Tuesday, October 12, 2004

ரெண்டுமே இறக்குமதி ஜோக்குகள்

வலி

மிருகக் காட்சி சாலையில் ஒரு ஜோடி. ஒரு சிம்பன்ஸியோ உராங்குட்டானோ ஏதோ நமது முன்னோர்களில் ஒன்று கூண்டில் இருந்தது. கணவன் தனது மனைவியை கூண்டினுள் இருந்த மனிதக் குரங்கைப் பார்த்து கண்ணடிக்கச் சொன்னான். மனைவியும் செய்தாள். குரங்கு உற்சாகமானது. திருமலை சிம்ரன் போல் இடுப்பை ஒரு வெட்டு வெட்டேன். வெட்டினாள். குரங்கு துள்ளிக் குதித்தது. ரம்பா மாதிரி ஒண்ணரைக் கண் கிறக்கத்தில் ஒரு பறக்கும் முத்தம் குடேன். கொடுத்தாள். குரங்கு கூண்டை உலுக்க ஆரம்பித்தது. கூந்தலை ஜோதிகா மாதிரி அப்படி இப்படி ஆட்டி கோணல் சிரிப்பு சிரியேன். சிரித்தாள். இப்போது குரங்கிற்கு ஹிஸ்டீரியாவே வந்து விட்டது.

திடீரென்று கூண்டின் கதவைத் திறந்த கணவன் மனைவியை உள்ளே தள்ளி விட்டான். "இப்போ குரங்கிடம் சொல்லு செல்லமே...தலை வலிக்குதுன்னு!!!"

கணிணி

ஏதோ ஒரு பார்க். சோடா புட்டி கண்ணாடியுடன் ஒரு பெருசு தீவிரமாக பெரிய புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தது. கடந்து போன வாலிபன் புத்தகத்தை எட்டிப் பார்க்க அதிர்ச்சியோ அதிர்ச்சி. C++ For Dummies.

"என்னா பெருசு... டிக்கெட் எப்ப எடுப்பேன்னு தெரியாது. உனக்கெதுக்கு C++?"
"பேராண்டி...சொர்க்கத்துல இப்போ C++ லாங்வேஜுலதான் பேசறாளாம்"


"தாத்தா அதெப்படி சொர்க்கம்தான் போவேன்னு நினைக்கிறே? மாறா நரகம் போயிட்டேன்னா என்னா செய்வே?"

"ஹி...ஹி... பேராண்டி எனக்குதான் ஜாவா தெரியுமே!"

4 comments:

Anonymous said...

Aanaa Visual Basic (5.0/6.0) therinja swargam, naragam, boologam, baadhaala logam yellaa yedaththulayum paesalaamey?:-)
Krupa

rajkumar said...

thirumila natichavar jyothikathaan. simran illa. cinema konjam nalla parunggo

குசும்பன் said...

raj basu,

thappu nadanthu pOchi. thirumalailasingle pattukku aaduna simrana sollla vanthu maatikkinEn.

aamaa thirumalainnu oru pdamaa? saami jUtu viduRen.

Kusumban.

குசும்பன் said...

maRupadi thappu...

thirumalai illa athu Ezumalai...