Monday, November 21, 2005

ராஜபார்ட் சித்தன்

1. சுபயோக தினமில்லாத தூஷிக்கப்படும் நேரத்தில் ஆந்தையும், கூகையும் அலறும் ஓமன்களோடு ஏறக்குறைய ஷாக் படம் போல் பேதியுடன் ஓப்பனிங் ஷாட் வைத்தது புதுமை. எகிப்திய மம்மி போல் துணி சுற்றிய உருவம் சுற்றி சுற்றி வருகின்றது. எத்தனை வயதானாலும் கேரளா மூலிகை வைத்தியத்தையும், மேக்கப் பெட்டியையும் நம்பியே காலத்தை ஓட்டும் மூத்த கதாநாயகர்கள் மத்தியில் இப்படி ஒரு ஹீரோவை ஜீரோவாக அறிமுகப்படுத்துவது நவீன குயுக்தி.
2. அவார்டு படம் போல அவசரகதியில் ஆரம்ப காட்சிகள் நாயகன் ஆட்டைக்குப் புதிது என்று சொல்லாமல் சொதப்புகின்றன. ஒரு படத்தில் சூப்புற ஸ்டார்தான் நான்; சூப்பர் ஸ்டாரில்லை என்று கூறும் போது குழந்தைத்தனம் தான் கும்மாளம் போட்டு வெளிவருகின்றது.
3. வாலிப வயதிலும் நாயகன் ஜாலியாக கோலி விளையாடுவது, கிசு-கிசு தாம்பாளம் செய்வது, கல்லாங் கல்லாங் குஸ்திபாய் போடுவது என்று முன்பாதி எப்படியோ ஒப்பேற்றி நகர்கின்றது. விளையாட்டு அவ்வப்போது வினையாகும் போது ஜகா, ஜூட் என்று அனைத்தும் வாங்கும்போது இயக்குநர் ஹீரோவாகவும், நாயகன் வில்லனாகவும் ஆள்மாறி ஆட்டங் காட்டுகின்றார்கள்.
4. ஆள்மாறாட்ட படங்காட்டுதல் அரதப்பழசு ஸ்வாமி என்றபடி ஊர்ப்பெருசு குறுக்கிட கதை சூடு பிடிக்கின்றது. இயக்குநரும், நாயகனும் ஒருவனே என்பதை "அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும்", என்ற பாடல் அசத்தலாய் சொல்கின்றது. விளையாட்டுத்தனமான நாயகனுக்கு எதிரிகள் இல்லைதான். ஆனால் இயக்குநருக்கு அப்படியா? இவ்வளவு நாளா மாய்மாலமா பண்றே என்று கும்பல் காத்திருப்பதை காட்டும்போது ஒரு மர்ம முடிச்சு விழுகின்றது.
5. மர்ம முடிச்சு அவிழ்ந்ததா? நாயகன் குழுமமாக கும்மப்பட்டாரா? மம்மி உடையில் அலையும் மர்ம உருவம் "குயிலைப் புடிச்சு கூண்டிலடிச்சு அடை காக்கச் சொல்லுகின்ற உலகம், மயிலைப் புடிச்சி பிரியாணி வெச்சி ஆடச் சொல்லுகின்ற உலகம்" என்ற கிளைமாக்ஸ் காட்சி விவரிக்கும். இதோ படம் பாத்து வெளிவந்த மகாஜனங்களின் விமர்ஜனங்களை பார்ப்போமா?
ஜனம்1: படம் ப்ளாப்புங்க. எத்தினி நாளிக்குதான் சரக்கில்லாம ஓட்டுவாய்ங்க? ஆட்டம் அப்பீட்டுங்க.
ஜனம்2: இன்னாருக்கு இன்னா செய்தாரை என்னா செய்யலாம்னு பல்லவன் பஸ்லே சொல்லியிருக்காங்க. இந்தப்படம் பீஸ் புடுங்கின பல்பு சார்.
ஜனமி3: படமா இது? ச்சீத்த்துஊஊ...(காமிராக்காரர் அவசரமாக முகத்தைத் துடைத்துக் கொள்கின்றார்)
ஜனம்4: யோவ் ஈசலு மாதிரி ஒரு நாளு இந்தப் படம் ஓடினா பெர்சு. வோணுமின்னா நம்ம பக்கத்து தியேட்டரிண்டை வா. எவர்கிரீன் படம் காட்டுறன்.
ஜனம்5: எப்பிடி இருந்த ஆளு நீ? இப்பிடி ராசா வின்னர் கைப்பிள்ளையாய் குத்து வாங்கிட்டீயேப்பா...
ஜனம்6: லெப்டு குத்து ரைட்டு குத்து ஈஸ்ட்டு குத்து பேக்டீரியா குத்து பாட்டு சூப்பர் ஸார்
ஜனம்7: பாதி ஸ்டோரி புரியில மாமு. இதுக்காக இன்னொரு தபா பாக்கலாம்
ஜனம்8: ஒண்ணுமே புரியல. குழப்பமா இருக்கு. நீங்களாவது கதை சொல்லுங்களேன். (கிசுகிசுகிசு) ஆஹா இப்ப புரிஞ்சு போச்சு. ஆனா நான் என்ன பண்ணனும்? யாராவது சொல்லுங்களேன்...
ஜனம்9: டேய் படமா இது? அக்கம்பக்களிண்டை பாத்தாவது படம் எடுங்கடா. பேசாம வெங்காய ஜித்தன்ன்னு பேர வெச்சிருக்கலாம்.
ஜனம்10: கர்புர்கர்புர்கர்புர்கர்புர்

டெக்னிகல் பிராப்ளத்தால் கேட்க முடியவில்லை நேயர்களே!!! மொத்தத்தில்
ராஜபார்ட் சித்தன். பிளாட்பார பித்தன். கூஜாவின்றி!!!

2 comments:

Anonymous said...

குசும்பு!

Anonymous said...

yaaru ithu ??????????