Wednesday, December 22, 2004

ஸாரி ரொம்ப(வே) ஓவர்

நம்ம ஜோக்குகளுக்கு படம் போட மதன் சார கேட்டேன் .அவரு பிஸியாம். அதனால படமில்லாம ஜோக்கை படிங்க.

(மட வாசலில் இருவர்)

ஏங்க இந்த சாமியாருக்கும் அவருக்கும் என்ன வித்தியாசம்?

இவரு பட்டை போட்டிருக்காரு. அவரு நாமம் போட்டிருக்காரு. அவ்வளவுதான்.

அப்படின்னா ரெண்டு பேரும் சேர்ந்து மக்களுக்கு 'பட்டை நாமம்' போட்டிருக்காங்கன்னு சொல்லுங்க.

(கிராமத்தில் இருவர்)

ஏங்க அந்த பாதிரியாரை எல்லாரும் சேர்ந்து அடிக்கிறாங்க?

ஏற்கெனவே ஆடு திருட்டு அங்க அதிகம். அவிங்ககிட்ட போயி 'ஆடுகளை என்னிடத்தில் வரவிடுங்கள்'ன்னு சொன்னா...கும்மிட்டாய்ங்க

(கிறிஸ்துவரும் இந்து நண்பரும்)

எங்க பாதிரியார் உங்க சாமியார் மாதிரியில்ல. பொம்பளைங்களோட தைரியமா சந்திச்சு ஆசிர்வாதம் வாங்கலாம்.

அதெல்லாம் சரி. புள்ளைங்களத்தான் நம்பி அனுப்ப முடியாது. சரிதானே?

(கிறிஸ்துவரும் இந்து நண்பரும்)

மத நல்லிணக்கம் வளர்க்க அந்த சாமியார் சர்ச் போக நினைச்சாரே...என்ன ஆச்சு?

கன்னியாஸ்ரீகள் ரொம்ப பயந்ததால விஸிட் கேன்சல் ஆயிடுச்சாம்

(தவமிருந்து வரம் பெறும் பக்தர் மற்றும் கடவுள்)

பக்தா மெச்சினேன் உன் தவத்தை. வேண்டும் வரம் கேள்.

நடிகை X எனக்கு உடனே கிடைக்க வேண்டும்.

ஐயகோ ஏற்கெனவே சாமியார் Y கஸ்டடியில் கொடுத்து விட்டேனே. வேறு வரம் கேள்.

சரி நடிகை Z எனக்கு உடனே கிடைக்க வேண்டும்.

அடப்பாவி ஏற்கெனவே அந்த சாமியாரோட பக்தன் கஸ்டடியில் கொடுத்து விட்டேனே. வேறு ஏதாவது வரம் இருந்தால் கேள்.

இதெல்லாம் எனக்கு தெரியும். பெண்கள் இல்லாத இடத்தில் பிறக்க வரம் தாரும்.

(கொஞ்சம் லேட்டாக புரிந்த கடவுள்) அடப்பாவி அவனா நீ (மயங்கி விழுகின்றார்)

3 comments:

SnackDragon said...

;) :)

பரணீ said...

ஐந்தாவது ஜோக் செம கலக்கல்.

Muthu said...

கடைசி ஜோக் புரியலையே.