Wednesday, February 09, 2005

ஆக்கமும், ஆக்கியவனும்

"எழுத்தை பாத்தா என்னைப் பாக்காதே. என்னைப் பாத்தா எழுத்தைப் பாக்காதே", அப்பிடின்னு நம்ம சா(பா)ரு நிவேதிதா சார் பொன்மொழி வுட்டாரு. (அப்புறம் அவரே நான் எழுதுவது என் வாழ்க்கை ரகஸியம்னு பீலா வுட்டு அப்பீட் ஆனது வேற விஷயம்)

சரி... ஒருத்தரோட எழுத்தை எப்படிப்பா எடை போடறது? இப்ப என்னையே எடுத்துக்குங்க. ஏதோ ஆரம்ப காலத்துல நம்ம செட்டுங்க வந்து படிச்சுட்டு அப்பப்ப கமெண்ட்டு குத்திட்டுப் போயிடுவாங்க. இப்போ எல்லை கொஞ்சம் விரிவடைஞ்சிருக்கு(ன்னு நெனைக்கிறேன்). இருந்தாலும் 'இணைய குசும்பன்' என்னாத்த எழுதி கீசியிருப்பான்'ன்னு பலர் பல பதிவுகளைப் பாக்காமலேயே போயிருப்பாங்க (இதிலிருந்தே தெரியவில்லை. ஜெயமோகன் சும்மாவா சொன்னார். இணையத்தில் தீவிர வாசகர்கள் குறைவென்று! ;-))

என்னோட புல்லறிவுக்கு (அதாவது 'full'அறிவிற்கு) எட்டியவரை ஆளைப் பாத்துதான் எழுத்தைப் படிக்கிறாங்க. எழுதுற எல்லார் மேலேயும் அவர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஒரு 'முத்திரை' (எ.கா. சோழ முத்திரை) அல்லது 'இலச்சினை' இலவசமாய் குத்தப்படுகின்றது. இவனா இவன் இப்படித்தான் எழுதுவான் என்ற அபிப்பிராயமே அவனெ(ளெ)ழுதிய ஆக்கத்திற்கு விமர்சனமாய் கிடைக்கின்றது. அதாவது ஆக்கமென்பது இரண்டாம் பட்சமாய், ஆக்கியவனே(ளே) மூலமாக ஆகிப்போகின்றான்(ள்).

பலதுறைகளில் வீச்சிருக்கவேண்டுமென்பவரே, சுஜாதா புறநானூறுக்கு புக் போட்டால் விழுந்து கடிக்கின்றனர். ஏம்பா வெறும் 'கணேஷ்-வசந்த்' கிரைமோடும், ஸ்ரீரங்கத்து தேவதை தரிசனத்தோடும், அப்பப்போ சிலிகன், செல்லுலாய்டு ஜின்ஜினக்காவோடு நிப்பாட்டக் கூடாதுன்னு போர்க்கொடி பிடிக்கிறாங்க. ஏனுங்க இலக்கிய வட்டத்தை பட்டா போட்டு குறிப்பிட்ட கூட்டத்திற்கு வித்துபோட்டாங்களா?

கதை, வசனத்தோட கட்டிலில் படுத்துக் கெடக்காமா எம்பது வயசுல கொடைக்கானல் போயி தொல்காப்பியம் உரை ஏன் கருணாநிதி எழுதோணும்?

இவர்களெல்லாம் இலக்கியவாதிகள் கெடையாது. இலக்கிய வியாதிகள்'ன்னு கடும் கண்டனம் தெரிவிக்கப்படும் காரணம் யாது?

இதே புறநானூறு மற்றும் தொல்காப்பிய விளக்கத்தை நானே எழுதியிருந்தா (மவனே அடங்கமாட்டே!) என்னவாயிருக்கும்? மேலே நான் சொன்ன கதையாடலுக்கு (நன்றி: கோல்டுபெல்) கொஞ்சம் அடியுரமாய் இது தெரிகின்றது.

முனைவர் தொ.பொ. தவிர யாரும் ஆக்கப்பூர்வமாய் சுஜாதாவின் புறநானூறு ஆக்கத்தை அணுகியவரில்லை எனலாம். 'கருணாநிதி' பெயராலேயே எதிரிகள் அதிகமாதலால் விட்டு விடலாம்.

இணையம் குறிப்பா வலைப்பூக்களிலும் இதே ட்ரெண்ட் தென்படுகின்றது (நம்ம 'full'அறிவிற்கு). முதல்ல ஆளைப் பாத்துட்டுதான் படிக்கவே செய்றோம் (அட்லீஸ்ட் நான் அப்படித்தான் ஆரம்பித்தேன்). ஒரு பத்து பதிவுகள் படிச்சப்புறம் ஆளைப் பத்தி ஒரு படம் போட்டு வைச்சுக்கறோம். அதுக்கப்புறம் மவனே நீ 'குனிஞ்சு குத்தடி ஜைனக்கா' போட்டாலும் 'படம்' மட்டும் மாறவே மாறாது. 'அவனா நீ'ன்னு ஒரு மாதிரி ஆளைப்பாத்து அரண்டு அலறும் வடிவேல் கதைதான் இங்கேயும்.

சரி.. யெளவு சொல்ல வந்ததை சொல்லித்தொலை'ன்னு டமாஸ் கத்துறாரு. வரேன். வரேன்.

சுனாமிக்கு நன்னின்னு ஒருத்தர் சொன்னா குத்தம். பாஞ்சு புடுங்கலாம். இது சொயநலமான்னா இன்னொருத்தர் கேட்டா கரீக்டு. பச்சாதாபம் காட்டோணும். மேட்டரு என்னான்னு பாக்காம மீட்டரு என்னான்னு கேக்குற உலகமய்யா. அது சரி... இத்த கேட்டதால நம்ம ஆறுமூலம் துறவிமூலம் தேடாதீங்காணும். ஆனானப்பட்ட அரநங்கல்லூராரே பால் தரும் பசுவென்ற வித்தியாசம் பாராது சுக்கா சாப்பிடுவதாய் வாசகர்க்கு வாயு தந்து சுயஅடையாளம் காட்ட மறு(ற)க்கும்போது அடியேன் எம்மாத்திரம்? அவர் சமீபத்தில் போட்டுத் தாக்கிய Kவி கருணாதாஸ் ஸ்பெஷல் தரிசனத்தில் ஏடுகொண்டலவாடாவை தரிசித்து, வாசிப்பவர்க்கு நாமம் போடும்போது நான் எம்மாத்திரம்? பருப்புக்கூட்டமென மாமாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாமி என்றால் ரகஸிய மெயில் அனுப்பும் இணைய தா(த்)தாக்களை என்னவென்று சொல்வது?

நான் புரட்சியாளன் என்று வெற்று கூச்சலிடுவது புரட்சியில்லை. புரட்சி என்பதற்கு டெசிபல் அளவுகோளில்லை. மௌனத்தைக் கேட்டுப்பாருங்கள்.

(பினா.குனா. தீவிரமா ஆராய நம்மால முடியாதுன்னு ஜெயமோஹன் சார் சொன்னதை கவனத்தில் கொள்(ல்)க! குசும்பா உன்னைப் பத்தி தெரியாதான்னு வெறும் சவுண்ட் விட்டால் அப்புறம் இலக்கியத்துக்குத்தான் ஆபத்து! ஏன்னா என்னோட குசும்பு தொடரும்...:-0)

No comments: