Saturday, November 19, 2005

'The நியாயஸ்தன்'

படத்த பாத்துப்புட்டா ஜூடா விமர்சனம் தரலேன்னா எப்டிங்கோ? இதோ கோட், சூட் போட்டு சண் டிவி பாணியில் திரை விமர்சனம்:

1. வெகு சமீபத்தில் 1921'ல் சார்லி சாப்ளின் நடித்து வெளிவந்த படம் 'The நியாயஸ்தன்'. தமிழுக்காக போராடுவர் அப்போது இல்லாத காரணத்தால் எந்தப் பிக்கல் பிடுங்கலுமின்றி இப்படம் வெளியானது.

2. வழக்கம் போல் காசிலியாக வரும் சார்லி தனது சொந்த செலவில் ஒரு தண்ணீர்ப் பந்தல் வைக்கின்றார். வருவோர் போவோர் அனைவரும் தாகசாந்தி செய்து வாழ்த்தி விட்டுப் போகின்றனர். சார்லியும் மகிழ்கின்றார். ஆனால் மகிழ்ச்சி நிலைத்ததா?

3. ஒருநாள் நள்ளிரவில் சிலருக்கு மட்டும் தண்ணீர் மறுக்கப்பட, சிறு கலவரம் மூழ்கின்றது. மௌனப்படம் ஆதலால் சார்லி வாய் திறக்கவில்லையா? இல்லை வாய் திறந்தும் நமக்குத்தான் கேட்கவில்லையா? என்ன காரணமென்று புரியாமல் வாசகர்கள் நியூஜிலாந்து வரை தலையைப் பிய்த்துக் கொள்கின்றார்கள்.

4. அப்போது நுகர்வோரில் ஒருவர் எனக்கும் தண்ணீர் வேண்டாம் எனக் கூற, அதற்கும் வழக்கம் போல நரசிம்ம ராவாக வாய்மூடி மௌனியாய் சார்லி.

5. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டமாம். அதுவும் இப்படத்தில் கழைக்கூத்தாடிகளுக்கு பஞ்சமேயில்லை. பேக்கிரௌண்டில் சிண்டு முடியும் வேலையும் சிறப்பாக நடந்தேறுகின்றது.

6. பாதிக்கப்படாமலும் குரல் கொடுத்தவர் நிலைமை மரத்தடி வரை நாறடிக்கப்படுகின்றது. அய்யா என் பெயரில் போலிக் குரல் கொடுக்கும் அந்த முறை கெட்ட சீனை எடுத்து விடுங்கள் என்று அவர் கூப்பாடு போட்டாலும், சார்லியின் கவனத்துக்கு மட்டும் அது வருவேனா என்று அடம் பிடிக்கின்றது.

7. கடைசியில் விஷயஞானி ஒருவர் தண்ணீர்ப் பந்தல் உனதானாலும் முறை கெட்ட சீன்கள் வந்தால் அதற்கு நீதான் பொறுப்பாவாய் என்று எச்சரிக்கை கொடுக்கின்றார். எதற்கும் கலங்காத சார்லி அத்தகைய சீன்களை களை எடுத்து பொதுவிலும் சொல்கின்றார்.

8. நகைச்சுவைப்படம் என்று செல்பவர்க்கு இப்படத்தின் மூலம் சீரியஸ் காமெடியை விருந்து படைக்கின்றார் சார்லி.

9. உலக அளவில் பேசப்படும் இப்படத்திற்கு ஓஸ்கர் கிடைக்கலாமென்றும் எதிர்பார்ப்பு நிலவுகின்றது.

10. 'The நியாயஸ்தன்' பிழைத்துக் கொள்வான். தக்கியாவது.

பி.கு. பட விமர்சனங்கள் தொடரும்...

No comments: