Tuesday, June 15, 2004

ஊமைக் குசும்பு

சிறிய குக்கிராமத்தில் (யோவ் குக்கிராமம்னாவே சிறுசாதானே இருக்கும்...) புதிதாய் வந்த பாதிரியார் தேவாலயத்திற்கான வழியை ஒரு சிறுவனிடம் கேட்டார். சிறுவனும் வழி சொன்னான். பிறகு பாதிரியார் சிறுவனிடம், அன்றிரவு பெற்றோர், நண்பருடன் தேவாலயத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டார். வியப்புடன் சிறுவன் எதற்கென வினவ, பாதிரியாரும் ,"அனைவருக்கும் சொர்க்கத்தின் வழி சொல்லிக் கொடுத்து பிரார்த்தனை செய்யப் போகிறேன்" என்றார். பதிலுக்கு சிறுவனோ ஆச்சர்யமாய் (குசும்புடன்) சொன்னான், "உங்களுக்கு தேவாலயத்துக்கான வழியே தெரியல..."

No comments: