Monday, May 08, 2006

உச்சகட்டம்

" அஞ்சு கிலோ அரிசி வாங்கி (ஜஞ்ஜஞ்ஜாம்)
பஞ்சு பஞ்சா வேக வைச்சி (ஜஞ்ஜஞ்ஜாம்)
பானையில ஊத்தி அத
புதைச்சி வைச்சோம் மண்ணுக்குள்ளே (ஜஞ்ஜஞ்ஜாம்)
போதையில சுண்டைக்கஞ்சி புதைச்ச இடம் தெரியலியே (ஜஞ்ஜஞ்ஜாம்)


(ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆ)

வடபழனி முருகா

அட்றா மச்சி

சோடா பாட்டில் கையிலே சைக்கிள் செயினு பையிலே
தோடா வாரு பாருடா
ஆறுமுகம்
வாடா வாடா மாப்பிள வகுந்துருவேன் கேப்புல
மெய்யாலுமே எனக்கு
நூறுமுகம்
வெட்டுக் குத்து கத்திக் கம்பு புடிச்சுப் பாருடா
நான் கம்பியெண்ணி கணக்குப்பாடம் கத்துக்கிட்டேண்டா
வருசத்துல எல்லா நாளும் பொறந்த நாளுடா
நாங்க வெட்டுறது கேக்கு இல்ல கைகாலுடா
என்பேரு ஆறுடா ஊரு அடையாறுடா
டீலுன்னு வந்தாக்கா டார் டார் டார்

கூவ நதி ஓரத்துல
அட குந்திக்கினு கூவிக்கினோம்
சாயங்கால நேரத்துல அட சுண்டக்கஞ்சி ஊத்திக்கினோம்
"

மக்கள்ஸே! தோடா... ஆறு படப்பாடலோட ஞானபீடம் பதிவு போடறேன்னு டவுட்டா கீதா? டைட்டிலுக்கும் பாட்டுக்கும் சம்பந்தம் என்னங்காணும் ஓய்? அட இப்ப மேட்டருக்கும், மீட்டருக்கும் கேப்பே இல்லைங்காணும் ஓய்!!!

நீங்கெல்லாம் கைதட்டி தட்டி ஓயப்போறதுக்குள்ளே ஷொல்லிடுறேன் மேட்டர. இது என்னோட இருநூறாவது பதிவு. இதுவரை என்னத்த கிழிச்சேன்ங்றது நேக்கு தெரியல. ரொம்ப நாளா சதமடிச்ச பின்னாடி வெயிட்டீஸ் விட்டு டெண்டில்யா போட்ட ரெட்டை சதம் ஞாபகத்துக்கு வர்றது.

இப்ப மீட்டரு. குசும்பனுக்கு ஒரு தனிமடல். என்னடா தனிமடல் மேட்டர பொதுவுல மீட்டரு உடறானேன்னு மக்கள்ஸ்க்கு கோவம் வரலாம். நியாயம்தான். பாஸு நமக்கு மேட்டரோ மீட்டரோ பொதுவுல வைச்சுத்தானே பழக்கம்.

ஆயிரக்கணக்கான தமிழ் வலைப்பதிவுகளைத் திரட்டும் தமிழ்மணத்தினை நடத்தி வரும் ஆறுமுகம் (மூலம் நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்) என்பவர் தனிமடல் எனக்கு அனுப்பியிருக்கின்றார். ஆங்கிலத்திலிருந்த மடலின் சாரம்சம்:

"அன்பு குசும்பன்,

வணக்கம். உங்களின் வலைப்பதிவு தமிழ்மணத்தை அவதூறாகச் சுட்டியுள்ளது. நாம் நமது பாதைகளில் குறுக்கிடும் வழியில்லாதபோது, இத்தகைய அவதூறாக சுட்டி கொடுக்க வேண்டிய அவசியம் எனக்குத் தோன்றவில்லை. எனவே தக்க மாறுதல்களைச் செய்வீர்கள் என்று நம்புகின்றேன்.

நல்லாசிகளுடன்,
-காசி
www.thamizmanam.com
www.blogdesam.com
"

அவதூறு என்பதற்கு ஆங்கிலத்தில் Defamation என்பார்கள். அது லீகல் டெர்மினாலஜி என்பதை நானறிவேன். அப்படியென்றால் தக்க மாறுதல்களைச் செய்யாவிட்டால்... என்ற அதிகாரத் தோரணைகள் தொக்கி நிற்கின்றன. அப்படி தமிழ்மணத்திர்கு எதிராக நான் செய்த blasphemy என்னவென்று தெரியவில்லை.

ஒருவேளை இதுவும் போலியின் மடலோ என்ற எண்ணமும் எழுந்தது. இதுவரை எனக்கும் காசிக்கும் எந்தவிதமான தனிமடல் போக்குவரத்தும் இல்லை. இது உண்மையான காசியிடமிருந்தே வந்ததாக வைத்துக் கொள்ள, எனக்குத் தெரிந்த இரண்டு காரணிகளும் எனக்கு நம்பிக்கைத் தருவதாக இல்லை. வெறும் மின்னஞ்சல் முகவரி, VSNL ஐபீ அட்ரஸ் இவை மட்டுமே போதுமான முகாந்திரமில்லை இம்மின்னஞ்சல் தமிழ்மண காசியிடமிருந்து வந்தவை என்பதற்கு.

அப்படியே இம்மின்னஞ்சல் உண்மையான காசியிடமிருந்தே வந்ததாக வைத்துக் கொள்வோம். மேட்டரோ, மீட்டரோ பொதுவில் நடத்தவும், தேவைப்பட்டால் அவரது அடுத்த நடவடிக்கையை எனது நிஜமுகத்தோடு சட்டத்தின்படி எதிர்கொள்ளவும் நான் தயார்.

இனி பொதுவில்தான் காசியுடன் வாதமோ/விவாதமோ இன்ன பிறவோ. ஏனெனில் காசியின் பின்னூட்டத்தில் நான் கேட்ட முந்தைய நேரடி வினாக்கள் இன்னும் விடையின்றி தொக்கி நிற்கின்றன.

இது தவிர்த்து சட்டப்படி நடவடிக்கை இன்ன பிற பூச்சாண்டி அவர் காட்ட நினைத்தாலும் நான் ரெடி! நிஜமுகத்தோடு!


இது உச்சகட்டம்.

7 comments:

ஜெ. ராம்கி said...

//உச்சகட்டம்.

தல, தமிழ்ல கிளைமாக்ஸ்னு எழுது வோய்... அனார்த்தமா ஆயிடப்போவுது! :-)

முகமூடி said...

ஆமா உம்ம தி(வி)ரட்டி பட்டியல்ல, தேன்கூட்ட காணமே... என்ன விசயம்.
இவண்,
தேன்கூடு இன்றைய வலைப்பதிவு பரிந்துரைப்பவர்களை கண்டுபிடிப்போர் கழகம் (வ.அமேரிக்கா)

முகமூடி said...

// உச்சகட்டம் //
அடுத்த பதிவின் தலைப்பு "மாமனாரின் இன்ப வெறி"யா?

முகமூடி said...

கொசுறு :: கில்லி தி(வி)ரட்டி பட்டியல்ல வருமா? இல்லாங்காட்டி அத்த எப்படி பட்டியல் படுத்தறது?

குசும்பன் said...

ரரா,

அளும்பு தாங்க முடியலப்பா. கிளைமாக்ஸ்'ன்னு போட்டா அப்புறம் முகமூடி ஆடுத்ததென்ன 'ஆண்ட்டி-கிளைமாக்ஸா?'ம்பார்.

ம்ஹூம். இந்த ஆட்டைக்கு நான் வரலப்பா ;-)

குசும்பன் said...

