

குசும்பன் said...

வணக்கம் துளசி,

பொதுவா இறக்குமதி குசும்பு பண்றது. இப்போ சொந்த சரக்குன்னு சொல்ல வந்தேன்.

குசும்பன்.