Monday, February 06, 2006

சும்ப நிகண்டு - கோனார் உரை

சாதிப்பித்தலைக்கேறி உன்மத்த ஊக்கத்தில் பதிவிட்டான் சும்பணெண்டு அண்ணைக்கள் ஆரும் கச்சை கட்ட வோண்டாம். இக்கரைக்கு அக்கரை பத்துமைல் டிஸ்ரன்ஸெண்டு ஸ்பேஷியல் நெட்நொர்க்கில் பார்த்துப் பரவசமடைந்து, பசையா பச்சையாவெண்டு நாங்கொடுக்கும் உரையை பொடிமட்டையெண்டு கணக்கில் கொண்டாலும் கவலை அதிகமில்லை சும்பனுக்கெண்டு கருத்தில் கொள்ளவும். பதிவினைப் போட்டுவிட்டுப் போறதோட வேலை முடிஞ்சதெண்டு சும்பன் நினைச்சாலும், விளங்கேல்லைன்னா விட்டுடு'ன்னு சம்சாரமது மின்சார மனோரமா மாதிரி போய்க்கொண்டிருந்தாலும், மூக்கறுக்கும் நட்பு பத்துன பொயிப்புரை கண்டதாலும், அண்ணைக்குச் சில விளக்கங்களை கொடுப்பது ஞாயமாப்பட்டதாலும் (அட பசுத்தோல் போத்துறாணெண்டு பகிடி பண்ணுங்கோ) அவரின் இரவாக்காவியமான சும்ப நிகண்டுவிற்கு என்னோட கோனார் நோட்சுங்கோ...

"ரண்டி பாஜி பிஸினஸெ"ண்டு நாஞ் செய்யும் "ஒப்பந்தக்கார வேலையை" ஷெல்லமாச் சொல்வாங்கோ! இந்தப் பதபிரயோகமுறையும் வெளங்கேல்லன்னா ஆரிய நாட்டுக்காரனை நைஸாய் ஒதுக்கி நயமாய்க் கேட்டால் பொழிப்புறைப்பான். இதுல ஒர்த்தந்தான் காசு பாத்தா பரவாயில்ல. ரெண்டு பேருக்கு சம்பாதிச்சு கொடுக்கிற க(கொ)டுமையான பணியிலும் சும்பன் சக்கர வியூகம் போட்டு எளக்கிய பணி செய்யுதான்னா புரிஞ்சிக்கிங்க பாஸு. இதுல சொந்தப் பேருல தமிழ் வளர்க்கின்ற சைடு பிஸினஸு வேற !!! நாலு நாளு அக்கடான்னு சொந்த ஊரைப்பாத்து போயிட்டா போதும். லோக்கல் மக்காவுக்கு மூக்குல வேத்துடும் (எங்களோட எஜமான்களைச் சொல்றேன் ஸாரே). அதெப்பிடி நீ மட்டும் நிம்மதியா இருப்பயா'ன்னு அத்தயும் பாத்துடறேன்னு அம்பறாத்துணி அவுத்து போடுற அளப்பறைக்கு முன்னால பத்மவியூகம் கூட பணால்தாங்ணா!!! நிற்க!!!

இன்னிக்கு செத்தா நாளைக்குப் பால் மாதிரி இன்னிக்கு பில்லிங் Cut'ன்னா இரண்டு வாரம் கழிச்சு வேலைக்கு வெட்டு'ங்ற நாலாந்தர நாதாரி வாழ்க்கை நம்மதுங்ணா. எனக்கு என் கவலை. புள்ளை, பொண்டாட்டி நமக்கும் இருக்குன்னு சொல்லி நமக்குக் கிடைக்கிற கழிவிரக்கத்தை கழிச்சிப்போடாம பெருக்கிக் போடலாங்றது சைடு-கிக்'ணா. எளவு எத்தனைக்காலம்தான் இப்பிடி பரதேசத்துல பரதேசி வாழ்க்கை'ன்னு வெசனப்பட்டு, கறுப்பு லேபிளை வெறுப்போடு காலி செஞ்சபோதுதான்... மேட்டரு எல்லா இடத்துலயும் ஒண்ணுதான்னு தெரிய வந்துச்சி. அட கருமகாலமே... நம்ம ஜீவிதந்தான் பல்லா நக்கியெண்டு நெனைச்சோமே... என்னா சுயநலமடா சும்பா'ன்னு நமக்கு நாமே சூடு வெச்சுக்கிட்டா பாவம் அது பொதுநலமின்றி பொழுதுபோக்க பல்லிலிளிப்பதாய் அ(ன)ர்த்தம் வருதெண்டு விள(ல)ங்கினம் இப்போது. சொந்த வாழ்க்கையிலே சிங்கியடிப்பதை பொதுவுல சொல்ல வெக்கப்பட்டாலும், அண்ணையின் புரிதல் சும்பனை அதீத வெக்கப்பட வெக்கிறதெண்டு சொன்னா, அல்லிகேட்டரின் நீலிக்கண்ணீரெண்டு இன்னொரு பொயிப்புறை வரலாம். என் நாஷ்டா எனக்கு. உம்மோட நாஷ்டா உமக்கு. அல்லாரோட பிரட்லேயும் அவா அவா பேர எழுதி உலகரேஷனில் எவனோ போடுறானாம். அந்த நம்பிக்கையில நம்ம பிரட் நாளிக்கு எங்கயாச்சும் கெடைக்குங்ற நம்பிக்கையில பொட்டி கட்டும் நிலையை போட்டா புடிச்சு போட்டாலும் நம்ப ஆளுக வோணுமே... நிழல்களை நம்பியே மோசம் போனோமே'ங்ற பாட்டுத்தான் ஞாபகத்துக்கு வருது பாஸூ!!!

இதுக்கிடையில சுகுற்றா சைடுமேட்டரு ஒண்ணு கிளைச்சுத்தியோடுது. தனிஆவர்த்தன தவிலுக்கு ஒத்தடி போடவும் திறமை வேணுங்கோ... மெயின் மேட்டருக்கு இப்பிடி சப்பையாவா சைடு டிஷ் போடறது? அடச்சீ... பாம்புக்கு போயி திரும்பவும் பல்லு குத்தப்போறீயேன்னு பலமுறை அசரீரித்தாலும், அரிப்புக்கு அஞ்சால் கிடைக்காத அலுப்பினாலும், திருப்பாச்சி, மருத, சிவகாசி, ஆதி, கில்லி'ன்னாலும் கதை ஒண்ணுங்ற பொதுப்புத்தியாலும், கம்முன்னு இருக்காட்டியும், கம்-Naughty' ஆக இருப்போங்ற அங்கத ஆசையினாலும், வலிந்து குடிகொண்ட வேலிஓணானின் லங்கோட் lafadaa'வாலும், மொன்னைக்கத்தியால் பலிகொள்ளும் அண்ணையின் பாங்கு பவித்திரத்தை பலரறியச் செய்யும் "நாண நாணா பூபூ" முயற்சியின் சற்றும் மனந்தளராத விக்ரமாதித்ய விளக்கமெண்டும், இன்னம் என்ன வேண்டுமெண்டாலும் சொல்லிக் கொல்லலாம்.

சுருதி பேதமான சைடு வாத்திய சேர்ப்புகளான பொன்முட்டை மூக்கறுப்புகளைக் குறித்த அண்ணையின் ஆழ்ந்த கவலையைகண்டால் ஆச்சாரமின்றி ஆச்சர்யமுண்டாகலாம். துப்புக்கொடுத்தவரையும் எண்ட பதிவுகளின் நேரங்களையும் கொம்பேர் செய்து வழமை போல் பல மணித்தியாலங்களை பாழ்படுத்தாமல் (அப்பிடிச் செஞ்சாலும் துப்புரவு செய்யாத துப்பறியும் ஐய்-பீ'யெனும் துப்பலாகவே இருக்கும் பட்சத்தில்), வாரண்டு இல்லாமல் கொன்வர்சேஷனை ரெக்கார்ட் செய்யும் ஹோம்லேண்டு டைரக்டராக இல்லாததாலும், பாவம் பலியாடாக பரிமாணம் பெற்றார் அண்ணையின் புண்ணியத்தில் ஒரு "நண்பர்". ஆடிவரை நமது ஆட்டம் தொடருமா என்று முதல் குவாட்டரிலேயே நானாடும் தள்ளாட்டத்தை பாவம் "நண்பர்" அறிய மாட்டார். முடிக்கப்படாத தொடுப்புகளை வைத்து பெரிய முள்ளுதான் காதலன் சின்ன முள்ளுதான் காதலியெண்டு "ஜீம்பலக்கா" போடுவது அண்ணைக்குப் புதியதா என்ன? ஆதாரத்தை ஆராய்ந்து லிங்க் கொடுக்கவும் முடியாமல், ஹைப்பர்/டயப்பர் லிங்க்குகளா கொடுக்க முடியும்? அடடே... ஆண்டுக்கொருமுறைபலிநாள் கொண்டாடும் யூதக் கற்பனை யூகிக்கப்பாற்பட்டதென்று எவ்வளவு பேருக்கு வெளக்குமாறு கொண்டு வெளக்கினாலும் வெளங்கப்போகின்றது? பொட்டில் போட்ட போட்டில் முகவரிகள் தொலைத்த முகிலினங்கள்தான் எத்தனை எத்தனை!!! 'கோட்டி'யோடு நீர் கிட்டி தப்புத்தாளமாய் ஆடினாலும், ஐ-பீயை நானே கொடுக்கின்றேன் என்றபோதிலும், குலவலாம் வாருமெண்ட குசல அழைப்பிற்கும் கூடாமல், இன்னமும் அரைக்காகாலறைக்கா மைல் டிஸ்ரன்ஸ் பேசி கழுத்தறுத்து, ரீயோடு கதைவிடக்கதைக்கக் கூப்பிடுவதுதான் அண்ணையின் ஜூப்பர் ஸ்டைல்.

கங்காச்சியின் புத்தகங்கள் கடுமையான வகுத்தெரிச்சலை உண்டுபண்ணி உண்டில்லையெண்டு ஆக்கிப்போட்டது ஆறாமல், கொட்டியிருந்த இலக்கிய வீச்சங்களை விமர்சனமின்றி விசர்ஜன் செய்துவிடலாம். என்ர இலக்கியங்கள் பற்றி எட்டுப் பாகம் போட எனக்குத் துடித்தாலும் ஐஞ்சறைக்குள்ள வண்டி'யாய் ஆகிவிடக்கூடாதென்ற பிரக்ஞையும் கொசுறாய் கூடவே குடைகின்றது. அதுவரை இதுகுறித்த உணர்வுகளை ஏதாவதொரு ஈசல் பதிவாய் மழைகாலத்தில் கிடைக்கும் சோமசுரா பானங்களுடன் பதிவதாய் உத்தேசம். அதுவரை உண்டிப்பிரச்சினை பெரிதாகிவிட்ட அன்னக்காவடியான என் பிரச்சினைக்கும் தீர்வு கண்டு போடவேண்டுமென்ற சாருநிவேதிதா கட்டாயமெமக்கும் உண்டு. எது எப்படியெண்டாலும் நடுவில் சிக்கிக்கொண்ட நம் "நண்பருக்கு" எனது ஆழ்ந்த வருத்தம் தோய்ந்த மன்னிப்புகளைக் கேட்பதன் மூலம் உமது நியாயங்களை நிறுவிக்கொள்ள மற்றொரு கருவியாகிவிட்டுப் போகின்றேன். சாவு விஷயத்திலே சங்கு ஊதுவதா? ஜால்ரா தட்டுவதா? என்ற குறைந்தபட்ச புரிதலின்றி "Cut" செய்து களிப்படையும் கலாச்சாரக் காவலர்களைப் பற்றி பொழைச்சுக் கெடந்தால் நான் பதிய எண்ணம். கூடவே வன்புணர்ச்சிகளினூடே விளைந்த மெர்ச்சண்ட் களிப்புகளின் சிப்பத்தில் கடலைமிட்டாய் சிற்பம் படைத்து பரதேசியின் பயணக்குறிப்பு காவியமாக வெளியிட்டு சூப்புற ஸ்டாராகவும் ஆசை. பார்ப்பம். அதென்னப்பா தக்கிப் பிழைக்க ஆயிரவழிகள் சொன்னவர் எலக்கியத்துறவறம் போட்டு போலிக்குரல் கொடுக்கின்றாரே என்று வினவினாலும், எத்தேசம் போனாலும் அத்தேசம் வேண்டாமெண்டு கைக(கா)ட்டாத கைடாய் இருந்தவருக்கு, அடையாறு அம்சகுஜலாம்பாள் சமையக்குறிப்பு, கோடம்பாக்க கோமணங்கள் சிறப்பாய்வு பற்றி கவலையெதற்கெண்டு கேட்டாலும் நேர்மையில்லாத வினைஎதிர்வினையோ கிட்டாமல் ஜாட்(ண்)டுபஞ்சாரிஷ்ட் பஜனையை சத்தம் போட்டுப் பாடுவார்.

