Tuesday, August 02, 2005

தொட்டாற்சிணுங்கியும் சில விளம்பரப்பலகைகளும்

எடுத்தாச்சு, தூக்கியாச்சு, போயிட்டு வாரன், கடேசிப் பதிவு நன்றி இத்யாதி இத்யாதிகள் கடந்த சில நாட்களாய் வலைப்பூக்களில் பிளாஷாய் அடிக்கின்றன.

என் மாடு பால் கறக்கவில்லை. பொண்டாட்டி வையறாங்க. தப்புத் தப்பா இணையத்துல பேசறாங்க. ஐ'பீ கலெக்ட் பண்றாங்க. எரிதம் வருது. ஆபீஸ¤ல வலைப் பதிய முடியல. ஆமாம் இதெற்கெல்லாம் இந்த தமிழ்மண நிர்வாகிகள் என்னதான் செய்றாங்கோ? (அய்யா அன்பு இது குசும்பைய்யா...)

எழுதுவது ஈகோ. வலைப்பூ ஈகோ டிரிப். இதுல என்னாய்யா குறைஞ்சு போச்சி. அங்கீகார அரிப்பென்றால் என்ன? அரிப்பியலியம் (கொப்பிரைட்: குசும்பன்) என்று வை(த்)துக் கொள்வோமா? ஆமாம் ஈகோ இல்லாமல் எழுத நானென்ன "இணையமே ரிலாக்ஸ் பிளீஸ்", "வலைப்பூ திற பின்னூட்டம் வரும்", "அத்தனைக்கும் பின்னூட்டமிடு" என்று ஸ்ரீலஸ்ரீ இணையானந்த குசும்பஹாசன யோகேஸ்வர ஸ்வாமிகளா? அட நாராயணா நாராயணா... அதென்ன கடந்த 2-3 வாரங்களாக பார்த்த வாசகர் பரிந்துரையின் பேரில் தூக்குகின்றார்கள்? இதுக்கு முன்னாடி ஓட்டு போட்டதெல்லாம் சனநாயகத்தின் சக்தியுணர்ந்தோர், இப்போ ஓட்டு போடறவங்கெல்லாம் சனநாயகத்தை சந்தி சிரிக்க வைக்கறவங்களா? அட தேவுடா தேவுடா... அரசியல் கட்சியெல்லாம் மண்டி போட்டு மடிப் பிச்சை கேட்கணும் ஓய் !!!

நம்ம எப்பவுமே நடுத்தெருப் புகழைப் பற்றி கவலைப்பட்டது இல்லை ஸார். நானே ஒரு கையேந்தி பவன். வைச்சா குடுமி இல்லேன்னா வழிச்சுடலாங்றது நல்ல பாலிஸிதான். அநேகமா கடந்த இரண்டு வாரங்களா (3 வாரங்களில்லை) வலைமக்கள் ஏன் இப்படி குத்துகின்றார்கள் இதற்கு முன்னர் ஏனிப்படி குத்தினார்களென்று யாமறியேன் பராபரமே.

என்னத்தைச் சொல்றது? யாம்தான் எழுதினோம். நீவிர் இத்துனைப் பேர் படித்தீர். ஓட்டின்றி அந்நாளில் காய வைத்தீர். இன்றும் ஓட்டின்றி (அட கையில இர்ந்த ஓட்டை ஓட்டுப் போட்டு கடாச வைச்சுட்டாங்கப்பா) ஓய வைத்தீர். அன்று வெற்று வெளியில் அரசனாய் நம்பவில்லை. இன்று ஒற்று ஒளியில் ஓவராய் (Icon: நன்றி திரு. இராமகி) உணரவில்லை. இது இலக்கியத்தரமாய் ஜல்லியடித்தவை என்றே வைத்துக் கொள்ளலாம்.

வைத்துக் கொள்வதும், தூக்குவதும் அவரவர் நேயர் விருப்பம்.

வலைப்பூ நாளொறு வண்ணம் பொழுதொரு தூரமாய் வளர்ந்து கொண்டிருக்கும் குழந்தை. அது சிறுகை கொண்டு கூழும் அளாவலாம். சிறிதே அசந்தால் அதையும் பிசையலாம்.

பொறுமை காப்போம் ஏனெனில் இது யாம் பெற்றது.

பெத்துப் போட்டுவிட்டு குத்துதே குடையுதே என்று பொறுப்பின்றி தொட்டாற்சிணுங்கியாயன்றி பொறுப்புடன் பேணிக் காப்போம்.

இல்லையெனில் ம(தோ)ற்றவர் போல் விளம்பரப் பலகை பிடிப்போம், "நல்லதோர் வீணை செய்தே... அதை நலங்கெட புழுதியில் எறிந்து விட்டோம்"

14 comments:

Pavals said...

//அரிப்பியலியம்// கூடிய சீக்கிரம் இதை பத்தி யாரவது தப்பு தப்பா விளக்கம் குடுப்பாங்க.. அதுக்கும் நம்ம வலைப்பதிவுகாரங்க வந்து தெளிவுபடுத்த வேண்டிய நிலமை வரும்.. :-)

Anonymous said...

வலைப்பூ நாளொறு வண்ணம் பொழுதொரு தூரமாய் வளர்ந்து கொண்டிருக்கும் குழந்தை.

ம்ம், ம்ம். கண்டிப்பா காப்பாத்தணும். அட் லீஸ்ட் வேற ட்ரெஸ் போட்டு மேக்-அப் பண்ணியாவது.

குசும்பும் கரும்பும் தோற்குமிடத்தில் அலம்பலும் விசும்பலும் பெருகித் துன்பம் தரும் என்பது ஆன்றோர் வாக்கு.

முகமூடி said...

குசும்பா.. அல்லாரும் நெகட்டிவ் ஓட்டுக்கு இ.கு. பதிவ ஊஸ் பன்னிக்கலாமான்னு கேக்குறாங்கோ... பார்க்க டிஸ்க்ளெய்மர் 4

குசும்பன் said...

ராசா ஐயா ராசய்யா கலக்குறீங்க போங்க...

:0

குசும்பன் said...

கரும்புக் கணையாரே,

//குசும்பும் கரும்பும் தோற்குமிடத்தில் அலம்பலும் விசும்பலும் பெருகித் துன்பம் தரும் என்பது ஆன்றோர் வாக்கு. //

அப்டிப் போடுங்க !!!

குசும்பன் said...

யோவ் முகமூடி,

பதிவைப் படிச்சேன். சூசூப்ப்ப்ப்பர்ர்ர்ர் :-)

ஏம்ப்பா என் ஸ்டார்ல கையை வைக்குறே?

:0)))

குசும்பன் said...

அட நாராயணா நாராயணா,

நாலு ஓட்டு -'ல உழுந்திருக்கு. இப்போ அப்பிடியென்னாத்த பினாத்திட்டேன்? நல்லதுக்கு காலமில்லைப்பா.

மொம்மூடி நாலு பேரு இல்லே நான் நல்லாயிருந்தா உனக்கு பொறுக்காதே :-)

Anand V said...

ஆண்டவன் சொத்து. ஆளுக்கு ஒரு குத்து !
நானும் என் பங்கிற்கு ஒரு குத்து!

குசும்பன் said...

அட இந்த ஆட்டையும் நல்லா இருக்குதுப்பா !!!

எல்லாரும் வாங்க!!! -'ல ஓட்டுப் போடுங்க

அதிகமா -' வாங்றது நானாகத்தான் இருக்கோணும்.

*;*

ஏஜண்ட் NJ said...

//எல்லாரும் வாங்க!!! -'ல ஓட்டுப் போடுங்க//


-

முகமூடி said...

அட நெகட்டிவ்ல குத்துனா கூட நல்லாதாம்பா கீது... ஞானபீடம் ஆசய கூப்பிட்டாரேன்னு அவுரு பதிவுலயும் ஒரு குத்து உடலாம்னு போனா அவுரு நாரண முன்னோடியா ஏற்கனவே இஷ்டார தூக்கிட்டாரப்பு.... சரி மீண்டும் நெகட்டிவ் குத்து விடும் வரை உங்கள் அன்பு நண்பன் முகமூடி...

ஏஜண்ட் NJ said...

//ஞானபீடம் ஆசய கூப்பிட்டாரேன்னு அவுரு பதிவுலயும் ஒரு குத்து உடலாம்னு போனா அவுரு நாரண முன்னோடியா ஏற்கனவே இஷ்டார தூக்கிட்டாரப்பு.... //- முகமூடி

என் பதிவில் ஸ்டார் உள்ளது; தூக்கவில்லை.
"கண்ணுள்ளவன் காணக்கடவன்" என்று இயேசு இதையும் அப்போதே சொல்லிவிட்டார்.

குசும்பன் said...

ஏஜெண்ட் அண்ணா,

இப்ப திருப்திதானே? வாழ்க வளமுடன்.

சோகமுடன்,
குசும்பன்.

குசும்பன் said...

//சரி மீண்டும் நெகட்டிவ் குத்து விடும் வரை உங்கள் அன்பு நண்பன் முகமூடி... //

முகமூடி ஸார்,

என் ஸ்டார் வேல்யுவ இறக்குறதுக்குன்னே வந்திருக்கப்பூ!!!

உன்னை விட மாட்டேன். நேக்கும் ஒரு காலம் வரும் கண்ணா. அதுவரை அமேதியாயிருப்பேன்.

வாங்க வாங்க எனக்கு '-' ஓட்டுப் போட்டு சனநாயகத்தை காப்பாத்துங்க *-*