மூகமூடி,

உமக்கு முகமூடியோடு, லம்பாடி லுங்கியும் கிழிஞ்சு போச்சே... இவிடச் சூடு...

"தமிழ் வலைபதிவர்க்ளில் பாதிக்கு மேல் புனைப்பெயர் வைத்துக் கொண்டு எழுதுபவர்கள் தான். ஆனால் இவரது ஒருவர் மட்டும் தான் 'இந்த நபர் யாராக இருக்கும்?' என்று ஆளாளுக்கு விவாதம் செய்ய வைத்தவர்.கடந்த ஆண்டின் சிறந்த தமிழ் வலைப் பதிவர் என்ற பட்டத்தை வாங்கிய "முகமூடி" தான் அவர்.
நகைச்சுவை மனிதரது ரத்ததிலேயே ஊறியது மாதிரி, இவரது பதிவில் எங்கு பார்த்தாலும் நக்கல், ரசிக்க வைக்கும் நையாண்டி கல்ந்திருக்கும்.'எனக்கு பிடிச்ச கருத்தை சொல்றதுக்கு உனக்கு உரிமை உண்டு அப்படீன்றது தான் கருத்து சுதந்திரம்' - இப்படி ஒரு அர்த்தத்திலேயே அன்னாரது ஸ்டைலை புரிந்து கொண்டு விடலாம்.

'சுதந்திர இந்தியாவில் ஆசிட் வீச்சும், ஆட்டோக்களும் மிச்சமிருப்பதால் 'முகமுடி'யை தேர்ந்தெடுத்த காரணமாகக் கூறுகிறார்.இவரது 'பச்சோந்தி மக்கள் கட்சி' (ப.ம.க.) ஒரிஜினல் அரசியல் கட்சிகளை விட வலையுலகில் மிகப் பிரபலம்.

அண்மையில் சென்னையில் நடந்த வலைப்பதிவர்கள் சந்திப்பில் இவர் கலந்து கொண்டதாக சிலர் கூறினாலும், "அதெல்லாம் இல்லை.. முகமூடி என்பது ஏற்கனவே வலைப்பூக்களில் எழுதி வரும் மற்றொரு பிரபல வலைப்பதிவர்தான்" என்று சொல்பவர்களும் உண்டு. தினத்தந்தி கன்னித்தீவு சிந்துபாத் கதை என்றைக்கு நிறைவு பெருமோ அன்றைக்கு தான் முகமூடி தனது முகத்தைக் காட்டுவார் போல!

ஓராண்டிற்கும் மேலாகத் தமிழ் வலைப்பதிவுகளில் ஆர்வமுடன் பங்கேற்று வரும் முகமூடி, வலைப்பதிவுகளில் முதல் முயற்சியாக சிறுகதைப் போட்டியை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. படிக்க:
முகமூடி"

//தேன்கூடு இன்றைய வலைப்பதிவு பரிந்துரைப்பவர்களை கண்டுபிடிப்போர் கழகம் (வ.அமேரிக்கா)//

அப்பிடீன்னா இது கூட "தமக்குத் தாமே திட்டமா?" ;-)

//அடுத்த பதிவின் தலைப்பு "மாமனாரின் இன்ப வெறி"யா? //

இன்பவெறி தெரிய்ல. ஆனா துன்பவலி இருக்கும்போல தோணுது!!! பாப்போம் :-)

Anonymous said...

Kusumban

Have you committed more blasphemy than Arumugam's adipodis are committing in Thamizh Komanam? Who is going to sue him or take actions on him for gathering all sort of anti national, anti Hindu, anti Bramin articles that his Thamizhmanam is gathering? Are they not derogatory? Is he not defaming India? Is he not abating violence and treason by promoting so many anti social, anti national blogs through his aggregator? Is he not promoting all the and provide space for so many anti national elements? Go for it Kusumban, Go for him. He is not the only person who can write to the President of India, You also can write, we are all here to co-sign. Go for it. He has given a handle, take this to its logical end.

Jai Hind
C O