Sunday, November 20, 2005

செஞ்சோற்றுக்கடன்

1. முழுக்க முழுக்க செந்தமிழ்ச் சித்திரம்தான் செஞ்சோற்றுக்கடன்.
2.
வாழிய செந்தமிழ்
வாழிய நற்றமிழர்
வாழிய பாரத தனித்தமிழ்நாடு

என்ற தேய்ந்த கோஷம் தனித்தொலிக்க, பாரதியும் ஒரு பார்ப்பன திராவிடன்தான் என்பதை எடுத்தியம்பும் வகையில் படம் ஆரம்பிக்கின்றது.
3. காமெடிக்கு இரட்டையர் என்பது கோலிவுட் கலாச்சாரம். இப்படத்தில் கவுண்டமணி-செந்தில் இல்லாத குறையை மணி-வடிவேல் நிவர்த்தி செய்கின்றனர்.
4. 1992 கதையாடல் கேட்கும்போது பழைய புராணம் என்று கிண்டலடித்து விட்டு, அரதப் பழசான மனுப் பஞ்சாங்கத்தை கையில் தூக்கி வைத்து குத்தாட்டம் போடுவது இயல்பான காமடி.
5. தன் வீட்டில் நடக்கும் அநியாயங்களைக் கண்டும் காணாமல் போகும் இவர்கள், சமூக அவலங்களைக் கண்டதும் இரட்டைகுழல் துப்பாக்கியாய் வெடிப்பதுதான் ஏனென்று படம் முழுவதும் விளங்கேல்லை.
6. "கத்திரிக்காய் பிஞ்சு கத்திரிக்காய்" என்ற பாடலில் இருவரும் கவிச்சிக்கறியோடு கூட்டாஞ்சோறு சாப்பிடும் காட்சி உள்ளத்தைத் தொடுகின்றது.
7. ஜெய என்னும் prefix கேட்டவுடன் ஹிஸ்டீரியா பீடித்தது போல "ஏய்" பட சரத்குமார் ரேஞ்சுக்கு ஏன் கிறீச்சிடுகின்றார்கள்? சத்யமேவ ஜெயதே என்பதில் கூட ஜெய'வை எடுக்க வேண்டுமென்று ஏன் விருப்பப்படுகின்றார்கள் போன்ற கேள்விகளுக்கு படத்தில் விடைகளில்லை.
8. வீரபாண்டிய கட்டபொம்மன் போல் விலா வாரியாக வீரவசனங்களை மணி நீட்டி முழக்கும் போது வெலா வெடிக்கும் அளவிற்கு ஆடியன்ஸ் சிரிக்கப்போவது கியாரண்டி.
9. குறைந்த பட்ஜெட், நிறைந்த காமெடி என்ற இந்த இணைய இரட்டையர் படம் நீண்ட நாட்கள் இண்டஸ்ட்ரீயில் பேசப்படும்.
10. செஞ்சோற்றுக்கடன். கழிந்துவிட்டது. வாயுத்தொல்லையால்!!!

6 comments:

Anonymous said...

இரட்டையரில் ஒன்னு தெரியுது. மத்த்து யாரு ?

குசும்பன் said...

அநாநி படத்தை ஸாரி பதிவை திருப்பிப் படிங்க :-)

Jayakumar said...

Read it twice. Not getting it yet
:(

Anonymous said...

---வாயுத்தொல்லை---
Luxemborg & orphan 'happy' brothers?
-kasht city deer (கஸ்தூரி மான்)

Anonymous said...

Ik JK stands for "Jaya" Kanthan then these "Bros" won't like it. GUESS WHO?

Anonymous said...

//---வாயுத்தொல்லை---//

K.Man I think you have read too much (!) into the lines...