மத்தபடி 007 ஜேம்ஸ்வோச்சர்களின் கிசுகிசு மூட்டும் பதிவுகளின் மாட்சிமையான தமிழ்கூறும் நல்லுலகமறியும். பனை மரத்தில் நெறி கட்டும் விந்தை தெரியாதவர்கள்தான் யாருண்டு? வினையை வெதைச்சிப்போட்டு எதையோ எதிர்பார்த்தா இப்பிடித்தான். பத்தாண்டுகளுக்கும் மேலாக குத்தாட்டம் போட்டு, சொல்லி அடிக்க வாலிவேஷங்கள் கட்டி வதைகள் பல நடத்திப்புட்டு, இன்னிக்கு லோக்கல் லவங்கங்கள் கௌபீனத்தில் கைவைக்கிறாங்களேன்னா, உறுத்தத்தான் செய்யும். அன்னிக்கு ஆஹாகாரம் போட்ட கூட்டம், கூடி நின்னு கொலவை போட்டவங்க, இன்னிக்கு எதுக்காக கூலியின்றி மாரடிக்கிறாங்கன்னுதான் புரியில பாஸு. அடுத்தவனை வோட்ச் பண்ணும்போது தன்னையும் வோட்ச் பண்ண ஒருவர் இருப்பாரென்பது காலத்தின் கட்டாயம். நீங்க இன்னும் அழிக்க வேண்டிய பின்னே ஊட்டுகள் நெறைய உண்டுங்க ஷாமியோவ்... பாவம்... அது இது உது வென்று குறுகுறு விரல்களை நீட்டிச்சுட்டிப்பின் சுட்டுக் கொள்வது வழமைதான். விஷமப்பிரச்சாரத்த தொடரும். நீயும் கோட்டி நானும் கோட்டி'ன்னு வேட்டையாடி விளையாடி, பாட்டுப் பாடிண்டே போகலாம். "சத்தியமாகச் சொல் நீ ஸ்பாம்தானா?" அப்டீன்னு சத்தம் போட்டு, கேள்வி கேட்டு, சும்மா நச்சின்னு ஒரு வாச்பண்ணி, கதாவிலாசத்தோட ஒர்த்தர் காலட்சேபம் பண்ணிணா, அதுக்குப் போயி வெளக்கெண்ணையில பொரிச்ச கவிச்சிக் கறி மாதிரி வழவழாசர்கர்புர்'ன்னு ஒரு நாளே வாழும் மார்க்கண்டேயப்பதிலாய் ஒரு பதிவு!!! இதுல அவன் இவன் உவன் எண்டு போகிறபோக்கில் போட்டுக் கொ(கெ)டுத்த எச்சங்களின் கவிச்சியைக் கொண்டு ஒரு கப்பாட்டம்!!! என்னவோ போப்பா!!!

எல்லாரும் எப்போதுஞ் சொல்றது ஒரு ஸ்டேட்மெண்ட்தான் "எங்கோ மணம் மணக்குதுங்கோ" (டைப்போவிற்கு மன்னிக்க :-)) !!!

கொசுறு: கலர் பிளைண்ட்நெஸ், நைட் பிளைண்ட்நெஸ், நேம்லெஸ் போன்ற அனைத்து லெஸ்நெஸ் அம்னீஷியாக்களுக்காக கறுப்பு-வெள்ளையிலே படம். ஏன்னா கதையும் அறுதப் பழசு கண்ணா பழசு ;-)

No comments: