Monday, June 07, 2004

பு(ப)டிக்காத கட்டளைகள் - 9

அதென்ன 9 கட்டளைகள் கணக்கோ...பா.ரா.வின் பக்கம் படியுங்கள்.

நம்பர் பக்கத்துல பா ரா வின் கருத்துக்கள் (சின்னதாய்). அப்புறம் நம்ம மறுமொழி (in bold text)...

1. சொந்தமாக வலைப்பதிவு வைத்துக் கொள்வது, தொடர்ச்சியாக அதில் எழுதுவது எல்லாம் கைப்பழக்கத்துக்காக (???) மட்டுமே...எழுதிக்கொண்டிருப்பது வேறு. எழுத்தாளராக இருப்பது வேறு.

யெப்படீங்க பாசு? எப்பத்தான் எழுதிகொண்டிருப்பவரெல்லாம் எழுத்தாளராவது? இப்போ உள்ள எழுத்தாளரெல்லாம் முன்னாள் ஏன் இன்னாளும் எழுதிக்கொண்டிருப்பவர் இல்லையா?
2. முழ நீள கவிதைகளை வலைப்பதிவுகளில் இடுபவர்கள், அடுத்ததற்கு அடுத்த ஜென்மத்தில் (இழவு இதுவும் என்ன கணக்கோ) பெண்கள் இல்லாத ஊரில் பிறப்பார்கள்...

பெரிய, பெரிய கவிஞ்சர்கள் யாஹ¥ குழுமத்தில் டார்ச்சர் குடுக்கிறதுனாலதான் மத்த எழுத்தாளர்கள் (பா ரா ஒத்துக்கலனாலும்) வலைப்பதிவிற்கு வந்தார்கள். கவிதைகளை எப்படி எடை போடுவது? முழ நீளமா இருக்கக்கூடாது. சரி...மத்தவங்களுக்கு புரியாமலும் இருக்கணுமா? தகுதி யென்னா பாசு?
3. நீங்கள் சம்பந்தப்பட்ட துறையை சார்ந்து ஏராளம் பெறுதற்கு எத்தனையோ பேர் காத்திருக்கிறார்கள்...

வலைபதிவுல முக்காலே மூணு வீசம் கணிணியோட சம்பந்தப் பட்டவர்கள். யோசிச்சுப் பாருங்க பாசு...வலைபதிவை மைக்ரோஸாப்ட் மேனுவலா மாத்திப்புட மாட்டாங்களா? 24X7 ஆபீஸ¤லயும் கணிணி...வலைப்பதிவுலமா? வுடு ஜூட்டு...
4. ஒரு நாள் ...வலைபதியாவிட்டால் ஒன்றும் உலகம் அழிந்துவிடாது...

இதுக்கு ராஜா தனது மறுமொழியிலேயே மானத்தை வாங்கிட்டாரு. படிங்க பாசு வலைப்பூவில் பா ரா வின் கருத்துக்கள்

5,6 டிராக் பேக், நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம், மூத்திர சந்துகள்...

நல்ல கருத்துக்கள். ஆனா ஒரு Common Minimum Programme போட்டுத் தந்தேள்னா நன்னா இருக்கும்.
7. பிரபலங்களை தாக்குவதற்கும், பொத்தாம் பொது அபிப்பிராயங்கள் சொல்லுவதற்கும் வலைப்பதிவுகளை பயன்படுத்தாதீர்.

உங்க பதிவைப் படிச்சு விமர்சனம் பண்ண உரிமை இல்லையா? அப்புறம் ஏன் மறுமொழி வசதி? 400 கேரக்டருக்கு மேல மறுமொழி குடுக்க முடியதவா என்ன செய்வா? ஏங்க நானும், படிக்க வருபவர்களும் அந்தரங்கமா பிரபலங்களைப் போட்டுத் தாக்க (இந்த மாதிரி) பயன்படுத்தக் கூடாதா? (ஆமாம் அதென்ன 138வது வட்டப் பொதுகூட்ட மேடை...???)
8. சக வலைப்பதிவுகளிலிருந்தும் தமிழ் இணையதளங்களிலிருந்தும்....எழுதாதீர்கள்

பலரும் உங்கள் வலைப்பதிவை "Favourites"ல் போட்டு வைத்துக்கொள்வதில்லை. யார் கண்டது? எனது வலைப்பதிவு கண்டு அங்கு வருபவரும் இருக்கலாம் (அட ஒரு பேச்சுக்குத்தாங்க...)
9. வெப் கவுண்ட்...மிகப் பெரிய மாயை...

அட...இது நம்ம டெக்னிகல் குசும்பு. ஐயா வெப் கவுண்ட் ஒரு டானிக் மாதிரி. எங்களுக்குத் தெரியும். நாங்க பப்ளிஷ் பண்ணி சைட்டை பார்க்கும்போதே ஒரு கவுண்ட் கூடுமென்பது...அதுவும் ஒரு 50 பேர்தான் சின்சியராக வலைப்பதிகளைப் படிக்கிறார்கள் என்றீர்கள் (திரும்பவும் இது என்ன கணக்கோ...) அப்ப மத்தவாள்லாம் எதுவுமே படிக்காமல் எழுதிக்கொண்டு இருப்பதாய் (அதாவது உங்களைப் பொறுத்தவரையில், உங்களைப் போல் எழுத்தாளர்கள்) சொல்கிறீர்களா?

கடைசியாய் புடிங்க என்னோட விதி:

10. பா ரா போன்ற பெரியோர்கள் அவ்வப்போது இப்படித்தான் கோபமடைவார்கள். என்னடா எல்லோரும் எழுதுகிறார்களே என்றிருக்கலாம் (வார்த்தை விளையாட்டு பாசு). நீங்க தொடர்ந்து எழுதுங்க. யார் கண்டா? உங்களில் ஒரு ஜெயகாந்தனோ, சுந்தர ராமசாமியோ, சுஜாதாவோ பா ரா'வோ (ஏன் குசும்பனே கூட) வெளியே வரலாம். பாரா' வாக வந்துவிட்டால் ஒரு சின்ன விண்ணப்பம். தயவு செஞ்சு வெறுமனே எழுத்தாளராய் சேவை செய்யுங்கள். என்னைப் போல் எழுதுவர்களை ஊக்கப்படுத்தாவிடினும், தாக்கியழிக்கப் பார்க்காதீர்கள். பாரா' மல் போய்விடுங்கள்

நொந்து போய்,
குசும்பன்.

3 comments:

குசும்பன் said...

நன்னா சொன்னேள் போங்கோ!!
Balaji-paari | Email | 06.08.04 - 3:48 am | #

--------------------------------------------------------------------------------

கிண்டல் தொனியில் இருந்தாலும் காரமான சுண்டல்.
வரையறைக்கு உட்படாத ஜனநாயக சாதனம் இணையம்.
எழுத்தாளர்கள் பத்திரிக்கையோடு நிறுத்திக் கொள்ளட்டும்.
கரைச்சல் பண்றதே வேலையாப் போச்சு.
Rajkumar | Email | Homepage | 06.08.04 - 4:11 am | #

--------------------------------------------------------------------------------

//பெண்கள் இல்லாத ஊரில் பிறப்பார்கள்//
இந்த இடத்தில் biology கடுமையாய் உதைக்கிறது
sundaravadivel | Email | Homepage | 06.08.04 - 4:10 pm | #

--------------------------------------------------------------------------------

//பெண்கள் இல்லாத ஊரில் பிறப்பார்கள்//
/இந்த இடத்தில் biology கடுமையாய் உதைக்கிறது/

tube lighttu aNNaachchi,
avuru solRathu test tubeu babyngkaLai
-/பெயரிலி. | Email | 06.08.04 - 5:42 pm | #

Anonymous said...

பா ரா போன்ற பெரியோர்கள் ?
hahahahahahahahahahahahahahahaha

PA.Raku uRUpadiyAna vellai onnum illa,
summa blog vechu OB adikar. His so called Nine x 3 olaral was a cheap publicity stunt to promote himself.

இணைய குசும்பன், unga "blog blog blacksheep" tamil pAtu was too good.
:)

Muthu said...

நகைச்சுவையாகச் சொன்னாலும் சிந்திக்க வேண்டிய விஷ்யங்கள்தாம்.. :)