Friday, November 25, 2005

தனி மனித ஒழுக்கம்


ஒயுக்கம் வியுப்பம் தரலாம் ஒயுக்கம்
உயிரினும் *ம்பப் படும்


கொரளு போட்டு கொரலு வுடுறதுதான் இப்போ லேட்டஷ்ட் பேஷன்...

காட்சி - 1
மேலவுள்ளதைச் சொன்னது யாருலே?
அய்யா பல்லவனுங்க
(பலத்த அறை....ரப்.....காதில் ஞ்ஙௌய்ய்ய்)
கேனை... நம்ம மருத்துவ ஐயாடா
பஸ்ல போட்டிருந்தாய்ங்களா அதான் கொழம்பிட்டேன்
ஒயுக்கம்னா என்னா?
தெரிஞ்சா உங்கூட ஒட்டிட்டிருப்பேனா?
டேய் தண்ணியடிப்பியா?
ஹிஹி ஆமாங்க
தம்மு?
இல்லீங்க பீடி மட்டும்
பான்பராக்?
சீய்த்தூதூ... மாணிக்சந்த் மட்டுமே
கீப்பு வைப்பு?
கட்டுபடி ஆவாதூங்களே
சரி சரி அங்கன அப்பிடி இப்பிடி..
அடப்போங்க... பீடை கழிக்க வழி வேற என்னாங்க?
மாட்டிக்கினியா...சிக்கிக்கினியா
யென்னாபா சொல்றே?
நீ ஒயுக்கமில்லாதவன்...ஓடிப்போயிடு

காட்சி - 2

என்னாங்க அநியாயம் அக்குறும்பா இருக்கு?
எதச் சொல்ற?
பிரச்சினைன்னா பேசித்தீக்கோணும் அதவிட்டுப் போட்டு இப்பிடி மரத்த வெட்டி நடுரோட்டுலயா போடுவாணுங்க
ஏய் நாக்க அடக்கு. மரத்த வெட்டுனா நஷ்டம் அவனுக்கும்தான் புள்ளே
அட விடியா மூஞ்சி. ரோட்டோர மரத்த வெட்டுனா நட்டம் யாருக்குன்னு தெரியாத சிங்கமணியா நீ?
சரி வுடு புள்ள. தலையவா வெட்டினாங்க?
அப்ப தலைய வெட்டுனா நான் சரின்னா சொன்னேன்?
தலை வெட்டிக்கச்சின்னு அத்த தெளிவா சொல்லு புள்ள
தலையோ, மரமோ வெட்டினா தப்புதேன்
மரம் வெட்டினா இன்னோன்னு வைக்கலாம். பசுமை தாயகம் காணலாம். ஆனா தலைய வெட்டினா?
ஆஹா... இன்னாமா லாஜிக்கு பேசுற. மாமான்னா மாமாதான்.

காட்சி - 3

தல: சட்டசபை, பாராளுமன்றம், மேலவை, கீழவை, கார்ப்பொரேஷன், நகராட்சி ஏன் குடியாட்சியிலும் கூட எனது குடும்பத்தவர் வந்தால் "செப்பலால்" அடியுங்கள்

(பிகில் பறக்கின்றது)

பி.கு. பிற ஒயுக்கங்களைப் பற்றி விரிவாக படக்காட்சியுடன் தொடர உத்தேசம். மலினப்படுத்தும் முயற்சி என்று சிங்கமணிகள் முரசு கொட்டினாலும்...

2 comments:

முகமூடி said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

kalakkal