Friday, November 25, 2005

ஸான் மியாகி


கராத்தே என்பது பரதநாட்டியம் போன்ற ஒரு கலை. புராதனமானது. விந்தையானது. ஒழுக்கத்தை கற்பிப்பது. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இக்கலையையும் குசும்பாய் திரையில் காட்டிப் புகழ் பெற்றவர் Noriyuki "Pat" Morita.

பிறருக்கு சிரிப்பூட்டும் கலையில் வல்லவராய்த் திகழ்பவர்களின் வாழ்க்கை எப்போதும் அவ்வளவு ரோஸியாக இருந்திருக்க முடியாது என்பதற்கு சார்லி சாப்ளினைக் கூறலாம். நமது மியாகி ஸானும் அதற்கு விதி விலக்கல்ல. இளம் வயதில் எலும்புருக்கி நோயால் அவதிப்பட்டு, இரண்டாம் உலகப்போரினில் "நம்பிக்கையற்றோர் பட்டியலில்" அமெரிக்காவால் வைக்கப்பட்டு என்று இவரது சோக சரித்திரம் நீளும்.

"ஒரு நாள் நானொரு முடம்; மறுநாளே கிட்டத்தட்ட தேசத்துரோகி", என்று கிண்டலாய் தன் இளம்பிராயத்து வாழ்வைக் குறிப்பிடுவார். The Karate Kid என்னும் படத்திற்காக துணை-நடிகர் ஆஸ்கர் விருதிற்காக பரிந்துரை செய்யப்பட்டவர். மேலும் விபரங்களுக்கு:

Mr. Morita I miss you!!!

No comments: