Thursday, October 20, 2005

அட்றா சக்கை அட்றா சக்கை

இது ஒரு போட்டி. இப்பொன்மொழிகளை உதிர்த்த வலைபதிவர்களை கண்டுபிடித்தால் பச்சை விளக்கு ஒன்று பரிசாக அனுப்படும். தபால் செலவு இலவசம்.

1. மக்களாட்சி, கருத்துச் சுதந்திரம், பேச்சுரிமை, எழுத்துரிமை எல்லாம் தான் வரையும் கோடுகளுக்குள்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பதுவும் ஒரு சர்வாதிகாரப் போக்கே.

2. பத்துவரி எழுதினால் ஒரு வரியாவது பயனுள்ளதாக இல்லாமல் வெறும் அரட்டை அடிக்கவும் சிலர் வலைப்பதிவுகளை பயன்படுத்தி வருவதால் தான் ** என் தனிப்பட்ட நம்பிக்கையில் திரட்டத் தேவையில்லாதவை என்று தணிக்கை செய்யும் முடிவுக்கு வந்திருப்பார் என நினைக்கிறேன்.

3. I dont think we have a right to condemn anything that has sole proprietership. If we dislike, we can leave...

4. தொழில்நுட்பக் காரணங்களுக்காக சில முடிவுகளை எடுப்பது **யின் உரிமை. ஆனால் கொள்கை முடிவுகளை பயனர்களை கலந்தாலோசித்தே எடுப்பது ஜனநாயகம். முன்பு செய்ததைப் போல ("ஆபாசப் பதிவுகள்" சம்பந்தமாக)வாக்கெடுப்பு நடத்தி புதிய கொள்கைகளை வகுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் தன்னுடைய நம்பிக்கையின் அடிப்படையில் செய்தது சரியில்லை. வாக்கெடுப்பில் அவருடைய நம்பிக்கை வெற்றி பெற்றாலும் பெறலாம். ஆனால் அதைச் செய்யாத வரையில் தற்போதைய
நடவடிக்கைகள் சர்வாதிகாரத் தன்மை கொண்டவையே.

5. இப்போது புதுத்திரட்டிகளின் தேவை வந்துவிட்டால் அத்திரட்டிக்கான தொழிநுட்ப விசயங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. எல்லோருக்கும் அந்த அனுபவம் இருக்கப்போவதுமில்லை. எனவே **யோ அல்லது தமிழ்மணத்திரட்டியின் வளர்ச்சிக்குக் காரணமானவர்களோ அந்தத் திரட்டிச்செயலிக்கான அடிப்படைத் தொழிநுட்பத்தை வெளியிட முடிந்தால் அது பலனளிக்கும். இதைவைத்து அவரவர்கள் தாமே அவற்றை மேன்மைப்படுத்த முடியும். இந்தத் தொழிநுட்பம் வெளியிடுதலென்பது நிச்சயமாக நிர்வாகிகளின் சொந்த முடிவே.

6. நீ மறைந்தாலும்
உன் சகாப்தம்
மறைவதில்லை


7. பழங்காலத்துப் பழமொழி இதுதான்: தானங் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடிச்சுப் பார்க்கறது. அவ்வளவு ஆர்வமோ குறைந்தபட்ச தயவுதாட்சண்யமோ இல்லாதவர்கள் தமிழ்மணத்தில் தங்கள் வலைப்பதிவுகளைச் சேர்க்காமல் இருந்தாலே பெரிய உதவியாக இருக்கும். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பது ஓரளவு சொதப்பலாகப் பட்டாலும், அதைத் தாண்டிக்கூட இன்னும் யாரும் வரத் தயாராயில்லை என்பது, ஏன் தமிழ்மணத்துக்குத் தொடுப்புக் கொடுக்கவேண்டும் என்ற கேள்வியிலேயே தெரிகிறது! இரண்டு நிமிடங்கள் எடுக்கும் ஒரு வேலையை, பிரதியுபகாரமாகச் செய்யக்கூடியதாகக் கருதக்கூடிய ஒரு சிறு அங்கீகரிப்பை நோக்கிக் கேள்விகளெழுப்புவதைவிட, பேசாமல் இதில் இணைக்கப்படாமல், தங்கள் URLஐ தமிழ்மண இணைப்புப் பெட்டியில் தட்டாமலிருப்பதே நலம். காசுக்கேற்ற தோசை என்றாலும்
குற்றம், காசில்லாமல் தோசை என்றாலும் குற்றம் - எங்கே போய் முட்டிக்கொள்வது.

8. நான் நினைப்பதையே நீ நினைக்க வேண்டும் என எதிர்பார்ப்பது அடக்குமுறையாகும். இன்னொறு வகையில் சொன்னால் கருத்துத் தீவிரவாதம்.

9. சமீபத்தில் தமிழ்மணம் திரட்டியில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சில வலைப்பதிவுகள் தமிழ்மணத்திலிருந்து பல்வேறு காரணங்களுக்காக நீக்கம் செய்யப்படுகின்றன என்றுத் தெரிய வருகிறது. தமிழ்மண நிர்வாகிகளின் இம்முடிவுடன் நான் உடன்படாவிட்டாலும், இதனை அவர்களது் சொந்த முடிவாகக் கருதி மதிக்கிறேன். எனினும், தமிழிணையத்தில் கருத்துச் சுதந்திரம், பன்மைத்தன்மை ஆகியவற்றின் வருங்காலம் குறித்த கவலைகளையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

10. நேற்றைக்குவரை போன ஒரு மாதமாகப் பண்ணிய உருப்படியான காரியமென்னவென்றால், பதிவுகளின் பக்கம் அடிக்கடி வராமலிருந்தது. குஷ்பு விவகாரம், சுந்தரராமசாமி மரணம் இதிலெதிலுமே நானும் ஒரு தனிப்பதிவு போட்டேனென்று எண்ணிக்கைக்குப் போடாதிருந்தது சொந்த நிம்மதிக்கும் நேரச்சேமிப்புக்கும் உதவியது. தமிழ்மணத்திலே பதிவுகளை நெறிப்படுத்துவது குறித்து சர்ச்சையை நேற்றைக்கு வாசிக்க நேர்ந்ததால் தனியே சொந்த நலனை முன்னிட்டு மூன்று பந்திகளில் சின்னக்குறிப்பு எழுதவேண்டிய அவசியம்.

11.

Diskகிளைமர்: எல்லாப்புகழும் பொன்மொழிகளை உதிர்த்தவர்க்கே. மறுபதிப்பு செய்யும் உரிமம் வாங்கவில்லை. காப்புரிமை வயலேஷன்னா சொல்லிடுங்க தூக்கிடறேன். ஆனா கரீக்டா கண்டுபிச்சவங்களுக்கு பச்சை விளக்கு பரிசு கட்டாயம் உண்டு. மேலேயுள்ள 11 பொன்மொழிகளில் ஒன்று கொஞ்சம்(மும்) மற்றதுடன் சம்பந்தப்படாதது. மேலும் 11'ல் ஒண்ணுமே தெரியலியேன்னு கேப்பீங்களே கேள்வியின் நாயகர்களே. அதாம்பா net'l பெரிய ஆளுங்கெல்லாம் உதிர்த்த பொன்மொழிங்கோ !!!

3 comments:

Boston Bala said...

#10 - peyarili
#6 -? (sivaji or suraa)?

சின்னவன் said...

ஆத்தா .. நான் பெயிலாகிட்டேன்.
இந்த கேள்விகளுக்கும், தமிழ் குஷ்பூவில் இருந்தும் !

Voice on Wings said...

11 = மெளனம்? மன்னிக்க வேண்டும், என் சிற்றறிவுக்கெட்டவில்லை.

மற்ற பத்தில் ஒன்றை மட்டும் எங்கோ பார்த்தது போலிருக்கிறது ;)