Friday, October 22, 2004

எனக்கொரு உம்மை தெரிஞ்சாகணும் - 2

சில நேரம் சிலரோட இம்சை தாங்க முடியலப்பா!!! நானே பரவாயில்ல போலருக்கு ;-)

ஏதோ ஆருமே அறியாதப்போ, பாக்காதப்போ எல்லே ராம் சொல்றாப்ல, அக்குளில் சொறியும் சுகம் போல, ஏதோ எழுதுறோம். ராஜ் கிரண் (அட ஒரு காலத்துல தியேட்டரையே அழ வெப்பாரே?) மாதிரி ஆத்ம திருப்திக்கு இல்லே.

இவா இவா இப்படித்தான் எழுதுணும்னு 'எக்ஸ்பெக்டேஷன்' வேற 'பிரஷரை' கூட்டுது. பத்ரி சாருன்னா இப்படித்தான் கிரிக்கெட், உலக நடப்புகள் மட்டும்தான் எழுதுணும்னு சொல்றா. அட வுடுங்கப்பா...அப்பப்போ எடுப்பு, தொடுப்பு, ஆசை நாயகி'ன்னும் எழுதட்டும். அப்பப்போ ரஜினி, கமல், சத்யராஜ்'ஐம் தொட்டுக்கட்டும்.

பரியும், சங்கரும் (சுவடு) மரபுக் கவித எழுதட்டும். கிருபா புதுக் கவிதைன்னு ப(க)டிக்கட்டும்.

நம்ம ஆல்-இன்-ஆல் அழகுராஜா மீனாக்ஸ் மாதிரி எல்லாரும் எல்லாமும் எழுதுங்க. படிக்கிறவா தலைவிதியை நம்மால நிர்ணயிக்க முடியுமா?

1 comment:

Anonymous said...

ìÕÀ¡ ÒÐì¸Å¢¨¾ ¸Êì¸ðÎõÛ ¦º¡øĢ𧼧ǡ§É¡? þÕí§¸¡ þÕí§¸¡, þÉ¢§ÁôÀ¼ ¿ýÉ¡ À¡Õí§¸¡. ŠÃÁôÀ⸡Ãõ Àñ½¢ì¸È ŨÃìÌõ, ±øÄ¡Õõ «ÄÈ¢ ¸¾È¢É¡Öõ ¿£í¸ ¦º¡øĢ𧼧Çí¸È ´§Ã ¸¡Ã½òÐ측¸ ¸Å¢¨¾Â¡ ¸ÊîÍò ¾ûÇ¢¼§Èý. À¡ÅôÒñ½¢Âõ ¯í¸ ¾¨Äľ¡ý §À¡í§¸¡. :-))

ìÕÀ